Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
+7
ரா.ரமேஷ்குமார்
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
SK
ayyasamy ram
T.N.Balasubramanian
heezulia
11 posters
Page 2 of 29
Page 2 of 29 • 1, 2, 3 ... 15 ... 29
தெரிஞ்சதும் தெரியாததும்
First topic message reminder :
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
18 .12 .2017
இந்த யாருக்கு SK, அய்யாசாமி சாருக்கா, எனக்கா?
கவிஞர் மருதகாசிதான் 'பதிபக்தி' படத்துக்கு எல்லாப் பாட்டுக்களையும் எழுதுறதா இருந்துச்சாம். அவர்கிட்ட பதிபக்தி கதையை சொன்னாங்களாம். அவரும் கேட்டிருக்கார். யோசிச்சார். அப்புறமா சொல்லிட்டாராம், "இப்படிப்பட்ட கதைக்குப் பாட்டுக்களை எழுதணும்னா, அதுக்கு suitable கவிஞர் பட்டுக்கோட்டையார்தான். அவர வச்சு நீங்க 'பதிபக்தி' படத்துக்கு எல்லாப் பாட்டுக்களையும் எழுதிக்கோங்கோ" ன்னுட்டாராம். எம்புட்டு பறந்த மனசு!!!
கவிஞர் கண்ணதாசனுக்கு ஒரு வக்கீலும், அந்த வக்கீலின் மனைவியும் நல்ல பழக்கமாம். ஒரு நாள் கண்ணதாசன் வக்கீல் வீட்டுக்குப் போனாராம். கதவைத் தட்டினாராம். வக்கீலின் மனைவி "Who is that?" ன்னு கேட்டாராம். கண்ணதாசன் என்ன சொன்னார் தெரியுமா? ரொம்ப interesting. "An Outstanding Poet Standing Outside" எப்படி அட்டகாசமா சொல்லியிருக்கார் பாருங்க.
சரோஜாதேவிக்கு அபிநய சரஸ்வதி என்கிற பெயரை முன்னாள் கன்னட முதலமைச்சர் கொடுத்தாராம். தினத்தந்தி பத்திரிக்கை கன்னடத்துப் பைங்கிளி ன்னு சொல்லுச்சாம்.
உலகத்திலுள்ள மொத்த இசையமைப்பாளர்கள்ல முதல் இருபத்தஞ்சு பேர செலெக்ட் செஞ்சாங்களாம். இந்த இருபத்தஞ்சு பேர்ல ஒன்பதாவது இடத்தில இருக்கிறவர் யார் தெரியுமோ? நம்ம இளையராஜாதான். இந்தியாவுக்கு, அதுவும் தமிழ்நாட்டுக்கு எம்புட்டு பெருமை பாத்தீங்களா?
Baby Heerajan
இந்த யாருக்கு SK, அய்யாசாமி சாருக்கா, எனக்கா?
கவிஞர் மருதகாசிதான் 'பதிபக்தி' படத்துக்கு எல்லாப் பாட்டுக்களையும் எழுதுறதா இருந்துச்சாம். அவர்கிட்ட பதிபக்தி கதையை சொன்னாங்களாம். அவரும் கேட்டிருக்கார். யோசிச்சார். அப்புறமா சொல்லிட்டாராம், "இப்படிப்பட்ட கதைக்குப் பாட்டுக்களை எழுதணும்னா, அதுக்கு suitable கவிஞர் பட்டுக்கோட்டையார்தான். அவர வச்சு நீங்க 'பதிபக்தி' படத்துக்கு எல்லாப் பாட்டுக்களையும் எழுதிக்கோங்கோ" ன்னுட்டாராம். எம்புட்டு பறந்த மனசு!!!
கவிஞர் கண்ணதாசனுக்கு ஒரு வக்கீலும், அந்த வக்கீலின் மனைவியும் நல்ல பழக்கமாம். ஒரு நாள் கண்ணதாசன் வக்கீல் வீட்டுக்குப் போனாராம். கதவைத் தட்டினாராம். வக்கீலின் மனைவி "Who is that?" ன்னு கேட்டாராம். கண்ணதாசன் என்ன சொன்னார் தெரியுமா? ரொம்ப interesting. "An Outstanding Poet Standing Outside" எப்படி அட்டகாசமா சொல்லியிருக்கார் பாருங்க.
சரோஜாதேவிக்கு அபிநய சரஸ்வதி என்கிற பெயரை முன்னாள் கன்னட முதலமைச்சர் கொடுத்தாராம். தினத்தந்தி பத்திரிக்கை கன்னடத்துப் பைங்கிளி ன்னு சொல்லுச்சாம்.
உலகத்திலுள்ள மொத்த இசையமைப்பாளர்கள்ல முதல் இருபத்தஞ்சு பேர செலெக்ட் செஞ்சாங்களாம். இந்த இருபத்தஞ்சு பேர்ல ஒன்பதாவது இடத்தில இருக்கிறவர் யார் தெரியுமோ? நம்ம இளையராஜாதான். இந்தியாவுக்கு, அதுவும் தமிழ்நாட்டுக்கு எம்புட்டு பெருமை பாத்தீங்களா?
Baby Heerajan
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
20.12.2017
ஆனந்தன், ராஜஸ்ரீ, எம்.ஆர்.ராதா இவங்க நடிச்சு 1964ல ரிலீஸ் ஆன ஒரு படம்.
இந்தப் படத்துல ஒரு சின் ................................ ன ரோல்ல நடிச்ச ஒரு பொண்ண, எம்.ஆர்.ராதா உத்து உத்து பாத்துட்டு இருந்தாராம். அந்த சின்ன பொண்ண பக்கத்தில கூப்ட்டார்.
கூப்ட்டு ...................
"ஒம்பேர் என்னம்மா?" ராதா கேட்டாராம்.
அதுக்கு அந்தப் பொண்ணு
"ஏம்ப்பேரு தெய்வநாயகி" ன்னாராம்.
"இதென்ன, இப்டி ஒரு பேர வச்சிருக்கே. நல்ல, மாடர்னா பேரு வைக்க கூடாது? அப்பதான் முன்னுக்கு வர முடியும்". னு ராதா சொன்னாராம்.
ஒடனே பக்கத்திலே இருந்த அந்தப் பொண்ணோட அப்பா, "அண்ணே, அப்டீன்னா நீங்களே ஒரு நல்ல பேர வச்சுருங்களேன்" ன்னு சொல்லிட்டாராம்.
அந்த சமயத்தில நல்ல பேரா இருந்த 'விஜயா' ன்னு பேர வச்சுட்டாராம், ராதா.
ஆக, தெய்வநாயகி இப்படி கே.ஆர். விஜயா ஆயிட்டாராம், எம்.ஆர்.ராதாவால. தெய்வநாயகியா இருக்கும்போது ஒரு சின்ன ரோல்ல நடிச்சாரே, அந்தப் படம் 'மகளே உன் சமத்து' என்ற படமாம். அதுக்கப்புறமும் 'விளக்கேற்றியவள்' என்கிற படத்திலயும் ஒரு சின்ன ரோல்ல நடிச்சாராம்.
அப்போதான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தன்னோட படம் 'கற்பகம்' படத்துக்கு ஹீரோயின் தேடிட்டு இருந்தாரா? அந்த சமயத்தில இந்த கே.ஆர்.விஜயாவைப் பார்த்த first sight லேயே
"இந்த மாதிரி பொண்ணத்தான், இப்படிப்பட்ட ஒரு மூஞ்சியைத்தான்யா நான் தேடிட்டு இருக்கேன்" ன்னு சொல்லி ஒரே சந்தோஷமாம்.
'கற்பகம்' படத்துக்கு புக் ஆயிட்டார், முன்னாள் தெய்வநாயகி, இந்நாள் கே.ஆர்.விஜயா.
Heezulia
ஆனந்தன், ராஜஸ்ரீ, எம்.ஆர்.ராதா இவங்க நடிச்சு 1964ல ரிலீஸ் ஆன ஒரு படம்.
இந்தப் படத்துல ஒரு சின் ................................ ன ரோல்ல நடிச்ச ஒரு பொண்ண, எம்.ஆர்.ராதா உத்து உத்து பாத்துட்டு இருந்தாராம். அந்த சின்ன பொண்ண பக்கத்தில கூப்ட்டார்.
கூப்ட்டு ...................
"ஒம்பேர் என்னம்மா?" ராதா கேட்டாராம்.
அதுக்கு அந்தப் பொண்ணு
"ஏம்ப்பேரு தெய்வநாயகி" ன்னாராம்.
"இதென்ன, இப்டி ஒரு பேர வச்சிருக்கே. நல்ல, மாடர்னா பேரு வைக்க கூடாது? அப்பதான் முன்னுக்கு வர முடியும்". னு ராதா சொன்னாராம்.
ஒடனே பக்கத்திலே இருந்த அந்தப் பொண்ணோட அப்பா, "அண்ணே, அப்டீன்னா நீங்களே ஒரு நல்ல பேர வச்சுருங்களேன்" ன்னு சொல்லிட்டாராம்.
அந்த சமயத்தில நல்ல பேரா இருந்த 'விஜயா' ன்னு பேர வச்சுட்டாராம், ராதா.
ஆக, தெய்வநாயகி இப்படி கே.ஆர். விஜயா ஆயிட்டாராம், எம்.ஆர்.ராதாவால. தெய்வநாயகியா இருக்கும்போது ஒரு சின்ன ரோல்ல நடிச்சாரே, அந்தப் படம் 'மகளே உன் சமத்து' என்ற படமாம். அதுக்கப்புறமும் 'விளக்கேற்றியவள்' என்கிற படத்திலயும் ஒரு சின்ன ரோல்ல நடிச்சாராம்.
அப்போதான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தன்னோட படம் 'கற்பகம்' படத்துக்கு ஹீரோயின் தேடிட்டு இருந்தாரா? அந்த சமயத்தில இந்த கே.ஆர்.விஜயாவைப் பார்த்த first sight லேயே
"இந்த மாதிரி பொண்ணத்தான், இப்படிப்பட்ட ஒரு மூஞ்சியைத்தான்யா நான் தேடிட்டு இருக்கேன்" ன்னு சொல்லி ஒரே சந்தோஷமாம்.
'கற்பகம்' படத்துக்கு புக் ஆயிட்டார், முன்னாள் தெய்வநாயகி, இந்நாள் கே.ஆர்.விஜயா.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
20.12.2017
நிறைய தடவை நடத்தப்பட்ட MR ராதாவின் ரொம்ப ரொம்ப பிரபலமான நாடகம் 'ரத்தக்கண்ணீர்'.
"இயக்குனர் சொல்றபடில்லாம் நான் நடிக்க மாட்டேன்"ன்னு சொல்லி ரொம்ப நா ................... ள் சினிமால நடிக்காமயே இருந்தாராம். பெருமாள் முதலியார் அவரை கம்ப்பெல் பண்ணி இந்தப் படத்தில் நடிக்க வச்சாராம்.
இந்தப் படத்ல, ராதாவின் மனைவி ரோல்லயும், தாசி ரோல்லயும் நடிக்க யா ............. ரும் முன்வரலியாம்.
எதுக்கு, ஏன், வொய்யி, எந்துக்கு, ஏதுக்கு? மனைவியா நடிச்சா, ராதாட்ட அடி வாங்கணும். தாசியா நடிச்சாக்கா ராதாவை அடிக்கணும். அந்த காலத்தில, பொம்பளைங்க இப்படி நடிக்க ஒத்துக்குவாங்களா ? கண்டிப்பா இல்ல. பேர் கேட்டுபோயிரும்னு பிரபலமான எந்த நடிகையும் நடிக்க தயாராவே இல்லியாம்.
அப்புறம் என்ன, ஆந்திராவுக்கு ஓடினாங்களாம், நடிகையை தேடி. அங்க இருந்த ஸ்ரீரஞ்சனினு ஒருத்தர இஸ்துகினு வந்தாங்களாம். இவர் ராதாவின் மனைவியா நடிக்க. இப்ப தாசி ரோலுக்கு ஆல் வேணுமே. அப்டீ இப்டீன்னு MN ராஜம் கெடச்சாராம்.
ரத்தக்கண்ணீர் நாடகத்தை ஜனகள் நிறைய தடவை பார்த்திருக்காங்களாம். அதே பேர்ல சினிமா வந்ததும், சினிமா எப்படி இருக்குமோன்னு எதிர்பார்ப்பு இருந்துச்சாம். படத்தை பார்க்க அலை மோதினாங்களாம். நாடகம் நல்லா ஓடியது போலவே, சினிமாவும் ஓஹோ ................... ன்னு ஓடுச்சாம்.
இந்தப் படத்துக்கு அப்புறம், ராதாவுக்கு சினிமாவில ஒரு பிடிப்பு வந்துச்சாம்.
Heezulia
நிறைய தடவை நடத்தப்பட்ட MR ராதாவின் ரொம்ப ரொம்ப பிரபலமான நாடகம் 'ரத்தக்கண்ணீர்'.
"இயக்குனர் சொல்றபடில்லாம் நான் நடிக்க மாட்டேன்"ன்னு சொல்லி ரொம்ப நா ................... ள் சினிமால நடிக்காமயே இருந்தாராம். பெருமாள் முதலியார் அவரை கம்ப்பெல் பண்ணி இந்தப் படத்தில் நடிக்க வச்சாராம்.
இந்தப் படத்ல, ராதாவின் மனைவி ரோல்லயும், தாசி ரோல்லயும் நடிக்க யா ............. ரும் முன்வரலியாம்.
எதுக்கு, ஏன், வொய்யி, எந்துக்கு, ஏதுக்கு? மனைவியா நடிச்சா, ராதாட்ட அடி வாங்கணும். தாசியா நடிச்சாக்கா ராதாவை அடிக்கணும். அந்த காலத்தில, பொம்பளைங்க இப்படி நடிக்க ஒத்துக்குவாங்களா ? கண்டிப்பா இல்ல. பேர் கேட்டுபோயிரும்னு பிரபலமான எந்த நடிகையும் நடிக்க தயாராவே இல்லியாம்.
அப்புறம் என்ன, ஆந்திராவுக்கு ஓடினாங்களாம், நடிகையை தேடி. அங்க இருந்த ஸ்ரீரஞ்சனினு ஒருத்தர இஸ்துகினு வந்தாங்களாம். இவர் ராதாவின் மனைவியா நடிக்க. இப்ப தாசி ரோலுக்கு ஆல் வேணுமே. அப்டீ இப்டீன்னு MN ராஜம் கெடச்சாராம்.
ரத்தக்கண்ணீர் நாடகத்தை ஜனகள் நிறைய தடவை பார்த்திருக்காங்களாம். அதே பேர்ல சினிமா வந்ததும், சினிமா எப்படி இருக்குமோன்னு எதிர்பார்ப்பு இருந்துச்சாம். படத்தை பார்க்க அலை மோதினாங்களாம். நாடகம் நல்லா ஓடியது போலவே, சினிமாவும் ஓஹோ ................... ன்னு ஓடுச்சாம்.
இந்தப் படத்துக்கு அப்புறம், ராதாவுக்கு சினிமாவில ஒரு பிடிப்பு வந்துச்சாம்.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
22.12.2017
வங்காள கதாசிரியர் சரத் சந்திர சட்டர்ஜியின் புகழ் பெற்ற நாவல் தேவதாஸ். இந்த நாவல் தான் தேவதாஸ் படம். பல மொழிகள்ல நிறைய தடவை படமாக்கப்பட்டுச்சு. இந்தப் படம் மொதல்ல தமிழ்ல 1938 லேயும், அதுக்கப்புறமா 1953 லேயும் ரிலீசாச்சு.
1953 படத்தில் நாகேஸ்வரராவ், சாவித்திரி, லலிதா, நம்பியார், ரங்காராவ் நடிச்சிருந்தாங்க. சாவித்திரியின் சின்ன வயசு கேரக்டர்ல சச்சு நடிச்சிருந்தாராம். தமிழ், தெலுங்கில ரிலீஸ் ஆச்சு. இந்தக் கதையின் விசேஷம் என்னான்னா எத்தனை தடவ இந்த படத்தை எடுத்தாலும் ஹிட்டாச்சு.
தெலுங்கில கிருஷ்ணா நடிச்சு 1993ல எடுத்தாங்களாம். இப்படம் ரிலீசாவுதுக்கு முன்னால, நாகேஸ்வரராவின் தேவதாஸ் படத்தை மறு ரிலீஸ் செஞ்சாங்களாம். நா ................ ப்பது வருஷங்கள் கழிச்சு வெளியிடப்பட்டும் ஹிட்டாச்சாம். இதனால் கிருஷ்ணா படத்துக்கு பாதிப்பும் ஏற்பட்டுச்சாம்.
Heezulia
வங்காள கதாசிரியர் சரத் சந்திர சட்டர்ஜியின் புகழ் பெற்ற நாவல் தேவதாஸ். இந்த நாவல் தான் தேவதாஸ் படம். பல மொழிகள்ல நிறைய தடவை படமாக்கப்பட்டுச்சு. இந்தப் படம் மொதல்ல தமிழ்ல 1938 லேயும், அதுக்கப்புறமா 1953 லேயும் ரிலீசாச்சு.
1953 படத்தில் நாகேஸ்வரராவ், சாவித்திரி, லலிதா, நம்பியார், ரங்காராவ் நடிச்சிருந்தாங்க. சாவித்திரியின் சின்ன வயசு கேரக்டர்ல சச்சு நடிச்சிருந்தாராம். தமிழ், தெலுங்கில ரிலீஸ் ஆச்சு. இந்தக் கதையின் விசேஷம் என்னான்னா எத்தனை தடவ இந்த படத்தை எடுத்தாலும் ஹிட்டாச்சு.
தெலுங்கில கிருஷ்ணா நடிச்சு 1993ல எடுத்தாங்களாம். இப்படம் ரிலீசாவுதுக்கு முன்னால, நாகேஸ்வரராவின் தேவதாஸ் படத்தை மறு ரிலீஸ் செஞ்சாங்களாம். நா ................ ப்பது வருஷங்கள் கழிச்சு வெளியிடப்பட்டும் ஹிட்டாச்சாம். இதனால் கிருஷ்ணா படத்துக்கு பாதிப்பும் ஏற்பட்டுச்சாம்.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
22.12.2017
மனிதன் - TKS சகோதரர்களுடையது. நாடகத்தைத் தழுவிய கதை. TK சண்முகம், TK பகவதி, SA நடராஜன், கிருஷ்ணகுமாரி, மாதுரிதேவி, பண்டரிபாய் நடிச்சிருந்தாங்க. நல்லா ஓடிய படம்.
வேற ஒரு நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் 'மனிதனும் மிருகமும்'. SD சுந்தரத்தின் கதை வசனம். இவரே K. வேம்புவுடன் சேர்ந்து இயக்கினார். சிவாஜி கணேசன், மாதுரிதேவி, MN ராஜம், SD சுந்தரம், K சாரங்கபாணி நடிச்சிருந்தாங்க.
Heezulia
மனிதன் - TKS சகோதரர்களுடையது. நாடகத்தைத் தழுவிய கதை. TK சண்முகம், TK பகவதி, SA நடராஜன், கிருஷ்ணகுமாரி, மாதுரிதேவி, பண்டரிபாய் நடிச்சிருந்தாங்க. நல்லா ஓடிய படம்.
வேற ஒரு நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் 'மனிதனும் மிருகமும்'. SD சுந்தரத்தின் கதை வசனம். இவரே K. வேம்புவுடன் சேர்ந்து இயக்கினார். சிவாஜி கணேசன், மாதுரிதேவி, MN ராஜம், SD சுந்தரம், K சாரங்கபாணி நடிச்சிருந்தாங்க.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
22.12.2017
இயக்குனர் ராமகிருஷ்ணா தனது மனைவி பானுமதியை இயக்குனரா அறிமுகப்படுத்த விரும்பி, 'சண்டிராணி' படத்தைத் தயாரிச்சார். இந்தப் படத்தை பானுமதி இயக்கியிருந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்ல ரிலீசாச்சு. NTR, ஹீரோ. எஸ்.வி.ரங்காராவ், குமாரி துளசி, வித்யாவதி நடிச்சிருந்தாங்க. சி.ஆர்.சுப்பாராமனுடன் விஸ்வநாதன் இணைந்து இசையமைத்திருந்தார். வசூலைக் குவித்த படம் இது.
சகஸ்ரநாமம் நடத்திய 'கண்கள்' நாடகம் அதே பெயரில் படமானது. சிவாஜி கணேசன், பண்டரிபாய், மைனாவதி, சகஸ்ரநாமம், எம்.என்.ராஜம், சந்திரபாபு, வி.கே.ராமசாமி நடிச்சிருந்தாங்க. என்.வி.ராஜாமணி வசனம் எழுதிய இப்படத்தை கிருஷ்ணன் - பஞ்சு இயக்கியிருந்தார்.
இதே ஆண்டில சிவாஜி கணேசனின் இன்னொரு படம் ரிலீசாச்சு. 'திரும்பிப் பார்'. மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் ட்டி.ஆர்.சுந்தரம் தயாரிச்சு இயக்கினார். கதை, திரைக்கதை, வசனம் கருணாநிதி. பண்டரிபாய், கிருஷ்ணகுமாரி, கிரிஜா, ட்டி.ப்பி.முத்துலட்சுமி, தங்கவேலு நடித்திருந்தாங்க. அடுத்தடுத்து ஹீரோவாக நடிச்ச படங்கள் சூப்பர் ஹிட் ஆனபோதும், துளியும் பின்வாங்காம, சிவாஜி கணேசன் தனது சினிமா கேரியரில் ஒரு புதுமையைக் கொண்டு வர, இந்தப் படத்தில் அவர் வில்லனா நடிக்க ஒப்புக்கொண்டார். காரணம் கருணாநிதியின் அழுத்தமான கதையும், படத்தின் பலமான வசனங்களும் தான். பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் ப்ளேபாய் வேஷத்தில் நடிச்சு, சிவாஜி அவரது நடிப்பில் இன்னொரு பரிணாமத்தைக் காட்டியிருந்தார். ஹீரோயனாக நடித்த கிருஷ்ணகுமாரி, சௌகார் ஜானகியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
Heezulia
இயக்குனர் ராமகிருஷ்ணா தனது மனைவி பானுமதியை இயக்குனரா அறிமுகப்படுத்த விரும்பி, 'சண்டிராணி' படத்தைத் தயாரிச்சார். இந்தப் படத்தை பானுமதி இயக்கியிருந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்ல ரிலீசாச்சு. NTR, ஹீரோ. எஸ்.வி.ரங்காராவ், குமாரி துளசி, வித்யாவதி நடிச்சிருந்தாங்க. சி.ஆர்.சுப்பாராமனுடன் விஸ்வநாதன் இணைந்து இசையமைத்திருந்தார். வசூலைக் குவித்த படம் இது.
சகஸ்ரநாமம் நடத்திய 'கண்கள்' நாடகம் அதே பெயரில் படமானது. சிவாஜி கணேசன், பண்டரிபாய், மைனாவதி, சகஸ்ரநாமம், எம்.என்.ராஜம், சந்திரபாபு, வி.கே.ராமசாமி நடிச்சிருந்தாங்க. என்.வி.ராஜாமணி வசனம் எழுதிய இப்படத்தை கிருஷ்ணன் - பஞ்சு இயக்கியிருந்தார்.
இதே ஆண்டில சிவாஜி கணேசனின் இன்னொரு படம் ரிலீசாச்சு. 'திரும்பிப் பார்'. மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் ட்டி.ஆர்.சுந்தரம் தயாரிச்சு இயக்கினார். கதை, திரைக்கதை, வசனம் கருணாநிதி. பண்டரிபாய், கிருஷ்ணகுமாரி, கிரிஜா, ட்டி.ப்பி.முத்துலட்சுமி, தங்கவேலு நடித்திருந்தாங்க. அடுத்தடுத்து ஹீரோவாக நடிச்ச படங்கள் சூப்பர் ஹிட் ஆனபோதும், துளியும் பின்வாங்காம, சிவாஜி கணேசன் தனது சினிமா கேரியரில் ஒரு புதுமையைக் கொண்டு வர, இந்தப் படத்தில் அவர் வில்லனா நடிக்க ஒப்புக்கொண்டார். காரணம் கருணாநிதியின் அழுத்தமான கதையும், படத்தின் பலமான வசனங்களும் தான். பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் ப்ளேபாய் வேஷத்தில் நடிச்சு, சிவாஜி அவரது நடிப்பில் இன்னொரு பரிணாமத்தைக் காட்டியிருந்தார். ஹீரோயனாக நடித்த கிருஷ்ணகுமாரி, சௌகார் ஜானகியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
22.12.2017
MGR ஐ முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகப்படுத்திய படம் 'ராஜகுமாரி'யாம். அந்தப்படத்தில் அவரோட கதாநாயகி மாலதியாம். கடைசியா நடிச்சு ரிலீஸ் ஆன படம் 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்'. [1979 ] இயக்கிய முதல் படம் நாடோடி மன்னனாம்.
MGR - சாவித்திரி ஜோடியாக நடிச்ச முதல் படம் 'மகாதேவி'யாம். சுந்தர் ராவ் நட்கர்னி யால் தயாரிக்கப்பட்டதாம். MGRட்ட இருந்த ஒரு முக்கியமான பழக்கம் என்ன தெரியுமா ? அவர் நடிக்கிற ஒரு புதுப் படத்தின் முதல் காட்சி அவர் நடிச்சதா இருக்கணும்னு அடம் பிடிப்பாராம். வி.என்.ஜானகி மற்றும் MGR ரெண்டு பேரும் மொத மோதலா சேர்ந்து நடிச்ச படம் 'மோகினி'யாம். 'மருதநாட்டு இளவரசி' படத்தில் ஜோடியாக நடிச்சபோதான் அவங்க உண்மையிலேயே காதலிக்கவும் ஆரம்பிச்சாங்களாம்.
மிஸியம்மா படம் எல்.வி.பிரசாத் ஆல் இயக்கப்பட்டுச்சாம்.
கல்யாணம் பண்ணிப்பார் & செல்லப்பிள்ளை இரண்டு படங்களிலும் சாவித்திரி வில்லியாக நடிச்சிருப்பாராமே.
சாவித்திரிக்கு அவரது நடிப்பிற்கு அங்கீகாரம் கொடுத்த படம் 'தேவதாசாம்.'
Heezullia
MGR ஐ முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகப்படுத்திய படம் 'ராஜகுமாரி'யாம். அந்தப்படத்தில் அவரோட கதாநாயகி மாலதியாம். கடைசியா நடிச்சு ரிலீஸ் ஆன படம் 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்'. [1979 ] இயக்கிய முதல் படம் நாடோடி மன்னனாம்.
MGR - சாவித்திரி ஜோடியாக நடிச்ச முதல் படம் 'மகாதேவி'யாம். சுந்தர் ராவ் நட்கர்னி யால் தயாரிக்கப்பட்டதாம். MGRட்ட இருந்த ஒரு முக்கியமான பழக்கம் என்ன தெரியுமா ? அவர் நடிக்கிற ஒரு புதுப் படத்தின் முதல் காட்சி அவர் நடிச்சதா இருக்கணும்னு அடம் பிடிப்பாராம். வி.என்.ஜானகி மற்றும் MGR ரெண்டு பேரும் மொத மோதலா சேர்ந்து நடிச்ச படம் 'மோகினி'யாம். 'மருதநாட்டு இளவரசி' படத்தில் ஜோடியாக நடிச்சபோதான் அவங்க உண்மையிலேயே காதலிக்கவும் ஆரம்பிச்சாங்களாம்.
மிஸியம்மா படம் எல்.வி.பிரசாத் ஆல் இயக்கப்பட்டுச்சாம்.
கல்யாணம் பண்ணிப்பார் & செல்லப்பிள்ளை இரண்டு படங்களிலும் சாவித்திரி வில்லியாக நடிச்சிருப்பாராமே.
சாவித்திரிக்கு அவரது நடிப்பிற்கு அங்கீகாரம் கொடுத்த படம் 'தேவதாசாம்.'
Heezullia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
22.12.2017
இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் முடிஞ்ச வரைக்கும் படகு சவாரி காட்சிகளைத் avoid செஞ்சிருவாராம். ஏன் தெரியுமா ? அவருக்கு நீச்சல் தெரியாதாம்.
ஜெயசங்கர் அவரே கடைக்குப் போய் சாமான்களை வாங்குவாராம். அதுவும் பயங்கரமாக பேரம் பேசுவாராம்.
ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு ஒரு பழக்கம் இருந்துச்சாம். அவர் படத்துக்கு செலெக்ட் ஆகிற கலைஞர்களை ஒரு பல் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயி, அவங்களுக்கு கெட்டு போன பல்லு இருந்துச்சுன்னா, அதுங்களை எடுத்துட்டு வேற பல்லுங்களை கட்ட சொல்வாராம். முன்னணி நடிக நடிகையர்கள் எல்லோரும் இப்படிப்பட்ட சிகிச்சை எடுத்துக் கொண்டவங்கதானாம்.
ராதிகாவின் உண்மையான பேரு ரதிகலாவாம். சில ஜோசியக்காரங்க ரதிகலா பேரு அவ்வளவு ராசியா இல்லேன்னு சொல்லிட்டாங்களாம். இயக்குனர் பாரதிராஜா அந்தப் பேரை ராதிகான்னு மாத்தினாராம்.
Heezulia
இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் முடிஞ்ச வரைக்கும் படகு சவாரி காட்சிகளைத் avoid செஞ்சிருவாராம். ஏன் தெரியுமா ? அவருக்கு நீச்சல் தெரியாதாம்.
ஜெயசங்கர் அவரே கடைக்குப் போய் சாமான்களை வாங்குவாராம். அதுவும் பயங்கரமாக பேரம் பேசுவாராம்.
ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு ஒரு பழக்கம் இருந்துச்சாம். அவர் படத்துக்கு செலெக்ட் ஆகிற கலைஞர்களை ஒரு பல் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயி, அவங்களுக்கு கெட்டு போன பல்லு இருந்துச்சுன்னா, அதுங்களை எடுத்துட்டு வேற பல்லுங்களை கட்ட சொல்வாராம். முன்னணி நடிக நடிகையர்கள் எல்லோரும் இப்படிப்பட்ட சிகிச்சை எடுத்துக் கொண்டவங்கதானாம்.
ராதிகாவின் உண்மையான பேரு ரதிகலாவாம். சில ஜோசியக்காரங்க ரதிகலா பேரு அவ்வளவு ராசியா இல்லேன்னு சொல்லிட்டாங்களாம். இயக்குனர் பாரதிராஜா அந்தப் பேரை ராதிகான்னு மாத்தினாராம்.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
VN ஜானகி --MGR ன் முதல் மனைவி அல்ல
அதே போல் ஜானகிக்கு MGR முதல் கணவனும் அல்ல
VN ஜானகியின் முதல் கணவர் கணபதி பட் (அல்லது நாராயண பட்) என்றும் சொல்வதுண்டு .
ரமணியன்
அதே போல் ஜானகிக்கு MGR முதல் கணவனும் அல்ல
VN ஜானகியின் முதல் கணவர் கணபதி பட் (அல்லது நாராயண பட்) என்றும் சொல்வதுண்டு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Page 2 of 29 • 1, 2, 3 ... 15 ... 29
Similar topics
» தினம் ஒரு கோலம்-அச்சலா...!!
» புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !
» அக்டோபர் 17-தெரிந்ததும் தெரியாததும்
» நமக்கு தெரிந்ததும் தெரியாததும்..!
» நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...
» புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !
» அக்டோபர் 17-தெரிந்ததும் தெரியாததும்
» நமக்கு தெரிந்ததும் தெரியாததும்..!
» நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...
Page 2 of 29
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|