ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

2 posters

Go down

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது Empty இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 16, 2017 6:28 am

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது Sz6kCLh5To60qooO3pTi+0354eeb39628e9a6bfc1d76145a47601
சென்னை : இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளரை மனைவி, 2 மகள்களுடன் போலீசார் கைது செய்தனர். சென்னை கொளத்தூர் மகாலட்சுமி ஜூவல்லரி நகை கடையின் மேல் தளத்தில் ஓட்டை போட்டு 3.5 கிலோ தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்க பணத்தை ராஜஸ்தான் மாநில பாலி மாவட்டம், ராமாவாஸ் கிராமத்தை சேர்ந்த நாதுராம் (28) மற்றும் ஜோத்பூர் மாவட்டம் பிலாரா கிராமத்தை சேர்ந்த தினேஷ் சவுத்ரி (20) ஆகிய 2 பேர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
அவர்களை பிடிக்க மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் ஆகியோர் தலைமையில் 5 ேபர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் ெசன்றது. அப்போது பாலி மாவட்டம் ஜெய்தரன் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ராம்புரா கலான் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் நாதுராம் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து, கடந்த 12ம் தேதி நள்ளிரவு நாதுராமை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதில் ஏற்பட்ட மோதலில் நாதுராம் மற்றும் அவரது உறவினர்கள் தனிப்படையினரை தாக்கினர். இந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் முனிேசகர் துப்பாக்கியை எடுத்த நாதுராம் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியை சுட்டுக் கொன்று விட்டு தலைமறைவானான். இதுகுறித்து பாலி மாவட்ட ஜெய்தரன் போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நாதுராம் மனைவி மஞ்சு, காதலி திவ்யா உட்பட 9 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாதுராமை பிடிக்க எஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் தேஜாராம், அவரது மனைவி பித்யா, மகள்கள் சுகுணா, ராஜல் ஆகியோரை ஜெய்தரன் போலீசார் பிகைது ெசய்தனர்
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது Empty Re: இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 16, 2017 6:29 am

இந்நிலையில், நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது குற்றவாளியான தினேஷ் சவுத்ரியை ஜோத்பூர் போலீசார் கடந்த 13ம் தேதி இரவு கைது செய்தனர். அப்போது, ‘‘நாதுராம் என்னை தொடர்பு கொண்டு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி என்னை பிடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் அவரை சுட்டு விட்டதாகவும், இதனால் நீ வெளியே வராமல் தலைமறைவாக இருக்கும்படி கூறினார். மற்ற எதுவும் நாதுராம் என்னிடம் பேசவில்லை. சென்னையில் கொள்ளையடித்த நகைகள் அனைத்தும் நாதுராமிடம்தான் உள்ளது. நான் அவனிடம் வேலை செய்கிறேன். கொள்ளையடிக்கப்பட்ட மதிப்பை பொறுத்து எனக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை தருவார். மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது’’ என்று தனிப்படை போலீசாரிடம் திணேஷ் சவுத்ரி வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும் கொள்ளை சம்பவத்தில் இரண்டாவது முக்கிய குற்றவாளி என்பதால் தினேஷ் சவுத்ரிக்கு கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பதுக்கி வைக்கப்பட்ட இடம் தெரியும் என்பதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரம் தினேஷ் சவுத்ரியை நாதுராம் தொடர்பு கொண்ட எண்ணை வைத்து தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
நாடு முழுவதும் கொள்ளை கும்பலுடன் தொடர்பு
தனிப்படை போலீசார் கூறியதாவது: தலைமறைவாக உள்ள நாதுராம் தனக்கு தேவையான உதவிகளை பெற 7 முதல் 8 சிம் கார்டுகளை பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. மேலும், நாதுராம் மாநிலம் விட்டு மாநிலம் சென்று கொள்ளையடிப்பதில் கில்லாடி என்பதால் அவனுக்கு நாடு முழுவதும் உள்ள கொள்ளை கும்பலுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் அவனை பிடிப்பதில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அவனை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் நாதுராம் ராஜஸ்தான் மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதனால், அவனை பிடிக்க வெளி மாநில போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நாதுராமை பிடித்து விடுவோம். மோதல் நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி மற்றும் குற்றவாளி நாதுராம் சுட்ட முனிசேகரின் துப்பாக்கி என 2 துப்பாக்கிகளும் தடயவியல் துறைக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிறகே துப்பாக்கி சூட்டின் போது நடந்தது குறித்து தெரியவரும்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது Empty Re: இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

Post by SK Sat Dec 16, 2017 5:12 pm

அவன் தூக்கிலிடப்பட்ட வேண்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது Empty Re: இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 16, 2017 8:23 pm

SK wrote:அவன் தூக்கிலிடப்பட்ட வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1253469
அங்கு இந்த திருட்டு கும்பலுக்கு ஊரே சேர்ந்து உதவி உள்ளது
நன்றி
நண்பரே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது Empty Re: இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விவசாயியை சுட்டு கொன்ற வேட்டைக்காரர் கைது
» சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது
» மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum