புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_m10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_m10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_m10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_m10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_m10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10 
21 Posts - 4%
prajai
வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_m10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_m10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_m10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_m10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_m10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_m10வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Sun Dec 10, 2017 1:42 pm



இரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள். ‘உங்க பையன் ஸ்கூலுக்கே போறதில்லையா.. எப்பப் பார்த்தாலும் வீட்லயே இருக்கான்..’ என்கிறார் ஒரு பெண். அதற்கு இன்னொரு பெண், ‘அந்தக் கொடுமையை ஏன் கேக்குறீங்க.. ஒருநாள், ஸ்கூலுக்குப் போனவன் வீட்டுக்கு வரல. பதறிப் போயி, வாட்ஸ் – அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் இவனோட போட்டோவைப் போட்டு, ‘யாராச்சும் இவனப் பார்த்தா கொண்டாந்து ஒப்படைங்க’ன்னு சொல்லிருந்தோம்.

அன்னைக்கி சாயந்தரமே, பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல விளையாடிட்டு இருந்த இவனைத் தேடிப் பிடிச்சுக் கொண்டாந்து வீட்டுல சேர்த்துட்டாங்க. அதுக்கப்புறம் நடந்தது தான் ஏக களேபரம். நாங்க வாட்ஸ் – அப்பில் போட்ட அந்த மெசேஜ் இன்னமும் சுத்திக்கிட்டே இருக்கு. அதனால, இவன் எப்ப வெளியில போனாலும் தேடிப்பிடிச்சுக் கொண்டாந்து வீட்டுல விட்டுடுறாங்க. அதனால, இவன் ஸ்கூலுக்கே போக முடியல’ என்கிறார்.

யதார்த்தமான உண்மை

இது தமாஷுக்காக வாட்ஸ் – அப்பில் பகிரப்பட்ட கற்பனை உரையாடல்தான். ஆனால், இன்றைக்கு வாட்ஸ் – அப்பில் ஃபார்வர்டு செய்யப்படும் பல தகவல்கள் சொல்லும் யதார்த்தம் இதுதான்.

‘நாகையில் சுனாமி’ என்ற தலைப்பில் வந்த ஒரு வீடியோவானது நவம்பர் 25-லிருந்து 30-ம் தேதி வரை வாட்ஸ் – அப்பில் பல்வேறு குழுக்கள் மூலமாக எனக்கு சுமார் 200 தடவைகள் பகிரப்பட்டது. சுனாமி சமயங்களில் மக்கள் எப்படி தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு தரப்பில் நடத்தப்பட்ட ஒத்திகை பிரச்சாரத்தை அப்படியே படம் பிடித்து, நிஜமாலுமே சுனாமி வரப்போவது போலவும், வந்துவிட்டது போலவும் வாட்ஸ் – அப்பில் தகவலைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

விக்னேஷ் விவகாரம்

இதன் உண்மைத் தன்மையை அறியாத பலர், இதை தங்களுக்குத் தெரிந்த (தெரியாத) பலருக்கும் வாட்ஸ் – அப் குழுக்களில் ஒரு வாரமாய் பரப்பினார்கள். இதைப் பார்த்துவிட்டுப் பீதியடைந்த பலர், யாரைப் பார்த்தாலும், ‘மறுபடி சுனாமி வரப்போவுதாமே!’ என விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். இன்னும் எங்கெல்லாம், எப்படியெல்லாம் அந்த வீடியோ சுற்றுகிறதோ தெரியவில்லை.

இப்படித்தான், விக்னேஷ் என்பவர் தவறவிட்ட கல்விச் சான்றுகள் அனைத்தும் தன்னிடம் உள்ளதாக மானாமதுரையைச் சேர்ந்த ஒருவர் தனது அலைபேசி எண்ணுடன் வாட்ஸ் – அப் தகவலை பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அந்த எண்ணில் தொடர்பு கொண்டால், அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த சம்பவம் எப்போது நடந்ததோ தெரியவில்லை. விக்னேஷ் கைக்கு அவரது கல்விச் சான்றிதழ்கள் போய்ச் சேர்ந்ததா என்பதைக்கூட தெரிந்து கொள்ளாமல் அந்தத் தகவலை இன்னமும் சிலர் ஃபார்வர்டு செய்துகொண்டிருக்கிறார்கள் (உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா பாஸ்?!)

வாரத்துக்கு ஒருமுறையாவது..

இதேபோல், சென்னையில் புதுக்கோட்டை வாலிபர் ஒருவர் தலையில் அடிபட்டு சாலையில் கிடக்கிறார் என்ற தகவலும், துபாய் நாட்டில் நாகை மாவட்ட வாலிபர் கொடுமைப்படுத்தப்படுகிறார் என்ற பதிவும் ஆண்டுக் கணக்கில் வாட்ஸ் – அப்பில் ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இது இப்படி என்றால், இன்னும் சிலரோ வேறு மாதிரி தகவல்களைப் பகிர்வதில் ஆவலாக இருக்கிறார்கள். ‘ஒலியும், ஒளியும் பார்த்த கடைசி தலைமுறை நாம்தான்.. ஒனிடா மண்டையனை பார்த்த கடைசி தலைமுறையும் நாம் தான் என்ற தகவல்கள் எல்லாம் இவர்களின் உபயம்(!) தான்.

நாசா அனுப்பும் செயற்கைக் கோள்கள் காரைக்காலில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு நேரே வரும் போது ஒரு வினாடி செயலிழந்து விடுகின்றன, உலகின் மையப்புள்ளி சிதம்பரத்தில் நடராஜர் கால் ஊன்றியுள்ள இடம் தான். இதுபோன்ற ‘அதிரடி’யான ஆன்மிகத் ‘தகவல்’களையும் வாரத்துக்கு ஒருமுறையாவது பகிர்ந்து, மகிழ்ந்து கொள்கிறார்கள்.

தமிழனா இருந்தா ஷேர் பண்ணு

இன்னும் சிலரோ, ‘இது மிக அவசரம். இன்னும் ஒரே நாள் தான் பாக்கியிருக்கிறது. உடனே உங்களது வாக்கைப் பதிவு செய்யுங்கள்’ என்று நம்மை அவசரப்படுத்துகிறார்கள். சமீப நாட்களாக இன்னொரு தகவல் வேகமாக பகிரப்படுகிறது. அன்டார்டிக்காவில், திருவள்ளுவர் கைப்பட எழுதிய திருக்குறள் புத்தகம் கிடந்தது. நாசா விஞ்ஞானிகள் அதை கார்பனேட்டிங் செய்து பார்த்தபோது அது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது எனத்தெரிய வந்துள்ளது என்கிறது அந்தத் தகவல். இதன் உண்மைத் தன்மைக்கு யார் உத்திரவாதம் தந்தார்கள் என்று தெரியவில்லை. திரும்பத் திரும்ப இதை பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

இன்னும் சில வாட்ஸ் – அப் பதிவாளர்கள், ‘தமிழனா இருந்தா ஷேர் பண்ணு..’ என்று நமது இனப் பற்றுக்கும் பரீட்சை வைக்கிறார்கள். சிலர், ‘மனிதாபிமனாத்துடன் தயவு செய்து இதைப் பகிருங்கள்’ என்று கிளறிவிடுவதால், இரக்க சுபாவம் உள்ள நம் மக்கள், சும்மா ரெண்டு பேருக்கு தள்ளி விடுவோமே என்று நினைத்தும் ஷேர் செய்கிறார்கள்.

சம்பந்தமில்லாத வீடியோ காட்சிகள்

மகாபாரதத்தில் பீமன் பயன்படுத்திய கெதை ஆயுதம் இந்தோனேசியாவில் கிடைத்து விட்டது, மகாராஷ் டிராவில் பூமிக்கடியில் சிவன் சிலை ஒன்று கிடைத்துள்ளது. இதற்கு பல்லாயிரக் கணக்கான பாம்புகள் காவல் இருந்தன. இப்படியெல்லாமும் இஷ்டத்துக்குத் தகவல்களைப் பரப்பி, எங்கோ எதற்காகவோ எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் அத்துடன் இணைத்து நம்மை நம்ப வைக்கப் பார்க்கிறார்கள்.

அதேசமயம், வாட்ஸ் – அப் மூலம் பயனுள்ள பல நல்ல விஷயங்களும் பகிரப்படுகின்றன. அவற்றால் பல நல்ல காரியங்கள் நடப்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், சில சமயங்களில் ஓரளவுக்கு விவரம் தெரிந்த நாமும்கூட வாட்ஸ் – அப்பில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மையைப் பற்றி அறியாமல் நமது நண்பர்களுக்குப் பகிர்ந்து விடுகிறோம். நாம் பகிராவிட்டால் சீக்கிரமே நமது நண்பர்கள் மூலமாக நமக்கே அந்தத் தகவல் வந்து சேருமே என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேட்கிறது. ஆனால், உறுதிப்படுத்தப்படாத, தகவலை நாம் மற்றவர்களுக்கு ஃபார்வர்டு செய்வதால் அவர்களின் கவனத்தைச் சிதைப்பதுடன் அவர்களது பொன்னான நேரத்தையும் வீணடிக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல, அலைபேசியின் பேட்டரி எனர்ஜியை காலிசெய்வதுடன் ‘மொபைல் டேட்டா’வுக்கும் தவணை முறையில் வேட்டு வைக்கிறோம். எனவே, உறுதியாகத் தெரியாத ஒரு தகவலை, நீங்கள் (தமிழராகவே இருந்தாலும்!) தயவு செய்து மற்றவர்களுக்குப் பகிராதீர்கள். பகிர்ந்து அவர்களின் நிம்மதியைக் கெடுக்காதீர்கள்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 10, 2017 6:43 pm

வருடாவருடம் ஒரு பூவின் படம் குரங்கு முகத்துடன் தவறாமல் வரும். இந்த பூ 12 வருடத்திற்கு ஒரு முறை இமாச்சல பிரதேசத்தில் மலரும். இதை பார்ப்பவர்களுக்கு மறு பிறவியே கிடையாதாம். இது மாதிரி பல பைத்தியக்கார பதிவுகள் , போட்டிப்போட்டுக் கொண்டு பகிர்வோர் பலருண்டு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 10, 2017 6:53 pm

தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க! 103459460

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Dec 11, 2017 9:50 am

யதார்த்தமான உண்மை



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 20, 2017 8:19 am

சூப்பர்.....இந்தக்காலத்திற்கு தேவையான பதிவு ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக