புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:14 pm
» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Today at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:22 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:27 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 3:07 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
by heezulia Today at 8:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:14 pm
» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Today at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:22 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:27 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 3:07 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
vista | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
Shivanya | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mini |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
vista |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிரளவைக்கும் லைஃப் ஸ்டைல்! – அத்துமீறும் ஆடம்பரம்…
Page 1 of 1 •
- ksikkuhபண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017
“படிக்க வேண்டிய வயசுல பல்சர் கேக்குறாங்க. பைக் ரேஸ், மது, புகை, காஸ்ட்லீ மொபைல் எனச் சுத்துறாங்க. முகத்தைப் பார்த்துப் பேசுறதைவிட முகநூலில்தான் அதிகமா இருக்காங்க. சுருக்கமாச் சொல்லணும்னா… நல்ல வாழ்க்கையைவிட, ஆடம்பரமான வாழ்க்கையைத்தான் இன்றைய தலைமுறை பசங்க எதிர்பார்க்குறாங்க.
‘என் வாழ்க்கை… என் உரிமை’ என்ற வசனத்தைப் பெரும்பாலான வீடுகளில் கேட்க முடியுது. தான் பட்ட கஷ்டத்தைத் தன் பிள்ளைகள்படக் கூடாதுன்னு நினைச்சு பசங்களுக்குத் தகுதிக்கு மீறிப் பெத்தவங்க செஞ்சுடுறாங்க. அதோட விளைவு என்ன தெரியுமா? சின்ன வயசுலயே பசங்களோட வாழ்க்கைத் தடம் மாறிப் போயிடுது.
பைக் விலை ரூ.1.5 லட்சம்!
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மருத்துவர் சரத்பாபு. மகன் மதன், மகள் மாலினி. மதன் ப்ளஸ் 2 முடிச்சுட்டு காலேஜ் சேர்ந்தான். காலேஜ் காட்டாங் கொளத்தூரில் இருக்கு. ரயில் வசதி, பஸ் வசதி எல்லாம் இருக்கு. ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ஒரு பைக் வாங்கிக்கொடுங்கன்னு கேட்டான். அப்பாவும் வாங்கிக் கொடுத்திட்டார். முதல் நாள் காலேஜ் போயிட்டுத் திரும்பியபோதே ஆக்சிடென்ட். ஒரே வாரத்துல இன்னொரு ஆக்சிடென்ட். ஏன்னா, இவன் சாதாரணமாவே 100 கி.மீ வேகத்துக்கு மேலதான் போவானாம். மூணாவது ஆக்சிடென்ட்டில் பலத்த அடிபட்டு ஒரு மாதம் பெட்ல படுத்துட்டான். இதுல பையன் மேல தப்பு இல்ல… ஆசையாய் கேட்குறானேன்னு ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு பைக் வாங்கிக்கொடுத்த அப்பா மேலதான் தப்பு.
தூக்கி அடிச்சது 15 ஆயிரம்!
பசங்கதான் இப்படி, பொண்ணுங்க அப்படி இல்லைனு நினைக்காதீங்க. அவங்க ‘சைலன்ட் கில்லர்ஸ்’.
மதுரையில் பிரபல பள்ளி ஒன்றில் ப்ளஸ் 2 படித்தாள் சங்கரி. நல்ல மார்க் வாங்கினா டேப் (Tab) வாங்கித் தர்றேன்னு அப்பா சொல்லியிருக்கார். 1,150-க்கு மேல் மார்க் பெற்றாள். சொன்ன மாதிரியே அப்பாவும் டேப் (Tab) வாங்கிக் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்ததும் கோபத்தில் வீசியடித்தாள் சங்கரி. ஏனென்றால், இவள் கேட்ட டேப் விலை 35,000 ரூபாய். தந்தை வாங்கித் தந்த டேப் விலை 15,000 ரூபாய்.
பெத்தவங்களே காரணம்…
மதன், சங்கரி மட்டுமல்ல… இன்றைய தலைமுறைப் பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்காங்க. இதற்குப் பல காரணங்கள் இருக்கு. பெற்றோர்கள் ரெண்டு பேருமே வேலைக்குப் போறாங்க. கைநிறையச் சம்பாதிக்கிறாங்க. எல்லாமே நம்ம பிள்ளைங்களுக்குத்தானே… அப்டீன்னு நினைக்கிறாங்க. நாம ரெண்டு பேரும் வேலைக்குப் போயிடுறோம்… அதனால நம்ம பிள்ளைங்களைச் சரியாகக் கவனிக்காம இருக்கோமோ என்ற குற்ற உணர்ச்சியும் அவங்களுக்கு இருக்கு. அதனால, பிள்ளைங்களுக்கு அதிகப்படியான செல்லம் கொடுக்குறாங்க. பிள்ளைங்க லேசா அழுதாலே பெற்றோர்களால தாங்கிக்க முடியலை. அதனால, என்ன கேட்டாலும் எப்பக் கேட்டாலும் தகுதிக்கு மீறி வாங்கிக் கொடுக்குறாங்க. குழந்தைகள் வளரவளர ஏமாற்றத்தைத் தாங்கிக்க முடியாமப் போயிடுறாங்க. முறையாக வளர்க்கப்படாத பிள்ளைங்களுக்கு, பிடிவாதக் குணம் அதிகமாகுது. கேட்பதைச் செய்து கொடுக்கலைன்னா எதிர்த்துப் பேச ஆரம்பிச்சிடுறாங்க” என பொரிந்து தள்ளினார், ஒரு சமூக ஆர்வலர்.
‘நோ’-வை ஏற்க முடியலை!
இந்தக் காலத்துப் பசங்களின் வளர்ப்புப் பற்றித் ‘தோழமை’ என்கிற குழந்தை உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் அ.தேவநேயனிடம் கேட்டோம்.
“என் நண்பரின் கதையையே சொல்றேன். அவருக்கு ஒரே மகன். அவன் பெரிய ஆளா வரணும்னு ஒரு பெரிய ஸ்கூலில் சேர்த்தாங்க. அங்கு படிக்கிற எல்லாரும் ரொம்ப பணக்காரப் பசங்க. இவர் ஒரு லோயர் மிடில் கிளாஸ். மத்த பசங்க வெச்சிருக்கிற பொருட்களைப் பார்த்துட்டு வந்து, அது எல்லாம் தனக்கும் வேணும்னு அந்தப் பையன் கேட்பான். அந்த நண்பரும் வாங்கிக்கொடுப்பார். அவன் கொஞ்சம் பெரியவனா ஆனப்புறம், இப்போ ஏதாவது ஒரு பொருளை அவன் கேட்டு இவர்கள் வாங்கிக்கொடுக்கலைன்னா அவனால அதைத் தாங்கிக்க முடியாது. ‘நோ’ என்கிற வார்த்தையைக்கூட அவனால் ஏத்துக்க முடியலை.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே உள்ள பிரச்னையைக்கூட சில பிள்ளைகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கிறாங்க. அம்மாவிடம் ஏதாவது ஆகணும்னா, அப்பாவைப் பற்றித் தவறாகப் பேசுறது. உடனே, மகன் தனக்காகப் பேசுறான்னு அவன் கேட்டதை வாங்கித் தந்துடறாங்க. அதே மாதிரிதான் அப்பாவிடமும். இதற்கு முக்கியக் காரணம் கூட்டுக் குடும்பம் உடைந்ததுதான். தாத்தா, பாட்டிகூடவே இருந்தால் குழந்தைகள் வளர்ப்பு சரியான திசையில், சரியான குணத்தில் அமையும். அந்தச் சூழல் தகர்ந்துபோய்விட்டது” என்று கவலையுடன் சொன்னார் தேவநேயன்.
‘பயங்கர’ செல்லம்!
பிரபல உளவியல் நிபுணர் பிருந்தா ஜெயராமனிடம் பேசினோம்.
“11-வது படிக்குற ஒரு பையன் என்கிட்ட கவுன்சலிங்க்காக வந்தான். எடுத்தவுடனே, ‘எங்க அம்மா அப்பா என்னை உங்கக்கிட்ட கவுன்சலிங் போகச் சொன்னாங்க. முதல்ல நான் மாட்டேன்னு சொன்னேன். உடனே, கவுன்சலிங் போனா எனக்கு மோட்டார் பைக் வாங்கித்தரேன்னு சொன்னாங்க. அதனால வந்தேன்’ என்று சொன்னான். பெத்தவங்களோட வார்த்தைகளைவிட, அவங்க வாங்கிக்கொடுக்குற பொருளுக்குத்தான் பசங்க மரியாதை தராங்க.
நான் ஒரு ஸ்கூலில் கவுன்சலிங் கொடுக்கப் போனேன். அங்க எல்.கே.ஜி படிக்கிற ஒரு குழந்தை அடிக்கடி லீவ் போடுமாம். இன்னைக்கு ஸ்கூலுக்கு போகவேணாம்னு அந்தக் குழந்தை முடிவு பண்ணிட்டா யாராலயும் தடுக்க முடியாதாம். ரொம்ப வருஷம் கழிச்சுப் பிறந்ததால அவங்க குடும்பத்துல எல்லோரும் ‘பயங்கர’ செல்லமாம். இப்படிக் குழந்தைகளை வளர்த்தால் எப்படி இருக்கும்? இந்தக் குழந்தைகள் முதலில் பெற்றோர் பேச்சைக் கேட்க மாட்டார்கள். சொந்தங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்கள். அடுத்து யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள்” என்றார் பிருந்தா ஜெயராமன்.
முன்பு ஒரு காலம் இருந்தது, பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்தையும் பெற்றோரே வாங்கிக் கொடுப்பது, அவர்களிடம் எதுவும் கேட்பது இல்லை. அதன்பிறகு பிள்ளைகளிடம் விருப்பத்தைக் கேட்டு வாங்குவதாகக் காலம் மாறியது. பிறகு, பிள்ளைகளை அழைத்துச் சென்று வாங்கிக் கொடுத்தார்கள். இப்போது பிள்ளைகள், பெற்றோர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு போய் தங்களுக்குப் பிடித்ததை வாங்கிக்கொள்கிறார்கள். இப்படியே போனால், பெற்றோர் சம்மதம் இல்லாமல் தனக்கு வேண்டிய பணத்தை வீட்டில் இருந்தே எடுத்துப்போய் வாங்கிக்கொள்ளவும் செய்வார்கள். அப்படி ஒரு கட்டம் உருவாகிவிடாமல் தடுக்க வேண்டியது பெற்றோர் கையில்தான் உள்ளது.
குழந்தைகளை ஐந்து வயதிலேயே வளைக்காவிட்டால், அவர்களின் போக்குக்கு எல்லாம் வளைந்துகொடுப்பவர்களாகப் பெற்றோர்கள் மாற வேண்டியிருக்கும். அது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல… இந்தச் சமுதாயத்துக்கே நல்லதல்ல!
பெற்றோர்களுக்கான டிப்ஸ்…
குழந்தைகள் வளர்ப்பில் என்ன செய்ய வேண்டும்? அவர்களை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பது குறித்து உளவியல் நிபுணர் பிருந்தா ஜெயராமன் தரும் டிப்ஸ்…
* பிள்ளைகளைச் செல்லமாக வளர்ப்பது சரிதான். ஆனால், அதற்கும் ஒரு வரையறை இருக்கிறது. அவர்களிடம் சில விஷயங்களில் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டும்.
* பண வசதிகளை மறைமுகமாகக் கட்டுப்படுத்த வேண்டும்.
* ஒரு வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் பாக்கெட் மணி கொடுங்கள். இனி, ‘அடுத்த திங்கட்கிழமைதான் பாக்கெட் மணி’ என்று தெளிவாகச் சொல்லிவிடுங்கள். அப்போதுதான், வாரக் கடைசியில் ஊர் சுற்றுவது குறையும். ஒருவேளை, நண்பர்களிடம் வாங்கினால், அதையும் இந்தப் பாக்கெட் மணியில் இருந்துதான் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் சொல்லிவிடுங்கள்.
* இரவு தாமதமாக வந்தால் ‘கதவைத் திறக்க மாட்டோம்… நீ கோபித்துக்கொண்டு நண்பர்கள் வீட்டுக்குப் போனால், அப்படியே மறுநாளும் அங்கேயே இரு’ என்று சொல்லுங்கள். நீண்ட நாட்கள் நண்பர்களின் வீடுகளில் இருக்க முடியாது என்று அவர்களுக்கும் தெரியும்.
உங்கள் பிள்ளைகள் செய்யும் செயல்களுக்கான விளைவுகளைச் சந்திக்கவிடுங்கள். பிரச்னையாகிவிடக் கூடாது என்று அவர்களைத் தப்பிக்கவைத்தால், அது உங்களுக்குத்தான் வினை.
* சேமிக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்து பழக்குங்கள். அந்தச் சேமிப்பில் இருந்து தனது அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என உடன்பிறந்தவர்களுக்கு அன்பளிப்பு வாங்கித்தரச் சொல்லுங்கள். அதனால் பகிர்ந்துகொடுத்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற நல்ல உணர்வுகள் அவர்களிடம் உருவாகும்.
* குழந்தைகள் வளரவளர பிறந்தநாளை ஒரு பெரிய பார்ட்டிபோல ஆடம்பரமாக கொண்டாடாதீர்கள். ஆதரவற்றக் குழந்தைங்களுடன் உங்கள் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள். அப்போதுதான், நாம் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள் என்பதும், அப்பா அம்மாவுடைய அருமையும் அவர்களுக்குப் புரியும்.
* பிள்ளைகளுக்கு 13, 14 வயது வரும்போது, நீங்கள் குடும்ப பட்ஜெட் போடும் நேரத்தில் அவர்களையும் உட்காரவையுங்கள். அப்போதுதான், ஒவ்வொரு காசுக்கும் அப்பாவும் அம்மாவும் எவ்வளவு கஷ்டப்படுறாங்க என்பது புரியும்.
* ‘வீட்டைவிட்டு ஓடிப் போய்டுேவன்’னு குழந்தைகள் அடிக்கடி சென்டிமென்ட்டா மிரட்டுவார்கள். ‘போனா போ’ என்று சொல்லாமல், ‘நீ போனா நாங்க எவ்ளோ வருத்தப் படுவோம் தெரியுமா?’ என்று நீங்களும் அதே சென்டிமென்டால் அடிங்க.
* பிள்ளைகள் உங்களிடம் பேசவரும்போது அவர்கள் சொல்வதில் கவனம் செலுத்துங்கள். அந்த நேரத்தில் மொபைலில் பேசுவது, டி.வி பார்ப்பது போன்றவற்றைத் தவிருங்கள். முக்கியமான வேலையில் இருந்தால், வேலை முடிந்தபிறகு அவர்களிடம் பேசுங்கள்.
* உங்கள் குழந்தையுடன் தினமும் முடிந்த அளவு நேரத்தைச் செலவழியுங்கள். பிறர் மீதான கோபத்தைக் குழந்தைகள் மீது காட்டாதீர்கள்.
* கணவன், மனைவி சண்டையை ஒருபோதும் குழந்தைகளிடம் எடுத்துச் செல்லாதீர்கள்.
* ஸ்கூல், காலேஜில் நடக்கும் பெற்றோர் – ஆசிரியர் மீட்டிங் என்றால் தவறாமல் செல்லுங்கள். அப்போதுதான், உங்கள் குழந்தையின் நடவடிக்கைகள் பற்றித் தெரியவரும்.
* உங்கள் குழந்தைகளின் நண்பர்கள் யார் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள். அவர்களைப் பற்றியும் அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் தொடர்பு எண்களையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//மதன், சங்கரி மட்டுமல்ல… இன்றைய தலைமுறைப் பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்காங்க. இதற்குப் பல காரணங்கள் இருக்கு. பெற்றோர்கள் ரெண்டு பேருமே வேலைக்குப் போறாங்க. கைநிறையச் சம்பாதிக்கிறாங்க. எல்லாமே நம்ம பிள்ளைங்களுக்குத்தானே… அப்டீன்னு நினைக்கிறாங்க. நாம ரெண்டு பேரும் வேலைக்குப் போயிடுறோம்… அதனால நம்ம பிள்ளைங்களைச் சரியாகக் கவனிக்காம இருக்கோமோ என்ற குற்ற உணர்ச்சியும் அவங்களுக்கு இருக்கு. அதனால, பிள்ளைங்களுக்கு அதிகப்படியான செல்லம் கொடுக்குறாங்க. பிள்ளைங்க லேசா அழுதாலே பெற்றோர்களால தாங்கிக்க முடியலை. அதனால, என்ன கேட்டாலும் எப்பக் கேட்டாலும் தகுதிக்கு மீறி வாங்கிக் கொடுக்குறாங்க. குழந்தைகள் வளரவளர ஏமாற்றத்தைத் தாங்கிக்க முடியாமப் போயிடுறாங்க. முறையாக வளர்க்கப்படாத பிள்ளைங்களுக்கு, பிடிவாதக் குணம் அதிகமாகுது. கேட்பதைச் செய்து கொடுக்கலைன்னா எதிர்த்துப் பேச ஆரம்பிச்சிடுறாங்க” என பொரிந்து தள்ளினார், ஒரு சமூக ஆர்வலர்.//
ரொம்ப சரி............இன்றைய குழந்தைகளுக்கு 'நோ' பிடிக்காது, விட்டுக்கொடுக்க பிடிக்காது, சகித்து கொள்ள பிடிக்காது..........எதானாலும் தனக்கே வேண்டும் என்கிற குணம் என்று ரொம்ப பயங்கரமாயிருக்கிறது...........
ரொம்ப சரி............இன்றைய குழந்தைகளுக்கு 'நோ' பிடிக்காது, விட்டுக்கொடுக்க பிடிக்காது, சகித்து கொள்ள பிடிக்காது..........எதானாலும் தனக்கே வேண்டும் என்கிற குணம் என்று ரொம்ப பயங்கரமாயிருக்கிறது...........
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|