புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_m10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10 
19 Posts - 46%
mohamed nizamudeen
உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_m10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10 
5 Posts - 12%
heezulia
உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_m10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10 
5 Posts - 12%
வேல்முருகன் காசி
உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_m10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_m10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10 
3 Posts - 7%
Raji@123
உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_m10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_m10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_m10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10 
1 Post - 2%
prajai
உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_m10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_m10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10 
142 Posts - 40%
ayyasamy ram
உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_m10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_m10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_m10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_m10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_m10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10 
7 Posts - 2%
prajai
உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_m10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_m10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_m10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_m10உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..!


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Thu Dec 07, 2017 12:00 pm






நம்மில் பலருக்கும் உள்ள பிரச்சினையே நமக்கான திறமையை உரிய நேரத்தில் வெளிப்படுத்தத் தெரியாதது தான். அந்த வீட்டுக்கு புதிதாக வந்த மருமகள் பிரார்த்தனை அறையில் மனமுருக இறைவனை துதித்து பாடிக் கொண்டிருந்தாள். அப்போது வெளியில் வாக்கிங்கை முடித்து விட்டு வந்த மாமனார் தன் மகனிடம், “எத்தனை அருமையான பாட்டு… இன்னும் கொஞ்சம் டிவி வால்யூமை கூட்டி வை” என்றார்.

மகன் சொன்னபிறகு தான் தன் மனம் உருகப் பாடியது தன் அன்பான மருமகள் என்பதை தெரிந்து கொண்டார். “சினிமாவில் பாடியிருந்தால் திரைக்கு இன்னொரு பி.சுசிலா கிடைத்திருக்கக் கூடுமே! ஏன் மருமகளே உன் திறமையை இத்தனை நாளாக குடத்திலிட்ட விளக்காக வைத்திருந்தாய்?” என்று மருமகளிடம் கேட்டார், மாமியார்.

மருமகளோ, “எனக்கு எங்கள் வீட்டில் அந்த அளவுக்கு சுதந்திரம் இல்லை மாமா. நாளைக்கு இன்னொரு வீட்டில் போய் சமையலைக் கவனிக்கப் போகிற பெண்ணுக்கு பாட்டு என்ன வேண்டிக்கிடக்கிறது என்று அம்மா சொல்லி விட்டார். அதனால் என் பாட்டு `அதுபாட்டுக்கு’ இருந்து விட்டது என்றாள்.

இந்தப் பெண் என்றில்லை, பலரும் தங்கள் திறமையை சரிவர அரங்கேற்ற முடியாமல் கடைசி வரை தங்கள் திறமைகளை தங்களுக்குள்ளே புதைத்துக் கொள்ளும் அவலம் தான் நடந்து வருகிறது. சிலரது அபூர்வ திறமைகளை பள்ளிக்கூடம் தட்டிக் கொடுக்கும். கல்லூரி முத்தம் கொடுக்கும். ஆனால் கல்லூரிப்படிப்பை முடித்த பிறகு நண்பர்களிடம் இருந்து இந்தக் கலையாளர்கள் அந்நியமாகி விடுகிறார்கள். கடைசியில் எந்த கலைக்காக கல்லூரி முழுக்க அறியப்பட்டார்களோ, அந்தக் கலையை தங்களிடம் இருந்து முற்றிலும் விலக்கி வைத்தபடி கம்பெனி கம்பெனியாய் வேலைக்கு அலைந்து கொண்டிருப்பார்கள்.

இந்த நாட்களில் மறந்தும் அவர்கள் தங்கள் கலை பற்றிப் பேசுவதில்லை. அப்புறம் ஒருவழியாய் வேலை கிடைத்து கொஞ்சி மகிழ ஒரு குடும்பம் கிடைத்து அவர்கள் சந்தோஷத்தில், கவலையில் தங்கள் எஞ்சிய வாழ்நாளை கரைத்துக் கொண்டிருப்பார்கள். கடைசி வரை கலை மட்டும் அவர்களிடம் இருந்து விலக்கப்பட்ட கனியாகவே இருந்து விடும்.

இப்படித்தான் ஒரு வயலின் வித்வான் இருந்தார். அவர் குடும்பத்தின் அன்றைய சூழலில் `கலையாவது கத்தரிக்காயாவது’ என்ற சொல்லக்கூடிய அளவுக்கு குடும்பத்தில் வறுமை ஆட்டிப் படைத்தது. அதனால் வயலினை பரணில் தூக்கிப் போட்டவர், குடும்பத்துடன் கூலி வேலைக்குப் போய்விட்டார். அந்தக் கூலி வேலை முதலில் பெற்றோர் சார்ந்த குடும்பத்தையும், பிறகு மனைவி, பிள்ளைகள் கொண்ட குடும்பத்தையும் பொருளாதாரத்தில் சற்றே தாங்கிப் பிடிக்க உதவிற்று. அவ்வளவு தான்.

ஆனாலும் அவருக்குள் ஓரு ஏக்கம். நமக்குள் இருந்த வயலின் கலைஞனை தொலைத்து விட்டோமே என்று உள்ளுர மறுகிக் கொண்டிருந்தார்.

அன்று மாலையில் கிடைத்த நேரத்தில் பக்கத்து ஊரில் நடக்கும் வாரச்சந்தைக்கு போனார். அங்கே ஒரு இளைஞன் பழைய வயலின் ஒன்றை ஏலத்தில் விட இருந்தான். அந்த வயலினை வாசித்தே பல நாட்களாகி இருக்கலாம். விற்க வேண்டிய அவசியம் வந்தபோது சந்தைக்கு வந்து விட்டான். அவன் முதலில் பத்து ரூபாயில் இருந்து ஏலத்தை ஆரம்பித்தான். `பழமை மாறாத வயலின்’ என்று சொல்லி அவன் ஏலம் விட்டதில் அடுத்தவர் 20 ரூபாய்க்குக் கேட்டார். இன்னொருவர் ஏலத்தை 30 ரூபாயாக உயர்த்தினார்.

மேற்கொண்டு கேட்க ஆளில்லை. இளைஞனும் கிடைத்தவரை லாபம் என்ற எண்ணத்தில் ஏலத்தை முடித்துக் கொள்ளும் மனநிலைக்கு வந்தான்.

அப்போது தான் நமது வயலின் வித்வான் அந்தக் கூட்டத்திற்குள் நுழைகிறார். இளைஞனை நெருங்கியவர், `வயலின் ஏலம் விடும்போது அதை வாசித்துக் காட்டுவது தானே சரியாக இருக்கும்’ என்றபடி, தன் நெஞ்சோடு வயலினை அணைத்தபடி இசை மீட்டத் தொடங்கினார்.

அடுத்த சில நிமிடங்களில் அந்த இசை சந்தைக்கு வந்த மொத்தக் கூட்டத்தையும் அங்கே வரவழைத்து விட்டது. கேட்டவர்கள் மெய்யுருகினார்கள். அடுத்த பாட்டு, அடுத்த பாட்டு என்று தொடர்ந்து மூன்று பாட்டுக்கு வாசித்து முடித்தவர், ஜனங்களை நோக்கி, `இப்போது ஏலம்கேட்கிறவர்கள் கேட்கலாம். ஏலத்தை முதலில் இருந்து ஆரம்பிப்போம்’ என்றார். அவரே வயலின் ஏலம் நூறு ரூபாய் என்று ஆரம்பித்தார்.

வயலின் இசை கேட்டு ஏற்கனவே உருகிப் போயிருந்தவர்கள் பலரும் ஏலத் தொகையை கூட்டிக் கொண்டே போனார்கள். கடைசியில் எண்ணூறு ரூபாய்க்கு கேட்டவருக்கு வயலின் கிடைத்தது. இளைஞன் இப்போது அந்த பெரியவரை தன் வயலினை விற்றுத்தர வந்த தெய்வமாகவே கருதினான். ஏலப்பணத்தில் 300 ரூபாயை அவருக்கு கொடுக்க முன் வந்தான். அவரோ `என்ஆத்ம திருப்திக்கு இசைத்தேன். அதற்கு விலை வைக்காதே’ என்று பணத்தை வாங்க மறுத்து விட்டார்.

அது மன்னர் ஆட்சிக்காலம். அந்த பெரியவர் அங்கிருந்து நாலடி நடந்திருக்க மாட்டார்.அதற்குள் அரண்மனை வீரர்கள் அவரை சுற்றி வளைத்தார்கள். “எங்கள் மன்னரின் அரசவைக்கு தேர்ந்த இசைக்கலைஞர்கள் தேவை. அப்படி ஒருவருக்காக நாங்கள் நகரை வலம் வந்தபோது தான் உமது இசையை கேட்டோம். இப்போதே அரண்மனைக்கு எங்களுடன் வந்து எம் மன்னரை பார்க்கிறீர்” என்று அழைத்து சென்றார்கள். அவருக்குள் புகுந்து கொண்டிருந்த அந்தக் கலை கடைசியில் அவரை அரண்மனை இசைக்கலைஞராக்கி அழகு பார்த்தது. இது தான் கலையின் சிறப்பு.

கற்ற கலைக்கு காலம் கடந்தாலும் மரியாதை நிச்சயம். அதனால்கலை தெரிந்தவர்கள் அதை மறைபொருள் போல் மூடி வைக்காமல் வெளிப்படுத்துங்கள், வெளிப்படுங்கள். உலகை வெல்லுங்கள்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக