புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போலியோ Poll_c10போலியோ Poll_m10போலியோ Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
போலியோ Poll_c10போலியோ Poll_m10போலியோ Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
போலியோ Poll_c10போலியோ Poll_m10போலியோ Poll_c10 
6 Posts - 18%
i6appar
போலியோ Poll_c10போலியோ Poll_m10போலியோ Poll_c10 
3 Posts - 9%
Jenila
போலியோ Poll_c10போலியோ Poll_m10போலியோ Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
போலியோ Poll_c10போலியோ Poll_m10போலியோ Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போலியோ Poll_c10போலியோ Poll_m10போலியோ Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
போலியோ Poll_c10போலியோ Poll_m10போலியோ Poll_c10 
88 Posts - 35%
i6appar
போலியோ Poll_c10போலியோ Poll_m10போலியோ Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
போலியோ Poll_c10போலியோ Poll_m10போலியோ Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
போலியோ Poll_c10போலியோ Poll_m10போலியோ Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
போலியோ Poll_c10போலியோ Poll_m10போலியோ Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
போலியோ Poll_c10போலியோ Poll_m10போலியோ Poll_c10 
7 Posts - 3%
Guna.D
போலியோ Poll_c10போலியோ Poll_m10போலியோ Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
போலியோ Poll_c10போலியோ Poll_m10போலியோ Poll_c10 
2 Posts - 1%
prajai
போலியோ Poll_c10போலியோ Poll_m10போலியோ Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலியோ


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Wed Dec 06, 2017 1:25 pm




போயே போச்சே போலியோ!


ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் போலியோ நோய், வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளின் கை, கால் தசைகளைப் பாதித்து, அவற்றின் இயங்கும் சக்தியை இழக்கச் செய்கிறது. இதனால் கை, கால் தசைகள் சிறுத்து, இளம்பிள்ளை வாதம் ஏற்படு்கிறது.

இந்த மோசமான இளம்பிள்ளை வாத நோயை, ஒவ்வொரு முறையும் இரண்டே இரண்டு மருந்துச் சொட்டு்க்கள் மூலமாக இருந்த இடம் தெரியாமல் ஒழித்தே விட்டோம். அப்படி ஒரு மகத்தான சாதனை புரிந்த மருந்துதான் போலியோ சொட்டு மருந்து.

நோய் பாதிப்பு

போலியோ கிருமிகள் அசுத்தமான உணவு மற்றும் குடிநீர் மூலம் நம் குடலுக்குள் சென்று, அங்கிருந்து ரத்தத்தின் வழியே மூளையை அடைந்து, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கின்றன. முக்கியமாக, கால் தசைகளை இயக்குகின்ற நரம்புகளைப் பாதிப்பதால், இந்த நோய் உள்ளவர்களுக்குக் கால்கள் செயல் இழக்கும். இந்த நோய்க் கிருமிகள் மலத்தின் வழியாக வெளியேறி, மற்றவர்

களுக்கும் பரவும். பல நேரங்களில் போலியோ கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவது இல்லை. ஆனால், சில நேரங்களில் மரணத்தைக்கூட ஏற்படுத்திவிடும். சுவாசத்துக்கு உதவும் தசைகளை இந்தக் கிருமி தாக்கும்போது, பாதிக்கப்பட்ட நபர் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி இறப்பைத் தழுவலாம் என்பதால், இது மிகவும் அபாயகரமானது.

போலியோ தடுப்பின் முக்கியத்துவம்

உலக அளவில், சென்ற நூற்றாண்டில் கோடிக்கணக்கான பேர் போலியோவால் முடமாயினர். இந்த நிலைமை ஆண்டுதோறும் அதிகரித்து வரவே, போலியோவுக்குக் கடிவாளம் போட மருத்துவ உலகம் களத்தில் இறங்கியது. 1952ம் ஆண்டில், 'ஜோனஸ் சால்க்’ (Jonas Salk) என்ற அமெரிக்க மருத்துவர், போலியோ நோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்தார். அதன் பிறகு, இந்த நோயின் தாக்குதல் உலக அளவில் குறையத் தொடங்கியது.

1957ம் ஆண்டில,் 'ஆல்பர்ட் சாபின்’ (Albert Sabin) என்ற மற்றொரு அமெரிக்க மருத்துவர் இதே நோய்க்குத் தடுப்புச் சொட்டு மருந்தைக் கண்டுபிடித்தார். குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசியைப் போடுவதை விட சொட்டு மருந்தைக் கொடுப்பது எளிதாகவும், செலவு குறைவாகவும் இருந்தது. இதனால், இந்திய அரசாங்கம் 'குழந்தைகளுக்கு முறைப்படி போலியோ சொட்டு மருந்து கொடுத்தால், நோயைத் தடுக்கலாம்’ என்னும் விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியது. இந்தியாவில், 2011ம் ஆண்டிலேயே போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது. 'இந்தியா போலியோ இல்லாத நாடு’ எனும் நற்சான்றிதழையும் உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் கொடுத்துவிட்டது. 'அதான் போலியோவை முற்றிலும் ஒழித்தாயிற்றே... பிறகு ஏன், தொடர்ந்து தடுப்பூசி/சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்?’ என்ற சந்தேகம் எழலாம். காரணம் இருக்கிறது. பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் இன்னமும் போலியோ ஒழிக்கப்படவில்லை. அங்கிருந்து இடம்பெயர்ந்து குடியேறுபவர்கள் அல்லது சுற்றுலாவாசிகள் வழியாக இந்த நோய் மீண்டும் இந்தியாவுக்கு வந்துவிட வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்கத்தான் தடுப்பூசி பயன்படுத்த வேண்டும் என்கிறது, உலக சுகாதார நிறுவனம்.

தடுப்பு மருந்து வகை

போலியோவைத் தடுக்க, தடுப்பூசியும் (Inactivated polio vaccine - IPV ) தடுப்புச் சொட்டு மருந்தும் (Oral Polio Vaccine - OPV) உள்ளன. அழிக்கப்பட்ட போலியோ கிருமியைப் பயன்படுத்தித் தடுப்பூசியைத் தயாரிக்கிறார்கள். உயிருள்ள, வீரியம் குறைந்த போலியோ கிருமியைப் பயன்படுத்தி சொட்டு மருந்தைத் தயாரிக்கிறார்கள்.


பென்டாவேலன்ட் தடுப்பு ஊசி

போலியோ தடுப்பூசியைத் தனியாகவும் போட்டுக்கொள்ளலாம்; பென்டாவேலன்ட் தடுப்பூசி மூலமும் போட்டுக்கொள்ளலாம். போலியோ தடுப்பூசியின் விலை அதிகம் என்பதால், குழந்தைக்குத் தடுப்பூசி போட வசதி இில்லாதவர்கள் போலியோ சொட்டு மருந்தை மட்டும் போடலாம்.

முகாம்களும் முக்கியம்!

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு தடுப்பூசியும் சொட்டு மருந்தும் கொடுத்திருந்தாலும்கூட, அரசாங்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் போலியோ தடுப்பு முகாம்களிலும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டியது மிக அவசியம்.

தடுப்பூசி போடவில்லை எனில்...?

ஆரம்பத்திலிருந்தே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத குழந்தைக்கு, 5 வயதுக்குள், 2 மாத இடைவெளியில் 2 ஊசிகளையும், 6 மாத இடைவெளியில் மூன்றாவது ஊசியையும் போட வேண்டும். ஒன்றிரண்டுமுறை போட்டுவிட்டு மீதித் தவணைகளைத் தவறவிட்டவர்கள், ஏற்கனவே சொன்ன இடைவெளியில், விடுபட்ட தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்; விடுபட்ட சொட்டு மருந்தையும் போடலாம்.

அம்மாக்கள் கவனிக்க:

குழந்தைகளுக்கு மிதமான சளித் தொல்லை இருந்தாலும், தயங்காமல் போலியோ சொட்டு மருந்தைத் தரலாம்; தடுப்பு ஊசியையும் போட்டுக்கொள்ளலாம். பக்க விளைவுகள் இல்லை என்பதால் பயம் தேவை இில்லை!

போலியோ தடுப்பு ஊசியே சிறந்தது, ஏன்?

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் போலியோவைத் தடுக்க, தற்போது தடுப்பூசியை மட்டுமே பயன்படுத்துகி்ன்றனர். ஆனால், இந்தியா, பாகிஸ்தான் போன்ற வளரும் நாடுகளில் தடுப்பூசி, சொட்டு மருந்து இரண்டுமே பயன்பாட்டில் இருக்கின்றன. வாய்வழியாகத் தரப்படும் சொட்டு மருந்தினால், 25 லட்சம் பேரில் ஒருவருக்கு, போலியோ வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், போலியோ தடுப்பூசியைப் போட்டுக்கொள்பவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, இதற்குத் தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான் சிறந்தது என்று 'இந்தியக் குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பு’ (மிகிறி) இந்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. வரும் ஆண்டுகளில் சொட்டு மருந்துக்குப் பதில் தடுப்பூசியே பயன்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக