புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஃபுளு காய்ச்சலுக்குக் கடிவாளம் Poll_c10 ஃபுளு காய்ச்சலுக்குக் கடிவாளம் Poll_m10 ஃபுளு காய்ச்சலுக்குக் கடிவாளம் Poll_c10 
30 Posts - 86%
heezulia
 ஃபுளு காய்ச்சலுக்குக் கடிவாளம் Poll_c10 ஃபுளு காய்ச்சலுக்குக் கடிவாளம் Poll_m10 ஃபுளு காய்ச்சலுக்குக் கடிவாளம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
 ஃபுளு காய்ச்சலுக்குக் கடிவாளம் Poll_c10 ஃபுளு காய்ச்சலுக்குக் கடிவாளம் Poll_m10 ஃபுளு காய்ச்சலுக்குக் கடிவாளம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
 ஃபுளு காய்ச்சலுக்குக் கடிவாளம் Poll_c10 ஃபுளு காய்ச்சலுக்குக் கடிவாளம் Poll_m10 ஃபுளு காய்ச்சலுக்குக் கடிவாளம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபுளு காய்ச்சலுக்குக் கடிவாளம்


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Wed Dec 06, 2017 2:31 pm




மழைக் காலம், ஃபுளு காய்ச்சலுக்குக் கொண்டாட்டமான காலம். அக்டோபரில் தொடங்கி ஜனவரி இறுதி வரை இதன் தாக்குதல் அதிகமாகும். ஃபுளு காய்ச்சல், இன்ஃபுளுயென்சா காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிற இந்தக் காய்ச்சல், ஒரு அதிதீவிர தொற்றுநோய்.
வைரஸ் கிருமி பாதிப்பு
இன்ஃபுளுயென்சா வைரஸ் (Influenza virus) இந்த நோயை ஏற்படுத்துகிறது. இதில் ஏ,பி,சி என 3 வகைகள் உண்டு. ஏ வகையில் மேலும் பல துணை இனங்கள் உள்ளன. மற்ற வைரஸ் நோய்களைப்போல் இல்லாமல், இது ஒரே நேரத்தில் பல வகை வைரஸ் கிருமிகளால் ஏற்படுவதுதான், இந்த நோயின் அபாயமான தனித்தன்மை.
நோயாளியின் மூக்கு, தொண்டை, வாய், மூச்சுக்குழல், நுரையீரல் போன்ற பகுதிகளில் இந்தக் கிருமிகள் வசிக்கும். அப்போது, அந்த நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைக் காறித் துப்பினாலோ கிருமிகள் காற்றில் பரவி, அடுத்தவர்களுக்கும் தொற்றி நோயை உண்டாக்கும்.
யாரையெல்லாம் அதிகம் பாதிக்கும்?
சுகாதாரம் அற்ற நெருக்கமான இடங்களில் வசிப்பவர்கள், இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் ஊட்டச்சத்து குறைந்தவர்கள், முறையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், ஆஸ்துமா, சர்க்கரைநோயாளிகள் மற்றும் புகை, போதைப் பழக்கம் உள்ளவர்களை இந்த நோய் எளிதில் தாக்கும். மேலும், நெருக்கடி நிறைந்த சந்தை, திருவிழா, ஊர்வலம், திரையரங்குகள், பஸ், ரயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களில் மக்கள் மொத்தமாகக் கூடும் போதும் இந்த நோய் பரவுவது எளிதாகிறது.
அறிகுறிகள்:
மூக்கு ஒழுகும். மூக்கடைப்பு, தும்மல் வரும். சளி, இருமல், காய்ச்சல் தொடங்கும். உடல்வலி, தலைவலி, மூட்டுவலி, கைகால் வலி கடுமையாகும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். உடல் சோர்வு அதிகரிக்கும். பசி குறையும். முதல் மூன்று நாட்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகத் தொல்லையைக் கொடுத்து, அடுத்துவரும் நாட்களில் படிப்படியாக குறைந்துவிடும். நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவர்களுக்கு ஏழே நாட்களில் நோய் தானாகவே குணமாகிவிடும்.
சிக்கல்கள்:
இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவது, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த குழந்தைகளும், முதியவர்களும்தான். இவர்களுக்குக் காய்ச்சல் கடுமையாவதுடன், மூச்சுக்குழாய் அழற்சி நோய், நுரையீரல் அழற்சி நோய், மூச்சுச் சிறு குழாய் அழற்சி நோய், இதயத்தசை அழற்சி நோய் என்று, பலதரப்பட்டப் பிரச்னைகளை ஏற்படுத்தி, உயிரிழப்பு வரை கொண்டுவந்துவிடும். இந்த ஆபத்தைத் தடுக்க ஃபுளு காய்ச்சலுக்கு முறையாகத் தடுப்பூசி போட வேண்டியது அவசியமாகிறது.
தடுப்பூசி வகை:
இந்தக் காய்ச்சலைத் தடுக்க வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி (Trivalent inactivated vaccine – TIV), உயிர் நுண்ணுயிரி இன்ஃபுளுயென்சா தடுப்பு மருந்து (Live attenuated influenza vaccine – LAIV) என இரண்டு வகை உள்ளன. இவற்றில் மொத்தம் மூன்று வித தடுப்பு மருந்துகள் உள்ளன. ஃபுளு காய்ச்சலுக்குக் காரணமான வைரஸ் ஏ வகையில் உள்ள முக்கியமான இரு வகைத் துணை இனங்களைக்கொண்டும், வைரஸ் பி வகைக் கிருமியைக் கொண்டும் இவை தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் எல்ஏஐவி (LAIV) தடுப்பு மருந்து இந்தியாவில் புழக்கத்தில் இல்லை.
வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி:
இந்த வைரஸ் கிருமியின் மேலுறை ஆன்டிஜெனை எடுத்து, கோழிக்கருவில் வளர்த்து, இந்த வகைத் தடுப்பூசியைத் தயாரிக்கிறார்கள். குழந்தை பிறந்த 6 மாதத்திலிருந்து 3 வயதுக்குள் 0.25 மி.லி அளவிலும், 3 முதல் 8 வயதுக்குள் அரை மில்லி அளவிலும் தொடை அல்லது புஜத்தில் தசை ஊசியாகப் போட்டுக்கொள்ள வேண்டும். எட்டு வயதுக்குள் முதல் முறையாக இதைப் போடும்போது, முதல் ஊசிக்குப் பிறகு ஒரு மாதம் கழித்து, இரண்டாம் தவணையைப் போட வேண்டும்.
ஒன்பது வயதுக்கு மேல் எனில், அரை மில்லி அளவில் ஒருமுறை மட்டும் போட வேண்டும். இந்தத் தடுப்பூசியை முதல் முறையாக எந்த வயதில் போட்டாலும் அதற்குப் பிறகு வருடத்துக்கு ஒருமுறை மீண்டும் போட வேண்டியதும் அவசியம்.

யாருக்கு மிக அவசியம்?
6 மாதம் முடிந்த குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், ஆஸ்துமா, இதய நோய், கல்லீரல் நோய், சிறுநீரக நோய், எய்ட்ஸ் நோய் போன்ற கடுமையான நோய் உள்ளவர்கள், சுகாதாரத் துறைப் பணியாளர்கள் அவசியம் போட்டுக்
கொள்ள வேண்டும்.
எப்போது மிக அவசியம்?
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு – அதாவது ஆகஸ்ட் மாதத்தில் இதைப் போட்டுக்கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களில் வசிப்போர் மே மாதத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்தத் தடுப்பூசி போட்டு ஒரு மாதத்துக்குப் பிறகுதான், இந்தக் கிருமிக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும்.
யார் போட்டுக்கொள்ளக்கூடாது?
கோழி முட்டை மற்றும் இந்தத் தடுப்பூசி ‘அலர்ஜி’ உள்ளவர்கள் போட்டுக்கொள்ளக்கூடாது; காய்ச்சல் வலிப்பு (Febrile seizure) உள்ளவர்கள், ஜி.பி.எஸ் (Guillain-Barre syndrome – GBS ) எனும் நரம்புத் தசை நோய் உள்ளவர்கள், இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு முன்பு, டாக்டரிடம் ஆலோசனை பெறவேண்டும்.
பக்கவிளைவுகள் :
ஊசி போடப்பட்ட இடத்தில் லேசான வலி, வீக்கம், தோல் சிவத்தல் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். மிதமான காய்ச்சல், உடல்வலி இருக்கலாம். இவை இரண்டு அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும். காய்ச்சலுக்கு ‘பாராசிட்டமால்’ திரவ மருந்து அல்லது மாத்திரை தரலாம்.
உயிர் நுண்ணுயிரி இன்ஃபுளுயென்சா தடுப்பு மருந்து இது ஒரு ‘நேசல் ஸ்பிரே’; மூக்கில் போடக்கூடிய தடுப்பு மருந்து. முதலில் சொல்லப்பட்ட தடுப்பூசியைவிட அதிக ஆற்றல், பாதுகாப்பு கொண்டது என்றாலும், இதை இரண்டு வயதுக்கு மேற்பட்ட, ஆரோக்கியமான குழந்தைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதயநோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய் உள்ளவர்களும் கர்ப்பிணிகளும் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் இதைப் பயன்படுத்தக் கூடாது.
மாறிக்கொண்டே வரும் தடுப்பூசி!
எந்தத் தடுப்பூசிக்கும் இல்லாத ஒரு தனித்தன்மை டிஐவி (TIV) தடுப்பூசிக்கு உண்டு. பொதுவாக, ஆண்டுதோறும் இந்தக் கிருமியின் தன்மை மாறிக்கொண்டே இருக்கும். ஒரு ஆண்டில் போட்ட தடுப்பூசியையே அடுத்த ஆண்டில் போட்டால் பலன் தராது. எனவே, உலகச் சுகாதார நிறுவனம் ஆண்டுக்கு இரண்டு முறை தெற்கு ஆசியாவில் பரவுகிற கிருமியின் தன்மையை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் தடுப்பு மருந்து தயாரிக்கச் சொல்கிறது. அதைத்தான் ஒவ்வோர் ஆண்டும் போட்டுக்கொள்ள வேண்டும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக