புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_c10குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_m10குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_c10 
284 Posts - 45%
heezulia
குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_c10குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_m10குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_c10குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_m10குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_c10குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_m10குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_c10குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_m10குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_c10 
19 Posts - 3%
prajai
குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_c10குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_m10குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_c10குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_m10குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_c10குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_m10குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_c10குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_m10குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_c10குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_m10குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 6:40 pm

குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!  PjRgnezwT2iltG3y0oIk+yoginewjpg


‘இந்தப் பிச்சைக்காரன், 1952ம் வருடம்... சுவாமி பப்பா ராம்தாஸைத் தரிசித்த தருணத்தில், செத்துப் போய்விட்டான். சுவாமி பப்பா ராம்தாஸ், இவனைக் கொன்றுபோட்டார். அதற்குப் பிறகு... இங்கே எதுவும் இல்லை. எவரும் இல்லை. அவருடைய தாமரை போன்ற பாதங்களைக் கெட்டியாக நான் பற்றிக் கொண்டேன். அப்படிப் பற்றிக் கொண்டதால், இத்தனை பெரிய செயல், அழகாக நிகழ்ந்தது’ என்று பகவான் யோகி ராம்சுரத்குமார் அருளியிருக்கிறார்.

சுவாமி பப்பா ராம்தாஸை, தன் குருவாக வரித்துக் கொண்டார் பகவான் யோகி ராம்சுரத்குமார். அவரே எல்லாமும்... குருவே சகலமும் என்று உறுதியாக இருந்தார். அந்த உறுதி, அவரை இன்னும் இன்னும் குருவிடம் நெருங்கச் செய்தது.
குரு என்பவரும் அப்படி நெருங்கி வருவார். இன்னும் இன்னும் வேகமாக நெருங்கி வருவார். நெருங்கி வந்து ஆசீர்வதிப்பார்.

பகவான் யோகி ராம்சுரத்குமார், 1952ம் வருடத்தில்... குருநாதர் பப்பா ராம்தாஸை தரிசித்த போது, செத்துவிட்டேன் என்கிறார். என்னை, இந்தப் பிச்சைக்காரனைக் கொன்றுவிட்டார் என்று சிலாகிக்கிறார். அவருக்கு... அந்த மகானுக்கு... பகவான் யோகி ராம்சுரத்குமாருக்கு நேற்றைய தினம் நடந்தது ஜயந்தி விழா.

குரு யோகி ராம்சுரத்குமார் எனும் அற்புத மகான் அவதரித்த நாள் நேற்று. உலகின் பல இடங்களிலும் பல ஊர்களிலும் அவரின் அடியவர்கள் குழுவாக இருந்து, ஜயந்தி நாளை விழாவாக்கினார்கள். அந்த விழாவை, மிகப்பெரிய வழிபாடாக, பூஜையாக, சத்சங்கமாகச் செய்து பிரார்த்தித்தார்கள்.

நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 6:46 pm

குரு என்பவரை வணங்க வணங்க, குரு என்பவர் நம்மைத் தேடியே வந்துவிடுவார். குருவை நினைத்து எங்கெல்லாம் சத்சங்கம் கூடுகிறதோ... சத்தான நிகழ்வுகளைக் கொண்டு குருநாதர் ஆராதிக்கப்படுகிறாரோ... அங்கே குருநாதர் வந்து உட்கார்ந்து கொள்வார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில், நர்த்ரா எனும் கிராமத்தில், 1918ம் வருடம், டிசம்பர் மாதம் 1ம் தேதி இரண்டு சூரியன்கள் உதித்தன. வானில் வழக்கம்போல்... அனுதினமும் உதிக்கிற சூரியன் ஒன்று. அடுத்து... நூறுகோடி சூரியப் பிரகாசத்துடன் பூமியில் உதித்த, ஜனித்த பகவான் யோகி ராம்சுரத்குமார்.

அந்தச் சூரியன் கிழக்கில் உதிக்கும். உதித்தது. இந்தச் சூரியன்... வடக்கே உதித்தது. தெற்கே நகர்ந்து, தன் கருணையையும் அன்பையும் அருளையும் கதிர்களெனப் பரவவிட்டது. பின்னாளில்... பகவான் யோகி ராம்சுரத்குமார் எனும் மகானைக் கண்டறிந்து, இவர் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னார்கள். சொல்லிப் பூரித்தார்கள்.

அப்பா அம்மா, அவருக்கு ராம்சுரத்குன்வர் என்று பெயரிட்டார்கள்.சீராட்டி வளர்த்தார்கள். ஒழுக்கமான குடும்பம், ஒழுக்கத்தை போதிக்காமல், வாழ்க்கையாகவே கடைப்பிடித்தது. இறை நம்பிக்கை கொண்ட அந்தக் குடும்பம், பிள்ளைக்கும் இறை நம்பிக்கையை சாதத்துடன் பிசைந்து ஊட்டியது. பின்னாளில்... இந்தக் குழந்தை, தெய்வக் குழந்தையாகவும் ஞானக்குழந்தையாகவும் வளர்ந்து, உலகுக்கே ஒளி தரும் ஞானச்சூரியனாகத் திகழும் என்பதையெல்லாம் அந்தக் குடும்பம் அறிந்திருக்கவில்லை. கடவுள் கதை சொல்லி வளர்க்க... கடவுளின் சரிதங்களைக் கேட்டு வளர... இந்தக் குழந்தை பின்னாளில் கடவுளாகவே கொண்டாடப்படும் என்பதை யாரால்தான் அறியவும் உணரவும் முடியும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 6:47 pm

காசி என்பது சாதுக்களின் தேசம். உலகின் எந்த மூலையிலிருந்தெல்லாமோ... அங்கே சாதுக்கள் வருவார்கள். எப்போது திரும்பிச் செல்வது என்கிற எந்தத் திட்டமிடலும் இல்லாமல் வருவார்கள். சிலகாலம் அங்கே தங்கியிருப்பார்கள். சிலர் சிவ பூஜையிலும் சிலர் தவத்திலுமாக இருப்பார்கள். சில நேரங்களில் சாதுக்கள் சேர்ந்து கொள்வார்கள். கடவுள் என்பவர் யார் என்று யாரோவொரு சாது கேள்வி கேட்க, அதற்கான பதிலை இன்னொரு சாது சொல்ல, அந்த சாதுவின் பதிலில் இருந்து ஒரு கேள்வியை வேறொரு சாது கேட்பார். அங்கே... இந்த உலகின், இந்தப் பிரபஞ்சத்தின், அற்பமான வாழ்வின் ரகசியங்கள் கொஞ்சம்கொஞ்சமாக உடைபடும்.

அவர்கள் சாதுக்கள். அது சாதுக்களின் கூட்டம். அவர்கள் கூடிப் பேசுகிற பேச்சு... வெறும் அரட்டை அல்ல. ‘இன்னும் தூக்கம் வரலை. அதனால கொஞ்சம் பேசிக்கிட்டிருக்கோமே...’ என்று பொழுதைப் போக்குவதற்கான பேச்சு அல்ல அது. ‘அவன் அன்னிக்கி என்ன பண்ணினான் தெரியுமா... இவன் ஏன் இப்படி அலையுறான்...’ என்றெல்லாம் அடுத்தவர் பற்றி, புறம் பேசுவதற்காக, புறம் பேசி சுவாரஸ்யமாக்கிக் கொள்வதற்காக, சுகம் என்பதாக நினைத்து மற்றவரை பரிகசிப்பதற்காகக் கூடியவர்கள் அல்ல.

அவர்கள் சாதுக்கள். கடவுள் தேடலை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள். எண்ணம், செயல், வாக்கு என்று எல்லாவிதங்களிலும் கடவுள் பற்றியே, பற்றிக் கொண்டிருப்பவர்கள். சலனமே இல்லாமல், சத்தமே செய்யாமல் ஓடிக்கொண்டிருக்கிற கங்கையை சாட்சியாகவும் துணையாகவும் வைத்துக் கொண்டு, காசிக்கு அருகில் உள்ள கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே சில்லென ஓடுகிற கங்கைக்கு அருகில், கங்கைக் கரையில், துளைத்தெடுக்கும் குளிருக்கு இதமாகவும் இருட்டைக் கிழித்து வெளிச்சம் பாய்ச்சுவதற்காகவும் நெருப்பை மூட்டிக் கொண்டு, அந்த நெருப்பைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு, அவர்கள் பேசுகிற பேச்சுகள்... சம்பாஷணைகள்... கடவுள் தேடலுக்கான விடைகள். கடவுளை அடைவதற்கான பாதைகள். அது... சாதுக்களின் சத்சங்கம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 6:49 pm

ராம்சுரத் குன்வர் எனும் சிறுவன், படிக்கிற நேரம் போக, சாதுக்கள் கூட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அரை டிராயருடன், அந்த சின்னஞ்சிறுவன்... சாதுக்களின் கூட்டத்துக்கு அருகில் நின்று, மழையை ரசிப்பது போல், கடலை வியந்து பார்ப்பது போல், மலையைப் பார்த்துப் பிரமிப்பது போல சாதுக்களின் கூட்டத்தை ரசித்து, வியந்து, பிரமித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சத்சங்கத்தை, சாதுக்களின் சத்சங்க உரையாடலைக் கேட்டபடி இருந்தான்.

இன்றைக்கு, பகவான் யோகி ராம்சுரத்குமாரின் பக்தர்கள், அன்பர்கள் கூடுகிறார்கள். கூடி சத்சங்கம் போல் கருத்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். பகவான் யோகி ராம்சுரத்குமார் பற்றி, அவரின் பேரன்பு குறித்து, பெருங்கருணையைச் சொல்லி, அவரின் திருநாமங்களைக் கொண்டாடி, பாடுகிறார்கள்.

நேற்றைய தினம்... பகவான் யோகி ராம்சுரத்குமார் அவதரித்த தினம். 99வது ஜயந்தித் திருநாள். இதோ... இன்றில் இருந்து தொடங்குகிறது நூற்றாண்டு.

அன்பு மழையாக, அருட்கடலாக, ஞான மலையாக இருந்து திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெய குரு ராயா!

-ராம் ராம் ஜெய்ராம்

நன்றி
தி இந்து

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக