புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 ஏக்கர்... 200 நாள்கள்... ரூ. 3 லட்சம்... மகத்தான லாபம் கொடுக்கும் மணப்பாறை கத்திரி! Poll_c102 ஏக்கர்... 200 நாள்கள்... ரூ. 3 லட்சம்... மகத்தான லாபம் கொடுக்கும் மணப்பாறை கத்திரி! Poll_m102 ஏக்கர்... 200 நாள்கள்... ரூ. 3 லட்சம்... மகத்தான லாபம் கொடுக்கும் மணப்பாறை கத்திரி! Poll_c10 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
2 ஏக்கர்... 200 நாள்கள்... ரூ. 3 லட்சம்... மகத்தான லாபம் கொடுக்கும் மணப்பாறை கத்திரி! Poll_c102 ஏக்கர்... 200 நாள்கள்... ரூ. 3 லட்சம்... மகத்தான லாபம் கொடுக்கும் மணப்பாறை கத்திரி! Poll_m102 ஏக்கர்... 200 நாள்கள்... ரூ. 3 லட்சம்... மகத்தான லாபம் கொடுக்கும் மணப்பாறை கத்திரி! Poll_c10 
3 Posts - 8%
heezulia
2 ஏக்கர்... 200 நாள்கள்... ரூ. 3 லட்சம்... மகத்தான லாபம் கொடுக்கும் மணப்பாறை கத்திரி! Poll_c102 ஏக்கர்... 200 நாள்கள்... ரூ. 3 லட்சம்... மகத்தான லாபம் கொடுக்கும் மணப்பாறை கத்திரி! Poll_m102 ஏக்கர்... 200 நாள்கள்... ரூ. 3 லட்சம்... மகத்தான லாபம் கொடுக்கும் மணப்பாறை கத்திரி! Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
2 ஏக்கர்... 200 நாள்கள்... ரூ. 3 லட்சம்... மகத்தான லாபம் கொடுக்கும் மணப்பாறை கத்திரி! Poll_c102 ஏக்கர்... 200 நாள்கள்... ரூ. 3 லட்சம்... மகத்தான லாபம் கொடுக்கும் மணப்பாறை கத்திரி! Poll_m102 ஏக்கர்... 200 நாள்கள்... ரூ. 3 லட்சம்... மகத்தான லாபம் கொடுக்கும் மணப்பாறை கத்திரி! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
2 ஏக்கர்... 200 நாள்கள்... ரூ. 3 லட்சம்... மகத்தான லாபம் கொடுக்கும் மணப்பாறை கத்திரி! Poll_c102 ஏக்கர்... 200 நாள்கள்... ரூ. 3 லட்சம்... மகத்தான லாபம் கொடுக்கும் மணப்பாறை கத்திரி! Poll_m102 ஏக்கர்... 200 நாள்கள்... ரூ. 3 லட்சம்... மகத்தான லாபம் கொடுக்கும் மணப்பாறை கத்திரி! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

2 ஏக்கர்... 200 நாள்கள்... ரூ. 3 லட்சம்... மகத்தான லாபம் கொடுக்கும் மணப்பாறை கத்திரி!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 04, 2017 6:40 pm

அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்று கத்திரிக்காய். கூட்டு, வதக்கல், கொத்ஸு, சாம்பார், புளிக்குழம்பு... எனப் பல வகையான உணவுகள் கத்திரிக்காய் கொண்டு சமைக்கப் படுகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் மண்ணின் தன்மை, சூழல் ஆகியவற்றைப் பொறுத்து அப்பகுதிக்கெனப் பிரத்யேகமான நாட்டு ரகக் கத்திரிக்காய்கள் விளைவிக்கப்படுகின்றன.

அவற்றில் ஒரு ரகம்தான் மணப்பாறை கத்திரிக்காய். இந்த ரகத்தை மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் சாகுபடி செய்கிறார்கள். மிகவும் சுவையான இந்தக் கத்திரியைப் பலரும் விரும்பி வாங்குவதால் சந்தை வாய்ப்பும் நன்றாக இருக்கிறது.
2 ஏக்கர்... 200 நாள்கள்... ரூ. 3 லட்சம்... மகத்தான லாபம் கொடுக்கும் மணப்பாறை கத்திரி! 3CVKztJYReiIqaIUIl94+p10a
இந்த மணப்பாறை கத்திரியை இயற்கை முறையில் சாகுபடிசெய்து வருகிறார்கள் புதுக்கோட்டை மாவட்டம், முதுகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் பிரகாஷ். உறவினர்களான இவர்கள் இருவரும் இணைந்து, இரண்டு ஏக்கர் நிலத்தில் கத்திரிச் சாகுபடியில் ஈடுபட்டு நல்ல லாபம் எடுத்து வருகிறார்கள். 25.5.2017-ம் தேதியிட்ட இதழில் ‘பரிசு வாங்கிக்கொடுத்த நிலக்கடலை’ என்ற தலைப்பில் வெளியான மகசூல் கட்டுரை மூலம் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள்தான் இவர்கள்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 04, 2017 6:41 pm

ஒரு காலைவேளையில் வயலில் பணியில் இருந்த ஐயப்பன், பிரகாஷ் ஆகியோரைச் சந்தித்தோம். பிரகாஷ் பணிகளைத் தொடர நம்மிடம் கத்திரிச் சாகுபடி குறித்துப் பேச ஆரம்பித்தார் ஐயப்பன்.

“நாங்கள் சாகுபடி செய்வது, எங்க உறவினருக்குச் சொந்தமான நிலம். எங்க நிலத்துல தண்ணீர் வசதி இல்லாததால, இந்த மூணு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்றோம். முதல்ல மக்காச்சோளம் போட்டோம். அடுத்து, நிலக்கடலைச் சாகுபடி செஞ்சோம். அதுக்கப்புறம் கத்திரிக்காய் சாகுபடி செய்யலாம்னு முடிவு செஞ்சோம். எந்த ரகத்துக்கு மார்க்கெட் இருக்குதுனு தெரிஞ்சுக்கிறதுக்காகத் தொடர்ச்சியா ஒருவாரம் தஞ்சாவூர் காய்கறி மார்க்கெட்டுக்குப் போனோம். அங்க மணப்பாறை கத்திரி ரகத்துக்கு நல்ல மவுசு இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டோம். உடனே இந்தக் கத்திரியைத்தான் சாகுபடி செய்யணும்னு முடிவு செஞ்சு மணப்பாறையில் இருந்து நாற்றுகள வாங்கிட்டு வந்து, 2 ஏக்கர் நிலத்துல நடவுசெஞ்சோம்.

இதை ‘பாலித்தீன் ஷீட்’ கொண்டு பார்களை மூடி, சொட்டுநீர் பாசனம் செய்றதால, குறைஞ்ச அளவு தண்ணீரே போதுமானதா இருக்கு” என்ற ஐயப்பன், நம்மை வயலுக்குள் அழைத்துச்சென்று காட்டியபடியே பேசினார்.

“போன தடவை அடியுரமா ஆட்டு எரு, மாட்டு எரு போட்டோம். இந்தத் தடவைப் பக்கத்திலேயே கோழிப்பண்ணை இருந்ததால, ஏக்கருக்கு 7 டன் வீதம் கோழி எரு போட்டோம். கோழி எரு போட்டதுல கத்திரியில் நல்ல விளைச்சல் கிடைச்சது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 04, 2017 6:42 pm

கத்திரியில் தண்டுப்புழு, செம்பேன், காய்ப்புழு, அடுக்கு இலை நோய்னு அடுத்தடுத்து வந்துகிட்டே இருந்துச்சு. அப்பப்போ அக்னி அஸ்திரம், வேப்பங்கொட்டைக் கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டினு பயன்படுத்திக் கட்டுப்படுத்தினோம். அரப்புமோர்க் கரைசல், நிலக்கரிச் சாம்பல் திரவம், பஞ்சகவ்யானு இடுபொருள்களைப் பயன்படுத்துறதால, நோய் எதிர்ப்புசக்தி கிடைச்சு செடிகள் திடகாத்திரமாக வளருது. காய்கள் சொத்தை இல்லாமல் பளபளப்பா இருக்கு” என்ற ஐயப்பன், மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“இப்ப கத்திரிச் செடிகளுக்கு 115 நாள்கள் ஆகுது. நடவுசெஞ்ச 55-ம் நாள்ல இருந்து காய்கள் பறிச்சிட்டிருக்கோம். காய்ப்புக்குத் தக்கபடி ரெண்டு நாள் அல்லது நாலு நாளுக்கொரு முறை காய் பறிக்கிறோம். இதுவரைக்கும் மொத்தம் 5,800 கிலோ கத்திரிக்காய் மகசூல் எடுத்திருக்கோம். குறைஞ்சபட்சமா கிலோ 40 ரூபாய்னும் அதிகபட்சமா கிலோ 80 ரூபாய்னும் சந்தையில் விற்பனையாச்சு. அந்த வகையில் மொத்தம் 3,48,170 ரூபாய் வருமானமா கிடைச்சது. இதுவரைக்கும் ரெண்டு ஏக்கருக்கும் சேர்த்து 1,00,200 ரூபாய் செலவு பண்ணிருக்கோம். இதுபோக 2,47,970 ரூபாய் கையில லாபமா நிக்குது.
2 ஏக்கர்... 200 நாள்கள்... ரூ. 3 லட்சம்... மகத்தான லாபம் கொடுக்கும் மணப்பாறை கத்திரி! RAK0LsSuESHKBinkqAiG+p10b
இன்னும் ரெண்டு மாசத்துக்குக் காய் பறிக்கலாம். அது மூலமா 1,500 கிலோ காய் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். ஒரு கிலோ 50 ரூபாய்னு விற்பனையானாலே அது மூலமா 75,000 ரூபாய் வருமானம் கிடைச்சுடும். அதுல அறுவடை, போக்குவரத்து, பராமரிப்பு எல்லாம் சேர்த்து 25,000 ரூபாய் செலவானாலும் மீதி 50,000 ரூபாய் லாபமா நிக்கும்னு எதிர்பார்க்கிறோம். அந்தவகையில ரெண்டு ஏக்கர் கத்திரி மூலமா மொத்தம் 2,97,970 ரூபாய் லாபம் கிடைச்சிடும்” என்றார் மகிழ்ச்சியாக.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 04, 2017 6:43 pm

இப்படிதான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கர் நிலத்தில் கத்திரி சாகுபடிசெய்யும் முறை குறித்து ஐயப்பன் சொல்லிய விஷயங்கள் பாடமாக இங்கே...

தேர்வுசெய்த ஒரு ஏக்கர் நிலத்தில் 7 டன் கோழி எருவைப் பரப்பி, 3 சால் உழவு ஓட்டிவிட வேண்டும். பிறகு ஒன்றரை அடி இடைவெளியில் 2 அடி அகலம், அரையடி உயரம்கொண்ட பார்களை அமைக்க வேண்டும். பாரின் நடுவே சொட்டுநீர்க் குழாய் அமைத்து, ‘பாலித்தீன் ஷீட்’ கொண்டு மூட வேண்டும்.

பாரின் மையப்பகுதியில் இருந்து முக்கால் அடி தூரத்தில் பாரின் இரு ஓரங்களிலும் மூன்றடி இடைவெளியில் பாலீத்தின் ஷீட்டில் ‘ஜிக்ஜாக்’ (முக்கோண நடவு) முறையில் துளையிட்டு நாற்றுகளை நடவுசெய்ய வேண்டும். இப்படி நடவுசெய்வதால் செடிகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளாமல் போதிய காற்றோட்டம், சூரியஒளி கிடைத்து நன்கு வளரும். நடவுசெய்தபின் நான்கு நாள்களுக்கு ஒருமுறை சொட்டுநீர்மூலம் தண்ணீர் கொடுக்க வேண்டும். 10-ம் நாளில் இருந்து 20 நாள்களுக்குள் ஒருமுறை வேப்பங்கொட்டைக்  கரைசலை (5 கிலோ வேப்பங்கொட்டையைக் குருணைபோல் அரைத்து, 20 லிட்டர் தண்ணீரில் 24 மணிநேரம் ஊற வைத்து வடிகட்டிய கரைசல்) சொட்டுநீர் மூலமாகக் கொடுத்து வர வேண்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 04, 2017 6:45 pm

2 ஏக்கர்... 200 நாள்கள்... ரூ. 3 லட்சம்... மகத்தான லாபம் கொடுக்கும் மணப்பாறை கத்திரி! GT6B4SJtTWaffp7Aav7k+p10c

நடவுசெய்த 12 மற்றும் 40-ம் நாள்களில் 4 லிட்டர் நிலக்கரிச் சாம்பல் திரவத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, சொட்டுநீர் மூலம் கொடுக்க வேண்டும். 45-ம் நாள் 2 லிட்டர் நிலக்கரிச் சாம்பல் திரவத்தை 130 லிட்டர் தண்ணீர் கலந்து செடிகள்மீது தெளிக்க வேண்டும். செடிகளில் பூக்கள் பூக்கத் தொடங்கிய பிறகு, 10 நாள்களுக்கு ஒரு தடவை 3 லிட்டர் பஞ்சகவ்யாவை 150 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

50-ம் நாள் ஒன்றரை லிட்டர் அக்னி அஸ்திரத்தை 130 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 60-ம் நாள் 1 லிட்டர் மீன் அமினோ அமிலத்தை 130 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அதேநாளில் 2 லிட்டர் மீன் அமினோ அமிலத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து சொட்டுநீர் மூலமாகக் கொடுக்க வேண்டும்.

65-ம் நாளில் இருந்து வாரம் ஒருமுறை, 6 லிட்டர் அரப்பு மோர்க் கரைசலை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 55-ம் நாளுக்குமேல் காய்கள் பறிக்கலாம். தொடர்ந்து நான்கு மாதங்கள் காய்ப்பு இருக்கும்.

நன்றி
விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக