புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_c10விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_m10விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_c10விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_m10விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_c10விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_m10விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_c10விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_m10விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_c10விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_m10விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_c10விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_m10விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_c10விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_m10விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_c10விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_m10விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 7:20 pm

வெகுஜன சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், வெற்றிகரமான இயற்கை விவசாயச் சந்தைகள் மற்றும் மாற்றுச் சந்தைகளுக்கான வாய்ப்புகள் குறித்து அலசும் தொடர் இது...

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இயற்கை விளைபொருள்களின் விற்பனை ஆண்டுக்கு 30 சதவிகிதம் வரை அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில், இயற்கை விளைபொருள்கள் 3,000 கோடி ரூபாயிலிருந்து 5,000 கோடி ரூபாய் வரை விற்பனையாகி வருவதாகச் சொல்லப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த விற்பனை இரு மடங்காகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 MUwZHWFsQzqiHjEdsTx1+p38a
ஆனால், உலகின் மொத்த சாகுபடிப் பரப்பில் 1% பரப்பில்தான், அதாவது 10 கோடியே 75 லட்சம் ஏக்கர் பரப்பில்தான் இயற்கை வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது. இயற்கை வேளாண்மையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகள்... ஆஸ்திரேலியா (1 கோடியே 72 லட்சம் ஹெக்டேர்), அர்ஜென்டினா (32 லட்சம் ஹெக்டேர்) மற்றும் அமெரிக்கா (22 லட்சம் ஹெக்டேர்) ஆகியவைதாம்.

உலகில் 11 நாடுகள் தங்கள் மொத்த விளைநிலத்தில், 10% அதிகமான நிலத்தை இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டுவந்துள்ளன. விவசாயிகளின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமான இயற்கை விவசாயிகள் உள்ளனர். உலக அளவில் உள்ள 20 லட்சம் இயற்கை விவசாயிகளில், ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 7:20 pm

2002-ம் ஆண்டிலிலிருந்து 2011-ம் ஆண்டுக்குள் 170% இயற்கைச் சந்தை வளர்ச்சியடைந்திருக்கிறது. 2013-ம் ஆண்டில் உலகின் மொத்த இயற்கைச் சந்தையின் மதிப்பு 7,200 கோடி அமெரிக்க டாலர். இன்னும்
வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில், ரசாயனத்தால் விளைவிக்கப்பட்ட பொருள்களோடு ஒப்பிடும்போது, இயற்கை விளைபொருள்கள் சராசரியாக 30% அளவு அதிக விலை வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. நுகர்வோர் பெருகினால், இயற்கை விளைபொருள்களின் விலை குறையும். இது, நம் நாட்டுக்கும் பொருந்தும்.

விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு நியாயமான விலை கொடுக்கப்படுவதாலும் தேவையைவிட உற்பத்தி குறைவாக இருப்பதாலும் இயற்கை விளைபொருள்கள் அதிக விலையில் விற்கப்படுவதைப் போன்று தோன்றலாம். ஆனால், உண்மை அதுவல்ல. விஷமற்ற இந்த உணவுப் பொருள்கள், மருத்துவக் காப்பீட்டையும் உள்ளடக்கியவை. அதாவது, இப்பொருள்களை உண்பவர்கள் மருத்துவமனைகளில் போய் நின்று மருத்துவருக்கும் மருந்துக்கும் அடிக்கடி
செலவு செய்ய வேண்டியிருக்காது. இயற்கை விளைபொருள்களில் உயிர்ச்சத்து நிறைந்திருப்பதால் பல நன்மைகள் உண்டு. தனி மனித உற்பத்தித்திறன் அதிகரிக்கும். அதனால், பணமும் நேரமும் மிச்சப்படும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 7:21 pm

நஞ்சில்லாமல் விளைவிக்கப்படும் பொருள்களுக்கு, நியாயமான விலை கொடுப்பது சரிதான். ஆனால், ‘இயற்கை விளைபொருள்கள் என்று சந்தைக்கு வரும் அனைத்தும், உண்மையிலேயே இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவைதானா... அவற்றுக்கு நியாயமான விலை எது’ என்ற கேள்விகள், அனைவரிடத்திலும் உண்டு.

பண்டைய வாணிப முறையில் நல்லுறவு நிறைந்த, பேராசை இல்லாத, சிறு வணிகம் இருந்தது. சில பல ஆண்டுகளுக்கு முன்புகூட, நம் தெருக்கோடியிலிருக்கும் மளிகைக் கடையில், ‘என்ன அண்ணாச்சி, எண்ணெய் இருக்கா’ என்று கேட்டால்... ‘செக்கு வெச்சிருக்குற செட்டியார் வீட்டுல கல்யாணம். எண்ணெய் கிடைக்க ரெண்டு, மூணு நாள் ஆகும்’ என்ற பதிலைச் சொல்வார். அதாவது உற்பத்தியாளர், விற்பனையாளர், நுகர்வோர் என மூவருக்குமே பல வகைகளில் தொடர்புகள் இருந்தன. அதனால், முறைகேடுகள் நடக்கவில்லை. பெரிய அளவில் ஏய்ப்புகள் இல்லை. விற்பனையாளருக்கு என்று பொறுப்புகளும் இருந்தன. ஆனால், தற்போது நிலைமை தலைகீழ்.
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 G5Kzekv2QqGfSQHXNIOV+p38c

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 7:22 pm

இன்றைய சூழ்நிலையில் மருத்துவம், கல்வி... என அனைத்துமே வணிகமயமாகிவிட்டதால், ஏய்ப்புகள், முறைகேடுகள் எல்லா இடங்களிலுமே இருக்கின்றன. அதே நிலைதான், இயற்கை அங்காடிகளிலும். நாம்தான் நல்ல அங்காடிகளைத் தேடிப்பிடிக்க வேண்டும். இந்தியாவில் பெரும்பாலான இயற்கை விவசாயிகள் தங்களுக்குச் சந்தை வாய்ப்புகள் இல்லை என்றுதான் சொல்கிறார்கள். அதே நேரத்தில் இயற்கைச் சந்தை, லாபவெறி கொண்ட கார்ப்ரேட்டுகள் கைகளுக்குச் சென்றுவிடுமோ என்ற பயமும் உண்டு.

நமது பாரம்பர்ய சிறு வியாபாரம், அண்மைப் பொருளாதாரம், ஊரக வளர்ச்சி இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டோம். நாம் என்ன உண்ண வேண்டும் என்பதை விளம்பரங்களும் கம்பெனிகளும்தாம் தீர்மானிக்கின்றன. அவற்றின் பின்தான் நாமும் சென்று கொண்டிருக்கிறோம். இவற்றையெல்லாம் மாற்ற வேண்டு மென்றால் விவசாயிகள் ஒன்றிணைந்து முயற்சி எடுக்க வேண்டும். சீரமைக்கப்பட்ட கூட்டு முயற்சிகள், சரியான ஆட்கள், நேர்மையான முயற்சிகள் என இயங்கினால் மட்டுமே தீர்வை நோக்கி நாம் பயணிக்க முடியும். கூட்டு முயற்சிதான், இன்றைய சந்தைப் பொருளாதாரத்தின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரே வழி. இப்படிக் கூட்டு முயற்சியால் வென்று, சிறப்பாக இயங்கிவரும் உதாரணங்கள், உலகம் முழுவதும் உண்டு. அவற்றைப் பார்க்கும் முன்பாக உழவன் முதலில் தன்னை உணரவேண்டும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 7:23 pm

தற்சார்பு’ என்பது, உழவன் தனக்கு வேண்டியவற்றைத் தானே உற்பத்தி செய்வதில்தான் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் புரிந்துகொண்டு, நடைமுறையில் தனக்கும், தன்னுடைய குடும்பத்துக்கும் தேவையானவற்றை உற்பத்தி செய்தால், பெரும் சேமிப்பு உண்டாகும்.

தனக்குப் போக மீதிதான் சந்தைக்கு என்று நம் உழவர்கள் செயல்பட்டாலே பெரிய மாற்றம் வரும். பிறகு, தன் சுற்றமும் அண்மைத் தெருக்களுமே முதல் சந்தையாகும். அப்போது உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் உள்ள இடைவெளி மிகவும் குறைவாகிவிடும். இருவருக்கும் லாபம் கிடைக்க ஆரம்பிக்கும். அதைவிட தரமான நல்ல பொருள்கள் நுகர்வோரைச் சென்றடையும். அதையெல்லாம் தாண்டிதான் நெடுந்தூர நகரச் சந்தைக்கு நகர வேண்டும். இதில் சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக விவசாயிகள் எந்த நகரச் சுகங்களையும் அனுபவிக்கக்கூடாது என்று சொல்லவில்லை. அளவோடு இருந்தால் போதுமானது.

- விரிவடையும்

நன்றி
விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக