புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! – கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை…
Page 1 of 1 •
- ksikkuhபண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017
நானே ராஜா, நானே ராணி, நானே மந்திரி, நானே மக்கள்’ என்ற எண்ணத்தில் வாழ்ந்த ஜெயலலிதா இறந்து போய் ஓராண்டு முடிந்துவிட்டது. அவரின் மறைவு உறுதியானதும், அவரால் புழுவைவிடக் கேவலமாக மதிக்கப்பட்டவர்கள், ‘நாங்களே ராஜா, நாங்களே ராணி, நாங்களே மந்திரி, நாங்களே மக்கள்’ என்ற
எண்ணத்தில் வாழ ஆரம்பித்து ஓராண்டு முடிந்து இரண்டாவது ஆண்டு தொடங்கிவிட்டது. ராஜாக்கள் பஃபூன் வேடம் போடும்போது பவ்யம் அதிகமாக இருக்கும். ஆனால், பஃபூன்கள் ராஜா உடையைத் தாங்கும்போது பல் உடைபட்டுவிடும். அதைத்தான் இப்போது பார்க்கிறோம்.
ஜெயலலிதா இருந்தவரை எடப்பாடி பழனிசாமி எங்கோ இருந்தார். போயஸ் தோட்டத் தூதுவர்களாக ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், பழனியப்பன் ஆகிய நால்வரைத்தான் நியமித்திருந்தார் ஜெயலலிதா. ‘சொறி, சிரங்கு, படை, தேமல்’ என்று அவர்களை அன்றைய பெண் அமைச்சர் ஒருவர் கிண்டலடித்தது தனிக்கதை. இதில், பழனியப்பன் ஒரு விவகாரத்தில் சிக்கியபிறகு, அவருக்குப் பதிலாக அதே கொங்கு வட்டாரத்தில் ஆள் தேடியபோது அகப்பட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி. நால்வரில் ஒருவராய் உள்ளே நுழைந்தார். சசிகலா குடும்பத்தால் உருவாக்கப்பட்ட பன்னீர் என்கிற மொண்ணைக் கத்தி, மோடியால் சாணை பிடிக்கப்பட்டதால் கூர்மை பெற்று அவர்கள்மீது பாய்ந்தது. அடுத்து, ஒரு துரு பிளேடு என எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்தார்கள். எடுத்துப் பயன்படுத்திய விரலையே எடப்பாடி பிளேடு வெட்டிவிட்டது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ எம்.ஜி.ஆரின் வாள் வீச்சில் உருவான கட்சியை, பன்னீரும் எடப்பாடியும் கத்தி, பிளேடால் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
‘ஜெயலலிதா இருந்தவரை இவர்களையும், இவர்களின் அமைச்சரவை சகாக்களையும் தரை டிக்கெட்கூட கொடுக்காமல் தள்ளிவைத்திருந்தது ஏன்’ என்பதை இப்போது இவர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயக்குமாருக்கு 64 பற்கள் இருப்பது இப்போதுதான் தெரிகிறது. சட்டமன்ற சபாநாயகராக இருந்த ஜெயக்குமாரிடம் ராஜினாமா கடிதம் வாங்க வைத்து, வெலிங்டன் கொடுத்த சிம்மாசனத்திலிருந்து இறக்கி வெளியில் தூக்கிப் போட்டார் ஜெயலலிதா. இது ஏன் என்று அவர்தான் விளக்க வேண்டும். ‘‘கமல் அரசியல் ‘குணா’ படம்’’ என்று கமென்ட் அடிக்கும் ஜெயக்குமாரின் அரசியல் ‘அமைதிப்படை’யா? சீனியர் சயின்டிஸ்ட்டுகளாக ‘வண்டலூர் விலங்குகளை மழையிலிருந்து காப்பாற்ற மேடான பகுதிக்கு அனுப்பிய’ திண்டுக்கல் சீனிவாசன், ‘ஆற்றுநீரை தெர்மாகோல் கொண்டு மூடிய’ செல்லூர் ராஜு, ‘மக்கள் சோப்பு போட்டுக் குளிப்பதால்தான் ஆற்றில் நுரை வருகிறது’ எனக் கண்டறிந்து சொன்ன கருப்பணன் ஆகியோர் வலம்வருகிறார்கள். சென்னை சாலைகள் அமெரிக்காவாகத் தெரிகின்றன, அமைச்சர் வேலுமணிக்கு. இப்படி எல்லாம் மணிமணியாக இருப்பதால்தான், ஜெயலலிதா இவர்களை கஜானாவுக்குள் பூட்டியே வைத்திருந்தார். அவர் போனதும், இன்று சிந்தனை வானில் சிறகடித்துப் பறக்கிறார்கள். இது மைனாரிட்டி அரசுதான் என்பதையே உணராமல் மல்லுவேட்டி மைனர்களாக வலம்வருகிறார்கள்.
135 உறுப்பினர்கள் கொண்ட பெரும்பான்மை அரசைக் கொடுத்துவிட்டுப் போனார் ஜெயலலிதா. அதில் 12 பேரை உடைத்தார் ஓ.பன்னீர்செல்வம். அவர்கள் மீண்டும் உள்ளே போய்விட்டார்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது. இறுதித் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். தேர்தல் ஆணையம் சமீபத்தில் அளித்த இரட்டை இலை தீர்ப்பின்படி, எடப்பாடி அரசுக்கு 111 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுதான் உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 117 உறுப் பினர்கள் ஆதரவு வேண்டும். இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் எடப்பாடிக்கு எதிராக இருக்கிறார்கள். இந்த வகையில் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால், ஆட்சி ஆட்டம் கண்டுவிடும். அதனால் தான், அம்மாவின் அநாதைப் பிள்ளைகள், பி.ஜே.பி-யின் தத்துப் பிள்ளைகளாக வலியப்போய் மாட்டிக்கொண்டார்கள்.
தமிழக சட்டமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் உட்கார மட்டுமே தகுதிபெற்ற பி.ஜே.பி-க்கு, இது குஷியை ஏற்படுத்திவருகிறது. ‘டம்ஜிக்கு… டம்ஜிக்கு… டம்ஜிக்கு…’ பாடுகிறார்கள். ‘நேர்வழியோ, குறுக்கு வழியோ, வீட்டுக்குள் போனால் போதும்’ என்பதுதான் அவர்களின் தேசிய – தெய்விகப் பாதை. இதற்குக் கணக்குப் போட்டுத் தருபவர்களே கவர்னர்கள். வித்யாசாகர் ராவின் மௌனங்களும் மகாராஷ்டிரா பதுங்கல்களும் இதற்கு சாட்சிகள். புதிய கவர்னர், இந்த பழைய மொந்தைகளை மோப்பம் மட்டுமே பிடித்து வருகிறார். சசிகலா குடும்பத்துக்கு ஜோசியம் பார்த்தவர் வீடுவரை புகுந்து புறப்படும் வருமானவரித் துறை, 89 கோடி ரூபாய் இடைத் தேர்தல் பட்டுவாடா ஆவணம் மாட்டிய விஜயபாஸ்கரையோ, அதில் குறிப்பிடப்பட்டிருந்த எடப்பாடி உள்ளிட்ட வர்களையோ இன்னும் கை வைக்காமல் இருக்கும் அரசியல் புரிந்துகொள்ள முடியாதது அல்ல; இரட்டை இலையை ரிலீஸ் செய்துவிட்டு, ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை அறிவிக்கும் சூட்சுமமும் அறிய முடியாதது அல்ல. அனைத்துமே அமித் ஷாவின் ஆட்டங்கள். அம்மா ஆட்சி நடத்துவதாக எடப்பாடி சொல்வதெல்லாம் சும்மா. இது, அமித் ஷா ஆட்சி.
‘இவர்கள் நடத்துவது அம்மா ஆட்சி அல்ல’ என்பதற்கு ஒரே ஓர் உதாரணமாக ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லலாம். அது, தி.மு.க – அ.தி.மு.க பங்காளிச் சண்டை ஒழிந்ததுதான். ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒண்டிக்கு ஒண்டி நிற்பார்கள். பன்னீரும் ஸ்டாலினும், எடப்பாடியும் ஸ்டாலினும் அப்படி நிற்கவில்லை. ‘ஆடும் நாற்காலியில் உட்கார்ந்து கால் ஆட்டக் கூடாது’ என்று எடப்பாடி நினைத்திருக்கலாம். சபாநாயகர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது ஏற்பட்ட களேபரங்களில் உரிமைக்குழு விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டு, இடைநீக்கம் செய்யப்படலாம் என்ற நிலைமைக்குக் கொண்டுபோய் நிறுத்தப்பட்ட தி.மு.க உறுப்பினர்களை எட்டுப்பட்டி சாமியாக நின்று காப்பாற்றினார் எடப்பாடி. ‘ஆறு மாதங்களுக்குமேல், சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாத உறுப்பினர் பதவி பறிபோகும்’ என்ற நிலையில் கருணாநிதிக்குச் சிக்கல் வந்தது. சிறப்பு அனுமதித் தீர்மானம் கொண்டுவந்து, அவரின் சட்டமன்ற சாதனை வரலாறு தொடரட்டும் என்று அனுமதித்ததும் எடப்பாடியின் பெருந்தன்மைதான்.
எல்லோரையும் வளைப்பதைப்போல, தி.மு.க-வையும் வளைக்க முயன்றார் முதல்வர். இதன்பிறகு அ.தி.மு.க-வை சட்டமன்றத்தில் விமர்சிக்கும் விஷயத்தில் தி.மு.க-வும் அடக்கிவாசித்தது. இது அ.தி.மு.க-வுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். தி.மு.க-வுக்குப் பெருமை அல்ல. செயலற்ற, திட்டங்களற்ற, கேட்பாரற்ற, அதே நேரத்தில் ஊழல் முறைகேடுகள் நிறைந்த கடந்த ஓராண்டுக் காலத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த தி.மு.க தவறிவிட்டது. ‘பி.ஜே.பி அருளாசியோடு நான்கு ஆண்டுகளை இவர்கள் ஓட்டிவிடுவார்கள், தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று தி.மு.க நினைக்கலாம். சட்டசபையில் பாதிக்கும் சற்றே குறைவான இடம்தான் தி.மு.க-வுக்கு. சட்டையைப் பிடித்து எடப்பாடி அரசாங்கத்தைச் செயல்பட வைக்கும் கடமை மற்ற கட்சிகளைவிட தி.மு.க-வுக்கே உண்டு.
மற்ற கட்சிகளுக்கும் எப்படி அரசியல் செய்வது என்றே புரியவில்லை. ‘அ.தி.மு.க-வை ஆதரிப்பதா, எதிர்ப்பதா’ என்பதே தமிழக பி.ஜே.பி-க்குக் குழப்பம். டெல்லி பி.ஜே.பி தலைமை செய்வது எதுவும் தமிழக பி.ஜே.பி-க்குத் தெரிவதில்லை. மாலத்தீவு கிளைக்கழகம்போல கமலாலயம் இருக்கிறது. அதனால், காலையில் எதிர்க்கிறார்கள்; மாலையில் ஆதரிக்கிறார்கள். இரவில் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். அர்ச்சனா ஸ்வீட்ஸ் விளம்பரம் மாதிரி எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இருக்கிறார். அவரது உடல்தான் கோபாலபுரத்தில் இருக்கிறதே தவிர, உயிரும் மனசும் அவ்வை சண்முகம் சாலையிலும் தினகரன் வீட்டிலும் இருக்கின்றன. ஸ்டாலினுக்கும் திருநாவுக்கரசருக்கும் ஒட்டவில்லை. அ.தி.மு.க-வை எதிர்க்கும் பா.ம.க., பி.ஜே.பி விஷயத்தில் அடக்கி வாசிக்கிறது. வழக்கம்போல் கேப்டன், மோடியை ஆதரிக்கிறார்; அ.தி.மு.க-வை விமர்சிக்கிறார்.
ரஜினி படம் எடுத்துவிடுவாரோ என்ற பீதியில், கமல் பெட்டிக்குள்ளிருந்து படம் எடுப்பது மாதிரி சீறிவருகிறார். அவர் மனத்திரையில் ஓடுவது கட்சியா, அமைப்பா, வழக்கம்போல் ‘இரண்டும் கலந்த கலவையா’ என்பதை இப்போது சொல்ல முடியாது. அவர் தேர்தலில் நிற்பாரா என்பதும் இதுவரை புரியாத புதிர்தான்.
தி.மு.க மேடைகளில் பங்கெடுத்து வந்த அத்தனை கட்சிகளும் ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க வேட்பாளரை ஆதரிக்கின்றன. ம.தி.மு.க-வும் அதே முடிவுடன் அரசியல் ஆலோசனைக் குழுக்கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது. ஆர்.கே. நகர் தேர்தல் என்பது தமிழ்நாட்டு அரசியல் தட்பவெப்ப நிலையை உணர்த்தலாம்; உணர்த்தாமலும் போகலாம்.
ஆனால், மொத்தத்தில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி தமிழ்நாட்டு அரசியலைத் தலைசுற்ற வைத்துவிட்டது என்பது மட்டுமே உண்மை. ஜெயலலிதா கல்லறையில்; சசிகலா சிறையறையில்; கருணாநிதி வீட்டறையில்; மொத்த தமிழ்நாடும் இருட்டறையில்!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|