ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக கருத்துகள் ( பாகம் 1):

2 posters

Go down

ஆன்மீக கருத்துகள் ( பாகம் 1): Empty ஆன்மீக கருத்துகள் ( பாகம் 1):

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Thu Dec 10, 2009 12:09 pm

ஆன்மீக கருத்துகள் ( பாகம் 1) :
ஆன்மீக கருத்துகள் ( பாகம் 1): Gurukulam

1) கடவுள் என்றால் என்ன?



உன்னைக் கடந்து உன் உள்ளே செல், அதாவது உன்னையே நீ அறிவாய் எனும்
கருத்திலேயே கடவுள் (கட உள்) என்ற பதம் வந்ததாக அறிஞர்கள் சொல்வார்கள்.
பொதுப்படையில் God, இறைவன், ஆண்டவன் என்று கூறப்படும் சொற்களின் பதம் எம்மை
ஆளுகின்ற சக்தியை குறிக்கின்றது. அப்பனே உனக்கு தெரியும், இந்த உலகத்தில்
சக்தியின் துணையின்றி எதுவும் அசையாது, எதுவும் நடைபெறாது என்பது.
சிற்றறிவு கொண்ட எம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இந்த உலகத்தை
இயக்குகின்ற, இந்த உலகத்தில் வியாபித்துள்ள, இந்த உலகத்தின் அடிநாதமாய்
அமைந்துள்ள தோற்றம், முடிவு அற்ற சக்தியை கடவுள் என்று கூறலாம்.


*அப்படி ஒருவர் இருகின்றாரா அல்லது இது நமது கற்பனையோ?


நிச்சயம் அப்படி ஒருவர் இருக்கின்றார். ஆனால், அது நீ எதிர்பார்க்கும்
விதத்தில் அல்ல என்பதை விரைவில் தெரிந்துகொள்வாய். கடவுள் என்பது வெறும்
கற்பனை அல்ல, அது நிஜம்! இதை ஞானக்கண் கொண்டு பார்க்கும் போது நீ
உணர்ந்துகொள்வாய். ஆனால், ஊனக்கண்களிற்கு எல்லாம் கடவுள் என்பது வெறும்
கற்பனை பொருளாகவும், கனவாகவுமே தென்படும்.


2) மனிதனை கடவுளாக கும்பிடுகின்றார்களே அவர்களை பற்றிய கருத்து என்ன?


கடவுள் அன்பு மயமானவன் என பல மதங்கள் கூறுகின்றன. நீ பிற உயிர்களில்
உண்மையான அன்பு செலுத்தும்போது உனது மனம் தூய்மை பெறுகின்றது. தூய்மையான
கலங்கமற்ற மனம் கொண்ட நீ ஒரு குழந்தை ஆகின்றாய். அதாவது கடவுளை உணர்வதின்
முதற்படியை நீ பூர்த்தி செய்கின்றாய். இன்னொரு வகையில் சொல்வதானால்,
குழந்தையின் உள்ளத்தை கொண்டவனால் மட்டுமே கடவுளை உணர்ந்துகொள்ள முடியும்.

இந்த வகையில் பார்த்தால், நீ ஒரு மனிதனை கடவுளாக கும்பிடும்போது உன்னில்
குழந்தையின் உள்ளம் தோன்றுமாக இருந்தால், குழந்தையின் உள்ளம் உன்னுள்
தோன்றுவதை இந்த செயல் ஊக்குவிக்குமாய் இருந்தால் அவ்வாறு நீ செய்வதில்
தவறில்லை. ஆனால், இவ்வாறு நீ ஒருவரில் மாத்திரம் உண்மையான அன்பு வைத்து
அவரை மட்டும் கும்பிட்டுக்கொண்டு மற்றையவர்களுடன் பக்கச்சார்பாக
நடந்துகொண்டால் அந்த அன்பு போலியானது. அது கடவுளை நீ உணர்வதற்குரிய படிமுறை
வளர்ச்சிக்கு உதவாது.


3) ஆசையை எப்படி துறப்பது?


ஆசையை நீ ஏன் துறக்க நினைக்கின்றாய்? உன் குருநாதர்கூட பல்வேறு ஆசைகளை
உள்ளத்தில் சுமக்கிறார். எனவே, ஆசையை துறக்கின்ற விபரீதமான வேலைகளில் நீ
இறங்காதே! ஆசைகள் உனது மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உன்னை ஒரு
சுறுசுறுப்பு மிக்க மனிதனாக வைத்து இருக்கின்றது. ஆசையை துறந்த மனிதன்
செத்த பிணத்திற்கு சமம் என்பதை நீ நினைவில் கொள்வாய். ஆசையை துறக்க
நினைப்பது துறவிகளிற்கும் ஆகாது!


4) மதம் என்றால் என்ன?


மனிதன் தனது வாழ்வை இலகுவான முறையில் ஒழுங்கமைத்து குழப்பமற்ற முறையில்
வாழ்வதற்கு பல்வேறு வழி வகைகளை உருவாக்கினான். இவற்றில் ஒன்றே மதமாகும்.
அடிப்படையில் மதம் என்பது உலகத்தை ஆளும் சக்தியை வழிபடும் முறையாகவும்,
அந்த சக்தியை தமக்கு சாதகமான முறையில் பயன்படுத்தி தமது வாழ்வினை
வெற்றிகரமாக கொண்டு நடத்துவதற்கு மனிதனுக்கு உதவுகின்ற கருவியாகவும்
விளங்குகின்றது.


5) மன அமைதிக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?


முக்கியமான ஒரு கேள்வியை கேட்டாய். நான் சொல்பவற்றை கவனமாகக் கேள். உனக்கு
எம்.எஸ்.என் இல் அரட்டை அடிப்பதன் மூலம்தான் மனம் அமைதி அடையும் என்றால்
முதலில் அதை செய்! உனக்கு ஒரு சினிமா படம் பார்த்தால் தான் உன் மனம் அமைதி
அடையும் என்றால் முதலில் அதை செய்! உனக்கு யாழில் ஒருநாளைக்கு 100
கருத்துக்களை எழுதினால்தான் உனது மனம் அமைதி அடையும் என்றால் முதலில் அதை
செய்! அதாவது உனது மனம் கேட்கின்ற நியாயபூர்வமான தேவைகளை முதலில் நீ
பூர்த்தி செய்து கொள்! இதைவிட நீ தியானம் எனப்படுகின்ற செய்முறையை செய்வதன்
மூலம் மனதில் அமைதியை பெற முடியும்.

ஆனால், மனம் அமைதியாக இருக்க வேண்டும் என உனக்குள் வரிந்துகட்டிக்கொண்டு
உனது நியாபூர்வமான ஆசைகளையும், உணர்வுகளையும் அடக்கியபடி, உன்னையே நீ
துன்புறுத்தியவாறு தியானம் செய்கின்ற அல்லது அடக்கி ஆளுகின்ற முட்டாள்
தனமான வேலைகளில் இறங்காதே! உன்னையே நீ அடக்க வெளிக்கிடும்போது நீ உனது
இயல்பான மன ஒழுங்கமைப்பை குழப்புகின்றாய் என்பதை அறிந்துகொள். இயல்பான மன
ஒழுங்கமைப்பு குழம்பினால் இறுதியில் அது உன்னை பைத்தியக்காரனாக்கி விடும்.
மன அமைதிக்கு நீ நிச்சயம் செய்யவேண்டியது உன்னை நீ வெறுப்பது அல்ல என்பதை
நினைவில் கொள்.


6) பழைய சித்தாந்த கோட்பாடுகளுடன் இருப்பவர்களிற்கு நீங்கள் சொல்ல
விரும்புவது என்ன?



நீ பழைய சித்தாந்த கோட்பாடுகளை தாராளமாக பின்பற்றலாம். இதேபோல் புதிய
சித்தாந்த கோட்பாடுகளையும் தாராளமாக பின்பற்றலாம். எதை பின்பற்றினாலும்..
ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? போன்ற கேள்விகளை உன்னிடம் முதலில்
கேட்டுவிடு. கும்பலில் இருந்து கோவிந்தா போடுவதன் மூலம் நீ உன்னை
குழப்பிக்கொள்வது தவிர வேறு ஒன்றும் நடைபெறப்போவதில்லை.

எதிலும், மெய்ப்பொருளை காண முயற்சி செய்! மற்றவன் பின்பற்றுகின்றான் அல்லது
உனது அப்பன் பின்பற்றுகின்றான் என்பதற்காக ஒரு கோட்பாட்டை கண்மூடித்தனமாக
ஏற்றுக்கொள்ளாதே! தற்கால நவீன உலகத்திற்கும், அதன் சட்டதிட்டங்களிற்கும்
பொருத்தமற்ற செயற்பாடுகளை ஊக்குவிக்கும் பழைய சிந்தனைகளை, பழைய கோட்பாடுகளை
பின்பற்றுவது உன்னை சிறைச்சாலையில் கம்பி எண்ணக்கூட வைத்துவிடலாம். எனவே,
கவனமாக இரு!


7) பெண்களை பற்றி ?


தாயை நினைக்கின்றேன். தமக்கையை நினைக்கின்றேன். தங்கையை நினைக்கின்றேன்.
காதலியை நினைக்கின்றேன். ஏன் கடவுளைக் கூட நினைக்கின்றேன். நான் இந்த
உலகில் பிறந்ததும் எனக்கு பால் ஊட்டி எனது உடலிற்கு தேவையான சக்தியை
முதலில் தாய் தந்தாள். எனது நாளாந்த வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டு
நடத்துவதற்கு தேவையான உடல் உள சக்தியை - Energy ஐ தாய், தமக்கை, தங்கை,
காதலி, கடவுள் என பல ரூபங்களில் பெண்கள் எனக்கு வழங்கிக்கொண்டு
இருக்கின்றனர்.


8) திருமணம் என்றால் என்ன?


இருமனம் இணைவதை திருமணம் என சிலர் சொல்வார்கள். அதாவது ஒரே மாதிரியான
இரண்டு மனங்களே இணைய முடியும். வெவ்வேறு சிந்தனைகள், எண்ண ஓட்டங்கள்,
விறுப்பு, வெறுப்புக்கள், ரசனை மற்றும் சுவை உள்ள இரண்டு மனங்களால் பிரிய
முடியுமே தவிர இணைய முடியாது. ஆனால், ஒரே மாதிரியான மனங்கள் திருமணத்தில்
இணையும் போது அந்த மனதை கொண்ட ஆணும், பெண்னும் ஆண்டாண்டு காலமாக
ஒன்றாகவும், சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழமுடிகின்றது.

இதனால் தான் உனது குருநாதன் காதல் திருமணத்திற்கு ஓ போடுகின்றான்.
ஏனென்றால், பேசி வைத்து செய்யப்படும் திருமணத்தில் (proposed marriage)
இரண்டு ஒரே மாதிரியான மனங்கள் இணைக்கப்படுகின்றன எனும் கருத்தில் உனது
குருநாதனுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அப்பனே நீ காதல் செய்து உனது மனதுடன்
பொருந்தக்கூடிய ஒரு மனதை உடைய பெண்ணை கண்டுபிடித்து அவளுடன் திருமண
பந்தத்தில் இணைந்து ஒருமனங்கொண்ட தம்பதியாய் வாழ்வாய்! இதற்கு உனது
குருநாதனின் ஆசீர்வாதங்கள்!


அதற்கு ஏன் குருவே தாலி?


திருமணத்திற்கு தாலி தேவையில்லை. மேலும், தாலியை நீ உன் வருங்கால மனைவியின்
கழுத்தில் கட்டுவதாலோ அல்லது தாலியை உனது வருங்கால பெண்டாட்டி கழுத்தில்
சுமந்து செல்வதாலோ உனது வாழ்வு செழித்து விடும் என்றோ அல்லது நீ
சந்தோசமாகவும், நிம்மதியாகவும் நீண்டகாலம் வாழ்வாய் என்றோ எதுவித
உத்தரவாதமும் இல்லை. தாலி என்பது ஒரு பண்பாட்டு அடையாளம் என்பதை மட்டும்
அறிந்துகொள். ஆனால், எவரது பண்பாட்டு அடையாளம் என்பது உனக்கு தேவையில்லாத
ஆராய்ச்சி.

உனக்கு விருப்பமானால், அல்லது உனது பெற்றோருக்கு விருப்பமாக இருந்தால் -
அவர்களது ஆசையை நீ பூர்த்தி செய்ய விரும்பினால் நீ உனது வருங்கால மனைவிக்கு
தாலியை கட்டி விடலாம். தெரிவு உன்னுடையது. எனினும், உனது குருநாதனை
பொருத்தவரையில் அவனது மனைவி தாலியை அணிய வேண்டுமா அல்லது இல்லையா என்ற
தீர்மானத்தை எடுக்கும் முழுச் சுதந்திரத்தை அவனது எதிர்கால மனைவியாக
வரக்கூடியவளின் கையிலேயே குருநாதன் கொடுத்துள்ளான். அவள் தாலியை
விரும்பினால் மட்டுமே உன் குருநாதன் திருமணத்தின் போது தாலியை கட்டி
விடுவான்.


9) பிறப்பு, இறப்பு இவை பற்றிய உங்கள் கருத்து?


தூங்குவது போலும் சாக்காடு
தூங்கி விழிப்பது போலும் பிறப்பு


என வள்ளுவன் கூறியுள்ளான். பிறப்பின் முன் நாம் எங்கே இருந்தோம், இறந்த
பின் நாம் எங்கே போகப்போகின்றோம் என்றெல்லாம் தீவிர யோசனைகள் செய்து உனது
வாழ்வின் அழகிய வாழ்நாட்களை வீண்செய்து விடாதே! இந்த நிமிடம் - இந்த
செக்கன் நீ மூச்சு விடுகின்றாய்! இப்போது நீ உயிருடன் இருக்கின்றாய்!
இதுதான் நிஜம்! தேவையற்ற தத்துவ ஆராய்ச்சிகள் உனது மனதின் இயல்பான
அகச்சமநிலையை குழப்பி உன்னை ஒரு பைத்தியக்காரனாக்குவது தவிர வேறு
ஒன்றினையும் உனக்கு தரப்போவதில்லை.


10) குருவே நான் என்றால் என்ன?


"நான் என்றால் அகங்காரம்! நான் என்ற வார்த்தயை உச்சரிக்கக்கூடாது!"
என்றெல்லாம் சிலர் பேசிக்கொள்வார்கள். அப்பனே, நீ தான் இந்த உலகத்தின் ராஜா
என்பதை முதலில் அறிந்துகொள். உன்னை பொருத்தவரை, உனது வாழ்வினை
பொறுத்தளவில் என்று உனது உடல் பிணமாகின்றதோ - அன்றைய தினத்தில் இருந்து நீ
இந்த பூமியில் இல்லாத ஒரு பொருள்! ஆனால், உன்னை, உனது வாழ்வை பொறுத்தளவில்
உனது உடல் பிணமான பின் பூமி உனக்கு வேண்டாத ஒரு பொருள்!

நீ இல்லாத பூமியில் பூகம்பம் வந்தால் என்ன? சுனாமி அடித்தால் என்ன? இவை
எதுவும் நீ இல்லாத உலகில் உன்னை பாதிக்கபோவதில்லை. எனவே, மீண்டும் இந்த
உலகின் ராஜா நீ என்பதை அறிந்துகொள்.

இந்த நான் என்ற சொல் - பதம் உன்னை குறிக்கின்றது. இந்த உலகின் முதல்வன் நீ
என்பதை குறிக்கின்றது. நீ ஆரம்பத்தில் கேட்டாயே ஒரு கேள்வி - குருவே கடவுள்
என்றால் என்ன? என்று!.. இதற்குரிய விடை இந்த நான் உள் உள்ளது. பல்வேறு
படிமுறை வளர்ச்சிகளின் பின் நான் என்பது யார் என்பதை நீ உணர்ந்து கொள்வாய்!

அப்பனே, உன்னை அடுத்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒரு போதி மரநிழலின் கீழ்
ஞானபோதனை தரும்போது சந்திக்கின்றேன். நன்றி! வணக்கம்!


(தொடரும்......)
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

ஆன்மீக கருத்துகள் ( பாகம் 1): Empty Re: ஆன்மீக கருத்துகள் ( பாகம் 1):

Post by krishnaamma Thu Sep 30, 2010 11:02 pm

HO! MY God! நல்ல குரு ........ நல்ல சீடன் .............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum