புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_m10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10 
1 Post - 50%
heezulia
Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_m10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_m10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_m10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_m10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_m10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_m10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10 
20 Posts - 3%
prajai
Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_m10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_m10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_m10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_m10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_m10Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்!


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Thu Nov 30, 2017 4:51 pm



தவிர்க்க… தப்பிக்க..

.அக்டோபர் – மார்பகப் புற்றுநோய் விழிப்பு உணர்வு மாதம்



பெண்களை மிரட்டும் நோய்களில் உலகளவில் முதன்மையானது மார்பகப் புற்றுநோய். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80,000 பெண்களுக்கு மேல் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 50 சதவிகிதம் பேர் மரணத்தைத் தழுவுகின்றனர் என்கின்றன புள்ளிவிவரங்கள். ‘இது நமக்கெல்லாம் வராது’ என்று நினைக்கும் பெண்களின் அறியாமையே, இறப்பு விகிதம் அதிகரிக்க முக்கியக் காரணம்.

ஏன் ஏற்படுகிறது?

மார்பகப் புற்றுநோய் ஏன் ஏற்படுகின்றது என்பதற்கு தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. செல்களின் ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அபரிமிதமான வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம். ஆரம்பத்தில் மார்பக செல்லில் தோன்றிய மாற்றம், நிணநீர் முடிச்சு வழியாக உடலில் எங்குவேண்டுமானாலும் பரவலாம். பொதுவாக மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்தில் பால் சுரப்பிகளில் ஏற்படுகிறது. மற்ற செல்களிலும் ஏற்படலாம்.



யாருக்கெல்லாம் வர அதிக வாய்ப்புள்ளது?

பொதுவாக எல்லா வகை புற்றுநோய்களிலுமே, வயது அதிகமாக அதிகமாகத்தான் அதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். அந்த வகையில் மார்ப்பகப் புற்றுநோய், 40 வயதைக் கடந்த பெண்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம்.

பாலூட்டாத பெண்கள் மார்பகப் புற்றுக்கு இலக்காகலாம். காரணம், பாலூட்டுவதால் புற்றுநோய்க்குக் காரணமாகும் சில ஹார்மோன்களின் அளவு உடலில் கட்டுக்குள் வைக்கப்படும். பாலூட்டும் காலம் முடியும்போது, டி.என்.ஏ சிதைவுக்கு உட்பட்ட மார்பகச் செல்கள் தாய் உடலில் இருந்து விடுபட்டிருக்கும். அவை எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

அதிவிரைவில் பூப்படைவது, புகை மற்றும் மது பழக்கம், உடல் பருமன், மரபியல் போன்றவை மார்பகப் புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கலாம். பொதுவாக 10 முதல் 15 சதவிகித மார்பகப் புற்றுநோய் மரபியல் காரணமாக வருகிறது.

புற்றுநோய் கட்டியா எனக் கண்டறிவது எப்படி?

மார்பகத்தில் கட்டி அல்லது மாற்றங்கள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

மார்பகத்தில் கட்டி உள்ளதா என்பதை மாதத்துக்கு ஒரு முறையாவது சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அறிகுறிகள்

மார்பகத்தில் தொடர்ந்து வலி, அசௌகரிய உணர்வு ஏற்படுதல்.

மார்பகத்தின் அளவு, வடிவத்தில் திடீர் மாற்றம் ஏற்படுதல்.

மார்புக்காம்பு அல்லது வெளிச்சதை பகுதி சிவந்து போகுதல். உட்பக்கமாக இழுத்துக் கொள்ளுதல் அல்லது வீக்கமடைதல்.

சிலருக்கு மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டாலும் வலி மட்டும் இருக்காது. வலி இல்லையென்று அலட்சியமாக இருக்காமல், அறிகுறிகளில் ஒன்றிரண்டு தென்பட்டாலும் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருத்துவர் மேமோகிராம், பயாப்ஸி உள்ளிட்ட சில பரிசோதனைகளை செய்து அது புற்றுநோய்தானா என்பதை உறுதி செய்வார்.

நோயின் நான்கு நிலைகள்

முதல் நிலை: மார்பகத்தில் புற்றுநோய் செல்கள் உருவாகி, கட்டிகள் அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும்.

இரண்டாம் நிலை: மார்பகக் காம்புப் பகுதியில், மார்பகத்தின் அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

மூன்றாம் நிலை: மார்பகத்தைச் சுற்றியுள்ள தசைப் பகுதிகள் முழுவதும் பாதிக்கப் பட்டிருக்கும்.

நான்காம் நிலை: மார்பகம் முழுதாகப் பாதிக்கப்பட்டு, கல்லீரல், நுரையீரல் என மற்ற உறுப்புகளுக்கும் புற்றுநோய் செல் பரவியிருக்கும்.

பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்தான், மார்பக பரிசோதனைக்கு வருவர். தற்போது 30 வயதைத் தாண்டிய பெண்ககளே கூட பரிசோதனை செய்துகொள்ள வருகின்றனர். இதனால், இன்னும் முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கிறது.

மார்பக புற்றுநோய் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. அவரவர் உடல்நிலையைப் பொருத்து, சிலருக்கு மிக வேகமாக பரவும். சிலருக்கு வருடக்கணக்கில் கூட மெதுவாக பரவும். எனவே, ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மிகவும் நல்லது.

சிகிச்சைகள்

புற்றுநோய் எந்த நிலையில் கண்டறியப்படுகிறது, புற்றுநோய் செல்களின் எண்ணிக்கை, நோயின் தீவிரம் என இவற்றின் அடிப்படையில் அறுவை சிகிச்சை, ரேடியேஷன், கீமோதெரப்பி, ஹார்மோன் தெரப்பி போன்ற சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும்.

ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் மார்பகத்தை அகற்ற வேண்டிய தேவை இருக்காது. முழுவதுமாகக் குணமாகலாம். சிலருக்கு மார்பகத்தை அகற்ற வேண்டிய நிலையும் ஏற்படலாம். சிகிச்சைக்குப் பின்னர் மார்பகப் புற்றுநோய் சிலருக்கு மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. எனவே, இவர்கள் தொடர் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது மிகமிக அவசியம்.

வரும் முன் காப்போம்!

சுயபரிசோதனையில், ஆரம்ப நிலையில், அறிகுறிகளின் மூலம் கண்டறியக்கூடிய ஒரே புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் மட்டுமே என்பது ஆறுதலான விஷயம். அதனால் மாதம் ஒருமுறை சுயபரிசோதனை செய்வது நல்லது.

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க…

30 வயதுக்கு பிறகு ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

தாய்மார்கள் குழந்தைகளுக்கு குறைந்தது ஓராண்டு வரை கட்டாயம் பாலூட்ட வேண்டும்.

உயரத்துக்கு ஏற்ற எடை என்பதற்கு கவனம் கொடுக்க வேண்டும்.

மாதவிலக்குக்கு இடைப்பட்ட நாட்கள், கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் ஆகிய காலங்களில் ஏற்படும் இயல்பான மாற்றங் களைத் தெரிந்துவைத்துக் கொண்டால்தான், இயல்புக்கு மாறான மாற்றங்கள் தோன்றினால் அதை உடனே உணர முடியும்.

தக்காளி, கேரட், கருப்பு திராட்சை, மாதுளை, குடமிளகாய், முட்டைக்கோஸ் பப்பாளி, புரொகோலி, பூண்டு ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த புற்றுநோய்க்கு எதிரான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தினமும் உணவில் குறைந்தது மூன்று வகையான, ரசாயனக் கலப்பில்லாத காய்கறி, பழங்கள் அவசியம் இடம் பெற வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் உணவுகள், துரித உணவுகளைத் தவிர்த்தாலே, அவர்கள் அதிவிரைவாகப் பூப்பெய்துவதை தவிர்க்க முடியும்.

மிளகாய்த் தூள், மசாலா வகைகளில் சிவப்பு நிறத்தை கூட்டசூடான் ரெட் டை கலக்கப்படுகிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது. எனவே, வீட்டிலேயே மசாலாப் பொருட்களைத் தயாரித்து பயன்படுத்துவது நல்லது.

ஒருமுறை சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது.

தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனுடன் யோகா, தியானம் செய்வது உடலை ஃபிட்டாகவும், ஹார்மோன்களை சீராக சுரக்கவும் வைக்கும்.



சுயபரிசோதனை செய்துகொள்வது எப்படி?

கண்ணாடி முன் நின்று மார்பகங்களின் அளவு, நிறம், வடிவத்தில் எதாவது மாற்றம் இருக்கிறதா என்று கவனிக்கவும்.

மார்பகங்களை வலது மற்றும் இடது என இரு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, மார்பகத்தை தடவிப் பார்த்து ஏதேனும் கட்டி, வலி தெரிகிறதா என பரிசோதிக்க வேண்டும். இதனுடன் அக்குள் பகுதியையும் சேர்த்து பரிசோதிக்கலாம்.

உட்கார்ந்த நிலையிலும் மல்லாந்து படுத்த நிலையிலும் ஆள்காட்டி விரல் மற்றும் மோதிர விரல்களால் மார்பகங்களை அழுத்தி கட்டிகள் இருக்கிறதா என பார்க்கலாம்.

மார்பக காம்பை அழுத்தி பார்க்கும்போது, ஏதாவது திரவம் அல்லது ரத்தம் வருகிறதா என கவனிக்க வேண்டும்.

குறிப்பு: மார்பகப் புற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பலர், ‘நான் சுயபரிசோதனை செய்தேன், ஆனாலும் எனக்கு எதுவும் தெரியாமல் போய்விட்டதே’ என்று வருந்துவார்கள். எனவே, 30 வயதைக் கடந்த பெண்கள், வருடத்துக்கு ஒருமுறை கட்டாயமாக மேமோகிராம் செய்து கொள்ள வேண்டும்.

செயற்கை மார்பகம்… சில விளக்கங்கள்!

மார்பகப் புற்றுக்கான சிகிச்சையில் மார்பகத்தை இழந்த பெண்களில் சிலர், செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்ள விருப்பப்படலாம். செயற்கை மார்பகம் என்பது, அவர்கள் உடலின் வேறு பாகத்தில் இருக்கும் தசையை எடுத்தோ, அல்லது செயற்கை சிலிக்கான் கொண்டோ உருவாக்குவது. நோயாளியின் உடல்நிலையைப் பொருத்தே அதற்கான சாத்தியக் கூறுகள் தீர்மானிக்கப்படும்.

இயற்கை மார்பகங்களின் எந்த இயல்பும் பொருத்தப்பட்ட செயற்கை மார்பகத்துக்கு இருக்காது என்பது குறிப்பிடத்தகக்து.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக