Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ?
3 posters
Page 1 of 1
பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ?
யானை
வாயில் அகப்பட்ட கரும்பு கதையாகிக் கொண்டிருக்கிறது இன்ஷூரன்ஸ் க்ளைம்
விவகாரங்கள்' என்ற முணுமுணுப்புகள் வரவர அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
இவ்வளவுக்கும் ஐ.ஆர்.டி.ஏ-வின்
2007-08-ம் ஆண்டு அறிக்கையின்படி
பார்த்தால் இறப்பு க்ளைம்களாக தனியார் நிறுவனங்கள் 27,561 க்ளைம்களும்,
எல்.ஐ.சி. 5,49,761 க்ளைம்களும் கொடுத்திருப்பது தெரியவருகிறது. ஆனால்,
கேட்ட எல்லோருக்கும் க்ளைம் கிடைத்து விடுகிறதா?
மோகன் என்பவர்
24.10.97-ல் 50,000 ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் ஒரு பாலிசியை
எடுத்தார். ஆனால், பிரீமியத்தைச் சரியாகச் செலுத்தாததால் 1999-ல் பாலிசி
காலாவதி ஆகிவிட்டது. அதன்பிறகு 16.12.2000 அன்று அதை மீண்டும்
புதுப்பித்தார். அப்போது அவர், தான் ஆரோக்கியமாக இருப்பதாக உறுதிமொழியும்
கொடுத்தார். ஆனால், 21.10.2001 அன்று இதயநோய், சர்க்கரை வியாதி,
சிறுநீரகச் செயலிழப்பு முதலிய காரணங்களால் இறந்துவிட்டார். பாலிசியைப்
புதுப்பிக்கும் முன்பு பிப்ரவரி 1998 முதல் பத்தொன்பது முறை பல்வேறு
மருத்துவமனைகளில் இதயநோய், நீரிழிவு வியாதி, சிறுநீரகச் செயலிழப்பு
முதலியவைகளுக்கு சிகிச்சை எடுத்திருப்பதை இன்ஷூரன்ஸ் நிறுவனம்
கண்டறிந்தது. மேலும் 1998-க்கு முன்பே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்
என்றும், ஐந்து ஆண்டுகளாக குடிப்பழக்கம் உடையவராக இருந்தார் எனவும்
கண்டறிந்தது. ஆனால், பாலிசியைப் புதுப்பிக்கும்போது, இவற்றையெல்லாம் அவர்
தன் உடல் நல அறிக்கையில் கூறாமல் மறைத்துவிட்டார் என்று கூறி, நிறுவனம்
க்ளைமைக் கொடுக்க மறுத்துவிட்டது.
மோகனின் மனைவி தன் கணவர்
கல்வியறிவு இல்லாதவர் என்றும், சூதுவாதற்றவர் என்றும், ஏஜென்ட்
கூறியபடியேதான் நடந்துகொண்டார் என்றும் கூறிய எந்த வாதங்களும்
ஏற்கப்படவில்லை.
இதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆயுள்
இன்ஷூரன்ஸ் பாலிசி க்ளைம்கள் நிறுவனங்களால் மறுக்கப்படுகின்றன.
ஐ.ஆர்.டி.ஏ-வின் அறிக்கைப்படி, 2007-08 ஆண்டு மட்டும் 9,000-க்கும்
அதிகமான க்ளைம்கள் மறுக்கப்பட்டிருக்கின்றன! இவற்றிலிருந்து என்ன
தெரிகிறது? பாலிசி எடுத்தால் மட்டும் போதாது. பாலிசித் தொகை தமக்குப்பின்
வாரிசுகளுக்குக் கிடைக்கவேண்டும் என்றால் பாலிசிதாரர்கள் மனதில்
கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உள்ளன. பாலிசி எடுக்கும்போதும், பாலிசி அமலில்
உள்ள காலத்திலும், க்ளைம் செய்யும்போதும் செய்ய வேண்டியவைகளைச் சரியாகச்
செய்தால்தான் ஒருவர் பாலிசி எடுத்ததற்குப் பயன் இருக்கும்.
கொடுக்கப்பட்ட
க்ளைம்களுடன் ஒப்பிடும்போது மறுக்கப்பட்ட க்ளைம்கள் சில ஆயிரங்களே
இருந்தாலும், அது கிடைக்காமல் போன ஒவ்வொரு குடும்பத்தின் துயரமும் மிகப்
பெரிதல்லவா?
சரியான விவரங்களைக் கொடுங்கள்...
ஆயுள்
இன்ஷூரன்ஸ் (பொது இன்ஷூரன்ஸூக்கும் இது பொருந்தும்) எடுப்பவர்கள்
முக்கியமாக மனத்தில் கொள்ள வேண்டியது ஒன்று உண்டு. பாலிசி எடுப்பவர்
தன்னைப் பற்றிக் கூறும் விவரங்களின் அடிப்படையில்தான், இன்ஷூரன்ஸ்
நிறுவனம் அவருக்கு பாலிசி வழங்குகிறது. அவர் அளிக்கும் விவரங்களின் மீது
தீவிர நம்பிக்கை கொண்டு (இதை ஆங்கிலத்தில் Utmost Good Faith என்பார்கள்)
அவருக்கு இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகிறது. அவர் தவறான விவரங்களைத் தந்தோ,
முக்கியமான விவரங்களை மறைத்தோ, மோசடி போன்றவற்றில் ஈடுபட்டோ, இன்ஷூரன்ஸ்
எடுத்தால் அது செல்லாது. எனவே, விண்ணப்பங்களில் சரியான விவரங்களைக்
கொடுக்கவேண்டும்.
விண்ணப்பம் செய்வதற்கும், இன்ஷூரன்ஸ்
வழங்கப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில் விவரங்களில் ஏதேனும்
மாற்றமிருந்தாலும் உடனே அதனைத் தெரியப்படுத்தவேண்டும்.
விண்ணப்பத்தைத்
தானே எழுதினாலும் சரி, ஏஜென்டோ, வேறு எவரோ எழுதினாலும் சரி, அதில்
கையெழுத்துப் போடும் விண்ணப்பதாரரே அதற்கு முழுப் பொறுப்பாவார். 'ஏஜென்ட்
எழுதினார், பாலிசிதாரர் கூறியதை அவர் மறைத்துவிட்டார்!' என்பன போன்ற
வாதங்கள் எடுபடாது.
நன்றி விகடன்
முக்கியமான விவரம் என்றால் என்ன?
இன்ஷூரன்ஸ்
கொடுக்கும் முடிவைப் பாதிக்கும் எந்த விவரமும் முக்கியமான விவரமாகும்.
தம்முடைய முந்தைய உடல்நிலை பாதிப்புகள், தற்போதைய உடல்நிலை, குடும்பத்தார்
உடல்நிலை, வயது, வருமானம், தொழில் போன்றவையெல்லாம் இதில் அடங்கும்.
இவையெல்லாவற்றையும்
கூறி பாலிசி எடுத்துவிட்டாலும், அதில் கூறியபடி தவறாமல் பிரீமியம்
செலுத்தி வரவேண்டும். இல்லாவிட்டால் பாலிசி காலாவதி ஆகிவிடும். காலாவதி
ஆனபிறகு இறப்பு நேரிட்டால் பாலிசித் தொகை கிடைக்காது. இப்படிக் காலாவதி
ஆகும் பாலிசிகள் நான்கு முதல் எண்பது சதவிகிதம் வரை இருப்பதாக விவரங்கள்
கூறுகின்றன. காலாவதி ஆன பாலிசியைப் புதுப்பிக்கும்போது கொடுக்கவேண்டிய
உடல்நல அறிக்கையிலும் முக்கியமான விவரங்களைத் தெரிவிக்கவேண்டும்.
நன்றி - விகடன்
நாமினியை மறந்துவிடக் கூடாது...
பாலிசி
தொகையைப் பெறுவதற்கு பாலிசி எடுக்கும்போதோ, பின்போ நாமினியை நியமனம்
செய்துவிடவேண்டும். நாமினி நியமனம் செய்யப்படவில்லையென்றால் வாரிசுச்
சான்று, உரிமைச் சான்று, நஷ்ட ஈட்டுப் பத்திரம் போன்றவற்றைக் கொடுப்பதில்
காலவிரயமும், பொருள் விரயமும் ஏற்படும். பாலிசியின் விவரங்கள், பாலிசி
பத்திரம், பிரீமியம் ரசீதுகள் இருக்கும் இடம் இவற்றையெல்லாம்
குடும்பத்தினரின் கவனத்தில் இருக்குமாறு செய்யவேண்டும். உயில் மூலமாகவோ,
குடும்ப செட்டில்மென்ட் மூலமாகவோ பாலிசித் தொகைக்கு உரியவர் யார் யார்
என்று தெளிவாக எழுதி வைத்துவிட வேண்டும். இவை இருந்தால்தான் வாரிசுச்
சான்றிதழோ, உரிமைச் சான்றிதழோ சிக்கல் இல்லாமல் பெறமுடியும்.
நன்றி - விகடன்
வாயில் அகப்பட்ட கரும்பு கதையாகிக் கொண்டிருக்கிறது இன்ஷூரன்ஸ் க்ளைம்
விவகாரங்கள்' என்ற முணுமுணுப்புகள் வரவர அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
இவ்வளவுக்கும் ஐ.ஆர்.டி.ஏ-வின்
2007-08-ம் ஆண்டு அறிக்கையின்படி
பார்த்தால் இறப்பு க்ளைம்களாக தனியார் நிறுவனங்கள் 27,561 க்ளைம்களும்,
எல்.ஐ.சி. 5,49,761 க்ளைம்களும் கொடுத்திருப்பது தெரியவருகிறது. ஆனால்,
கேட்ட எல்லோருக்கும் க்ளைம் கிடைத்து விடுகிறதா?
மோகன் என்பவர்
24.10.97-ல் 50,000 ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் ஒரு பாலிசியை
எடுத்தார். ஆனால், பிரீமியத்தைச் சரியாகச் செலுத்தாததால் 1999-ல் பாலிசி
காலாவதி ஆகிவிட்டது. அதன்பிறகு 16.12.2000 அன்று அதை மீண்டும்
புதுப்பித்தார். அப்போது அவர், தான் ஆரோக்கியமாக இருப்பதாக உறுதிமொழியும்
கொடுத்தார். ஆனால், 21.10.2001 அன்று இதயநோய், சர்க்கரை வியாதி,
சிறுநீரகச் செயலிழப்பு முதலிய காரணங்களால் இறந்துவிட்டார். பாலிசியைப்
புதுப்பிக்கும் முன்பு பிப்ரவரி 1998 முதல் பத்தொன்பது முறை பல்வேறு
மருத்துவமனைகளில் இதயநோய், நீரிழிவு வியாதி, சிறுநீரகச் செயலிழப்பு
முதலியவைகளுக்கு சிகிச்சை எடுத்திருப்பதை இன்ஷூரன்ஸ் நிறுவனம்
கண்டறிந்தது. மேலும் 1998-க்கு முன்பே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்
என்றும், ஐந்து ஆண்டுகளாக குடிப்பழக்கம் உடையவராக இருந்தார் எனவும்
கண்டறிந்தது. ஆனால், பாலிசியைப் புதுப்பிக்கும்போது, இவற்றையெல்லாம் அவர்
தன் உடல் நல அறிக்கையில் கூறாமல் மறைத்துவிட்டார் என்று கூறி, நிறுவனம்
க்ளைமைக் கொடுக்க மறுத்துவிட்டது.
மோகனின் மனைவி தன் கணவர்
கல்வியறிவு இல்லாதவர் என்றும், சூதுவாதற்றவர் என்றும், ஏஜென்ட்
கூறியபடியேதான் நடந்துகொண்டார் என்றும் கூறிய எந்த வாதங்களும்
ஏற்கப்படவில்லை.
இதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆயுள்
இன்ஷூரன்ஸ் பாலிசி க்ளைம்கள் நிறுவனங்களால் மறுக்கப்படுகின்றன.
ஐ.ஆர்.டி.ஏ-வின் அறிக்கைப்படி, 2007-08 ஆண்டு மட்டும் 9,000-க்கும்
அதிகமான க்ளைம்கள் மறுக்கப்பட்டிருக்கின்றன! இவற்றிலிருந்து என்ன
தெரிகிறது? பாலிசி எடுத்தால் மட்டும் போதாது. பாலிசித் தொகை தமக்குப்பின்
வாரிசுகளுக்குக் கிடைக்கவேண்டும் என்றால் பாலிசிதாரர்கள் மனதில்
கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உள்ளன. பாலிசி எடுக்கும்போதும், பாலிசி அமலில்
உள்ள காலத்திலும், க்ளைம் செய்யும்போதும் செய்ய வேண்டியவைகளைச் சரியாகச்
செய்தால்தான் ஒருவர் பாலிசி எடுத்ததற்குப் பயன் இருக்கும்.
கொடுக்கப்பட்ட
க்ளைம்களுடன் ஒப்பிடும்போது மறுக்கப்பட்ட க்ளைம்கள் சில ஆயிரங்களே
இருந்தாலும், அது கிடைக்காமல் போன ஒவ்வொரு குடும்பத்தின் துயரமும் மிகப்
பெரிதல்லவா?
சரியான விவரங்களைக் கொடுங்கள்...
ஆயுள்
இன்ஷூரன்ஸ் (பொது இன்ஷூரன்ஸூக்கும் இது பொருந்தும்) எடுப்பவர்கள்
முக்கியமாக மனத்தில் கொள்ள வேண்டியது ஒன்று உண்டு. பாலிசி எடுப்பவர்
தன்னைப் பற்றிக் கூறும் விவரங்களின் அடிப்படையில்தான், இன்ஷூரன்ஸ்
நிறுவனம் அவருக்கு பாலிசி வழங்குகிறது. அவர் அளிக்கும் விவரங்களின் மீது
தீவிர நம்பிக்கை கொண்டு (இதை ஆங்கிலத்தில் Utmost Good Faith என்பார்கள்)
அவருக்கு இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகிறது. அவர் தவறான விவரங்களைத் தந்தோ,
முக்கியமான விவரங்களை மறைத்தோ, மோசடி போன்றவற்றில் ஈடுபட்டோ, இன்ஷூரன்ஸ்
எடுத்தால் அது செல்லாது. எனவே, விண்ணப்பங்களில் சரியான விவரங்களைக்
கொடுக்கவேண்டும்.
விண்ணப்பம் செய்வதற்கும், இன்ஷூரன்ஸ்
வழங்கப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில் விவரங்களில் ஏதேனும்
மாற்றமிருந்தாலும் உடனே அதனைத் தெரியப்படுத்தவேண்டும்.
விண்ணப்பத்தைத்
தானே எழுதினாலும் சரி, ஏஜென்டோ, வேறு எவரோ எழுதினாலும் சரி, அதில்
கையெழுத்துப் போடும் விண்ணப்பதாரரே அதற்கு முழுப் பொறுப்பாவார். 'ஏஜென்ட்
எழுதினார், பாலிசிதாரர் கூறியதை அவர் மறைத்துவிட்டார்!' என்பன போன்ற
வாதங்கள் எடுபடாது.
நன்றி விகடன்
முக்கியமான விவரம் என்றால் என்ன?
இன்ஷூரன்ஸ்
கொடுக்கும் முடிவைப் பாதிக்கும் எந்த விவரமும் முக்கியமான விவரமாகும்.
தம்முடைய முந்தைய உடல்நிலை பாதிப்புகள், தற்போதைய உடல்நிலை, குடும்பத்தார்
உடல்நிலை, வயது, வருமானம், தொழில் போன்றவையெல்லாம் இதில் அடங்கும்.
இவையெல்லாவற்றையும்
கூறி பாலிசி எடுத்துவிட்டாலும், அதில் கூறியபடி தவறாமல் பிரீமியம்
செலுத்தி வரவேண்டும். இல்லாவிட்டால் பாலிசி காலாவதி ஆகிவிடும். காலாவதி
ஆனபிறகு இறப்பு நேரிட்டால் பாலிசித் தொகை கிடைக்காது. இப்படிக் காலாவதி
ஆகும் பாலிசிகள் நான்கு முதல் எண்பது சதவிகிதம் வரை இருப்பதாக விவரங்கள்
கூறுகின்றன. காலாவதி ஆன பாலிசியைப் புதுப்பிக்கும்போது கொடுக்கவேண்டிய
உடல்நல அறிக்கையிலும் முக்கியமான விவரங்களைத் தெரிவிக்கவேண்டும்.
நன்றி - விகடன்
நாமினியை மறந்துவிடக் கூடாது...
பாலிசி
தொகையைப் பெறுவதற்கு பாலிசி எடுக்கும்போதோ, பின்போ நாமினியை நியமனம்
செய்துவிடவேண்டும். நாமினி நியமனம் செய்யப்படவில்லையென்றால் வாரிசுச்
சான்று, உரிமைச் சான்று, நஷ்ட ஈட்டுப் பத்திரம் போன்றவற்றைக் கொடுப்பதில்
காலவிரயமும், பொருள் விரயமும் ஏற்படும். பாலிசியின் விவரங்கள், பாலிசி
பத்திரம், பிரீமியம் ரசீதுகள் இருக்கும் இடம் இவற்றையெல்லாம்
குடும்பத்தினரின் கவனத்தில் இருக்குமாறு செய்யவேண்டும். உயில் மூலமாகவோ,
குடும்ப செட்டில்மென்ட் மூலமாகவோ பாலிசித் தொகைக்கு உரியவர் யார் யார்
என்று தெளிவாக எழுதி வைத்துவிட வேண்டும். இவை இருந்தால்தான் வாரிசுச்
சான்றிதழோ, உரிமைச் சான்றிதழோ சிக்கல் இல்லாமல் பெறமுடியும்.
நன்றி - விகடன்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ?
பயனுள்ள தகவல் நண்பரே. [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ?
பயனுள்ள தகவல் [You must be registered and logged in to see this image.]
Similar topics
» கொடியேற்றினால் மட்டும் போதுமா?
» படித்தால் மட்டும் போதுமா?
» படித்தால் மட்டும் போதுமா?
» என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? - கருணாநிதி
» ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?
» படித்தால் மட்டும் போதுமா?
» படித்தால் மட்டும் போதுமா?
» என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? - கருணாநிதி
» ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|