புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_c10தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_m10தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_c10தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_m10தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_c10தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_m10தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_c10தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_m10தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_c10தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_m10தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_c10தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_m10தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_c10தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_m10தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_c10தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_m10தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_c10தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_m10தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_c10தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_m10தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 17, 2017 7:31 am



கிராமங்களை இந்தியாவின் முதுகெலும்பு என்கிறார்கள். ஆனால், நகரமயமாக்கல், சாலை விரி வாக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய கிராமங்கள் தங்களது இயல்பை தொலைத்து வருகின்றன. அதேசமயம், எத்தனை மாற்றங்கள் வந்தாலும் தங்க ளுக்கே உரித்தான அடையாளங்களை தக்கவைத்துக் கொண்டிருக்கும் கிராமங்களும் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியான கிராமம் தான் தேத்தாம்பட்டி.

பாரம்பரியத்தைப் போற்றுகிறார்கள்

மதுரையிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கிறது தேத்தாம்பட்டி. இந்த கிராமத்து மக்கள் பல தலைமுறைகளாக கலை, கலாச்சாரம், விவசாயம், உணவு, விளையாட்டுக்கள் என அத்தனையிலும் பாரம்பரியத்தைப் போற்றுகிறார்கள். அழகர் மலைக்கு நடுவில் அமைந்துள்ள தேத்தாம்பட்டியின் அத்தனை குடிகளும் விவசாயக் குடிகள் என்பது இன்னுமொரு சிறப்பு. இவர்கள் அனைவருக்குமே சொந்த நிலம் இருக்கிறது. என்றாலும் அவ்வப்போது ஊர்க் கணக்கிலும் பொதுச் சொத்துக்களை வாங்குகிறார்கள். கூடுதலாக விவசாயம் செய்ய நினைப்பவர்கள் இவற்றைக் குத்த கைக்கு எடுத்து விவசாயம் செய்கிறார்கள்.

தண்ணீருக்குப் பஞ்சமில்லை என்பதால் இங்கே தட்டாமல் தழைக்கிறது விவசாயம். உள்ளூரிலேயே விவசாயம் செய்து பிழைக்க வழிகள் இருப்பதால் தேத்தாம்பட்டிக்காரர்கள் பெரும்பாலும் வெளியூர் வேலைக்குப் போவதை தவிர்க்கிறார்கள். வறட்சியே எட்டிப் பார்க்காத இக்கிராமத்தில், காய் கனிகளை பாரம்பரிய முறையில் விளைவிக்கிறார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 17, 2017 7:33 am

கிராமிய விழா

சாதிகள் பல இருந்தாலும் அதைச் சொல்லி யாரும் இங்கே சண்டை போட்டுக் கொண்டதாக இதுவரை தகவல் இல்லை. தனி நபர்களுக்குள் ஏதாவது பிரச்சினைகள் தலைதூக்கினால் அதை அவர்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்கிறார்கள்.

இத்தனை சிறப்புகளுடன் வாழும் தேத்தாம்பட்டியில் மதுரையைச் சேர்ந்த ‘செசி’ தொண்டு நிறுவனம் அண்மையில் தனது வெள்ளிவிழா ஆண்டைக் கொண்டாடியது. இதை ஒரு கிராமிய விழாவாகவே கொண்டாடிய செசி, மத்திய பிரதேச முன்னாள் முதன்மை செயலர் சரத் பேகர், அம்மாநில கூடுதல் டி.ஜி.பி அனுராதா சங்கர், சத்தீஸ்கர் மாநிலத்தின் ஐ.ஏ.எஸ்அதிகாரி கீதா, ஏக்தா பரிஷத் அமைப்பின் தேசியத் தலைவர் பி.வி.ராஜகோபால், சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற ஓவிய ஆசிரியர் பார்பரா உள்ளிட்டோரையும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளையும் தேத்தாம்பட்டிக்கு அழைத்து வந்திருந்தது.

அந்த மக்களின் இயற்கை சார்ந்த பாரம்பரியமான வாழ்க்கை முறையை நேரில் பார்த்து பிரம்மித்துப் போனது இந்தக் குழு. கிராமங்களின் அருமை பெருமைகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவும், தேத்தாம்பட்டியைப் போன்ற பழமை மாறா பசுமை கிராமங்களை உருவாக்கவும், கிராமக் கலாச்சாரம், கலைகள் மற்றும் விவசாயத் தைப் பாதுகாக்கவும் இந்தக் கிராமியத் திருவிழாவை கொண்டாடியதாகச் சொல்கிறார் ‘ஏக்தா பரிஷத்’தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தன்ராஜ்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 17, 2017 7:34 am

சிறந்த அறிவாக கருதுகிறார்கள்

இதுதொடர்பாக இன்னும் விரிவாகப் பேசிய அவர், “கிராமங்களும் கிராம மக்களின் கலாச்சாரம் மற்றும் கலை விழாக்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. 7 லட்சம் கிராமங்கள் இருந்த இந்தியாவில் இப்போது 6 லட்சம் கிராமங்கள் தான் இருக்கின்றன. ஏழ்மைக்கும் வன்முறைக்கும் தொடர்பு இருக்கிறது. ஏழ்மையை விரட்டுவதுதன் மூலம் வன் முறையை ஒழிக்கலாம். இதைத்தான் நாங்கள் தேத்தாம்பட்டியில் பார்த்தோம்.

அங்குள்ள மக்கள் அவரவர் நிலத்தில் பாடுபடுகிறார்கள். பொன்னைவிட மேலாக நிலத்தை மதிக்கிறார்கள். ஊர்ப்பொது நிலத்தின் குத்தகை வருமானத்தைக் கொண்டு ஊருக்குள் மரங்களை வளர்க்கிறார்கள். எஞ்சிய நிதியை ஊர்ப்பொதுக் காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். தாத்தாவிடமும் அப்பாவிடமும் சிலம்பம் கற்று அவர்களுக்கே சவால் விடும் தாவணிப் பெண்கள் இங்கே தெருவுக்கு தெரு இருக்கிறார்கள்.

பாடப் புத்தகத்தைப் படித்து மதிப்பெண் எடுப்பதை நாம் பெரிதாக நினைக்கிறோம். ஆனால் இந்த மக்கள், பாரம்பரிய கலைகளையும், விவசாயத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதையே சிறந்த அறிவாகக் கருதுகிறார்கள். அணிந்திருக்கும் ஆடைகளைப் பார்த்தும், ஆட்களைப் பார்த்தும் இவர்கள் இயல்பாகப் பாட்டுப் பாட ஆரம்பித்துவிடுகிறார்கள். பாடலுக்கான எளிய இசைக் கருவிகளை இவர்களே தயாரித்துக் கொள்கிறார்கள். இளம்பெண்கள் கும்மியடிக்கிறார்கள்; இளைஞர்கள் விளையாட்டுக்களில் வீரம் காட்டு கிறார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 17, 2017 7:36 am


நிலம் தான் படியளக்கும் தெய்வம்

குடிமக்களின் நிம்மதியான, மகிழ்வான வாழ்வே ஒரு நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் என்பார்கள். அப்படியான மகிழ்ச்சியை தேத்தாம்பட்டி கிராமத்தில் பார்த்தோம். இந்த மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும், அமைதியையும் மற்ற கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் விதமாக இனிவரும் காலங்களில் இந்த கிராம திருவிழாக்களை கொண்டாட இருக்கிறோம்’’ என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய ஊர் பெரியவர் கரடி,‘‘எங்க கிராமம் ரொம்பப் பெருசு. 1,500 குடும்பம் இருக்கு; 500 குழந்தைகள் இருக்கு. நிலம்தான் எங்களுக்கு படி அளக்குற தெய்வம். அதனால, யாருக்கும் ஒரு அடி நிலத்தைக்கூட விற்பதில்லை என்பதை நாங்க கொள்கையாவே வெச்சிருக்கோம். எங்க கிராமத்துல தனிக் குடித்தனங்கள் அவ்வளவா கிடையாது. பேரன் - பேத்திகள், பெரியவங்கன்னு பெரும்பாலும் எல்லாமே கூட்டுக் குடும்பங்கள் தான். அதனால எல்லா வீடுமே எப்போதும் கலகலப்பா இருக்கும்” என்றார்.

தேத்தாம்பட்டிகள் எப்போதும் இதே கலகலப்புடன் இருக்கட்டும்!
நன்றி
தி இந்து

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 17, 2017 7:20 pm

:வணக்கம்:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 18, 2017 7:40 am

Dr.S.Soundarapandian wrote::வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1251125
நன்றி
ஐயா
இதை வாசிக்கும் போது உடம்பில் ஒரு உணர்வு துள்ளிக் குதித்து ஓடுகிறது
ஐயா.
இதற்கு என்னால் விளக்கம் அளிக்க இயலாது, ஆனால் உங்களுக்கு புரிந்திருக்கும்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக