புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Today at 19:49
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Today at 19:47
» மாம்பழ குல்பி
by ayyasamy ram Today at 19:46
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:12
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:00
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:21
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:58
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 13:36
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 13:34
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:25
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:13
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:55
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 7:48
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:57
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 21:55
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 21:54
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 21:52
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 21:51
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 15:28
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 15:23
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 13:49
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 13:40
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 13:31
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 13:17
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 13:01
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon 27 May 2024 - 22:15
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon 27 May 2024 - 18:37
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon 27 May 2024 - 18:34
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon 27 May 2024 - 14:03
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon 27 May 2024 - 13:50
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon 27 May 2024 - 13:25
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon 27 May 2024 - 12:50
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon 27 May 2024 - 11:22
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:32
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:30
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:28
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun 26 May 2024 - 13:05
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun 26 May 2024 - 11:54
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:46
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:45
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:37
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:35
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:33
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:48
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:44
» சினி மசாலா
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:41
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:39
by ayyasamy ram Today at 19:49
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Today at 19:47
» மாம்பழ குல்பி
by ayyasamy ram Today at 19:46
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:12
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:00
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:21
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:58
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 13:36
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 13:34
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:25
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:13
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:55
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 7:48
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:57
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 21:55
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 21:54
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 21:52
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 21:51
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 15:28
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 15:23
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 13:49
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 13:40
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 13:31
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 13:17
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 13:01
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon 27 May 2024 - 22:15
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon 27 May 2024 - 18:37
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon 27 May 2024 - 18:34
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon 27 May 2024 - 14:03
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon 27 May 2024 - 13:50
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon 27 May 2024 - 13:25
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon 27 May 2024 - 12:50
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon 27 May 2024 - 11:22
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:32
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:30
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:28
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun 26 May 2024 - 13:05
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun 26 May 2024 - 11:54
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:46
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:45
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:37
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:35
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:33
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:48
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:44
» சினி மசாலா
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:41
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:39
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுள் மையம் கொண்ட புயல்! - 3 - “பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்!”
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ட்விட்டர் அரசியல் செய்கிறார்’ என்று என்னைப்பற்றிச் சிறு கிண்டல் ஒன்று பரவலாக உள்ளது. 20-ம் நூற்றாண்டில் சர்வாதிகார மன்னர் ஆட்சியில் புரட்சிக் குரல்கள் எப்படிச் சிறு பத்திரிகைகள் மூலம் சேதி பரப்பி, பெரும் புரட்சிகள் உருவாயினவோ அவற்றுக்கு நிகரான, ஏன், அதையும்விட வலிமையான ஊடகமாக வலைதளம் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. இந்த உண்மையைப் பழைமைவாதிகள்கூடப் புரிந்துகொண்டுவிட்ட நேரம் இது.
அமெரிக்காவில் 29 வயது இளைஞர் கோடி ரட்லட்ஜ் வில்சன் (Cody Rutledge Wilson) என்பவர் இணையதளத்தில் 3டி பிரின்டரின்மூலம் யார் வேண்டுமானாலும் தயாரிக்கக்கூடிய, ஒரு தோட்டா மட்டுமே கொண்ட கைத்துப்பாக்கியைப் பிரசுரம் செய்தார். அமெரிக்க அரசு முயன்றும் தடுக்கவியலாமல் இன்றும் Pirate Bay-ல் நிலவுகிறது, உலவுகிறது `லிபரேட்டர்’ என்ற பெயர் கொண்ட அந்தக் கைத்துப்பாக்கி. தன்னை `ரகசிய அராஜகவாதி’ (Crypto Anarchist) என்று அழைத்துக்கொள்ளும் திரு. கோடி வில்சன் லட்சம் துப்பாக்கிகளுக்கான செயல்திட்டத்தை வலையில் விரித்து விவரித்துள்ளார். இது நடந்தது 2013-ல். தற்போது இயந்திரத் துப்பாக்கி ஒன்றையும் விற்றுக் கொண்டிருக்கிறார். அரசால் தடுக்க முடியவில்லை. இலட்சக்கணக்கில் விற்கும் கோடி வில்சனின் துப்பாக்கிகளின் எண்ணிக்கை கோடிகளை நெருங்க வெகுநாளாகாது.
நன்றி
விகடன்
அமெரிக்காவில் 29 வயது இளைஞர் கோடி ரட்லட்ஜ் வில்சன் (Cody Rutledge Wilson) என்பவர் இணையதளத்தில் 3டி பிரின்டரின்மூலம் யார் வேண்டுமானாலும் தயாரிக்கக்கூடிய, ஒரு தோட்டா மட்டுமே கொண்ட கைத்துப்பாக்கியைப் பிரசுரம் செய்தார். அமெரிக்க அரசு முயன்றும் தடுக்கவியலாமல் இன்றும் Pirate Bay-ல் நிலவுகிறது, உலவுகிறது `லிபரேட்டர்’ என்ற பெயர் கொண்ட அந்தக் கைத்துப்பாக்கி. தன்னை `ரகசிய அராஜகவாதி’ (Crypto Anarchist) என்று அழைத்துக்கொள்ளும் திரு. கோடி வில்சன் லட்சம் துப்பாக்கிகளுக்கான செயல்திட்டத்தை வலையில் விரித்து விவரித்துள்ளார். இது நடந்தது 2013-ல். தற்போது இயந்திரத் துப்பாக்கி ஒன்றையும் விற்றுக் கொண்டிருக்கிறார். அரசால் தடுக்க முடியவில்லை. இலட்சக்கணக்கில் விற்கும் கோடி வில்சனின் துப்பாக்கிகளின் எண்ணிக்கை கோடிகளை நெருங்க வெகுநாளாகாது.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இது நிலவரம். இப்போது சொல்லுங்கள், ட்விட்டரையும் வலைதளத்தையும் புரட்சிக்கு உதவாத திண்ணைபேசிகளின் ஊடகம் என்று ஒதுக்கிவிட முடியுமா?
ஒருசிலர் அதைத் திண்ணையாகவும், இன்னும் சிலர் கக்கூஸாகவும் பயன்படுத்துகின்றனர். புதிதாகக் கெட்டவார்த்தை கற்ற பள்ளி மாணவன் அதை யார்மீதாவது பிரயோகப்படுத்த முற்பட்டு முடியாமல், அதை கக்கூஸ் சுவரிலாவது எழுதி அழகு பார்ப்பான். முடிந்தால் ஆசிரியர்களது கழிப்பறையிலும் இன்னொரு பிரதியை ஏற்படுத்திப் புரட்சி செய்வான். அப்படிப்பட்ட ஆரம்பப் புரட்சியில் அறைகுறையாய் ஈடுபட்ட, கக்கூஸ் வீரர்களின் கரங்களுக்கு வலுச்சேர்த்த கரங்களில் எனதும் ஒன்று. இதை நான்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்ள முடியாத அசட்டுப் புரட்சி. `இதைச் செய்திருக்க வேண்டாமே’ எனத் தோன்றும் வயது வருவதற்குள் பள்ளியில் படிப்பே முடிந்துவிட்டது.
கக்கூஸ் புரட்சியாளர்களின் சகோதரர்கள் ட்விட்டரிலும் முளைத்திருக்கிறார்கள். நான் விமர்சிப்பது அவர்களுடைய கருத்துகளையல்ல. முகமும் விலாசமும் தெரியாது என்ற காரணத்தினால் மட்டுமே தைரியமாய்ப் பேசும் தன்மை எத்தகையது? விலாசம் கண்டுபிடிக்க முடியாது என்பதனால் மட்டும் குற்றங்கள் புரியலாமா? இதற்குத் தன் முகத்தையும் விலாசத்தையும் பகிரங்கமாய் அறிவித்து அராஜகம் செய்யத்துணியும் திரு.கோடி வில்சனின் வீரம் மெச்சத்தக்கதே. அப்படிப்பட்ட ட்விட்டர் போராளி அல்லவா பல்க வேண்டும். அது தேவையும்கூட. முகநூல், ட்விட்டர் வீரர்கள் மொட்டைமாடியில் நின்றுகொண்டு கீழே தெருவில் போகும் பாதசாரிகளின் தலையில் துப்பிவிட்டு ஒளிந்துகொள்ளும் சிறுபிள்ளைத்தன மில்லாமல், தைரியமாய் அநீதிகளை விமர்சிக்கும் வீரர்களாக வேண்டும். அதுவே மெச்சப்படும்.
ஒருசிலர் அதைத் திண்ணையாகவும், இன்னும் சிலர் கக்கூஸாகவும் பயன்படுத்துகின்றனர். புதிதாகக் கெட்டவார்த்தை கற்ற பள்ளி மாணவன் அதை யார்மீதாவது பிரயோகப்படுத்த முற்பட்டு முடியாமல், அதை கக்கூஸ் சுவரிலாவது எழுதி அழகு பார்ப்பான். முடிந்தால் ஆசிரியர்களது கழிப்பறையிலும் இன்னொரு பிரதியை ஏற்படுத்திப் புரட்சி செய்வான். அப்படிப்பட்ட ஆரம்பப் புரட்சியில் அறைகுறையாய் ஈடுபட்ட, கக்கூஸ் வீரர்களின் கரங்களுக்கு வலுச்சேர்த்த கரங்களில் எனதும் ஒன்று. இதை நான்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்ள முடியாத அசட்டுப் புரட்சி. `இதைச் செய்திருக்க வேண்டாமே’ எனத் தோன்றும் வயது வருவதற்குள் பள்ளியில் படிப்பே முடிந்துவிட்டது.
கக்கூஸ் புரட்சியாளர்களின் சகோதரர்கள் ட்விட்டரிலும் முளைத்திருக்கிறார்கள். நான் விமர்சிப்பது அவர்களுடைய கருத்துகளையல்ல. முகமும் விலாசமும் தெரியாது என்ற காரணத்தினால் மட்டுமே தைரியமாய்ப் பேசும் தன்மை எத்தகையது? விலாசம் கண்டுபிடிக்க முடியாது என்பதனால் மட்டும் குற்றங்கள் புரியலாமா? இதற்குத் தன் முகத்தையும் விலாசத்தையும் பகிரங்கமாய் அறிவித்து அராஜகம் செய்யத்துணியும் திரு.கோடி வில்சனின் வீரம் மெச்சத்தக்கதே. அப்படிப்பட்ட ட்விட்டர் போராளி அல்லவா பல்க வேண்டும். அது தேவையும்கூட. முகநூல், ட்விட்டர் வீரர்கள் மொட்டைமாடியில் நின்றுகொண்டு கீழே தெருவில் போகும் பாதசாரிகளின் தலையில் துப்பிவிட்டு ஒளிந்துகொள்ளும் சிறுபிள்ளைத்தன மில்லாமல், தைரியமாய் அநீதிகளை விமர்சிக்கும் வீரர்களாக வேண்டும். அதுவே மெச்சப்படும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நேர்மையான என் விமர்சகர்கள் நிறைய பேர் என் நண்பர்களானதையும், நான் அவர்கள் விமர்சனத்தை ஏற்று என்னைத் திருத்திக் கொண்டபோது அவர்களே என் ரசிகர்களாக மாறியதையும் பார்த்திருக்கிறேன். உங்கள் விமர்சனத்தை எள்ளளவும் குறைக்கத் தேவையில்லை. தரம் குறையாமல் அதைச் செய்வது நல்லது. ரயில் நிலையத்தில் கத்திகளை வீசிப் பயணிகளை மிரட்டியவர்கள் கண்டிப்பாய் வீரர்கள் அல்ல. சுய சந்தோஷத்திற்காகப் பிறரை மிரட்டி விளையாடுவது சிறுபிள்ளைத்தனம் கூட இல்லை, பொறுப்பின்மை; மனிதநேயமின்மை. பிடிபட்டவுடன் அவர்கள் கதறிய கதறலே அவர்கள் மனோபலத்தின் சான்று.
30 வருடங்களுக்கு முன்னால் பாரதப் பிரதமரை நேரில் சந்திக்கச் சென்றேன். குறைகூறி அழ, சினிமாக்காரர்களுடன் நானும் சென்றிருந்தேன். அது ட்விட்டர் இல்லாத காலம். மும்பையில் மதக்கலவரம் வெடித்துக் கைமீறிப் போயிருந்த நேரம் அது. பிரதமர் திரு. நரசிம்மராவ் அவர்கள் சற்று பட்டும்படாமலும் பாரபட்சமாகவும் பேசியதாக, சந்திக்கச் சென்றிருந்த பலருக்கும் தோன்றியது. என் கேள்வியின் கூர்மையை மரியாதைக்குறைவு எனத் தவறாகப் புரிந்துகொண்ட பிரதமர், நான் கேள்வியை முடிப்பதற்குள் கோபத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
மதியாத வாசலை மிதித்துவிட்ட சங்கடத்தில் கைகூப்பி, மதியா வீட்டை விட்டு விடைபெற்று வெளியேறினேன். அன்று பலருக்கும் நான் பிரதமரையே அவமானப்படுத்திவிட்டதாகத் தோன்றியது. உண்மையில் அன்று அவமானப்பட்டது நானோ அவரோகூட இல்லை, அவமானத்துக்கு உள்ளானது இந்தியாவின் பன்முகத்தன்மை. அன்று ட்விட்டர் இல்லாத குறையை, இந்தச் சம்பவம் குறித்து ஆனந்தவிகடனில் வெளியான கட்டுரை நீக்கியது.
30 வருடங்களுக்கு முன்னால் பாரதப் பிரதமரை நேரில் சந்திக்கச் சென்றேன். குறைகூறி அழ, சினிமாக்காரர்களுடன் நானும் சென்றிருந்தேன். அது ட்விட்டர் இல்லாத காலம். மும்பையில் மதக்கலவரம் வெடித்துக் கைமீறிப் போயிருந்த நேரம் அது. பிரதமர் திரு. நரசிம்மராவ் அவர்கள் சற்று பட்டும்படாமலும் பாரபட்சமாகவும் பேசியதாக, சந்திக்கச் சென்றிருந்த பலருக்கும் தோன்றியது. என் கேள்வியின் கூர்மையை மரியாதைக்குறைவு எனத் தவறாகப் புரிந்துகொண்ட பிரதமர், நான் கேள்வியை முடிப்பதற்குள் கோபத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
மதியாத வாசலை மிதித்துவிட்ட சங்கடத்தில் கைகூப்பி, மதியா வீட்டை விட்டு விடைபெற்று வெளியேறினேன். அன்று பலருக்கும் நான் பிரதமரையே அவமானப்படுத்திவிட்டதாகத் தோன்றியது. உண்மையில் அன்று அவமானப்பட்டது நானோ அவரோகூட இல்லை, அவமானத்துக்கு உள்ளானது இந்தியாவின் பன்முகத்தன்மை. அன்று ட்விட்டர் இல்லாத குறையை, இந்தச் சம்பவம் குறித்து ஆனந்தவிகடனில் வெளியான கட்டுரை நீக்கியது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மத்திய அரசு, மாநில அரசு என்ற பாகுபாடில்லாமல், இந்தியாவின் அற்புதப் பன்முகத்தன்மை பாதிக்கப்படும் போதெல்லாம் என் குரல் எழும் என்பதே உண்மை. ஆனால், சற்றும் கண்ணியம் குறையாத குரலாக அது இருக்கவேண்டும் என்று மெனக்கெடுபவன் நான். என்பால் பிழை இருப்பின் பகிரங்கமாக மன்னிப்பு கோரவும் நான் தயங்கியதில்லை.
சமீபத்திய உதாரணம் இதோ...
பணமதிப்பு நீக்கம் (Demonitisation) பற்றி மாண்புமிகு பிரதமர் மோடி அறிவித்தபோது, கட்சி வரையறைகள் கடந்து இச்செயல் பாராட்டப்படவேண்டும் என்று ட்விட்டரில் என் கருத்தை வெளியிட்டேன். கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்கான ஒரு வழி என்ற முறையில் முழு ஆதரவையும் அத்திட்டத்திற்குத் தருவது மட்டுமன்று, அதனால் விளையும் சிறு இடைஞ்சல்களையும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றே நான் நினைத்தேன். ஆனால், என் சகாக்கள் பலரும், பொருளாதாரக் கல்வி பெற்ற சிலரும் அலைபேசியில் கூப்பிட்டு, என் ஆதரவுக்கு எதிராகத் தங்களின் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்கள்.
கொஞ்சநாள் கழித்து, டிமானிட்டைசேஷனை நடைமுறைப்படுத்திய விதம் பிழையானது; ஆனால், யோசனை நல்ல யோசனைதான் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். அதற்கும் பிற்பாடு பொருளாதார வல்லுநர்களின் விமர்சனக்குரல்கள் வலுத்தன. சரி, சில திட்டங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டாலும் நடைமுறையில் தோல்வியுறும் என்று நினைத்துக் கொண்டேன்.
சமீபத்திய உதாரணம் இதோ...
பணமதிப்பு நீக்கம் (Demonitisation) பற்றி மாண்புமிகு பிரதமர் மோடி அறிவித்தபோது, கட்சி வரையறைகள் கடந்து இச்செயல் பாராட்டப்படவேண்டும் என்று ட்விட்டரில் என் கருத்தை வெளியிட்டேன். கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்கான ஒரு வழி என்ற முறையில் முழு ஆதரவையும் அத்திட்டத்திற்குத் தருவது மட்டுமன்று, அதனால் விளையும் சிறு இடைஞ்சல்களையும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றே நான் நினைத்தேன். ஆனால், என் சகாக்கள் பலரும், பொருளாதாரக் கல்வி பெற்ற சிலரும் அலைபேசியில் கூப்பிட்டு, என் ஆதரவுக்கு எதிராகத் தங்களின் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்கள்.
கொஞ்சநாள் கழித்து, டிமானிட்டைசேஷனை நடைமுறைப்படுத்திய விதம் பிழையானது; ஆனால், யோசனை நல்ல யோசனைதான் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். அதற்கும் பிற்பாடு பொருளாதார வல்லுநர்களின் விமர்சனக்குரல்கள் வலுத்தன. சரி, சில திட்டங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டாலும் நடைமுறையில் தோல்வியுறும் என்று நினைத்துக் கொண்டேன்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தற்போது `யோசனையே கபடமானது’ என்பது போன்ற உரத்த குரல்களுக்கு அரசிடமிருந்து பலவீனமான பதில்களே வரும்போது சந்தேகம் வலுக்கிறது. திட்டத்திற்குப் பாராட்டு சொன்னதில் சற்றே அவசரப்பட்டுவிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று அடம்பிடிக்காமல் தவற்றை ஒப்புக்கொண்டால், பிரதமருக்கு என்னுடைய இன்னொரு சலாம் காத்திருக்கிறது. தவறுகளைத் திருத்தி ஆவன செய்வதும், முக்கியமாக அதை ஒப்புக்கொள்வதும் பெருந்தலைவர்களுக்கான அடையாளம்.
திரு.காந்தியால் அதைச் செய்யமுடிந்தது. இன்றும் அது சாத்தியம்தான். சற்றே பொறுத்திருந்து பார்ப்போம். அதற்குள் முயலின் மூன்று கால் இரண்டு காலாகக் குறைந்தால்... யாரோ நம்மை மாட்டுக்கறி சாப்பிடத் தடை செய்துவிட்டுத் தாங்கள் முயல்கறி சாப்பிடுகிறார்கள் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.
சமீபத்தில் சினிமா ஃபிலிம் பாதுகாப்புப் பயிலரங்கிற்காக நியூயார்க்கில் உள்ள `மியூஸியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட்’-டிலிருந்து தெல்மா ராஸ் என்பவர் சென்னைக்கு வந்திருந்தார். சென்னை விமானநிலையத்தில் விசா பேப்பர் சரியாக இல்லை என்று அதிகாரிகள் ராஸிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘பேப்பர்கள் சரியாகத்தானே இருக்கின்றன’ என ராஸ் வாதம் செய்ய, அனுமதி மறுப்பதற்கு அந்த இமிகிரேஷன் அதிகாரி வியத்தகு காரணம் ஒன்றும் சொன்னாராம்.
திரு.காந்தியால் அதைச் செய்யமுடிந்தது. இன்றும் அது சாத்தியம்தான். சற்றே பொறுத்திருந்து பார்ப்போம். அதற்குள் முயலின் மூன்று கால் இரண்டு காலாகக் குறைந்தால்... யாரோ நம்மை மாட்டுக்கறி சாப்பிடத் தடை செய்துவிட்டுத் தாங்கள் முயல்கறி சாப்பிடுகிறார்கள் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.
சமீபத்தில் சினிமா ஃபிலிம் பாதுகாப்புப் பயிலரங்கிற்காக நியூயார்க்கில் உள்ள `மியூஸியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட்’-டிலிருந்து தெல்மா ராஸ் என்பவர் சென்னைக்கு வந்திருந்தார். சென்னை விமானநிலையத்தில் விசா பேப்பர் சரியாக இல்லை என்று அதிகாரிகள் ராஸிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘பேப்பர்கள் சரியாகத்தானே இருக்கின்றன’ என ராஸ் வாதம் செய்ய, அனுமதி மறுப்பதற்கு அந்த இமிகிரேஷன் அதிகாரி வியத்தகு காரணம் ஒன்றும் சொன்னாராம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அம்மையார் தெல்மா ராஸ் அணிந்திருந்த ஆடை இந்தியக் கலாசாரப்படி ஆபாசமாக இருப்பதால் அனுமதி மறுக்கப்படுவதாகச் சொல்லியிருக்கிறார். தெல்மா ராஸ் டெல்லிக்கு அனுப்பப்பட்டு அல்லல்பட்டு, கடைசியாக மத்திய மந்திரியின் தலையீட்டால் திரும்ப வர யத்தனித்து, சென்னை வந்து சேர்ந்தார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் தாஜ்மஹால் பெயர் விடுபட்டதுபோல் இதுவும் ‘பன்முகத்தன்மை இழந்துவரும்’ நாட்டில் மக்களை பயமுறுத்தும் அறிகுறிதான். போன வாரக் கட்டுரையில் நான் சொன்ன `ஒரே குடையின் கீழ் ஒரே மொழி பேசும் ஒரே மதம் கொண்ட இந்தியா’ எனும் கனவு, அது கனவாகவே இருக்கும். நடைமுறையில் சாத்தியப்படாது.’ என் போன்ற பல கோடி இந்தியர்கள் அக்கொடும் கனவை நடைமுறைப்படுத்த விடமாட்டார்கள். மக்களின் தெய்வங்கள் இனியும் பல்கும்.
பாமரனின் ஆன்மிகத்திற்கு மதாச்சாரிகள் தேவையில்லை. அவனாச்சு அவன் தெய்வமாச்சு. நாத்திகர்கூட இந்தப் பாமரனைக் கடியாது கனிவாக மனம்மாறச் செய்ய முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், நடந்தபாடில்லை. இந்தப் பாமரனின் பக்தி அவனது தனிப்பட்ட விஷயம். அவன் பக்தி அமைதியாக இடைத்தரகரின்றி நடக்கிறது. அவனையும் வழிப்பறி செய்து பணம் பறிக்கும் மட்டரக ஆன்மிகம் தெருத்தெருவாய் உலவத்தான் செய்கிறது. அதன் அடையாளம், கோயிலைவிடக் கொஞ்சமே சிறிதாக இருக்கும் உண்டியல். அதைப் பார்த்ததுமே புரிந்துகொள்ளலாம், அந்த ஆன்மிகத்தில் மூலப் பொருள் காசுதான் என்று. அதைவிட நாத்திகம் பேசுவதே மேல்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் தாஜ்மஹால் பெயர் விடுபட்டதுபோல் இதுவும் ‘பன்முகத்தன்மை இழந்துவரும்’ நாட்டில் மக்களை பயமுறுத்தும் அறிகுறிதான். போன வாரக் கட்டுரையில் நான் சொன்ன `ஒரே குடையின் கீழ் ஒரே மொழி பேசும் ஒரே மதம் கொண்ட இந்தியா’ எனும் கனவு, அது கனவாகவே இருக்கும். நடைமுறையில் சாத்தியப்படாது.’ என் போன்ற பல கோடி இந்தியர்கள் அக்கொடும் கனவை நடைமுறைப்படுத்த விடமாட்டார்கள். மக்களின் தெய்வங்கள் இனியும் பல்கும்.
பாமரனின் ஆன்மிகத்திற்கு மதாச்சாரிகள் தேவையில்லை. அவனாச்சு அவன் தெய்வமாச்சு. நாத்திகர்கூட இந்தப் பாமரனைக் கடியாது கனிவாக மனம்மாறச் செய்ய முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், நடந்தபாடில்லை. இந்தப் பாமரனின் பக்தி அவனது தனிப்பட்ட விஷயம். அவன் பக்தி அமைதியாக இடைத்தரகரின்றி நடக்கிறது. அவனையும் வழிப்பறி செய்து பணம் பறிக்கும் மட்டரக ஆன்மிகம் தெருத்தெருவாய் உலவத்தான் செய்கிறது. அதன் அடையாளம், கோயிலைவிடக் கொஞ்சமே சிறிதாக இருக்கும் உண்டியல். அதைப் பார்த்ததுமே புரிந்துகொள்ளலாம், அந்த ஆன்மிகத்தில் மூலப் பொருள் காசுதான் என்று. அதைவிட நாத்திகம் பேசுவதே மேல்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்தக் குமட்டல் கோபம் எனக்கு சமீபத்தில் வந்ததன்று; பழையது. `ஹேராம்’ படத்தின் இறுதியில் ஜூனியர் சாகேத் ராம் பேசும் ஒரு வசனம் வரும். ``ரிலீஜியன் அண்ட் பாலிட்டிக்ஸ் ரொம்ப டேஞ்சரஸ் கலவை. செக்ஸ் வயலன்ஸ் மாதிரி’’ என்று.
`பாரத் தேஷ்’, விமர்சனங்களை மதியாது அக்கலவையை ஆர்வத்துடன் செய்துகொண்டிருக்கிறது. சாமானிய பாதசாரிகள், பாமரர்களை அதற்கு பலியாகாமல் பாதுகாக்கவேண்டியது பகுத்தறிவாளர்களின் கடமை மட்டுமல்ல, நேர்மையான பக்தன் என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்பவர்களின் கடமையும்கூட!
- உங்கள் கரையை நோக்கி!
நன்றி
விகடன்
`பாரத் தேஷ்’, விமர்சனங்களை மதியாது அக்கலவையை ஆர்வத்துடன் செய்துகொண்டிருக்கிறது. சாமானிய பாதசாரிகள், பாமரர்களை அதற்கு பலியாகாமல் பாதுகாக்கவேண்டியது பகுத்தறிவாளர்களின் கடமை மட்டுமல்ல, நேர்மையான பக்தன் என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்பவர்களின் கடமையும்கூட!
- உங்கள் கரையை நோக்கி!
நன்றி
விகடன்
Similar topics
» என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன்
» என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2
» என்னுள் மையம் கொண்ட புயல்! - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்!
» என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 6 - "செய் அல்லது செய்ய விடு!”
» பாம்பனில் 3ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு: வங்கக்கடலில் புயல் மையம்
» என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2
» என்னுள் மையம் கொண்ட புயல்! - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்!
» என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 6 - "செய் அல்லது செய்ய விடு!”
» பாம்பனில் 3ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு: வங்கக்கடலில் புயல் மையம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|