புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis Poll_c10தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis Poll_m10தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis Poll_c10தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis Poll_m10தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis Poll_c10 
2 Posts - 6%
heezulia
தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis Poll_c10தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis Poll_m10தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis Poll_c10தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis Poll_m10தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis Poll_c10தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis Poll_m10தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 07, 2017 9:49 pm

அன்று அலுவலகத்தில் மூன்று பேர் வரவில்லை. கூடுதல் வேலை. நீங்கள் இரவு வீட்டுக்கு வரவே 11 மணி ஆகிவிடுகிறது. கிடைத்ததைக் கொறித்ததில் பசி அடங்கியும், அடங்காத நிலை. படுத்தால்போதும் எனக் கலைந்தப் படுக்கையில் தஞ்சம். விளக்குகள் அணைக்கப்பட்டதும், நீங்கள் தழுவிக் கொண்ட போர்வையைப்போல தூக்கமும் உங்களைத் தழுவியதாய் நினைப்பு. இருளில் உங்கள் உணர்வுகளை நழுவவிடுகிறீர்கள்.
அரை மணி நேரம் கடந்திருக்காது. விழித்தோமா இல்லையா என்று புரியாத ஓர் இருட்டில் முழிப்பு வருகிறது. ஆனால், நகர முடியவில்லை. இப்போது அந்தத் தனியறையில் நீங்கள் தனியாக இல்லையென்ற ஓர் உள்ளுணர்வு. எழுந்து பார்க்கலாம் என்று முயன்றால், உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. சவ நிலை என்று சொல்வார்களே, அப்படி ஒரு நிலை, உங்கள் உடலுக்கு மட்டும். இது போதாதென்று முகத்தை யாரோ எதையோ வைத்து அமுக்கியது போன்ற எண்ணம்வேறு உதயமாகிறது. உயிர்க்காற்று உள்ளே செல்ல மறுக்கிறது. மூச்சுத் திணறல். கதற வேண்டும் என்று நீங்கள் முயற்சி செய்தும் குரல் உங்கள் குரல்வளையை விட்டு வெளியே வர மறுக்கின்றது.
நன்றி
விகடன்
தொடர்ச்சி........

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 07, 2017 9:50 pm

சிறிது நேரத்தில், அறையில் யாரோ இருப்பதாய் தோன்றிய உள்ளுணர்வு உயிர் பெறுகிறது, ஏற்கெனவே, உங்களுக்கு சர்க்கஸ் கோமாளிகள் என்றால் பயம். அப்படி ஓர் உருவம், முதலில் அருவமாக, நிழலாகத் தோன்றி பின்பு உயிர் பெறுகிறது. உங்களை அது நெருங்குகிறது. நெருங்க நெருங்க உங்கள் மூச்சுக் குழாய் இறுகுகிறது. பயத்தின் உச்சமாக இப்போது வெளியே இடி, மின்னல், மழை என ஒன்றின் பின் ஒன்றாக. வித்தியாசமாக முதலில் இடிக் கேட்கிறது, பின்புதான் மின்னல். அந்த நொடி, உங்களுக்கு உண்மையை உரைக்கிறது. ஒளிக்குப் பின்னர்தானே ஒலி?
கட்டிலின் விளிம்பைத் தேடிப்பிடித்து, சட்டென எழுகிறீர்கள். இப்போது அந்த உருவம் இல்லை. வெளியே இடி, மின்னல், மழை இல்லை. முகத்தைக் கழுவிவிட்டு, ஒரு குவளை நீர் குடித்து திரும்பப் படுத்தவுடன் தூக்கம் நன்றாக வருகிறது. அதன்பிறகு, எல்லாமே சுபம்தான். ஏதோ கதைபோலத் தோன்றினாலும், அந்த ஒளி, ஒலி வேறுபாட்டைத் தவிர, மீதி அனைத்தும் நிச்சயம் உங்களின் வாழ்விலும் நடந்திருக்கும். அந்தக் கோமாளி உருவத்துக்குப் பதில் வேறு ஓர் உருவம், அவ்வளவே! இதைப் பற்றி பாட்டியிடம் கேட்டால், “அமுக்குவான் பேய்ப்பா அது… தெரியாதா? வா கோயிலுக்குப் போய் மந்திரிக்கணும்” என்பார். ஆனால், இந்த நிலை எதனால் ஏற்படுகிறது? இதற்கான அறிவியல் விளக்கம் என்ன?
ஆங்கிலத்தில் இதை ‘Sleep Paralysis’ என்று அழைக்கிறார்கள். இது ஏற்பட முக்கியக் காரணம் உடல் அடுத்தடுத்த உறக்க நிலைகளுக்குச் சீராக செல்ல மறுப்பதுதான். பல நூற்றாண்டுகளாக இதன் அறிகுறிகள் பேய் பிடித்த நிலை, சாத்தானின் தலையீடு, ஏவல் செய்ததால் துரத்தும் துஷ்ட சக்திகள் போன்றவற்றுக்கு தொடர்புப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இது உடல் சோர்வினால் ஏற்படக் கூடிய ஒரு சாதாரண பிரச்னைதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 07, 2017 9:51 pm

இந்த நிலை ஏற்பட முக்கியமான காரணமாக கூறப்படுவது, உணர்வுகளைக் கடத்தும் நம் நியூரான் செல்களில் ஏற்படும் குழப்பம்தான். தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் அதைச் சரிவர செய்யாமல் போவதால், பல்வேறு தூக்க நிலைகள் சீராக ஏற்படாமல், ஒன்றோடு ஒன்று பிணைந்து குழப்பம் ஏற்படுத்துகிறது. விழிப்பு நிலைக்கும், உறக்க நிலைக்கும் நடுவில் நீங்கள் தடுமாறுவதால், இங்கே உங்கள் உடல் தூக்கத்தில் இருக்கிறது, உங்கள் ஆழ்மனது முழு விழிப்பு நிலையில் இருக்கிறது.
தூக்கத்தின் முதல் நிலையான REM ஸ்லீப் எனப்படும் ‘கண்கள் மூடிய நிலையிலும் கருவிழிகள் இயங்கும் நிலை’ தாண்டி இங்கே அடுத்த நிலைக்கு உறக்கம் செல்லவில்லை. மூச்சு விடுதல் போன்ற இயல்பான உடல் இயக்கங்கள் தொடர்ந்து நிகழ்ந்தாலும், உங்கள் உடல் செயல்பட மறுக்கிறது. ஏனென்றால், அதற்கு அப்போது ஓய்வு தேவை. கிட்டத்தட்டத் தொழிலாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் போலதான் நம் உடலும் இங்கே வேலைநிறுத்தம் செய்கிறது. அதைக் கட்டுக்குள் கொண்டுவர, இங்கே நம் மூளை ஒரு விந்தையை நிகழ்த்துகிறது. உங்களின் உடல் எழ வேண்டும், நீங்கள் தூக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதே அதன் விருப்பம். எனவே, உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதுபோல ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. மிகுந்த சிரமத்துக்கு உண்டானாலும், உங்கள் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. உடனே, உங்கள் மூளை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கிறது. உங்கள் அறைக்குள் யாரோ இருப்பது போன்றும், அந்த உருவம் உங்களைத் தாக்க வருவது போன்றும் ஒரு காட்சியை கண் முன்னே ஓட்டிக் காட்டுகிறது. அதிலிருந்து தப்பிக்க, அல்லது திரும்பத் தாக்க உடல் எழுந்துதானே ஆக வேண்டும்? இது மிரட்டி மடியாத செல்லப் பிள்ளையை அடி கொடுத்து வேலை வாங்குவது போலதான்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 07, 2017 9:52 pm

பெரும்பாலோனோர்க்கு இந்த நிலையிலேயே உடல் இயக்கம் வந்துவிடும். எழுந்து விடுவார்கள். அப்படியும் உடல் ஒத்துழைக்க மறுத்தால், மீண்டும் பயமுறுத்த மூளை தயாராகும். சுற்றுப்புறத்தில் ஒரு பெரிய ஆபத்து சூழ்ந்திருப்பது, கால்கள் மற்றும் கைகளில் ஏதேனும் பொருள்கள் கொண்டு வலி உருவாகும் வகையில் தாக்குதல் நடக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துவது, விதவிதமான அச்சம் ஏற்படுத்தும் எண்ணங்களைத் தோற்றுவிப்பது என எல்லா முயற்சிகளையும் எடுக்கும். ஒரு வழியாக உங்களைக் காப்பாற்றியும் விடும். உடல் இயக்கத்தை சீராக்கி விடும். சரி, இந்த ‘Sleep Paralysis’ எதனால் ஏற்படுகிறது?
தூக்கமின்மை, அதீத உடல் உழைப்பு, சரியான நேரத்தில் உணவு உண்ணாதிருத்தல், உறங்காது இருத்தல், மன அழுத்தம் போன்றவை இதற்கு வழிவகுக்கும். மிகவும் அரிதாக மட்டுமே, இது மனநோய்கள் உடன் இணைத்துப் பேசப்படுகிறது. இந்த நிலை ஏற்பட்டால், எதுவும் பயப்படத்தேவை இல்லை. சீரான உடல் இயக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். எல்லாவற்றையும் சரியான நேரத்தில் செய்யுங்கள். பிரச்னை தொடர்ந்தால் மட்டும் மருத்துவரை அணுகுங்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக