Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis
Page 1 of 1
தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis
அன்று அலுவலகத்தில் மூன்று பேர் வரவில்லை. கூடுதல் வேலை. நீங்கள் இரவு வீட்டுக்கு வரவே 11 மணி ஆகிவிடுகிறது. கிடைத்ததைக் கொறித்ததில் பசி அடங்கியும், அடங்காத நிலை. படுத்தால்போதும் எனக் கலைந்தப் படுக்கையில் தஞ்சம். விளக்குகள் அணைக்கப்பட்டதும், நீங்கள் தழுவிக் கொண்ட போர்வையைப்போல தூக்கமும் உங்களைத் தழுவியதாய் நினைப்பு. இருளில் உங்கள் உணர்வுகளை நழுவவிடுகிறீர்கள்.
அரை மணி நேரம் கடந்திருக்காது. விழித்தோமா இல்லையா என்று புரியாத ஓர் இருட்டில் முழிப்பு வருகிறது. ஆனால், நகர முடியவில்லை. இப்போது அந்தத் தனியறையில் நீங்கள் தனியாக இல்லையென்ற ஓர் உள்ளுணர்வு. எழுந்து பார்க்கலாம் என்று முயன்றால், உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. சவ நிலை என்று சொல்வார்களே, அப்படி ஒரு நிலை, உங்கள் உடலுக்கு மட்டும். இது போதாதென்று முகத்தை யாரோ எதையோ வைத்து அமுக்கியது போன்ற எண்ணம்வேறு உதயமாகிறது. உயிர்க்காற்று உள்ளே செல்ல மறுக்கிறது. மூச்சுத் திணறல். கதற வேண்டும் என்று நீங்கள் முயற்சி செய்தும் குரல் உங்கள் குரல்வளையை விட்டு வெளியே வர மறுக்கின்றது.
நன்றி
விகடன்
தொடர்ச்சி........
அரை மணி நேரம் கடந்திருக்காது. விழித்தோமா இல்லையா என்று புரியாத ஓர் இருட்டில் முழிப்பு வருகிறது. ஆனால், நகர முடியவில்லை. இப்போது அந்தத் தனியறையில் நீங்கள் தனியாக இல்லையென்ற ஓர் உள்ளுணர்வு. எழுந்து பார்க்கலாம் என்று முயன்றால், உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. சவ நிலை என்று சொல்வார்களே, அப்படி ஒரு நிலை, உங்கள் உடலுக்கு மட்டும். இது போதாதென்று முகத்தை யாரோ எதையோ வைத்து அமுக்கியது போன்ற எண்ணம்வேறு உதயமாகிறது. உயிர்க்காற்று உள்ளே செல்ல மறுக்கிறது. மூச்சுத் திணறல். கதற வேண்டும் என்று நீங்கள் முயற்சி செய்தும் குரல் உங்கள் குரல்வளையை விட்டு வெளியே வர மறுக்கின்றது.
நன்றி
விகடன்
தொடர்ச்சி........
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis
சிறிது நேரத்தில், அறையில் யாரோ இருப்பதாய் தோன்றிய உள்ளுணர்வு உயிர் பெறுகிறது, ஏற்கெனவே, உங்களுக்கு சர்க்கஸ் கோமாளிகள் என்றால் பயம். அப்படி ஓர் உருவம், முதலில் அருவமாக, நிழலாகத் தோன்றி பின்பு உயிர் பெறுகிறது. உங்களை அது நெருங்குகிறது. நெருங்க நெருங்க உங்கள் மூச்சுக் குழாய் இறுகுகிறது. பயத்தின் உச்சமாக இப்போது வெளியே இடி, மின்னல், மழை என ஒன்றின் பின் ஒன்றாக. வித்தியாசமாக முதலில் இடிக் கேட்கிறது, பின்புதான் மின்னல். அந்த நொடி, உங்களுக்கு உண்மையை உரைக்கிறது. ஒளிக்குப் பின்னர்தானே ஒலி?
கட்டிலின் விளிம்பைத் தேடிப்பிடித்து, சட்டென எழுகிறீர்கள். இப்போது அந்த உருவம் இல்லை. வெளியே இடி, மின்னல், மழை இல்லை. முகத்தைக் கழுவிவிட்டு, ஒரு குவளை நீர் குடித்து திரும்பப் படுத்தவுடன் தூக்கம் நன்றாக வருகிறது. அதன்பிறகு, எல்லாமே சுபம்தான். ஏதோ கதைபோலத் தோன்றினாலும், அந்த ஒளி, ஒலி வேறுபாட்டைத் தவிர, மீதி அனைத்தும் நிச்சயம் உங்களின் வாழ்விலும் நடந்திருக்கும். அந்தக் கோமாளி உருவத்துக்குப் பதில் வேறு ஓர் உருவம், அவ்வளவே! இதைப் பற்றி பாட்டியிடம் கேட்டால், “அமுக்குவான் பேய்ப்பா அது… தெரியாதா? வா கோயிலுக்குப் போய் மந்திரிக்கணும்” என்பார். ஆனால், இந்த நிலை எதனால் ஏற்படுகிறது? இதற்கான அறிவியல் விளக்கம் என்ன?
ஆங்கிலத்தில் இதை ‘Sleep Paralysis’ என்று அழைக்கிறார்கள். இது ஏற்பட முக்கியக் காரணம் உடல் அடுத்தடுத்த உறக்க நிலைகளுக்குச் சீராக செல்ல மறுப்பதுதான். பல நூற்றாண்டுகளாக இதன் அறிகுறிகள் பேய் பிடித்த நிலை, சாத்தானின் தலையீடு, ஏவல் செய்ததால் துரத்தும் துஷ்ட சக்திகள் போன்றவற்றுக்கு தொடர்புப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இது உடல் சோர்வினால் ஏற்படக் கூடிய ஒரு சாதாரண பிரச்னைதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.
நன்றி
விகடன்
கட்டிலின் விளிம்பைத் தேடிப்பிடித்து, சட்டென எழுகிறீர்கள். இப்போது அந்த உருவம் இல்லை. வெளியே இடி, மின்னல், மழை இல்லை. முகத்தைக் கழுவிவிட்டு, ஒரு குவளை நீர் குடித்து திரும்பப் படுத்தவுடன் தூக்கம் நன்றாக வருகிறது. அதன்பிறகு, எல்லாமே சுபம்தான். ஏதோ கதைபோலத் தோன்றினாலும், அந்த ஒளி, ஒலி வேறுபாட்டைத் தவிர, மீதி அனைத்தும் நிச்சயம் உங்களின் வாழ்விலும் நடந்திருக்கும். அந்தக் கோமாளி உருவத்துக்குப் பதில் வேறு ஓர் உருவம், அவ்வளவே! இதைப் பற்றி பாட்டியிடம் கேட்டால், “அமுக்குவான் பேய்ப்பா அது… தெரியாதா? வா கோயிலுக்குப் போய் மந்திரிக்கணும்” என்பார். ஆனால், இந்த நிலை எதனால் ஏற்படுகிறது? இதற்கான அறிவியல் விளக்கம் என்ன?
ஆங்கிலத்தில் இதை ‘Sleep Paralysis’ என்று அழைக்கிறார்கள். இது ஏற்பட முக்கியக் காரணம் உடல் அடுத்தடுத்த உறக்க நிலைகளுக்குச் சீராக செல்ல மறுப்பதுதான். பல நூற்றாண்டுகளாக இதன் அறிகுறிகள் பேய் பிடித்த நிலை, சாத்தானின் தலையீடு, ஏவல் செய்ததால் துரத்தும் துஷ்ட சக்திகள் போன்றவற்றுக்கு தொடர்புப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இது உடல் சோர்வினால் ஏற்படக் கூடிய ஒரு சாதாரண பிரச்னைதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis
இந்த நிலை ஏற்பட முக்கியமான காரணமாக கூறப்படுவது, உணர்வுகளைக் கடத்தும் நம் நியூரான் செல்களில் ஏற்படும் குழப்பம்தான். தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் அதைச் சரிவர செய்யாமல் போவதால், பல்வேறு தூக்க நிலைகள் சீராக ஏற்படாமல், ஒன்றோடு ஒன்று பிணைந்து குழப்பம் ஏற்படுத்துகிறது. விழிப்பு நிலைக்கும், உறக்க நிலைக்கும் நடுவில் நீங்கள் தடுமாறுவதால், இங்கே உங்கள் உடல் தூக்கத்தில் இருக்கிறது, உங்கள் ஆழ்மனது முழு விழிப்பு நிலையில் இருக்கிறது.
தூக்கத்தின் முதல் நிலையான REM ஸ்லீப் எனப்படும் ‘கண்கள் மூடிய நிலையிலும் கருவிழிகள் இயங்கும் நிலை’ தாண்டி இங்கே அடுத்த நிலைக்கு உறக்கம் செல்லவில்லை. மூச்சு விடுதல் போன்ற இயல்பான உடல் இயக்கங்கள் தொடர்ந்து நிகழ்ந்தாலும், உங்கள் உடல் செயல்பட மறுக்கிறது. ஏனென்றால், அதற்கு அப்போது ஓய்வு தேவை. கிட்டத்தட்டத் தொழிலாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் போலதான் நம் உடலும் இங்கே வேலைநிறுத்தம் செய்கிறது. அதைக் கட்டுக்குள் கொண்டுவர, இங்கே நம் மூளை ஒரு விந்தையை நிகழ்த்துகிறது. உங்களின் உடல் எழ வேண்டும், நீங்கள் தூக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதே அதன் விருப்பம். எனவே, உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதுபோல ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. மிகுந்த சிரமத்துக்கு உண்டானாலும், உங்கள் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. உடனே, உங்கள் மூளை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கிறது. உங்கள் அறைக்குள் யாரோ இருப்பது போன்றும், அந்த உருவம் உங்களைத் தாக்க வருவது போன்றும் ஒரு காட்சியை கண் முன்னே ஓட்டிக் காட்டுகிறது. அதிலிருந்து தப்பிக்க, அல்லது திரும்பத் தாக்க உடல் எழுந்துதானே ஆக வேண்டும்? இது மிரட்டி மடியாத செல்லப் பிள்ளையை அடி கொடுத்து வேலை வாங்குவது போலதான்.
தூக்கத்தின் முதல் நிலையான REM ஸ்லீப் எனப்படும் ‘கண்கள் மூடிய நிலையிலும் கருவிழிகள் இயங்கும் நிலை’ தாண்டி இங்கே அடுத்த நிலைக்கு உறக்கம் செல்லவில்லை. மூச்சு விடுதல் போன்ற இயல்பான உடல் இயக்கங்கள் தொடர்ந்து நிகழ்ந்தாலும், உங்கள் உடல் செயல்பட மறுக்கிறது. ஏனென்றால், அதற்கு அப்போது ஓய்வு தேவை. கிட்டத்தட்டத் தொழிலாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் போலதான் நம் உடலும் இங்கே வேலைநிறுத்தம் செய்கிறது. அதைக் கட்டுக்குள் கொண்டுவர, இங்கே நம் மூளை ஒரு விந்தையை நிகழ்த்துகிறது. உங்களின் உடல் எழ வேண்டும், நீங்கள் தூக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதே அதன் விருப்பம். எனவே, உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதுபோல ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. மிகுந்த சிரமத்துக்கு உண்டானாலும், உங்கள் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. உடனே, உங்கள் மூளை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கிறது. உங்கள் அறைக்குள் யாரோ இருப்பது போன்றும், அந்த உருவம் உங்களைத் தாக்க வருவது போன்றும் ஒரு காட்சியை கண் முன்னே ஓட்டிக் காட்டுகிறது. அதிலிருந்து தப்பிக்க, அல்லது திரும்பத் தாக்க உடல் எழுந்துதானே ஆக வேண்டும்? இது மிரட்டி மடியாத செல்லப் பிள்ளையை அடி கொடுத்து வேலை வாங்குவது போலதான்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis
பெரும்பாலோனோர்க்கு இந்த நிலையிலேயே உடல் இயக்கம் வந்துவிடும். எழுந்து விடுவார்கள். அப்படியும் உடல் ஒத்துழைக்க மறுத்தால், மீண்டும் பயமுறுத்த மூளை தயாராகும். சுற்றுப்புறத்தில் ஒரு பெரிய ஆபத்து சூழ்ந்திருப்பது, கால்கள் மற்றும் கைகளில் ஏதேனும் பொருள்கள் கொண்டு வலி உருவாகும் வகையில் தாக்குதல் நடக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துவது, விதவிதமான அச்சம் ஏற்படுத்தும் எண்ணங்களைத் தோற்றுவிப்பது என எல்லா முயற்சிகளையும் எடுக்கும். ஒரு வழியாக உங்களைக் காப்பாற்றியும் விடும். உடல் இயக்கத்தை சீராக்கி விடும். சரி, இந்த ‘Sleep Paralysis’ எதனால் ஏற்படுகிறது?
தூக்கமின்மை, அதீத உடல் உழைப்பு, சரியான நேரத்தில் உணவு உண்ணாதிருத்தல், உறங்காது இருத்தல், மன அழுத்தம் போன்றவை இதற்கு வழிவகுக்கும். மிகவும் அரிதாக மட்டுமே, இது மனநோய்கள் உடன் இணைத்துப் பேசப்படுகிறது. இந்த நிலை ஏற்பட்டால், எதுவும் பயப்படத்தேவை இல்லை. சீரான உடல் இயக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். எல்லாவற்றையும் சரியான நேரத்தில் செய்யுங்கள். பிரச்னை தொடர்ந்தால் மட்டும் மருத்துவரை அணுகுங்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்
தூக்கமின்மை, அதீத உடல் உழைப்பு, சரியான நேரத்தில் உணவு உண்ணாதிருத்தல், உறங்காது இருத்தல், மன அழுத்தம் போன்றவை இதற்கு வழிவகுக்கும். மிகவும் அரிதாக மட்டுமே, இது மனநோய்கள் உடன் இணைத்துப் பேசப்படுகிறது. இந்த நிலை ஏற்பட்டால், எதுவும் பயப்படத்தேவை இல்லை. சீரான உடல் இயக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். எல்லாவற்றையும் சரியான நேரத்தில் செய்யுங்கள். பிரச்னை தொடர்ந்தால் மட்டும் மருத்துவரை அணுகுங்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» கரோனா வைரஸுக்கு அந்தப் பெயர் வந்ததன் காரணம் இதுதான்
» உங்களை நீங்கள் பேணிக்காக்கா விட்டால் உங்களை வைத்தியர்
» இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை!
» இதுதான் வாழ்க்கை.. இதுதான் பயணம்..!
» தூங்கும்போது மூளை வேலை செய்யுமா?
» உங்களை நீங்கள் பேணிக்காக்கா விட்டால் உங்களை வைத்தியர்
» இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை!
» இதுதான் வாழ்க்கை.. இதுதான் பயணம்..!
» தூங்கும்போது மூளை வேலை செய்யுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|