புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லாக் டௌன் - சிறுகதை Poll_c10லாக் டௌன் - சிறுகதை Poll_m10லாக் டௌன் - சிறுகதை Poll_c10 
21 Posts - 70%
heezulia
லாக் டௌன் - சிறுகதை Poll_c10லாக் டௌன் - சிறுகதை Poll_m10லாக் டௌன் - சிறுகதை Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
லாக் டௌன் - சிறுகதை Poll_c10லாக் டௌன் - சிறுகதை Poll_m10லாக் டௌன் - சிறுகதை Poll_c10 
1 Post - 3%
viyasan
லாக் டௌன் - சிறுகதை Poll_c10லாக் டௌன் - சிறுகதை Poll_m10லாக் டௌன் - சிறுகதை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
லாக் டௌன் - சிறுகதை Poll_c10லாக் டௌன் - சிறுகதை Poll_m10லாக் டௌன் - சிறுகதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லாக் டௌன் - சிறுகதை Poll_c10லாக் டௌன் - சிறுகதை Poll_m10லாக் டௌன் - சிறுகதை Poll_c10 
213 Posts - 42%
heezulia
லாக் டௌன் - சிறுகதை Poll_c10லாக் டௌன் - சிறுகதை Poll_m10லாக் டௌன் - சிறுகதை Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
லாக் டௌன் - சிறுகதை Poll_c10லாக் டௌன் - சிறுகதை Poll_m10லாக் டௌன் - சிறுகதை Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
லாக் டௌன் - சிறுகதை Poll_c10லாக் டௌன் - சிறுகதை Poll_m10லாக் டௌன் - சிறுகதை Poll_c10 
21 Posts - 4%
prajai
லாக் டௌன் - சிறுகதை Poll_c10லாக் டௌன் - சிறுகதை Poll_m10லாக் டௌன் - சிறுகதை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
லாக் டௌன் - சிறுகதை Poll_c10லாக் டௌன் - சிறுகதை Poll_m10லாக் டௌன் - சிறுகதை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
லாக் டௌன் - சிறுகதை Poll_c10லாக் டௌன் - சிறுகதை Poll_m10லாக் டௌன் - சிறுகதை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
லாக் டௌன் - சிறுகதை Poll_c10லாக் டௌன் - சிறுகதை Poll_m10லாக் டௌன் - சிறுகதை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
லாக் டௌன் - சிறுகதை Poll_c10லாக் டௌன் - சிறுகதை Poll_m10லாக் டௌன் - சிறுகதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
லாக் டௌன் - சிறுகதை Poll_c10லாக் டௌன் - சிறுகதை Poll_m10லாக் டௌன் - சிறுகதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லாக் டௌன் - சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 10, 2020 11:21 am

தீக்கங்குகளை தண்ணீர் ஊற்றி அணைத்தாள் கெங்கம்மா. தினமும் மாலை நேரத்து வழக்கம்தான். ஆனால், சமீபமாக பெரும் சுணக்கமாக இருந்தது.
திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் இருந்து வந்தவள். தன் தாய்வீடு தெலுங்கானாவாகிப் போன பின்னும் போய் பார்க்கவில்லை.

இந்த அடுக்குமாடி குடியிருப்பே கதி என்று கிடக்கிறாள்.கணவன் இந்த குடியிருப்பின் வாட்ச் மேன். சொற்ப சம்பளம். ஆனால், அடுக்குமாடிக் குடியிருப்பின் பின்னால் இருந்த மோட்டார் ரூமில் தங்கிக் கொள்ள அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. எனவே இங்கேதான் வாசம்.

பிள்ளைகள் வளர வளர வருமானம் போதாமையால் தன் குடும்பத் தொழிலான இஸ்திரி போடும் தொழிலைச் செய்ய ஆரம்பித்தாள் கெங்கம்மா.
சிறிய குறுக்குத்தெருவான அந்தத் தெருவில் அவள் வசிக்கும் குடியிருப்பு, பக்கத்து அக்கத்து குடியிருப்பு என அவர்களுக்கு இஸ்திரி போடவே நேரம் சரியாக இருக்கும் அவளுக்கு.

இஸ்திரிக்கு துணி கொடுப்பது, வாங்குவது, நல்ல நாட்களில் ஏதேனும் காசு, பொருள் தருவது, எதிரில் பார்த்தால் சிறு புன்னகை, சிறு நலம் விசாரித்தல் என அவள் குடும்பத்தை அளவுடனேயே வைத்திருந்தனர்

அந்தக் குடியிருப்புவாசிகள்.அடுக்குமாடியின் முன்பக்க ப்ளாட்ஃபார்மில் இஸ்திரி போடும் அவளைத் தாண்டி யாரும் வரமுடியாது. எனவே, குறைந்த செலவில் நிறைந்த பாதுகாப்பு என்றளவில் அவர்கள் அங்கே தேவையாக இருந்தார்கள்.

பன்னிரெண்டாவது படிக்கும் நாகேஸ்வரம்மா, ஆறாவது படிக்கும் ஷ்ராவனி என இரு மகள்களும் கூட பள்ளி நேரம் போக அம்மாவுக்குத் துணையாக இருக்கிறார்கள். எதிரில் இருந்த ப்ளாட் இடித்து புதிதாகக் கட்ட ஆரம்பிக்கும் போது, தினமும் ‘துணிகளில் தூசி படிகிறது’ என கெங்கம்மா திட்டிக் கொண்டே இருப்பாள்.

ஒருநாள் முதன் முதலில் திக்கித் திணறும் தமிழில் ஏதோ கேட்ட அந்த பீகாரியை அடித்து விரட்டாத குறையாகத் துரத்தி விட்டாள். அப்புறம்தான் அவன் தண்ணீர் கேட்டது புரிந்தது. அதன்பிறகு பாவப்பட்டு எப்போதாவது அவர்களுக்குத் தேவையான சிறுசிறு உதவிகள் செய்வாள். அவர்களும் இவளைப் பார்த்தால் வாஞ்சையோடு புன்னகைப்பார்கள்.

இரவில் கடைக்கு எங்காவது போய் வரும் போது பார்ப்பாள். கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அந்தக் கட்டடத்தில் அமர்ந்து சிறிய வெளிச்சத்தில் அவர்கள் சமைத்துக்கொண்டோ, சாப்பிட்டுக்கொண்டோ இருப்பார்கள்.

இதோ, நான்கு மாதங்கள் ஆகின்றன, அவர்கள் சமைப்பதைக் கைவிட்டு. இவளும் இஸ்திரி தொழிலை ஏரக்கட்டி விட்டாள். கொரோனாவும் அதனால் போடப்பட்ட லாக் டௌனும் எல்லாருடைய வாழ்வையும் தலைகீழாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.

பள்ளி, கல்லூரி, அலுவலகம் என இல்லாததால் யாரும் அயர்னிங்குக்கு துணி கொடுப்பதில்லை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.
இவளைப் பார்த்தாலே, எங்கே கொரோனா வந்துவிடுமோ என்ற பயத்தில் அனைத்து அடுக்குமாடிக் குடியிருப்பின் கதவுகளும் சாத்தப்படு கின்றன என்பதுதான் முக்கியக் காரணம்.

இதோ அவளும் தெருவுக்கு வந்துவிட்டாள். ஆம். வேறென்ன செய்ய. வேலை எதுவும் இல்லை. பிள்ளைகள் வீட்டில் இருப்பதால் கூடமாட உதவி என வீட்டு வேலைகளும் சீக்கிரம் முடிந்துவிடும். அதன்பிறகு வேறு வழி இல்லாமல் அனைவரும் மாலை ஆறேழு மணிக்கு குடியிருப்புக்கு வெளியில் வந்து உட்கார்ந்தால் உள்ளே போக மணி ஒன்பதாகி விடும். குடியிருப்புவாசிகள் யாரும் அந்நேரத்திற்கு வெளியில் வராததால் இவர்களை எதுவும் கேட்பதில்லை.

இந்த நான்கு மாதங்களாகத்தான் அந்த வடமாநிலத்தொழிலாளர்களுடன் பழக ஆரம்பித்தார்கள் கெங்கம்மா குடும்பத்தினர். இப்போதெல்லாம் அந்த வடமாநிலத்தவர்கள் தினமும் அடுப்பு பற்ற வைப்பதில்லை. எப்போதேனும் யாராவது இலவச அரிசி, பருப்பு கொடுக்கும்போது மட்டும் அடுப்பெரியும்.
வேலை இல்லாத காரணத்தால், பெரும்பாலும் எங்கேயோ, வெளியில் யாராவது தரும் இலவச உணவுப் பொட்டலங்களோடு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அல்லது அம்மா உணவகத்தில் இருந்து உணவு வாங்கிக்கொண்டோ, சென்று சாப்பிட்டோ வர ஆரம்பித்தார்கள்.

அதிலும் கொஞ்ச பங்கை அவர்களோடு ஒட்டி இருந்த நாய்க்குட்டி ஒன்றுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். மூன்று வேளை, இரண்டு வேளை என அவர்களின் சாப்பாட்டு வேளை குறைந்து வந்தது.இவளுக்கும் சரியான வருமானமில்லைதான். இதற்குமுன் தன் கடும் உழைப்பால் மகள்களை ராஜாத்தி போல் வைத்திருந்தவள் இப்போது கணவனின் சொற்ப சம்பளத்திலும் ரேசன் பொருட்களிலும் காலத்தை ஓட்டி வருகிறாள்.

ஆனாலும் அவள் செய்யும் வெஞ்சனத்தில் ஏதேனும் கொஞ்சத்தை தன் மகள்களிடம் அந்த வடமாநிலத்தவர்க்காக கொடுத்து அனுப்புவாள். முதலில் வாங்க மறுத்த அவர்கள் கெங்கம்மாவின் அன்பினாலும், வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்தும் இச்சிறு பெண்களின் வெள்ளந்தி தனத்திற்காகவும் பெற்றுக்கொண்டார்கள்.

அப்போதுதான் அவர்கள் குழந்தைத்தனமான தமிழில் தமது வாழ்வைப் பற்றி இவர்களோடு பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.
கட்டின புது மனைவியை விட்டு வந்த ஒருவர், நோயாளி மனைவி, சிறு பிள்ளைகளை விட்டு வந்த ஒருவர், வயதான தாய் தகப்பனை விட்டு வந்த ஒருவர் என ஒவ்வொருவருக்கும் ஒரு துயரக் கதை இருந்தது. காசுக்காக உறவுகளை எங்கேயோ விட்டுவிட்டு வந்து வெறும் செல்
போனில் குடும்பம் நடத்தும் இவர்கள் வாழ்வை என்னவென்று சொல்வது?

இவர்களின் ஒரே ஆறுதல், எவ்வளவோ கவலைகள் இருந்தாலும் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு சுறுசுறுப்பாகவும், கலகலப்பாகவும் இருந்த
அவ்விளைஞனை எல்லாருக்கும் பிடித்திருந்தது. எல்லாருக்கும் செல்லப்பிள்ளை அவன். செல்லில் அவர்கள் மொழிப் பாடலை வைத்துக்கொண்டு கூடவே பாடிக்கொண்டு எல்லாரையும் குஷிப்படுத்துவான். எல்லா வேலைகளையும் எடுத்துப்போட்டு செய்வான்.

வெள்ளையாய் பிறந்திருப்பான் போல... மாநிறத்தில் இருப்பான். ஒரு மாதிரி உடைந்த முகம் அவனுக்கு. அதாவது கடினமான சதையோடு கூடிய சுமாரான முகம். ஆனால், அவன் சிரிக்கும் போது எல்லாரையும் கவர்ந்துவிடக்கூடிய வசீகரிப்பு அந்தப் புன்னகையில் இருந்தது. அந்த இளைஞனோடு கள்ளங்கபடமின்றி பேசி சிரித்துக்கொண்டிருக்கும் தன் மகளைக் கண்டிக்கும் துணிவு கெங்கம்மாவிற்கு வரவில்லை. ‘அதுகளும் நம்மைப்போல் இல்லாதப்பட்டதுகள்... என்ன செய்ய... ஏதோ பேசி மகிழ்ந்து கிடக்கட்டும்’ என விட்டுவிடுவாள்.

சமீப நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக தன் மகள் அவன் வசம் தன் மனதை இழக்கிறாள் என்பது தெரிய வரும் போது எவ்வாறு தடுப்பது என கெங்கம்மாவிற்கு புரிபடவில்லை. அவனும்தான் இவளைக் கண்டால் முகம் மலர்ந்து போகிறான். நான்கு மாதங்களுக்குள்ளா… என ஆச்சரியமெல்லாம்
அவளுக்குத் தோன்றவில்லை. காதல் கணத்திலும் ஏற்படக்கூடிய ஒன்றுதானே என்பதை அறிந்த கெங்கம்மா பெரிய சித்தாந்தவாதியுமல்ல, முட்டாளுமில்லை, சாதாரண மனுஷி. அன்பின் உணர்வுகளைப் புரிந்த மிகச் சாதாரணமான ஒரு ஜீவன்.

கெங்கம்மா குழப்பத்தில் இருக்கும் வேளையில்தான், நாளாக நாளாக அந்த வடமாநிலத்தவர்கள் முகங்களில் இருந்த புன்னகை குறைய ஆரம்பித்ததை கவனிக்க ஆரம்பித்தாள். ஆட்களும் சரியான உணவில்லாமல் இளைக்க ஆரம்பித்திருந்தனர். முன்பெல்லாம் எப்போதாவது செல் பேசுபவர்கள் இப்போது எந்நேரமும் எதோ சீரியஸாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஊருக்குப் போவதைக் குறித்து அவர்கள் பேசுகிறார்கள் என்பது மட்டும் புரிந்தது. தன் வாழ்வில் மட்டுமல்ல, அவர்களின் வாழ்விலும் மாற்றங்கள் ஏற்படுவதைப் புரிந்துகொள்ள முடிந்த அவளால் ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை.அன்று ரேசன் அரிசியில் மாவரைத்து உப்புக்கொழுக்கட்டை செய்தவள் தன் மகளை அனுப்பாமல் தானே அவர்களுக்குக் கொடுக்க எடுத்துச் சென்றாள்.

நாகேஸ்வரம்மாவின் முகம் சற்று வாடியதைப் பார்த்ததும், தான் செய்வது சரியா தவறா என்பது கெங்கம்மாவிற்கு யோசனையாக இருந்தது. ஆனால், பின்னாளில் ஏற்படும் மாற்றங்களை தன் மகள் தாங்க நேருமா என்பதால், சட்டென அவ்விடத்தை விட்டு விரைந்து அவர்களிடம் சென்றாள்.

அவள் நினைத்தது நடந்தே விட்டது. அவர்கள் ஊர் செல்ல மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். என்ன பெரிதாக இருக்கிறது கட்டுவதற்கு என்றாலும் ஏதோ இருப்பவற்றைக் கட்டி எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்கள்.

“எப்போது?” என்றவளுக்கு “காலையில...” என்ற அவர்களின் பதில் சற்றே திகிலாக இருந்தது. இந்த பதிலை அவர்கள் சொல்லும்போது அவ்விளைஞன் இவளை சோகத்தோடு பார்த்ததை இவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

முதன் முதலாக அவன் முகத்தில் தெரிந்த சோகமும் கண்ணில் தேங்கி நின்ற கண்ணீரும் இவளை என்னவோ செய்தது. அவர்களோடு நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். கடைசியாக அவன் தம்வசம் இருந்த நாயை கெங்கம்மாவிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லி ஒப்படைத்தான்.

வீட்டுக்கு விரைந்து சென்றவள் அழுது அழுது தூங்கியிருந்த மகளின் முகம் பார்த்தபடி சுவர் ஓரம் அமர்ந்துகொண்டாள். காலையில் இவளை எழுப்பி எவ்வாறு இந்த விஷயத்தைத் தெரிவிப்பது... இந்தத் துயரை தன் மகள் எப்படி தாங்கிக் கொள்ளப்போகிறாள்... என்று நினைத்தபடி மனதை அழுத்தும் பாரத்தோடு எழுந்து அந்த நாய்க்குட்டிக்கு பால் எடுத்துவர உள்ளே சென்றாள்.

நன்றி-குங்குமம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Aug 10, 2020 4:36 pm

லாக் டௌன் - சிறுகதை 3838410834 லாக் டௌன் - சிறுகதை 3838410834 லாக் டௌன் - சிறுகதை 3838410834



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2020 8:34 pm

mm...என்ன சொல்வது ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக