ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழிவு நோய்

Go down

நீரிழிவு நோய் Empty நீரிழிவு நோய்

Post by தாமு Tue Dec 08, 2009 5:47 pm

நீரிழிவு நோய் 12112008%2001நமது செவிமடல்களுக்குள் சதிராடிய பல அர்த்தமுள்ள பழமொழிகள் மனிதனது வாழ்க்கையுடன் அவன் அறிந்தோ அறியாமலோ பின்னிப்பிணைந்துள்ளன. அத்தகைய பழமொழிகளில் ஒன்றுதான் ""நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' என்பதாகும். உண்மைதான். எவ்வளவோ பணமிருந்தும் டாம்பீகமான சொகுசான வாழ்க்கையிருந்தும் எம்மில் பலர் நோய்களை குணமாக்க முடியாது அதனுடன் போராடிப் போராடி மரணப்படுக்கையில் அவஸ்தைப்படுவதை நாம் கண்டிருப்போம்; கேள்விப்பட்டிருப்போம்.
சிலவேளைகளில் இது எமது குடும்பங்களது அனுபவபூர்வமான உண்மையாகவும் இருக்கலாம். நோயைப் பொறுத்த வரையில் குணப்படுத்தக் கூடிய நோய்களும் உள்ளன. சில தீர்க்க முடியாத ""கொடிய'' நோய்களும் மனிதனை வாட்டி வதைப்பதுமுண்டு. அந்த வகையில் இன்று உலகமெங்கும் மனித குலத்துக்கு பெரும் சவாலாக இருப்பது நீரிழிவு நோயாகும். இந்நோய் ஆரம்ப கட்டத்திலேயே இதனை இனங்கண்டு குணப்படுத்துவதற்கான முயற்சிகளில் குறித்த நோயாளர்கள் ஈடுபட்டால் இந்நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு குணமாகலாம். அதற்கு மாறாக எமக்கே தெரியாமல் மெல்ல மெல்ல எம்மில் உருவெடுத்து பிற்பாடு விஸ்வரூபமானதன் பின்னர் அந்நோயாளியின் வாழ்க்கை அந்தோ பரிதாபம்தான்.
எனவே தான் நீரிழிவு நோயையும் ""அமைதியான புற்றுநோய்'' என அழைக்கின்றனர். எதிர்வரும் 14ஆம் திகதி ""உலக நீரிழிவு நோய்'' தினமாகும். உலகமெங்கும் இத்தினம் அனுஷ்டிக்கப்படுவது வெறுமனே ஆண்டுதோறும் வந்து செல்லும் ஏனைய முக்கிய நிகழ்வுகளின் தினங்களைப் போலன்றி நீரிழிவின் கொடுமையின் ரணத்தை நீரிழிவு நோய் அற்றவர்கள் உணர்ந்து கொள்ளுமுகமாகவும், நீரிழிவு நோயாளர்களின் வேதனையை புரிந்துகொள்ளு முகமாகவும் ஐ.நா.வினால் இத்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. ""உலக நீரிழிவு நோய் தினம்'' குறித்த விசேட மருத்துவ ஊடக மக்கள் தொடர்பாடல் கலந்துரையாடல் ஒன்று கடந்த 10ஆம் திகதி கொழும்பு இராஜகிரியவிலுள்ள தேசிய நீரிழிவு நிறுவனத்தில் இடம்பெற்றது. பெருமளவு ஊடகத்துறையினர், வைத்தியர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வின் கருப்பொருளானது ""சிறுவர்களிலும் பெரியோர்களிலும் வியாபிக்கும் நீரிழிவு'' என்பதாகும்.
இவ்வைத்திய கலந்துரையாடலில் கலந்து கொண்ட தென்கிழக்காசிய பிராந்தியத்துக் கான சர்வதேச நீரிழிவு சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் மஹேன் விஜேசூரிய உரையாற்றுகையில், ""முன்பெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவது வழமை. ஆனால், தற்போதெல்லாம் 30, 20,10 வயதுக்குட்பட்ட வயதினர் கூட இந்நோயினால் பீடிக்கப்படுகின்றார்கள். பாடசாலை மாணவர்களிடையே இது ஏற்படுவது பாரிய சுகாதார பிரச்சினையும் கூட. பெரும்பாலான இளைய தலைரிறையினருக்கும் இந்நோய் தற்போது பெருவாரியாக ஏற்படுவது வைத்திய அறிக்கைகள் மூலம் புலப்படுகின்றது. கிராமப் புறங்களைவிட நகர்ப்புறங்களிலேயே நீரிழிவின் தாக்கம் மக்களிடம் அதிகம் காணப்படும். காரணம் இரு புறத்தேயும் காணப்படும் உணவு உட்கொள்ளும் முறையும் வாழ்க்கை முறையுமேயாகும்.
கிராமங்களிலென்றால் குரக்கன், கௌப்பி, கடலை, பயறு போன்ற தானிய வகைகளும் பாகற்காய், முள்ளங்கி ஆகிய காய்கறிகளும் குறிஞ்சா, முருங்கைக் கீரை , வல்லாரை ஆகிய இலை வகைகளும் அதிகமான நீரிழிவு நோயாளர்கள் தமது அன்றாட உணவுகளிலே சேர்த்துக் கொள்வதால் அந்நோயின் தாக்கம் ஏற்படுவது கிராமிய மக்களுக்கு மிகவும் அரிதாகும். அத்துடன் கிறீம் கிறேக்கர் பிஸ்கட்டின் குரக்கன் ரக பிஸ்கட் பால்மாக்களில் பொன்லக், கசிலன்,சஸ்டெஜின் (வனிலா) சீனியில் வோக்கோல் ஆகியனவும் நீரிழிவு நோயாளர்கள் நுகர வேண்டிய நுகர்வுப் பொருட்களாகும். கொழும்பு போன்ற நகரங்களில் மேற்குறிப்பிட்ட தானிய வகைகள், இலை வகைகள், மரக்கறி வகைகளை அ?தாக மக்கள்பாவிப்பதால் நீரிழிவின் தாக்கத்திலிருந்து மீளுவதும் ஆரோக்கியம் பெறுவதும் கடினமாகவே இருக்கும்.
எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டுமன்றி, இந்நோய் ஏற்படாதவர்கள் கூட ""வரும் முன் காப்போம்' என்ற மற்றுமோர் தாரக மந்திரத்திற்கிணங்க தமது உணவு முறைகளை மாற்றியமைத்து ஆரோக்கியத்திற்கு தாமே வழியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கு இன்னுமொரு விடயத்தையும் கூறிக்கொள்ள வேண்டிய கடப்பாடு உண்டு. அதாவது குழந்தையை தனது கருவில் சுமந்திடும் தாயானவளுக்கு போதிய ஊட்டச்சத்தும் ஆரோக்கிய உணவு வகைகளும் கிடைக்காத பட்சத்தில் அவளது கருவறையில் சுமக்கப்படும் சிசுவானது ஆரோக்கியமற்ற நிலையில் பிறக்கவோ அல்லது வயிற்றிலேயே மரணிக்கவோ ஏற்படும் என்பது கசப்பான உண்மையாகும். எனவே தமது வயிற்றில் சிசுவை சுமக்கும் தாய்மார் முதலில் மேற்கூறப்பட்ட ஆரோக்கிய உணவு வகைகளை உண்ணப்பழகிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தாயும் சேயும் ஆரோக்கிய நிலையில் சரிகத்தின் முன் தோன்றுவார்கள்.
அவர்களது வம்சமும் புஷ்டியுள்ள சரிகமாக வளருவார்கள் என்பது உண்மையாகும். மேலும் தாயானாவள் சிசுவை சுமக்கும்போது அத்தாய்க்கு ஒவ்வாத உணவு வகைகளை அவள் உட்கொள்ளும்போது அது கருவிலுள்ள குழந்தையின் உடல், உள வளர்ச் சிக்கும் சிலவேளைகளில் அக்குழந்தையின் உயிருக்குகூட பாதிப்பாக அமையாலாம் என்பது அனுபவபூர்வ மருத்துவ பதிவுகளாகும். இன்றைய நவயுக காலத்தில் போக்குவரத்து உச்ச அளவில வளர்ச்சியடைந்திருக்கும் நிலையில் சொற்ப தூரத்திற்குக்கூட எம்மவர்கள் முச்சக்கர வண்டியையோ அல்லது தமது சொந்த வாகனங்களையோ பாவிக்கும் நிலை தற்போதுள்ளது. இதனையும் எம்மவர்கள் தவிர்த்து முடிந்தவரை சொற்ப தூரமேனும் நடந்து செல்லுங்கள்.
நடைப்பயிற்சியானது நீரிழிவை மெல்ல மெல்ல விரட்டியடித்து விடும். மானசீகமான பிரச்சினைகளை எதிர்கொள்வோருக்கும் நீரிழிவு உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கும். சிறுவர்களையும் நீரிழிவு தாக்குவதால் பெற்றோர் அவர்களை சிறந்த கண்காணிப்புடன் பராமரிக்க வேண்டும். முதலில் நாம் கிராமத்தை திருத்த வேண்டும். அதன் மூலமாக எமது நாட்டை திருத்திக் கொள்ளலாம். நாளைய தலைவர்களான இன்றைய சிறுவர்களுக்கு பணியாற்றி ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளமிட்டுக் கொடுப்போம். நீரிழிவு நோயானது இருதய நோய், பாரிவாதம், சிறுநீரக செயலிழப்பு, கண்பார்வையற்று போதல், காயங்கள் குணமாகாமை போன்றவற்றை ஏற்படுத்தும் உலகளவில் 246 மில்லியன் நபர்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றார்கள்.
ஆண்டுதோறும் 3.8 மில்லியன் நபர்கள் நீரிழிவினால் மரணிக்கின்றனர். அதுபோன்று ஒவ்வொர் வருடமும் 7 மில்லியன் புதிய நீரிழிவு நோயாளர்கள் அறிமுகமாகிறார்கள். இலங்கையைப் பொறுத்தவரையில் 2006ஆம் ஆண்டில் 2.1 மில்லியன் நபர்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டனர். அதில் பெரும்பாலான இளைய தலைமுறை நோயாளர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர் என்பது கவலைக்கிடமான பதிவுகளாகும். ஆகவே, நீரிழிவு நோய் உள்ளவர்களும் ஏனையோரும் முடிந்த வரை இயற்கையான உணவு வகைகளையும், முன்னர் குறிப்பிட்ட தானிய வகைகளையும் உட்கொள்ளுங்கள். முடிந்தவரை ஓய்வு எடுங்கள். மனதுக்கும் இளைப்பாறுதலை அளியுங்கள். 40 வயதை தாண்டிய அனைவரும் கட்டாயமாக ஆண்டுக்கு ஒரு முறையேனும் நீரிழிவு நோய் உள்ளதாவென வைத்தியரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
ஆரோக்கியமே உங்கள் வாழ்வின் கண்ணாடி என்றார். கடந்த 10ஆம் திகதி முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீரிழிவு நிவாரண வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இக் காலப்பகுதியில் நோய் குறித்த பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் தேசிய நீரிழிவு நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
- ரமேஸ்காந்த் ஜெயசீலன்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நீரிழிவு நோய் Empty Re: நீரிழிவு நோய்

Post by தாமு Tue Dec 08, 2009 5:51 pm

‌‌நீ‌‌ரி‌ழிவு‌க்கு ஏ‌ற்ற கடுகு வை‌த்‌திய‌ம்



நீரிழிவு நோய் Kaduku%20vavthiyamநீ‌ரி‌ழிவு நோயா‌ளிகளு‌க்கு ப‌ல்வேறு கை‌ வை‌த்‌திய‌ம் உ‌ள்ளது. இவ‌ற்றை ச‌ரியான அள‌வி‌ல் செ‌ய்து வ‌ந்தா‌ல் ‌நீ‌‌ரி‌ழிவு ‌நி‌ச்சயமாக க‌‌ட்டு‌ப்படு‌த்த‌ப்படு‌ம்.

முத‌லி‌ல் கடுகு, ஆவாரை ‌விதை, மரம‌ஞ்ச‌ள், கருவேல‌ம் ‌பி‌சி‌ன் ஆ‌கியவ‌ற்றை எடு‌த்து சு‌த்த‌ப்படு‌த்‌தி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.‌வீ‌‌ட்டி‌ல் அ‌ம்‌‌மி இரு‌ந்தா‌ல் அ‌தி‌ல் இவ‌ற்றை வை‌த்து இடி‌த்து பொடியா‌க்க வே‌ண்டு‌ம்.இதனை ‌நீ‌ர்‌வி‌ட்டு ‌‌பிசை‌ந்து சூரணமா‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.‌நீ‌‌ரி‌ழிவு நோ‌ய் உ‌ள்ளவ‌ர்க‌ள் இ‌ந்த ‌சூரண‌த்தை 1-2 ‌கிரா‌ம் உ‌ள்ளு‌க்கு சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் ‌‌நீ‌ரி‌ழிவு நோ‌ய் க‌ட்டு‌ப்படு‌ம்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum