புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_c10பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_m10பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_c10பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_m10பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_c10பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_m10பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_c10பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_m10பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_c10பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_m10பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_c10பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_m10பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_c10பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_m10பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_c10பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_m10பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை ! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரஞ்சுக்காரர்கள் படித்த தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை !


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 26, 2015 9:51 pm

பிரஞ்சுக்காரர்கள்  படித்த  தமிழ்ப் பாடங்கள் - அறியப்படாதவை !

1945இல் பாரிசிலிருந்து  ‘An Introduction to Tamil ‘ என்றொரு நூல் வெளிவந்தது !

இதன் ஆசிரியர் பியர் மெயில் (Pierre Meile) ஆவார்.

அக் காலங்களில் பாரிசு முதலிய ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்குக் கிறித்தவ மதத்தைப் பரப்பப் பலர் வந்தனர்; இவர்கள் Misssionaries என்று குறிக்கப்பட்டனர். அப்படி வருவதற்கு முன்னர் தமிழ் மொழியைக் கற்க அங்கேயே வகுப்புகள் நடத்தப்பட்டன. அப்படிப் பாரிசில்  நடத்திய வகுப்புக்கான ஒரு கையேடுதான் மேலே சொன்ன நூல் !

இந்த நூலில் தமிழ்ப் பாடங்கள்  ஆங்கிலம் , பிரஞ்சு  மொழிகளிலும் பாடங்கள் மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ளன  !

இந் நூலில் சில சுவையான பகுதிகள் உள்ளன!
1)பாடங்களாகச் சில கதைகளும் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று –

  “ தென்ன மரத்தின் மேல் புல் இருக்குமா?

ஒருவன் தோட்டத்தில் பல தென்னமரங்கள் இருந்தன. அம்மரங்களில் பல தேங்காய்கள் இருந்தன. ஒரு திருடன் அக்காய்களைத் திருடும்பொருட்டு அம்மரங்களில் ஒன்றில் ஏறினான். தோட்டக்காரன் இதைப் பார்த்து வீட்டிலிருந்து ஓடி வருகையில் திருடன் பயந்து மரத்திலிருந்து கீழே இறங்கினான். தோட்டக்காரன் அவனைப் பார்த்து “ அடா! ஏன் மரத்தின்மேல் ஏறினாய்?” என்று கேட்டான். திருடன் “ஐயா! என் கன்றுக்குட்டிக்கு புல் அறுக்க ஏறினேன்” என்றான். தோட்டக்காரன் இதற்கு “ஆகா! தென்னமரத்திலே புல் இருக்குமா?” என்றான். திருடன் அதற்கு “மெய் தான். அங்கே புல் இல்லை. அதை அறிந்தவுடனே இறங்குகிறேன்” என்று சிரித்து ஓடிப்போய்விட்டான்.”

இன்னொரு கதை ! மகா கவி பாரதி எழுதிய கதையை அப்படியே சேர்த்துள்ளனர்!-

“சிறு கதை

ஒரு வீட்டில் ஒரு புருஷனும் ஸ்திரீயும் குடியிருந்தார்கள். ஒரு நாள் இரவில் புருஷன் வீட்டுக்கு வரும்போது ஸ்திரீ சமயல் செய்து கொண்டிருந்தாள். சோறு பாதி கொதித்துக் கொண்டிருந்தது. அந்த ஸ்திரீ அன்றிரவு கொஞ்சம் உடம்பு அஸௌகரியமாக யிருந்தபடியால் , தனக்கு ஆஹாரம் வேண்டாமென்று நிச்சயித்துப் புருஷனுக்கு மாத்திர மென்று சமைத்தாள்.
புருஷன் வந்தவுடன் “நான் இன்றிரவு விரதமிருக்கப் போகிறேன். எனக்கு ஆஹாரம் வேண்டாம்” என்றான்.
உடனே பாதி கொதிக்கிற சோற்றை அவள் அப்படியே சும்மா விட்டுவிட்டு அடுப்பை நீரால் அவித்து விடவில்லை. தங்களிருவருக்கும் உபயோகமில்லாவிடினும் மறுநாள் காலையில் வேலைக்காரிக்கு உதவுமென்று நினைத்து, அது நன்றாகக் கொதிக்கும்வரை காத்திருந்து , வடித்து வைத்துவிட்டுப், பிறகு நித்திரைக்குச் சென்றாள்.
அது போலவே , கர்மயோகி தான் ஒரு தொழில் செய்யத் தொடங்கி , இடையிலே அது தனக்குப் பயனில்லை யென்று தோன்றினால் , அதை அப்படியே நிறுத்திவிட மாட்டான். பிறருக்குப் பயந்தருமென்பதைக் கொண்டு, தான் எடுத்த வேலையை முடித்த பிறகே வேறு காரியம் தொடங்குவான்.

சுப்பிரமணிய பாரதி
     II , ப.524-525”

2) சுவையான சில பாடங்கள்!-

அ) ”இன்றைக்கு – நாளைக்கு – கொண்டுவா

அவளுக்கு என்ன வேண்டும் ?- அவளுக்குப் பணம் வேண்டும்.

அவனுக்கு என்ன வேண்டும்?- அவனுக்கு ஒரு கயிறு வேண்டும்.

அவர்களுக்குத் தண்ணீர் வேண்டாமா?

ஆமாம், அவர்களுக்குத் தண்னீர் வேண்டும்.”

ஆ) ”அந்தப் பூ அவளுக்கு வேண்டாம்.இந்தப் படம் அவளுக்கு வேண்டும்.

இந்தக் கத்தி அவர்களுக்கு வேண்டும். இந்தக் கத்தி துரைக்கு வேண்டும்.”

இ)  “ஒரு கோழியைக் கொண்டுவருகிறாள். அது நல்ல கோழி. அந்தக் கோழிக்கு மூன்று ரூபாய் கொடுக்கலாம்.- அது சரி அல்ல. அவளைக் கூப்பிடு, நான் அந்தக் கோழியைப் பார்க்கவேண்டும்.அதைப் பார். நான் அந்தக் கோழிக்கு இரண்டு ரூபாய் மாத்திரம் கொடுக்கிறேன்.- அவள் கோழியைக் கொண்டுபோகிறாள்.- சரி.
அவர்கள் மதுரைக்குப் போகிறார்கள்.”

ஈ)  “நீங்கள் பட்டணத்துக்குப் போவீர்களா?

  ஆமாம். நான் இன்றைக்குப் பட்டணத்துக்குப் போவேன்.

 நீங்கள் எப்போ போவீர்கள்?

 நான் சாயங்காலம் போவேன்.மோட்டார் வண்டி நாலு மணிக்கு வரும்.”

உ ) “ அவர்கள் பத்து மணிக்கு வரும் மோட்டார் பஸிலே சென்னைக்குப் போவார்கள்.

நான் வாழைப்பழம் விற்கும் பெண்ணை யின்றைக்குப் பார்க்க வில்லை.

நமது வீட்டுக்கு வழக்கமாய் வரும் பிட்சைக்காரன் மாமரத்தின் கீழே உட்கார்ந்திருக்கிறான், பார். “

இப்படிப்பட்ட எளிய தொடர்கள் மூலம் பெயர்ச்சொல் , வினைச் சொல், பெயரெச்சம் , வினையெச்சம் முதலியவற்றை விளக்கியுள்ளனர் பிரஞ்சுக்காரர்கள் !

இந்த இலக்கண நூலில் பல பழமொழிகளைச் சேர்த்துள்ளனர் பாடமாக!-

அ) கோயில் பூனை தேவருக்கு அஞ்சாது!

ஆ) தன் முதுகு தனக்குத் தெரியாது !

இ) படைக்கலம் அடைந்தாலும் பன்றி பன்றிதான் !

ஈ) ஒரு ஊருக்கு ஒரு வழியா?

உ) மடையனுக்கு மறுமொழி இல்லை!

ஊ) நல்ல மாட்டுக்கு ஓர் அடி, நல்ல மனுஷனுக்கு ஒரு சொல்.

எ) இன்றைக்கு இலை யறுக்கிறான் , நாளைக்கு குலை யறுப்பான்!

ஏ) ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லவேண்டும் !

ஐ) கிணற்றின் ஆழமும் கயிற்றின் ஆழமும் பார்க்க வேணும் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 4:49 pm

நாம் ஹிந்தி கூட இப்படித்தான் கற்றுக்கொள்கிறோம்.
இவர்களும் தமிழை எளிய முறையில் வார்த்தை
தொகுப்பாக கற்றுள்ளனர்.,நன்றி ஐயா.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Oct 29, 2017 5:23 pm

நல்ல பதிவு...நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக