புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 சோதிடம் என்றால் என்ன? Poll_c10 சோதிடம் என்றால் என்ன? Poll_m10 சோதிடம் என்றால் என்ன? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
 சோதிடம் என்றால் என்ன? Poll_c10 சோதிடம் என்றால் என்ன? Poll_m10 சோதிடம் என்றால் என்ன? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 சோதிடம் என்றால் என்ன? Poll_c10 சோதிடம் என்றால் என்ன? Poll_m10 சோதிடம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 சோதிடம் என்றால் என்ன? Poll_c10 சோதிடம் என்றால் என்ன? Poll_m10 சோதிடம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சோதிடம் என்றால் என்ன? Poll_c10 சோதிடம் என்றால் என்ன? Poll_m10 சோதிடம் என்றால் என்ன? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
 சோதிடம் என்றால் என்ன? Poll_c10 சோதிடம் என்றால் என்ன? Poll_m10 சோதிடம் என்றால் என்ன? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 சோதிடம் என்றால் என்ன? Poll_c10 சோதிடம் என்றால் என்ன? Poll_m10 சோதிடம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 சோதிடம் என்றால் என்ன? Poll_c10 சோதிடம் என்றால் என்ன? Poll_m10 சோதிடம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோதிடம் என்றால் என்ன?


   
   
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Tue Oct 03, 2017 3:12 am

சோதிடம்!

மனிதப்பிறவியில் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அற்புதமான கலைகளில் இந்த சோதிடமும் ஒன்று. கடவுளைப்போல் இந்த சோதிடத்தையும் பலரால் அறிந்து கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இதுதான் கடவுள்! அதை இப்படித்தான் வழிபட வேண்டும்! என்று நாம் எப்படி தவறான கருத்தைக் கொண்டிருக்கின்றோமோ? அதைப்போலவே இந்த சோதிடத்தைப் பற்றியும் நாம் தவறான கருத்தைத்தான் கொண்டிருக்கின்றோம். ஒருவேளை மிகச்சிறந்த எதையும் மனிதனால் எளிதில் புரிந்து கொள்ள முடியாதோ என்னவோ?...

எனவே எனக்குத் தெரிந்தவரையில் சோதிடத்தின் உண்மைத்தன்மையையும், அதற்கான சான்றுகளையும் இங்கே சமர்பிக்க இருக்கின்றேன். அவை எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்கே தெரியாத ஒன்று. எனவே இவற்றை எல்லாம் எல்லோரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பதும் எனக்குத் தேவையில்லாத ஒன்று. சும்மா இருக்கும் நேரங்களில் சிந்திக்கும்போது எனக்குத் தோன்றுவதை எல்லாம் இங்கே எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன். நானும் எழுதிப் பழகவேண்டும் அல்லவா? ஒருவேளை இதன் மூலம் நீங்களும் சிந்திக்கத் தொடங்கினால் அதுவே எனது வெற்றியாகும்!

"எழுத்ததிகாரன்" என்ற எழுதத்தெரியாத இவன் முதல் முறையாக எழுதத் தொடங்குகின்றான்... ஆனால், இப்போதும் கூட என்னால் தனியாக எழுத முடியவில்லை என்பதுதான் உண்மை! எனவே இன்னொருவரின் துணை கொண்டு எழுத ஆரம்பிக்கின்றேன்... அதாவது பிள்ளையார் சுழியுடன்...

இது சோதிடம் பற்றிய ஒரு சிறிய ஆராய்ச்சிக் குறிப்பு... அதாவது, நான் சோதிட பலன் சொல்லவில்லை என்பதையும், நான் ஒரு சோதிடன் இல்லை என்பதையும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்....

அறிவியலுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டிருக்கும் இந்த சோதிடத்தை பலரால் ஏற்றுக் கொள்ள முடியாதது அறியாமையோ? அல்லது சூழ்ச்சியோ? என்றே எனக்கு நினைக்கத் தோன்றுகின்றது. அறிவியல் கூற்றுக்களில் சில பொய்த்துப் போனால், அதைப் பற்றி யாரும் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. ஆனால், ஆராய்ச்சிக் குடுவைகளோ, சோதனைக் குழாய்களோ இல்லாமல் இதுதான் கிரகங்கள்! இப்படித்தான் இயங்குகின்றன! என்று முதன் முதலில் அடித்து சொன்ன சோதிடக் கூற்றுக்களில் சில பொய்த்துப்போனால் மட்டும் குற்றவாளியாக்கி கூண்டில் நிறுத்த முன் வருகிறார்கள் சிலர். ஒருவேளை, தன்னை ஒரு அறிவாளி என்று காட்டிக் கொள்வதற்காக ஏற்படுத்தும் முயற்சியாகக்கூட இது இருக்கலாம்! இன்னும் சிலரோ, வான சாஸ்த்திரம் வேறு, சோதிடம் வேறு, அறிவியல் என்பது வேறு என்றும் உதாரணம் காட்டுவார்கள். ஆனால், இவற்றிற்கு மயிரிழையில்தான் வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மனிதன் தன்னைக்கூட குரங்கின் பரிணாம வளர்ச்சி என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுவதில்லை. ஆனால், சோதிடத்தின் வளர்ச்சிதான் இந்த அறிவியல் என்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது அறியாமையாகத்தான் இருக்குமோ?... ஆனாலும், குரங்குகள் இன்னும் குரங்காகத்தான் இருக்கின்றன. மனிதன்தான் சில நேரங்களில் குரங்கைப்போல சேட்டைகள் செய்கின்றான் (என்னைப் போல...) என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்!

ஆகாயத்தில் இத்தனை கோள்கள் இருக்கின்றன என்றும், அந்தக் கோள்கள்தான் மனிதனை இயக்குகின்றன என்றும் சோதிடம்தான் முதலில் சொன்னது. அவ்வளவு ஏன் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சந்திரன் தேய்ந்து வளர்கின்றது என்று சொன்ன சோதிடம் இன்று வரை பொய்யாகவில்லையே...

உடனே சந்திரன் வளரவும் இல்லை தேயவும் இல்லை அது சூரிய ஒளியில் மறைகின்றது என்று யாரும் அறிவியல் ஆதாரம் சொல்ல முயற்சிக்காதீர்கள். ஏனென்றால் அன்றைய நிலையில் அப்படி சொன்னால்தான் மனிதனுக்குப் புரியும் என்பதால்தான் அப்படி சொல்லியிருப்பார்கள். அதிகம் தெரியும் என்பதற்காக புரியாத பாஷைகளில் பேசுவதெல்லாம் முன்னோர்களுக்குத் தெரியாது. சந்திரன் தேய்ந்து வளர்கின்றது என்று சொன்னது பொய்யாக இருக்கலாம். ஆனால், ஆகாயத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது, அது குறிப்பிட்ட கால இடைவெளியில்தான் நடக்கின்றது என்று சொன்ன சோதிடம் இன்றுவரை பொய்யாகிப் போனதில்லைதானே...? அது எப்போதாவது மாறியிருக்கின்றதா?

ஒரு சிலர், தனது அறிவுக் கூர்மையை காட்டுவதாக நினைத்து, சோதிடம், ஒன்பது கோள்களையும், 27 நட்சத்திரங்களையும் மட்டும் தானே சொல்லியிருக்கின்றது. ஆனால், ஆகாயத்தில் பல லட்சம் கோடி கோள்கள் இருக்கின்றன என்று நமது அறிவியல் சொல்கிறதே என்று கூறுவார்கள். ஆனால், இவ்வளவு சொன்ன சோதிடத்திற்கு அதுவும் தெரியாமலா இருந்திருக்கும்?!

அப்படியானால் ஏன் சொல்லவில்லை? ஆகாயத்தில் எத்தனை கோடி கோள்களும், நட்சத்திரங்களும் இருந்தாலும் அவற்றினால் மனிதனுக்கு எந்தப் பயனும், பாதிப்பும் இல்லை என்பதால்தான் அவற்றை பற்றி எல்லாம் சோதிடம் சொல்லவில்லை! அதாவது, தெரியும் என்பதற்காக கண்டவற்றையும் சொல்லி மனிதனைக் குழப்பவில்லை என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். ஏனென்றால் சோதிடம் என்பது மனிதனுக்காக சொல்லப்பட்டது! எனவே மனிதனுக்குப் பயன்படாத எதைப் பற்றியும் அவனுக்கு சொல்லிப் பயனில்லை என்பது சோதிடத்தைக் கணித்த சான்றோகளுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் சொல்லவில்லை!!

இன்று அறிவியல் விஞ்சானிகள் பூமி அழியப் போகின்றது என்றும், இத்தனை ஆயிரம் சுற்றுகளுக்குப் பிறகு பூமி தனது சுற்றுப்பாதையில் இருந்து மாறுகின்றது என்றும் ஆதாரம் காட்டுகின்றனர். ஆனால், அழியப் போகின்றது என்று எத்தனையோ முறை அறிவித்திருந்தும் இன்று வரை இந்த பூமி இயங்கிக் கொண்டுதானே இருக்கிறது?...

ஆனால், மங்கு சனி, பொங்கு சனி, மாரகச் சனி என்று மனித வாழ்க்கையில் இந்த சனி கிரகத்தின் மூன்று சுற்றுக்கள் இருக்கின்றன என்றும், அந்த மூன்றாவது சுற்றான "மாரகச் சனி"யின் போது மனிதன் இறந்து விடுவான் என்றும் சோதிடம் சொல்லி வைத்திருக்கின்றது. அதே போல இன்று வரை "மாரகச் சனியின் சுற்றுக்குப் பிறகு ஒரு மனிதன் வாழ்ந்தான்" என்று நமது அறிவியலால் சான்று காட்ட முடியுமா? அல்லது ஒரு மனிதன் எப்போது இறப்பான் என்று நமது மருத்துவத்தால்தான் தேதி குறிப்பிட முடியுமா? ஆனாலும் நாம் அந்த மருத்துவத்தைத்தான் நம்புகின்றோம்... அறிவியலில்தான் ஆதாரம் தேடுகின்றோம்...

சிலர் சோதிடத்தை பற்றி விமர்சனம் செய்யும் போது, "கட்டங்களைக் காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள்" என்று கூறுவார்கள். ஆம்! உண்மைதான், அறிவியல் ஆராய்ச்சி என்பது கண்ணாடிக் குடுவைக்குள் அடைக்கப் பட்டிருக்கின்றது! சோதிட ஆராய்ச்சி என்பது பன்னிரண்டு கட்டங்களுக்குள் அடைக்கப் பட்டிருக்கின்றது! எது எப்படி இருந்தாலும் நமது அறிவு அடைக்கப் பட்டிருக்கின்றது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!

தொடந்து ஆராய்வோம் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு...

எழுத்ததிகாரன் க்காக
- அந்தப்பார்வை.
on 3rd September 2012, 8:27 pm


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக