Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அலசல்: எது பெண்களுக்கான படம்?
Page 1 of 1
அலசல்: எது பெண்களுக்கான படம்?
-----
அண்மையில் வெளியாகியுள்ள ‘மகளிர் மட்டும்’
திரைப்படம், குடும்ப வாழ்க்கையின் அழுத்தத்தில் சிக்கிய
நடுத்தர வயதுப் பெண்கள் தங்கள் இளமைக் கால நட்பைப்
புதுப்பித்துக்கொள்ளும் கதையை மையமாகக்
கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் இந்த அம்சம் ஓர் இடத்தைப் பிடிப்பதற்கே
இத்தனை காலம் ஆகியிருக்கிறது.
அதேநேரம், கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களை
மையமாகக் கொண்ட படங்களும் பெண்களின்
பிரச்சினைகளைப் பேசும் படங்களும் தமிழ் சினிமாவில்
அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக இளம் இயக்குநர்கள் பெண்களின் பிரச்சினைகளைப்
பேசும் கதைகளைக் கையிலெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
‘36 வயதினிலே’,‘இறைவி’, ‘அம்மா கணக்கு’,
‘ஒரு நாள் கூத்து’, ‘தரமணி’, ‘மகளிர் மட்டும்’ உள்ளிட்ட
படங்கள் தமிழ் சினிமாவில் பெண்கள் சார்ந்த படங்களின்
எண்ணிக்கை அதிகரித்த்துவருவதைக் காட்டுகின்றன.
இது வரவேற்கத் தகுந்த மாற்றங்களில் ஒன்று.டிஜிட்டல்
புரட்சியால் விரிவடைந்துள்ள வியாபார சாத்தியம்,
பார்வையாளர்களின் ரசனை மாற்றம் ஆகியவற்றால்
வித்தியாசமான கதைக்களங்கள், அதிகம் பேசப்படாத
பிரச்சினைகள் போன்றவற்றுக்கான வெளி தமிழ்த் திரையில்
அதிகரித்துள்ளது.
Re: அலசல்: எது பெண்களுக்கான படம்?
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் களையப்பட வேண்டும்
என்ற அக்கறையால் உந்தப்பட்ட படைப்பாளிகளின் எண்ணிக்கை
அதிகரித்து வருவதையும் இந்தப் படங்களின் எண்ணிக்கை
பிரதிபலிக்கிறது.
அக்கறை மட்டும் போதுமா?
மேலே குறிப்பிடப்பட்ட படங்களில் ‘இறைவி’, ‘தரமணி’
ஆகிய இரண்டும் பெண் எழுத்தாளர்கள்,
சிந்தனையாளர்களிடமிருந்து எதிர்மறை விமர்சனங்களைப்
பெற்றன.
சிலர் அவற்றை ‘ஆபத்தான படம்’ என்றுகூடச்
சொல்லியிருந்தார்கள். ‘அம்மா கணக்கு’ பெரிய அளவில்
யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. சமீபத்தில்
வெளியாகியுள்ள ‘மகளிர் மட்டும்’ படமும் பெண்களின்
பார்வையில் கலவையான விமர்சனங்களையே பெற்று
வருகிறது.
இந்த வரிசையில் ‘ஒரு நாள் கூத்து’ கூடுதல்
பாராட்டைப் பெற்றது.
Last edited by ayyasamy ram on Mon Sep 25, 2017 7:45 am; edited 1 time in total
Re: அலசல்: எது பெண்களுக்கான படம்?
பெண்களிடம் பேசுங்கள்
அக்கறையைத் தாண்டிப் பெண்கள் பிரச்சினையை
அழுத்தமாகப் பதிவு செய்யும் படங்களைப் பெற என்ன
செய்ய வேண்டும்?
“கடந்த இரண்டு, மூன்றுஆண்டுகளில் பெண்கள் சார்ந்த,
பெண்களின் பிரச்சினைகளைப் பேசும் படங்கள் வரத்
தொடங்கியிருப்பது உண்மைதான். தமிழைவிட
மலையாளத்திலும் இந்தியிலும் இதுபோன்ற படங்கள்
அதிகமாக வருகின்றன.
அவை கவனத்துக்குரியவையாகவும் உள்ளன. தமிழில் வரும்
படங்கள் பெரிதும் ஏமாற்றத்தையே தருகின்றன. ‘இறைவி’,
‘தரமணி’ போன்ற படங்கள் பெண்கள் பிரச்சினைகளைப்
பேசுபவை என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
‘தரமணி’ படத்தில் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் படத்தைத்
தாங்கி நிற்கிறது. ‘இறைவி’யில் அஞ்சலி கதாபாத்திரத்துக்குக்
கொடுக்கப்பட்ட முடிவு பாராட்டுக்குரியது.
ஆனால், ஒரு திரைப்படமாக இரண்டுமே ஏமாற்றத்தையே தந்தன.
பெண்கள் பிரச்சினைகளைப் பேச வேண்டும் என்ற
அக்கறையெல்லாம் சரிதான். ஆனால் ‘பிங்க்’ போன்ற படங்கள்
இங்கு ஏன் சாத்தியப்படவில்லை?
இதுபோன்ற படங்களை எடுப்பவர்கள் கதைக் குழுவில் பெண்
படைப்பாளிகளை இணைத்துக்கொள்ளலாம். அதேபோல்
சாதாரணப் பெண்களின் அன்றாடப் பிரச்சினைகளையும்
பார்வையையும் உள்ளடக்கி திரைக்கதைகள் வருவது அவசியம்”
என்கிறார் எழுத்தாளரும் பெண்ணியச் செயல்பாட்டாளருமான
பா. ஜீவசுந்தரி.
வரவேற்கத்தக்க மாற்றம்
தமிழ்த் திரைப்பட திரைக்கதை விவாதங்களில்
பங்கேற்றிருப்பவரான எழுத்தாளர் ஜா. தீபா இது போன்ற
படங்கள் வரத்தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்
என்கிறார்.
“100 ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழ்த் திரை வரலாற்றில்
மிகக் குறைந்த படங்களே பெண்களை, பெண்களின்
பிரச்சினைகளைப் பேசியிருக்கின்றன. இந்த நிலையில் ‘மகளிர்
மட்டும்’ போன்ற படங்கள் சமையலறை தாண்டியும் பெண்களுக்கு
ஒரு உலகம் இருப்பதைக் காண்பிக்கின்றன.
பெண் என்றாலே
மலருடனும் நிலவுடனும் ஒப்பிட்டுக்கொண்டிருந்ததை மாற்றி,
இது போன்ற படங்கள் பெண்களை மிக இயல்பாகக் காட்சி
படுத்துகின்றன” என்கிறார்.
இந்தப் படங்களுக்குக் கிடைத்த எதிர்மறை விமர்சனங்களை
சுட்டிக்காட்டினால், “திரைக்கதை விவாதங்களில் பெண்
கதாபாத்திரங்களை வடிவமைக்கும் விதமே மட்டமாக இருக்கும்.
இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இதன் தாக்கத்தால், பல பெண்கள் கதியாகக் கிடக்கும்
சீரியல்களிலும் கொஞ்சம் மாற்றம் வரத் தொடங்கியுள்ளது.
ஒரே மாதிரி பெண்களைக் காண்பித்தால் மக்கள் பார்க்க
மாட்டார்கள் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
இதை ஒரு நல்ல தொடக்கமாகப் பார்க்கலாம். இனிமேல்
இயக்குநர்கள் இதிலிருந்து பின்னோக்கிப் போக முடியாது என்ற
நிலையை இதுபோன்ற படங்கள் உருவாக்கியுள்ளன. வருங்
காலத்தில் பெண்கள் பற்றிய படங்கள் மேலும் சிறந்தவையாக
அமையும் என்று நம்பலாம்” என்கிறார் தீபா.
பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் நவீன
காலப் பெண்களின் பிரச்சினைகளைக் கையாள்வதில் தமிழ்த்
திரையுலகம் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.
ஆனால் பெண்களைப் பல வகைகளில் இழிவுபடுத்தும் திரைப்
படங்களுக்கு மத்தியில் அவர்களைச் சற்றேனும் கண்ணியமாகச்
சித்தரிக்க முயலும் இதுபோன்ற படங்களை நிதானமாக
அணுகலாம்.
அவற்றில் மாற்றப்பட வேண்டிய குறைகளைச் சுட்டிக்காட்டலாம்.
அதேநேரம் திரையுலகினரும் இதுவே போதும் என்று தேங்கி
விடாமல் பெண்களையும் அவர்களுடைய பிரச்சினைகளையும்
பற்றி உண்மைக்கு நெருக்கமான, வலுவான திரைக்கதை
கொண்ட படங்களைத் தரத் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய
தருணம் இது.
-ச. கோபாலகிருஷ்ணன்
நன்றி - விகடன்
--------------------------------------
அக்கறையைத் தாண்டிப் பெண்கள் பிரச்சினையை
அழுத்தமாகப் பதிவு செய்யும் படங்களைப் பெற என்ன
செய்ய வேண்டும்?
“கடந்த இரண்டு, மூன்றுஆண்டுகளில் பெண்கள் சார்ந்த,
பெண்களின் பிரச்சினைகளைப் பேசும் படங்கள் வரத்
தொடங்கியிருப்பது உண்மைதான். தமிழைவிட
மலையாளத்திலும் இந்தியிலும் இதுபோன்ற படங்கள்
அதிகமாக வருகின்றன.
அவை கவனத்துக்குரியவையாகவும் உள்ளன. தமிழில் வரும்
படங்கள் பெரிதும் ஏமாற்றத்தையே தருகின்றன. ‘இறைவி’,
‘தரமணி’ போன்ற படங்கள் பெண்கள் பிரச்சினைகளைப்
பேசுபவை என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
‘தரமணி’ படத்தில் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் படத்தைத்
தாங்கி நிற்கிறது. ‘இறைவி’யில் அஞ்சலி கதாபாத்திரத்துக்குக்
கொடுக்கப்பட்ட முடிவு பாராட்டுக்குரியது.
ஆனால், ஒரு திரைப்படமாக இரண்டுமே ஏமாற்றத்தையே தந்தன.
பெண்கள் பிரச்சினைகளைப் பேச வேண்டும் என்ற
அக்கறையெல்லாம் சரிதான். ஆனால் ‘பிங்க்’ போன்ற படங்கள்
இங்கு ஏன் சாத்தியப்படவில்லை?
இதுபோன்ற படங்களை எடுப்பவர்கள் கதைக் குழுவில் பெண்
படைப்பாளிகளை இணைத்துக்கொள்ளலாம். அதேபோல்
சாதாரணப் பெண்களின் அன்றாடப் பிரச்சினைகளையும்
பார்வையையும் உள்ளடக்கி திரைக்கதைகள் வருவது அவசியம்”
என்கிறார் எழுத்தாளரும் பெண்ணியச் செயல்பாட்டாளருமான
பா. ஜீவசுந்தரி.
வரவேற்கத்தக்க மாற்றம்
தமிழ்த் திரைப்பட திரைக்கதை விவாதங்களில்
பங்கேற்றிருப்பவரான எழுத்தாளர் ஜா. தீபா இது போன்ற
படங்கள் வரத்தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்
என்கிறார்.
“100 ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழ்த் திரை வரலாற்றில்
மிகக் குறைந்த படங்களே பெண்களை, பெண்களின்
பிரச்சினைகளைப் பேசியிருக்கின்றன. இந்த நிலையில் ‘மகளிர்
மட்டும்’ போன்ற படங்கள் சமையலறை தாண்டியும் பெண்களுக்கு
ஒரு உலகம் இருப்பதைக் காண்பிக்கின்றன.
பெண் என்றாலே
மலருடனும் நிலவுடனும் ஒப்பிட்டுக்கொண்டிருந்ததை மாற்றி,
இது போன்ற படங்கள் பெண்களை மிக இயல்பாகக் காட்சி
படுத்துகின்றன” என்கிறார்.
இந்தப் படங்களுக்குக் கிடைத்த எதிர்மறை விமர்சனங்களை
சுட்டிக்காட்டினால், “திரைக்கதை விவாதங்களில் பெண்
கதாபாத்திரங்களை வடிவமைக்கும் விதமே மட்டமாக இருக்கும்.
இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இதன் தாக்கத்தால், பல பெண்கள் கதியாகக் கிடக்கும்
சீரியல்களிலும் கொஞ்சம் மாற்றம் வரத் தொடங்கியுள்ளது.
ஒரே மாதிரி பெண்களைக் காண்பித்தால் மக்கள் பார்க்க
மாட்டார்கள் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
இதை ஒரு நல்ல தொடக்கமாகப் பார்க்கலாம். இனிமேல்
இயக்குநர்கள் இதிலிருந்து பின்னோக்கிப் போக முடியாது என்ற
நிலையை இதுபோன்ற படங்கள் உருவாக்கியுள்ளன. வருங்
காலத்தில் பெண்கள் பற்றிய படங்கள் மேலும் சிறந்தவையாக
அமையும் என்று நம்பலாம்” என்கிறார் தீபா.
பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் நவீன
காலப் பெண்களின் பிரச்சினைகளைக் கையாள்வதில் தமிழ்த்
திரையுலகம் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.
ஆனால் பெண்களைப் பல வகைகளில் இழிவுபடுத்தும் திரைப்
படங்களுக்கு மத்தியில் அவர்களைச் சற்றேனும் கண்ணியமாகச்
சித்தரிக்க முயலும் இதுபோன்ற படங்களை நிதானமாக
அணுகலாம்.
அவற்றில் மாற்றப்பட வேண்டிய குறைகளைச் சுட்டிக்காட்டலாம்.
அதேநேரம் திரையுலகினரும் இதுவே போதும் என்று தேங்கி
விடாமல் பெண்களையும் அவர்களுடைய பிரச்சினைகளையும்
பற்றி உண்மைக்கு நெருக்கமான, வலுவான திரைக்கதை
கொண்ட படங்களைத் தரத் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய
தருணம் இது.
-ச. கோபாலகிருஷ்ணன்
நன்றி - விகடன்
--------------------------------------
Similar topics
» 5 சுந்தரிகள் -பெண்களுக்கான படம்
» இன்டர்நெட் ஓர் அலசல்
» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
» படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
» லொள்ளு சபா அலசல்
» இன்டர்நெட் ஓர் அலசல்
» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
» படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
» லொள்ளு சபா அலசல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|