ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் -செப் 22 --2016

2 posters

Go down

அந்த நாள் -செப் 22 --2016 Empty அந்த நாள் -செப் 22 --2016

Post by T.N.Balasubramanian Sat Sep 23, 2017 2:23 am

அந்த நாள் -செப் 22 --2016



ஓடியது ஓராண்டு!
செப்டம்பர் 22... ஓடியது ஓராண்டு!

'ராணுவ கட்டுப்பாடு கொண்ட கட்சி; தலைமையை தவிர, யாருக்கும் அதிகாரம் இல்லை' என, 'ஒன் வுமன் ஆர்மி'யாக
அறியப்பட்ட, அ.தி.மு.க., ஜெயலலிதா இருக்கும் வரை, கட்டுக்கோப்பாகவே இருந்தது.


சட்டசபையில் முதல்வராக, தன் துறை தொடர்பான அறிவிப்புகளை மட்டும் வெளியிடாமல், 110 விதியின் கீழ், மற்ற
அமைச்சர்களின் துறை அறிவிப்புகளையும், தானே அறிவித்து ஆதிக்கம் செலுத்தியவர் ஜெயலலிதா.

இரும்பு மனுஷி

அமைச்சர் முதலிய பதவிகள் யாருக்கு, எப்போது கிடைக்கும், எப்போது பறிபோகும் என, கணிக்க முடியாத, தான் நினைத்ததை,
செயல்படுத்தும் இரும்பு மனுஷியாக, ஜெ., இருந்தார். எம்.ஜி.ஆருக்கு பின், அ.தி.மு.க., - தி.மு.க., என, ஆட்சிகள் மாறின.
ஆனால், 2011ல் வென்ற, அ.தி.மு.க., தொடர்ச்சியாக, 2016லும் ஆட்சியை தக்கவைத்து, ஆச்சரியம் அளித்தது.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, நாடு முழுவதும் மோடி அலை வீசிய போதும், பிரசாரத்தில், 'அனைத்து துறைகளிலும்
சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பது, குஜராத்தின் மோடியல்ல... இந்த லேடி தான்' என, கர்ஜித்து, தனித்தே களமிறங்கி,
37 இடங்களை அள்ளியது, அவரது தைரியத்திற்கு சான்று. நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக, அ.தி.மு.க.,வை வலுவாக்கினார்.

அடுத்து, 2016 சட்டசபை தேர்தலில், ஆட்சியை தக்க வைத்த, ஜெ., பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். செப்., 21ல்,
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் வழித்தடத்தை துவக்கி வைத்தார்.மறுநாள், செப்., 22ல், காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு
காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அன்றோடு, ஜெ., சகாப்தம் முடிந்தது. ஜெ.,யின் ஆளுமை, ஆவேச பேச்சு எதையும், தமிழக
மக்கள் காண முடியவில்லை.முதல் குழப்பம், சிகிச்சையில் துவங்கியது. சிகிச்சை பற்றி மருத்துவமனை தகவல்கள் தான் வந்ததே
தவிர, அரசின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவர வில்லை. மருத்துவமனையிலும், முழுக்க முழுக்க, சசிகலா உறவினர்களின்
ஆதிக்கமே இருந்தது.

டிச., 5ல், ஜெயலலிதா மறைவுக்குப் பின், அன்று இரவே, பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை, பதவி ஏற்றது.
அதன்பின் நடந்த நிகழ்வுகள், மக்களை முகம் சுளிக்க வைத்தன.

அப்பேதைய, தலைமைச் செயலர், ராமமோகன ராவ் வீட்டில், சோதனை நடத்திய வருமான வரித்துறையினர்,
தலைமைச் செயலகத்தில் உள்ள, அவரது அறையிலும் சோதனை நடத்தினர்.
அப்போது, முதல்வர் பன்னீர் செல்வமும், தலைமைச் செயலகத்தில் இருந்தார். இப்படி ஒரு நிகழ்வு,
ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது, நடக்க வாய்ப்பே இல்லை.

அது மட்டுமல்ல, மத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு, அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர், தலைமைச்
செயலகத்திற்கு வந்து கூட்டம் நடத்தியது, வலுவான தலைவர் இல்லாததால் நடந்த நிகழ்வுகளாகவே பார்க்கப்படுகின்றன.

பன்னீர் ராஜினாமாவுக்குப் பின், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியாகி, சசிகலா, பெங்களூரு சிறைக்கு சென்றார்.
பழனிசாமி, முதல்வரானார். தற்போது, பழனிசாமி, பன்னீர் அணிகள் இணைந்து, சசி குடும்பத்தை ஓரங்கட்டி, தினகரனை சமாளித்து,
தட்டு தடுமாறி ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது.

தள்ளாட்டம்

எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின் ஏற்பட்ட தடுமாற்றத்தை, தன் துணிச்சலால் சரி செய்ய ஜெயலலிதா இருந்தார். ஆனால் இன்று, வலுவான
தலைவர் இல்லாமல், ஆட்சியும், கட்சியும் தள்ளாட்டத்தில் உள்ளது.மதுக்கடை எதிர்ப்பில் பெண்கள் களமிறங்கி, கடைகளை அடித்து நொறுக்குவது, கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள்போராட்டம், 'நீட்' தேர்வு
எதிர்ப்பு போராட்டம் என, பல தரப்பிலும் போராட்டங்கள் நடக்கின்றன.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, போராட்டங்கள் நடத்த சற்று தயக்கம் இருந்தது. இப்போது, அந்த தயக்கம் யாருக்கும் இல்லை.
தி.மு.க., தலைவர் கருணாநிதியும், உடல்நலமின்றி முடங்கி விட்டதால், அரசியலில் வெற்றிடம் இருப்பதாக, நடிகர்களும், அரசியல்
களத்தில் கம்பு சுற்றத் துவங்கி உள்ளனர். அதே நேரம், சில முன்னேற்றமான மாற்றங்களையும் காண முடிகிறது. ஜெ., முன் நிமிர்ந்து
நிற்காத அமைச்சர்கள், கட்சியினர் இன்று நிமிர்ந்து உள்ளனர். பத்திரிகையாளர்களிடம் பேசுகின்றனர். மத்திய அரசிடம் இணக்கமான
போக்கு நிலவுகிறது. மாற்றுக் கட்சியினரிடம் நட்பு காட்டுகின்றனர்.

ஜெயலலிதாவின் நினைவிடம், அரசியல் காட்சிகளுக்கு, சாட்சியாக விளங்கி கொண்டு இருக்கிறது. காலம் இன்னொரு
ஆளுமைத் தலைவரை, தமிழகத்திற்கு அடையாளம் காட்டும் வரை, தமிழக அரசியல் இப்படித்தான் போகும்!

கடைசி நிகழ்வு
கடந்த ஆண்டு, செப்., 21ல், முதல்வராக இருந்த ஜெ., சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான, 8.6 கி.மீ., மெட்ரோ ரயில் சேவையை, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் கொடியசைத்து துவக்கினார். தனக்கு மிகவும் பிடித்த, பச்சை நிற சேலை அணிந்து,
பச்சைக் கொடி காட்டி துவக்கி வைத்த போது, அதுதான், தன் கடைசி பணி என, அவரும் அறியவில்லை; மக்களும் நினைக்கவில்லை.
சின்னமலையில் துவக்க விழா நடந்த போது, அங்கு செல்லாமல், தலைமைச் செயலகத்தில் இருந்து, ஏன் துவக்கி வைத்தார்
என்பதற்கான அதிகாரபூர்வ காரணம் எதுவும் தெரிவிக்க பட வில்லை. ஆனால், அந்நிகழ்வில் அருகில் அமர்ந்திருந்தவர்கள், '
அவர் கொஞ்சம் தளர்வாக இருந்தார். ஆனால், முகத்தில் உற்சாகத்துக்கு குறைவில்லை' என, தெரிவித்தனர்.

நன்றி  - டி.எஸ்.எழிலரசன்,
தினமலரில் பதிவு.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அந்த நாள் -செப் 22 --2016 Empty Re: அந்த நாள் -செப் 22 --2016

Post by ayyasamy ram Sat Sep 23, 2017 7:12 am

முக்கியமான உலகத்தலைவர்களுக்கு
22 ம் தேதி ஒரு அபாயகரமான
நாள் .....!
-
்தி இந்து - வாசகர் ஒருவரின் கமெண்ட் இது
-
௨௨ ம் தேதியில் பாதிக்கப்பட்ட உலகத்தலைவர்கள்
யார் என்ற விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அந்த நாள் -செப் 22 --2016 Empty Re: அந்த நாள் -செப் 22 --2016

Post by T.N.Balasubramanian Sat Sep 23, 2017 9:10 am

ayyasamy ram wrote:முக்கியமான உலகத்தலைவர்களுக்கு
22 ம் தேதி ஒரு அபாயகரமான
நாள் .....!
-
்தி இந்து - வாசகர் ஒருவரின் கமெண்ட் இது
-
௨௨ ம் தேதியில் பாதிக்கப்பட்ட உலகத்தலைவர்கள்
யார் என்ற விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1248073

குரு நாணக் , ஜெப்பனீஸ் மதத்தலைவர் டொஜென், போப் ஃ Felix IV , போப் கிளிமெண்ட் 14 ,
நடிகை s வரலக்ஷ்மி
இன்னும் பலர் பலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அந்த நாள் -செப் 22 --2016 Empty Re: அந்த நாள் -செப் 22 --2016

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum