ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை)

Go down

குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Empty குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை)

Post by Dr.S.Soundarapandian Fri Sep 15, 2017 10:22 pm

குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை)

கார் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடை! இளங்கோதான் கடையில் எல்லாம் !; அவருக்கு அவ் வட்டாரத்தில் நல்ல பெயர்! விற்ற பொருளில் குறை இருந்தால் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு உடனே புதுப் பொருளைத் தந்துவிடுவார் ! விலையும் நியாயமாக அவர் கடையில் இருக்கும் என்று பலர் அங்கேதான் சாமான் வாங்க வருவர்! எல்லோரும் இளங்கோவை ’முதலாளி’ என்றுதான் கூப்பிடுவார்கள் !

ஒருநாள், கடையடைக்கும் நேரம்!

கடைக்கு அன்றுவந்திருந்த இளங்கோவின் அண்ணன் மகன் சுப்பு, “எங்கே பணத்தைக் கொண்டுபோகிறீர்கள்?” என்று கேட்டான் ! அவன் அப்போதுதான் கல்லூரியில் சேர்ந்துள்ள நேரம் !

இளங்கோவுக்கு அதிர்ச்சி !

“நாம் தூக்கி வளர்த்த பையன் ! என்றைக்குமில்லாமல் இன்றைக்கு விற்பனைப் பணத்தைப் பற்றிக் கேட்கிறானே?” – குழம்பினார்!

“ஏன்? வீட்டுக்குத்தான்! இன்று என் பீரோவில் வைத்திருந்து நாளை உங்கப்பா கணக்கில் எப்போதும்போல் போடுவேன் !” என்றார்.

“அதெல்லாம் வேண்டாம் ! என்னிடம் கொடுங்கள்; நான் வங்கியில் கட்டிக்கொள்கிறேன் !” என்று பணத்தைக் கேட்டான் சுப்பு!

தொடர்ந்து , சித்தப்பாவின் பதிலுக்குக் காத்திராமல் , “இது எங்க கடைதானே? உங்களுக்கு மாதம் இவ்வளவு என்று சம்பளம் மட்டும் என்னிடம் வாங்கிக்கொள்ளுங்கள்!” என்றான்!

இளங்கோ , செய்வதறியாது திகைத்தார்!

“சரி! அண்ணனிடம் பேசிக்கொள்ளலாம்” என்று சட்டென்று , “ விற்பனைப் பணம் தானே? இந்தா பிடி! நாளை அண்ணனிடம் பேசிக்கொள்வோம்” என்று கொடுத்துவிட்டார்!
அடுத்தநாள் , ஞாயிற்றுக்கிழமை! அண்ணனை ஒர்க்ஷாப்பில் இளங்கோவிம் சுப்புவும் பார்த்தனர்.

”என்ன அண்ணே? சுப்பு ஏதோ நேற்றுத் திடீரென்று ‘இது எங்க கடை; உங்களுக்குச் சம்பளம்தான்’னு சொன்னான்! கடையை நானும் ஒர்க்ஷாப்பை நீங்களும் கவனித்துக் கொள்கிறீர்கள்! கடைப் பணத்தை நான் உங்கள் கணக்கில்தான் செலுத்துகிறேன் ! வீட்டுச் செலவுக்குக்கூட உங்களிடம் கேட்டுத்தானே வாங்கிக்கொள்கிறேன் ! நாம் கூட்டுக் குடும்பமாகத்தானே இதுநாள் வரை இருந்துவருகிறோம்? நம் குடும்பத்தில் இப்படி ஒரு பேச்சு வந்ததே இல்லையே? நீங்க சுப்புவுக்குச் சொல்லுங்க! – தொண்டைக் கம்மலுக்கிடையேதான் இதைக் கூறினார் இளங்கோ!

அண்ணன் , அவரது மகன் சுப்புவை அதட்டுவார் என்று எதிர்பார்த்த இளங்கோவுக்கு ஏமாற்றம் !

அண்ணன் , இளங்கோ சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் , “ஏம்பா ! அந்த
மூணுக்கு நாலு ஸ்பானர் எங்கேப்பா?” என்று வண்டிக்குள் தலையை விட்டார் !
இளங்கோ அடுத்த நாள் கடைக்குப் போகவில்லை!

ஒரு வாரம் கழிந்தது!

இளங்கோ இருந்த கடைக்கு எதிர்க் கடையும் மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்கும்கடைதான் !அந்தக் கடைக்காரர் இளங்கோவின் நிலையை அறிந்து உடனே தன்கடையில் சேர்த்துக்கொண்டார் ! அங்கு நின்றுகொண்டு சுறுசுறுப்பாக , எதுவும் நடக்காததுபோல – துயரத்தை மனதில் சுமந்தாலும்- விற்பனையைக் கவனித்து வரலானார்!
பழைய வாடிக்கையாளர்கள் இளங்கோ புதிதாகச் சேர்ந்த கடைக்கே வந்து பொருள்களை வாங்க ஆரம்பித்தனர் !

அன்று மாலை , “என்ன முதலாளி? எப்படி இருக்கீங்க?” என்றார்பழைய வாடிக்கையாளர் ஒருவர்!

‘முதலாளி’ என்ற சொல்லைக் கேட்டதும் , இளங்கோ முகத்தில் ஒரு புன்னகை !

அந்தப் புன்னகைதான் அவரது மாளாத் துயரத்தை – அதிர்ச்சியை- அவரிடமிருந்து விரட்டிய ஆயுதம் என்பது ‘முதலாளி’ என்று கூப்பிட்ட அந்த வாடிக்கையாளருக்குத் தெரியாது !

முதலாளி நிலையிலிருந்தவரை ஒரு நொடியில் வேலைக்காரராக்கியது குடும்பம் !
முதலாளி நிலையிலிருந்தவரை எப்போதும் , குணத்திற்காக, முதலாளியாகவே பார்க்கிறது உலகம்!
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum