Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
நீலத் திமிங்கல விளையாட்டில் ஈடுபட்ட மாணவன் ஒருவனுக்குத் “தற்கொலை கூடாது” என்று தமிழ்நாடு காவல்துறை அறிவுரைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த அதே நேரம், நடுவண் – மாநில அரசுகளின் மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு என்ற விளையாட்டால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அனிதா!
எந்த அனிதா?...
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 196.75 தகைவு மதிப்பெண் (cut-off) பெற்ற அனிதா!...
தன் ஊர் மொத்தத்தின் மருத்துவக் கனவையும் ஒற்றை ஆளாய்ச் சுமந்த அனிதா!...
இந்த நுழைவுத் தேர்வுக்கு எதிராக ஏழ்மை நிலையிலும் உச்சநீதிமன்றம் வரை போராடிய அனிதா!...
உண்மையில் இது தற்கொலையா? இல்லை, தற்கொலைக்குத் தூண்டப்பட்டிருக்கிறார் அந்த வருங்கால மருத்துவர்! நடுவணரசு, மாநில அரசு, நீதித்துறையினர் எனப் பலரும் சேர்ந்து இந்தத் தற்கொலைக்கு அவரைத் தூண்டியிருக்கிறார்கள் என்பதே நாடறிந்த உண்மை! தற்கொலைக்குத் தூண்டுவது சட்டப்படி குற்றம் என்றால் அனிதாவைத் தற்கொலைக்குத் தூண்டிய இவர்களுக்கு என்ன தண்டனை? நீலத் திமிங்கல விளையாட்டை உருவாக்கியவனைத் தற்கொலைக்குத் தூண்டுகிற குற்றத்துக்காகச் சிறைப்படுத்தியிருக்கிறார்கள். அதே போலத் தற்கொலையைத் தூண்டும் இந்தத் தேர்வை உருவாக்கியவர்களுக்கு என்ன தண்டனை?
உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்கிறார்கள், “எல்லா மாநிலங்களும் மருத்துவ நுழைவுத் தேர்வை ஏற்றுக் கொண்டன. தமிழ்நாடு மட்டும் ஏன் வழக்காட வந்திருக்கிறது?” என்று.
ஐயா நீதிபதிகளே! இந்நாட்டில் முதன் முதலாக இந்தித் திணிப்பு கொண்டு வரப்பட்டபொழுது எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன. தமிழ்நாடு மட்டும் எதிர்த்துப் போராடியது. அன்று முதல் சில நாட்களுக்கு முன்பு வரை தமிழ்நாட்டின் மிகப் பெரிய தேச எதிர்ப்புச் செயலாகத்தான் இது பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய நிலைமை என்ன? இந்தித் திணிப்புக்கு எதிராகக் கருநாடகம் கொடி உயர்த்துகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்கு இந்தியில் எழுதிய கடிதத்துக்கு ஒடியாவில் பதில் அனுப்பித் தன் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார் ஒடிசா நாடாளுமன்ற உறுப்பினர். இந்தி எதிர்ப்பால் தமிழ்நாடு பெற்றவையும் தாங்கள் இழந்தவையும் குறித்து சமூக ஊடகங்களில் புலம்புகிறார்கள் பிற மாநிலத்தவர்கள்.
நாங்கள் காட்டிய எதிர்ப்பு சரி என்பதைப் பிற மாநிலத்தினர் உணர எண்பது ஆண்டுகள் ஆகியிருக்கின்றன! அதே போல, இந்த மருத்துவத் தகுதித் தேர்வு முறை தவறு என்பதையும் மற்ற மாநிலங்கள் உணரும் நாள் ஒன்று வரும். ஆனால், அதுவரை நாங்கள் ஏன் காத்திருக்க வேண்டும்? முன்கூட்டியே தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்கும் எங்களை, சிந்திக்காத மற்றவர்களோடு சேர்ந்து சிரமப்படச் சொல்வது என்ன நியாயம்?
இப்படிப் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது அனிதாவின் உயிரிழப்பு!
ஆனால், இப்படி ஒரு கொடுமைக்குப் பின்னும் இங்கே மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாகச் சல்லியடிக்கும் கும்பல் திருந்தவில்லை. போதாததற்கு, இப்பொழுது அனிதாவையும் இழிவுபடுத்தத் தொடங்கியிருக்கிறது அந்த ஈனக் கூட்டம்.
“தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் அளவுக்குத் தமிழ்நாட்டு மாணவர்கள் இன்னும் உயரவில்லை. அவர்களை அதற்குத் தகுதிப்படுத்தும் அளவுக்குத் தமிழ்நாட்டுக் கல்வி முறையின் தரம் இல்லை. அதனால்தான் விலக்குக் கேட்கிறார்கள்” என்கிறது மேற்படி கும்பல். முட்டாள்களே! நாங்கள் திறமை இல்லாமல் விலக்குக் கேட்கவில்லை. அப்படி ஒரு தேர்வை எழுத வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை, அதனால் வேண்டா என்கிறோம், புரிகிறதா?
எந்த விதமான தகுதித் தேர்வும் இன்றி, இன்னும் சொன்னால், தவறான தேர்ந்தெடுப்பு முறையென நீங்கள் காலம் காலமாகத் தூற்றும் இட ஒதுக்கீட்டு முறைப்படிதான் இத்தனை ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் மருத்துப் படிப்புக்கான மாணவச் சேர்க்கை நடைபெறுகிறது. ஆனாலும், நல்வாழ்வு அளவுகோலில் (Heath parameters) தமிழ்நாடு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறித்தான் இருக்கிறது.
எடுத்துக்காட்டாக, நீங்கள் எதற்கெடுத்தாலும் கைகாட்டுகிறீர்களே, அந்த குசராத்தையே ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்வோம். பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் (Infant Mortality Rate) குசராத்தில் 1000-க்கு 38; தமிழ்நாட்டில் 1000-க்கு 21. பேறுகால இறப்பு விகிதம் (Maternal Mortality Rate) குசராத்தில் ஒரு இலட்சத்துக்கு 122; தமிழ்நாட்டில் ஒரு இலட்சத்துக்கு வெறும் 79. குசராத்தில் மனிதர்களின் சராசரி வாழ்நாள் 66.8; தமிழ்நாட்டில் 68.9. உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் எண்ணிக்கை குசராத்தில் 41.6%; அதுவே தமிழ்நாட்டில் 30.9%.
குசராத்தோடு மட்டுமில்லை கேரளத்தைத் தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தோடு ஒப்பிட்டாலும், ஒட்டுமொத்த இந்திய அளவில் பார்த்தாலும் நல்வாழ்வுக் குறியீடுகளில் உயர்ந்துதான் விளங்குவது தமிழ்நாடுதான் (கேரளம் நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது). அட்டவணையைப் பாருங்கள்!
எந்த அனிதா?...
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 196.75 தகைவு மதிப்பெண் (cut-off) பெற்ற அனிதா!...
தன் ஊர் மொத்தத்தின் மருத்துவக் கனவையும் ஒற்றை ஆளாய்ச் சுமந்த அனிதா!...
இந்த நுழைவுத் தேர்வுக்கு எதிராக ஏழ்மை நிலையிலும் உச்சநீதிமன்றம் வரை போராடிய அனிதா!...
உண்மையில் இது தற்கொலையா? இல்லை, தற்கொலைக்குத் தூண்டப்பட்டிருக்கிறார் அந்த வருங்கால மருத்துவர்! நடுவணரசு, மாநில அரசு, நீதித்துறையினர் எனப் பலரும் சேர்ந்து இந்தத் தற்கொலைக்கு அவரைத் தூண்டியிருக்கிறார்கள் என்பதே நாடறிந்த உண்மை! தற்கொலைக்குத் தூண்டுவது சட்டப்படி குற்றம் என்றால் அனிதாவைத் தற்கொலைக்குத் தூண்டிய இவர்களுக்கு என்ன தண்டனை? நீலத் திமிங்கல விளையாட்டை உருவாக்கியவனைத் தற்கொலைக்குத் தூண்டுகிற குற்றத்துக்காகச் சிறைப்படுத்தியிருக்கிறார்கள். அதே போலத் தற்கொலையைத் தூண்டும் இந்தத் தேர்வை உருவாக்கியவர்களுக்கு என்ன தண்டனை?
உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்கிறார்கள், “எல்லா மாநிலங்களும் மருத்துவ நுழைவுத் தேர்வை ஏற்றுக் கொண்டன. தமிழ்நாடு மட்டும் ஏன் வழக்காட வந்திருக்கிறது?” என்று.
ஐயா நீதிபதிகளே! இந்நாட்டில் முதன் முதலாக இந்தித் திணிப்பு கொண்டு வரப்பட்டபொழுது எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன. தமிழ்நாடு மட்டும் எதிர்த்துப் போராடியது. அன்று முதல் சில நாட்களுக்கு முன்பு வரை தமிழ்நாட்டின் மிகப் பெரிய தேச எதிர்ப்புச் செயலாகத்தான் இது பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய நிலைமை என்ன? இந்தித் திணிப்புக்கு எதிராகக் கருநாடகம் கொடி உயர்த்துகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்கு இந்தியில் எழுதிய கடிதத்துக்கு ஒடியாவில் பதில் அனுப்பித் தன் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார் ஒடிசா நாடாளுமன்ற உறுப்பினர். இந்தி எதிர்ப்பால் தமிழ்நாடு பெற்றவையும் தாங்கள் இழந்தவையும் குறித்து சமூக ஊடகங்களில் புலம்புகிறார்கள் பிற மாநிலத்தவர்கள்.
நாங்கள் காட்டிய எதிர்ப்பு சரி என்பதைப் பிற மாநிலத்தினர் உணர எண்பது ஆண்டுகள் ஆகியிருக்கின்றன! அதே போல, இந்த மருத்துவத் தகுதித் தேர்வு முறை தவறு என்பதையும் மற்ற மாநிலங்கள் உணரும் நாள் ஒன்று வரும். ஆனால், அதுவரை நாங்கள் ஏன் காத்திருக்க வேண்டும்? முன்கூட்டியே தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்கும் எங்களை, சிந்திக்காத மற்றவர்களோடு சேர்ந்து சிரமப்படச் சொல்வது என்ன நியாயம்?
இப்படிப் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது அனிதாவின் உயிரிழப்பு!
ஆனால், இப்படி ஒரு கொடுமைக்குப் பின்னும் இங்கே மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாகச் சல்லியடிக்கும் கும்பல் திருந்தவில்லை. போதாததற்கு, இப்பொழுது அனிதாவையும் இழிவுபடுத்தத் தொடங்கியிருக்கிறது அந்த ஈனக் கூட்டம்.
“தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் அளவுக்குத் தமிழ்நாட்டு மாணவர்கள் இன்னும் உயரவில்லை. அவர்களை அதற்குத் தகுதிப்படுத்தும் அளவுக்குத் தமிழ்நாட்டுக் கல்வி முறையின் தரம் இல்லை. அதனால்தான் விலக்குக் கேட்கிறார்கள்” என்கிறது மேற்படி கும்பல். முட்டாள்களே! நாங்கள் திறமை இல்லாமல் விலக்குக் கேட்கவில்லை. அப்படி ஒரு தேர்வை எழுத வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை, அதனால் வேண்டா என்கிறோம், புரிகிறதா?
எந்த விதமான தகுதித் தேர்வும் இன்றி, இன்னும் சொன்னால், தவறான தேர்ந்தெடுப்பு முறையென நீங்கள் காலம் காலமாகத் தூற்றும் இட ஒதுக்கீட்டு முறைப்படிதான் இத்தனை ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் மருத்துப் படிப்புக்கான மாணவச் சேர்க்கை நடைபெறுகிறது. ஆனாலும், நல்வாழ்வு அளவுகோலில் (Heath parameters) தமிழ்நாடு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறித்தான் இருக்கிறது.
எடுத்துக்காட்டாக, நீங்கள் எதற்கெடுத்தாலும் கைகாட்டுகிறீர்களே, அந்த குசராத்தையே ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்வோம். பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் (Infant Mortality Rate) குசராத்தில் 1000-க்கு 38; தமிழ்நாட்டில் 1000-க்கு 21. பேறுகால இறப்பு விகிதம் (Maternal Mortality Rate) குசராத்தில் ஒரு இலட்சத்துக்கு 122; தமிழ்நாட்டில் ஒரு இலட்சத்துக்கு வெறும் 79. குசராத்தில் மனிதர்களின் சராசரி வாழ்நாள் 66.8; தமிழ்நாட்டில் 68.9. உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் எண்ணிக்கை குசராத்தில் 41.6%; அதுவே தமிழ்நாட்டில் 30.9%.
குசராத்தோடு மட்டுமில்லை கேரளத்தைத் தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தோடு ஒப்பிட்டாலும், ஒட்டுமொத்த இந்திய அளவில் பார்த்தாலும் நல்வாழ்வுக் குறியீடுகளில் உயர்ந்துதான் விளங்குவது தமிழ்நாடுதான் (கேரளம் நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது). அட்டவணையைப் பாருங்கள்!
Re: அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
என்ற விதிக்கேற்ப , தொடர்ந்து படிக்க என வந்துள்ள வலைப்பூ முகவரி நீக்கப்படுகிறது ஞானப்பிரகாசன் அவர்களே.இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம்!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
Re: அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
மேற்கோள் செய்த பதிவு: 1247600T.N.Balasubramanian wrote:என்ற விதிக்கேற்ப , தொடர்ந்து படிக்க என வந்துள்ள வலைப்பூ முகவரி நீக்கப்படுகிறது ஞானப்பிரகாசன் அவர்களே.இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம்!
ரமணியன்
இந்த விதி நியாயமானதாகத் தெரியவில்லையே!
Re: அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
மேற்கோள் செய்த பதிவு: 1247623இ.பு.ஞானப்பிரகாசன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1247600T.N.Balasubramanian wrote:என்ற விதிக்கேற்ப , தொடர்ந்து படிக்க என வந்துள்ள வலைப்பூ முகவரி நீக்கப்படுகிறது ஞானப்பிரகாசன் அவர்களே.இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம்!
ரமணியன்
இந்த விதி நியாயமானதாகத் தெரியவில்லையே!
தயவு செய்து விதிமுறைகளை படித்துப் பார்க்கவும்
முக்கியமாக எண் 6 ,15 & 16.
விதிமுறைகளை அனுசரிக்கவும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
Re: அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
உங்கள் பதிவில் முழு செய்தியையும் அல்லது கட்டுரையையும் பதிவிடுங்கள். ஓரிரு பாராவை பதிவு செய்து விட்டு மீதியை படிக்க வேறொரு தளத்தின் சுட்டி பகிர்வது தடை செய்யப்பட்டுள்ளது.இ.பு.ஞானப்பிரகாசன் wrote:T.N.Balasubramanian wrote:என்ற விதிக்கேற்ப , தொடர்ந்து படிக்க என வந்துள்ள வலைப்பூ முகவரி நீக்கப்படுகிறது ஞானப்பிரகாசன் அவர்களே.இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம்!
ரமணியன்
இந்த விதி நியாயமானதாகத் தெரியவில்லையே!
நன்றி
Re: அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
மேற்கோள் செய்த பதிவு: 1247654ராஜா wrote:உங்கள் பதிவில் முழு செய்தியையும் அல்லது கட்டுரையையும் பதிவிடுங்கள். ஓரிரு பாராவை பதிவு செய்து விட்டு மீதியை படிக்க வேறொரு தளத்தின் சுட்டி பகிர்வது தடை செய்யப்பட்டுள்ளது.இ.பு.ஞானப்பிரகாசன் wrote:T.N.Balasubramanian wrote:என்ற விதிக்கேற்ப , தொடர்ந்து படிக்க என வந்துள்ள வலைப்பூ முகவரி நீக்கப்படுகிறது ஞானப்பிரகாசன் அவர்களே.இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம்!
ரமணியன்
இந்த விதி நியாயமானதாகத் தெரியவில்லையே!
நன்றி
புரிகிறது ஐயா! ஆனால், இப்படி ஒரு தடை ஏன், என்ன காரணம் எனத்தான் கேட்கிறேன். இதனால் என்ன பயன்?
பதிவின் மீதிப் பகுதியைப் படிக்க மூலத் தளத்துக்கு வரச் சொல்வதன் மூலம் குறிப்பிட்ட அந்தப் பதிவு எத்தனை பேரைச் சென்றடைந்திருக்கிறது என்பதைப் படைப்பாளியான என்னால் தெரிந்து கொள்ள முடியும். அஃது எனக்குப் பல வகைகளிலும் பலனளிக்கும், ஊக்கமளிக்கும். அதை ஏன் தடை செய்கிறீர்கள் எனத்தான் கேட்கிறேன். சரியான காரணம் ஏதும் இருப்பின் நான் அதை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாகவே உள்ளேன்.
நன்றி!
Re: அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
மேற்கோள் செய்த பதிவு: 1247675இ.பு.ஞானப்பிரகாசன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1247654ராஜா wrote:உங்கள் பதிவில் முழு செய்தியையும் அல்லது கட்டுரையையும் பதிவிடுங்கள். ஓரிரு பாராவை பதிவு செய்து விட்டு மீதியை படிக்க வேறொரு தளத்தின் சுட்டி பகிர்வது தடை செய்யப்பட்டுள்ளது.இ.பு.ஞானப்பிரகாசன் wrote:T.N.Balasubramanian wrote:என்ற விதிக்கேற்ப , தொடர்ந்து படிக்க என வந்துள்ள வலைப்பூ முகவரி நீக்கப்படுகிறது ஞானப்பிரகாசன் அவர்களே.இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம்!
ரமணியன்
இந்த விதி நியாயமானதாகத் தெரியவில்லையே!
நன்றி
புரிகிறது ஐயா! ஆனால், இப்படி ஒரு தடை ஏன், என்ன காரணம் எனத்தான் கேட்கிறேன். இதனால் என்ன பயன்?
பதிவின் மீதிப் பகுதியைப் படிக்க மூலத் தளத்துக்கு வரச் சொல்வதன் மூலம் குறிப்பிட்ட அந்தப் பதிவு எத்தனை பேரைச் சென்றடைந்திருக்கிறது என்பதைப் படைப்பாளியான என்னால் தெரிந்து கொள்ள முடியும். அஃது எனக்குப் பல வகைகளிலும் பலனளிக்கும், ஊக்கமளிக்கும். அதை ஏன் தடை செய்கிறீர்கள் எனத்தான் கேட்கிறேன். சரியான காரணம் ஏதும் இருப்பின் நான் அதை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாகவே உள்ளேன்.
நன்றி!
விதிமுறைகளை படித்து ,அதை அனுசரித்து பதிவிடுங்கள் என்றால் ,அது ஏன்? இது ஏன் ? என்று கேள்விகள் கேட்கிறீர்கள்.
ஆரம்ப காலத்திலும் ஒரு பதிவில் ,வேறொரு பதிவருடன் விவாதங்கள் பண்ணினீர்கள்.
நீங்கள் நினைப்பதையே மற்றவர்கள் ஆமாம் போடவேண்டும் நினைக்காதீர்கள்.
பதிவின் மீதிப் பகுதியைப் படிக்க மூலத் தளத்துக்கு வரச் சொல்வதன் மூலம் குறிப்பிட்ட அந்தப் பதிவு எத்தனை பேரைச் சென்றடைந்திருக்கிறது என்பதைப் படைப்பாளியான என்னால் தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வலைப்பூ உங்களுடையதுதானே !
அப்பிடி என்றால் ,அதை அப்பிடியே ,ஈகரையில் பதிவு செய்யுங்களேன். அதை படிப்பவர்கள் படிக்கட்டுமே.
ஏன் ,இப்போது யாரும் அதை படிப்பது இல்லையா? ஏன் தனியாக அதற்கு அழைப்பு விடுகிறீர்கள்.?
உங்கள் சந்தேகங்களை எப்பிடி கேட்கவேண்டுமோ அந்த முறையில் கேளுங்கள்.அதற்குதான் விதிமுறைகளை படிக்கவும் என்பது.
அடிப்படை விதிமுறைகளை ஏன் எதற்கு கேள்வி கேட்டு ஆராய்ச்சி கூடமாக மாற்றவேண்டாம்.
புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
Re: அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
விதிமுறைகளை படித்து ,அதை அனுசரித்து பதிவிடுங்கள் என்றால் ,அது ஏன்? இது ஏன் ? என்று கேள்விகள் கேட்கிறீர்கள்.
ஆரம்ப காலத்திலும் ஒரு பதிவில் ,வேறொரு பதிவருடன் விவாதங்கள் பண்ணினீர்கள்.
நீங்கள் நினைப்பதையே மற்றவர்கள் ஆமாம் போடவேண்டும் நினைக்காதீர்கள்.பதிவின் மீதிப் பகுதியைப் படிக்க மூலத் தளத்துக்கு வரச் சொல்வதன் மூலம் குறிப்பிட்ட அந்தப் பதிவு எத்தனை பேரைச் சென்றடைந்திருக்கிறது என்பதைப் படைப்பாளியான என்னால் தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வலைப்பூ உங்களுடையதுதானே !
அப்பிடி என்றால் ,அதை அப்பிடியே ,ஈகரையில் பதிவு செய்யுங்களேன். அதை படிப்பவர்கள் படிக்கட்டுமே.
ஏன் ,இப்போது யாரும் அதை படிப்பது இல்லையா? ஏன் தனியாக அதற்கு அழைப்பு விடுகிறீர்கள்.?
உங்கள் சந்தேகங்களை எப்பிடி கேட்கவேண்டுமோ அந்த முறையில் கேளுங்கள்.அதற்குதான் விதிமுறைகளை படிக்கவும் என்பது.
அடிப்படை விதிமுறைகளை ஏன் எதற்கு கேள்வி கேட்டு ஆராய்ச்சி கூடமாக மாற்றவேண்டாம்.
புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
ரமணியன்
விதிமுறை என்றால் அதற்கென ஒரு நியாயம் இருக்கும் என்று நம்பித்தான் அதைத் தெரிந்து கொள்வதற்காகக் கேட்டேன். அதற்கு ஏன் உங்களுக்கு இவ்வளவு சினம் வருகிறது என எனக்குப் புரியவில்லை. மேலும், மடலாடல் குழுக்கள் என்பவையே நல்ல விவாதங்களுக்காகத்தாம் என்பது என் புரிதல். அது தவறாகவும் இருக்கலாம். ஆனால், தவறு எனத் தெரியும் வரை ஒருவர் அதையே சரி என நம்பி அதன்படி இயங்குவதுதான் இயல்பு. அவ்வகையில், நானும் எனக்கு நல்லது எனத் தோன்றிய வகையில் என் விவாதக் கருத்துக்களை முன்வைத்தேன், அவ்வளவுதான். ஆனால், நீங்கள் கேள்வி கேட்பது தவறு, விவாதம் செய்வது தவறு என்கிறீர்கள். "எதையும் கண்மூடித்தனமாகக் கடைப்பிடிக்காதே! கேள்வி கேட்டுப் புரிந்து கடைப்பிடி!" என்ற ஆன்றோர் வாக்குக்கும், சக மனிதர்களுடனான உரையாடலை வளர்ப்பதே நோக்கமாகக் கொண்டு மலர்ந்த சமூக ஊடகங்களின் அடிப்படைக்குமே இவை முரணாக இருக்கின்றன.
சரி, தளம் உங்களுடையது. அதை எப்படி வேண்டுமானாலும் நடத்த உங்களுக்கு உரிமை உண்டு. எனவே, அது பற்றி நான் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் அதே போல, என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கவும், என் தளத்தின் பிரபலத்தன்மை பற்றி இழித்துரைக்கவும் உங்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை என நினைக்கிறேன். "இப்போது யாரும் அதை (என் தளத்தை) படிப்பது இல்லையா? ஏன் தனியாக அதற்கு அழைப்பு விடுகிறீர்கள்?" என்று நீங்கள் கேட்டிருப்பது மிகவும் நாகரிகமற்ற செயல்! பெரியவரான நீங்கள் இப்படிப் பேசுவது அழகில்லை.
"நீங்கள் நினைப்பதையே மற்றவர்கள் ஆமாம் போடவேண்டும் நினைக்காதீர்கள்" என்று நீங்கள் பேசியிருப்பது தேவையற்ற ஒன்று. தான் நினைப்பதற்குத்தான் மற்றவர்கள் ஆமாம் போட வேண்டும் என நினைப்பவனாக இருந்தால், விதிமுறைகள் பற்றி அறிந்து கொள்ள விரும்ப மாட்டான். மாறாக, இப்படி ஒரு விதிமுறையே தவறு அதை மாற்றுங்கள் என்பான். நான் அப்படிக் கூறவில்லை. தெரிந்து கொள்ளத்தான் விரும்பினேன்.
இதற்கு முன்பு நான் இதே போல் என் பதிவை இங்கு பகிர்ந்தபொழுதும் பாதியில் நிறுத்தி மிச்சத்தை என் தளத்துக்கு வந்து படிக்கும்படிதான் வைத்திருந்தேன். அப்பொழுது நீங்கள் ஏதும் கூறவில்லை. மாறாக, கட்டுரையைப் பாராட்டினீர்கள். இப்பொழுது மட்டும் இப்படி நீங்கள் இப்படிச் சொல்வதோடு மட்டுமின்றி, வெறுமே கேள்வி எழுப்பியதற்கே என்னையும் என் எழுத்தையும் இவ்வளவு இகழ்ந்துரைக்கிறீர்கள் என்றால் அதற்கு என்ன காரணம் என எனக்குப் புரியவில்லை.
எப்படியோ, இனி இது சரி வராது. மரியாதை இல்லாத இடத்தில் இனியும் நான் இருக்கப் போவதில்லை. இனி நான் ஈகரைக்கு வர மாட்டேன். விடைபெறுகிறேன்!
ஆனால், என்னை இத்தோடு நீங்கள் விட்டு விட்டால் மகிழ்ச்சி! மாறாக, என் வெளியேற்றம் பற்றியும் தொடர்ந்து இங்கு மரியாதைக்குறைவாக ஏதாவது பேசப்பட்டால் அதற்கு பதிலளிக்க நான் திரும்பவும் வர வேண்டியிருக்கும். அப்படி வர நேர்ந்தால் அப்பொழுது என் சொற்கள் இதே போல் பணிவாக இருக்கும் எனச் சொல்ல முடியாது.
எனவே, இத்தோடு முடித்துக் கொள்ளலாம். வணக்கம்!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நீலத் திமிங்கலம்
» மருத்துவ படிப்புக்கு தேசிய நுழைவுத்தேர்வு ரத்தாகிறது? நாடு முழுவதும் எதிர்ப்பு எதிரொலி
» ‘நீட்’ எனப்படும் தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்த…
» மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26-ல் நடைபெறும்- மத்திய அரசு
» உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)
» மருத்துவ படிப்புக்கு தேசிய நுழைவுத்தேர்வு ரத்தாகிறது? நாடு முழுவதும் எதிர்ப்பு எதிரொலி
» ‘நீட்’ எனப்படும் தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்த…
» மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26-ல் நடைபெறும்- மத்திய அரசு
» உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|