புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தற்கொலைகள்  Poll_c10தற்கொலைகள்  Poll_m10தற்கொலைகள்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தற்கொலைகள்  Poll_c10தற்கொலைகள்  Poll_m10தற்கொலைகள்  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
தற்கொலைகள்  Poll_c10தற்கொலைகள்  Poll_m10தற்கொலைகள்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தற்கொலைகள்  Poll_c10தற்கொலைகள்  Poll_m10தற்கொலைகள்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தற்கொலைகள்  Poll_c10தற்கொலைகள்  Poll_m10தற்கொலைகள்  Poll_c10 
21 Posts - 4%
prajai
தற்கொலைகள்  Poll_c10தற்கொலைகள்  Poll_m10தற்கொலைகள்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தற்கொலைகள்  Poll_c10தற்கொலைகள்  Poll_m10தற்கொலைகள்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தற்கொலைகள்  Poll_c10தற்கொலைகள்  Poll_m10தற்கொலைகள்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தற்கொலைகள்  Poll_c10தற்கொலைகள்  Poll_m10தற்கொலைகள்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தற்கொலைகள்  Poll_c10தற்கொலைகள்  Poll_m10தற்கொலைகள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தற்கொலைகள்  Poll_c10தற்கொலைகள்  Poll_m10தற்கொலைகள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலைகள்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Sep 02, 2017 10:09 am

நேற்று நிகழ்ந்த அரியலூர் மாணவிஅனிதாவின் மருத்துவப்படிப்பு கிடைக்காத துயரத்தால் நடந்த தற்கொலை, அனைத்து தரப்பு மக்களையம் அதிர்ச்சியிலும் ,
துயரத்திலும் ஆழ்த்தியது .
மேலும் நாளுக்கு ஒன்றாகத் தொடரும் புளூவேல் விளையாட்டுக்கான மாணவர்களின் தற்கொலைகள் மதுரை ,புதுச்சேரி என நீளுகிறது .
வேண்டாமே இத்தகைய விபரீத விளையாட்டுகள் !
விழித்துக்கொள்வோம்

எந்தவகையிலும் தற்கொலைகள்  UwWUUdIQSCyeBPJOAEXs+21நியாயப்படுத்த இயலாதது .தன்னைத் தானே கொலை செய்துகொள்வது எத்தகைய கொடுமை .?
அவர்களை சார்ந்தவர்களின் துயரம் அவர்கள் வாழ்நாள் வரை நீடிக்கும் !அவர்களை எப்படி தேற்றுவது ?
சமீபத்தில் தமிழ் இந்துவில் வெளிவந்த நல்ல ஒரு கட்டுரையை பகிர எண்ணுகிறேன் .
அண்ணாமலை சுகுமாரன்
2/9/17

உலகத் தற்கொலைத் தடுப்பு நாள்: செப். 10

உலகில் 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். நாள் ஒன்றுக்கு 3,000 பேர் தங்களையே மாய்த்துக் கொள்கின்றனர். ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இப்படி மடிகின்றனர். 15 முதல் 29 வயதுடைய இளைஞர்கள் இறந்து போவதற்கான காரணங்களில் தற்கொலை இரண்டாவது காரணமாக இருக்கிறது.
நம் நாட்டில் லட்சத்துக்கு 16 பேர் தற்கொலையால் இறக்கின்றனர். இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 3 % தற்கொலைகள். இதில் 40 % பேர் ஆண்கள், 60 % பேர் பெண்கள்.
ஏன் இந்த எண்ணம்?

நமது முன் மூளைப் பகுதி மூளையின் மற்றப் பகுதிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு நம் மனம், எண்ணம், எழுச்சி, சமூகப் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளுக்கும் காரணமாக அமைந்து மனிதனை வாழ வைக்கிறது.
இந்த ஒருங்கிணைந்த மூளைச் செயல்பாட்டில் சுற்றுச்சூழல் தாக்கமும், உடல் உள்ளுணர்வு தாக்கமும் எல்லைமீறும்போது தற்கொலை எண்ணம் தோன்றுகிறது. அது தீவிரமடையும்போது ஒருவரது மனம் அவசர முடிவு எடுத்துத் தற்கொலை அரங்கேறி விடுகிறது. தற்கொலைக்கு முயற்சிப்பவர்களில் 20-ல் ஒருவர் இறந்து விடுகிறார்.
காரணங்கள்
தற்கொலை எண்ணம் ஏற்பட முக்கியக் காரணம் மனநோய்களும் நரம்புக் கோளாறுகளும். அடுத்ததாக மதுப் பழக்கம், போதைப்பொருள் பழக்கம், புகைபிடிக்கும் பழக்கம், தகாத பாலுறவு, சீட்டு விளையாடுதல், திருட்டு, சமூகவிரோத குணம், கடன் வாங்குதல் உள்ளிட்டவை தற்கொலையைத் தூண்டுகின்றன.
இதைத் தவிர வேலையின்மை, வீட்டுச் சண்டை சச்சரவு, கடன் தொல்லை, பரீட்சை தோல்வி, வேலை செய்யும் இடங்களில் சித்திரவதை, குடும்பங்களில் சித்திரவதை, இளம்வயது திருமணங்கள், பாலியல் தொந்தரவுகள் ஆகியவையும் தற்கொலைக்குக் காரணங்கள்தான்.

இன்றைக்கு அதிகச் செல்போன், வலைத்தள பயன்பாடும்கூடத் தற்கொலைக்கு வித்திடக் கூடியவையாக இருக்கின்றன. தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் தங்கள் எண்ணத்தை நிறைவேற்ற கிடைக்கும் எந்தச் சூழ்நிலையையும் பொருட்களையும் பயன்படுத்திக் கொள்ள முற்படுகிறார்கள்.
தடுப்பு நாள்
தற்கொலைகளைத் தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலகச் சுகாதார நிறுவனமும் சர்வதேசத் தற்கொலை தடுப்புக் கழகமும் இணைந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ம் தேதியை உலகத் தற்கொலை தடுப்பு நாளாக அனுசரித்து வருகின்றன. 2003 முதல் இது அனுசரிக்கப்படுகிறது.

இந்த 12வது உலகத் தற்கொலை தடுப்பு நாளின் மையக் கருத்து ‘தற்கொலைத் தடுப்பில் ஒருங்கிணைந்த செயலாக்கம்'.
நம் பங்கு
தமிழகத்தில் மனநோய்களுக்கான மருத்துவச் சிகிச்சை நடமாடும் மாவட்ட மனநலத் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இங்கே மனநல மாற்றம் காரணமாக ஏற்படும் தற்கொலை எண்ணத்தைத் தடுக்க உரிய மருந்துகளை இலவசமாகப் பெறலாம்.
மேலும் தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 104 மருத்துவ ஆலோசனை உதவி எண் மூலம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெளிவு பெற முடியும். சமூகத்தில் நடக்கும் தற்கொலைகளைத் தடுப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஒரு சமூகமாக நாம் ஒருங்கிணைந்து செயல்படுவதே இதற்குத் தீர்வு.தனிமைப்பட்டு இருப்பவர்களிடம்தான் அதிகமான தற்கொலை எண்ணங்கள் ஏற்படுகின்றன. குடும்பங்களிலும் நட்பு வட்டத்திலும் யாரையும் தனிமைப்படுத்தாமல் உறுதியான பிணைப்புடன், இணக்கமாக வாழும்போது தற்கொலைகளைப் பெருமளவு தடுக்க முடியும்.
இலவச உளவியல் ஆலோசனை
தமிழகத்தில் தற்கொலைத் தடுப்பு இலவச உளவியல் ஆலோசனை வழங்கும் முன்னோடி அமைப்பு சிநேகா. இந்த நிறுவனத்தின் தொலைபேசி உதவி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்: 044-2464 0050, 044-2464 0060 நேரடியாக காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஆலோசனை பெறலாம். முகவரி: 11, பார்க் வியூ சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028

மின்னஞ்சல் தொடர்புகொள்ள: help@snehaindia.org
புதுச்சேரியில் தற்கொலைத் தடுப்பு உளவியல் ஆலோசனை வழங்கும் அமைப்பு மைத்ரேயி. தொலைபேசி எண்: 0413-2339999, மின்னஞ்சல் முகவரி: bimaitreyi@rediffmail.com. நேரடியாக மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அணுகலாம். முகவரி: 225, தியாகமுதலி தெரு, புதுச்சேரி - 615001
கட்டுரையாளர் மூளை நரம்பியல் பேராசிரியர்,
வலிப்பு நோய் நிபுணர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 02, 2017 8:00 pm

சோகம்

தற்கொலைகள்  1571444738 :



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக