புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_m10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10 
81 Posts - 61%
heezulia
தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_m10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_m10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_m10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_m10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10 
1 Post - 1%
viyasan
தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_m10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10 
1 Post - 1%
eraeravi
தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_m10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_m10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10 
273 Posts - 45%
heezulia
தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_m10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10 
229 Posts - 37%
mohamed nizamudeen
தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_m10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_m10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_m10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10 
19 Posts - 3%
prajai
தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_m10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_m10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_m10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_m10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_m10தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2009 12:33 am

தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் P6கறுப்புச் சேலை கட்டிய செல்வி ஜெயலலிதா, அப்போதைய அமெரிக்கத் தூதரக அதிகாரி விக்டேக்கர் முன்னால் நிற்கிறார்.

'இது எங்கள் நாட்டுப் பிரச்னை இல்லையே?' என்று கேட்கிறார் அதிகாரி. 'ஆனால், நீங்கள்தானே இலங்கைக்கு உதவி செய்கிறீர்கள்? நித்தமும் மனித உரிமை பேசுகின்ற அமெரிக்கா, இலங்கைக்கு எப்படி உதவி செய்யலாம்? மேலும், உங்கள் நாடு திரிகோணமலையில் ராணுவ தளத்தை அமைப்பது எங்களுக்கு நல்லதல்ல' என்று வெடிக்கிறார்.

'இலங்கையில் தமிழனைக் கொல்லாதே' என்று சொல்லி, சென்னை அண்ணா சாலையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஊர்வலமாகப் போனதை

மேடையில் நின்று எம்.ஜி.ஆர். பார்க்கிறார். முடிவில்தான் அமெரிக்கத் தூதரைப் போய் ஜெயலலிதா சந்தித்தது. இது நடந்து சரியாக 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இப்போது அதே அண்ணா சாலைக்கு அருகில் ஜெயலலிதா தனது கோபத்தை இந்திய அரசாங்கத்தின் பக்கமாகத் திருப்பியிருக்கிறார். ''இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலையை இந்திய அரசு வெறுமனே பார்த்துக்கொண்டு இருக்கிறது. அனைத்துக்கும் புது டெல்லியே மௌன சாட்சி என்பது மட்டுமல்ல, இந்த கொடூரச் செயல்கள் அனைத்துக்கும் கூட்டாளியாகவும் இந்திய அரசு செயல்படுகிறது. ஆயுதங்களையும், ரேடார்களையும் இலங்கை ராணுவத்துக்கு வழங்கி பயிற்சி அளித்ததன் மூலம், இந்தக் கோர சம்பவங்களுக்கு முழுப் பங்குதாரராக இந்திய அரசு செயல்படுகிறது'' என்ற பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து உண்ணாவிரதம் உட்கார்ந்தது, முதல்வர் கருணாநிதிக்கும் காங்கிரஸூக்கும் செரிமானம் ஆவதில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதியை அறிவித்த கணமே, கருணாநிதி முகத்தில் சந்தோஷக் களை. 'இனி யாரும் இலங்கை விவகாரத்தைப் பேசி, சிக்கல் ஏற்படுத்த மாட்டார்கள்' என்று நினைத்தார். ஆனால், போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டு வந்தது புதிய ராக்கெட்! சோனியா கோட்டையிலும் நிறையவே அதிர்ச்சி அலைகள். அதனால்தான் எந்நாளும் இல்லாத திருநாளாக, 'இது அனைவரும் வரவேற்கத்தக்க செய்தியாகும்' என்று கருணாநிதியே சொல்லியாக வேண்டிய கட்டாயம்.

ஜெயலலிதா மீது விமர்சனங்கள் வைத்தாலும், அவரது உண்ணாவிரதத்தை தமிழ் உணர்வாளர்கள் வரவேற்கிறார்கள். திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், 'ஜெயலலிதா உண்மையில் ஈழத் தமிழர்களுக்காகத்தான் உண்ணா விரதம் இருக்கிறார் என்பதை நான் நம்பவில்லை. ஆனால், ஈழத் தமிழருக்காகப் பேசினால்தான் தமிழ் நாட்டு மக்களிடம் வாக்கு கிடைக்கும் என்று புரிந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சிதான்'' என்கிறார். 'கருணாநிதி எதைக் கோட்டை விட்டாரோ, அதை ஜெயலலிதா பிடித்துக்கொண்டார்' என்று சென்னை இளைஞர் பேரவை நடத்திய கூட்டத்தில் தமிழருவி மணியன் சொன்னபோது பயங்கர கைத்தட்டல்.

கடந்த ஐந்து மாதங்களாக இலங்கை குறித்த கொதிநிலையில் இருந்த தமிழ்நாட்டுக்குத் தீனி போடுவதாக அமைந்துவிட்டது ஜெயலலிதாவின் உண்ணாவிரதம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2009 12:34 am

தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் P6aஆறு மாதம் கழித்து அவர் உண்ணாவிரதம் இருப்பது அரசியல் லாபத்துக்காகத்தான் என்று விமர்சிக்கப்பட்டாலும், ஐந்து மாதத்துக்கு முன் அவர் வெளியிட்ட இரண்டு அறிக்கைகள் முக்கியமானவை. 'இலங்கை மக்களின் சுய நிர்ணயப் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்' என்று அறிக்கை எழுதிய ஜெயலலிதா, பத்திரிகைகளுக்கு அனுப்புவதற்கு முன் ஒரு பிரதி எடுத்து வைகோவுக்குக் கொடுத்தனுப்பினார். ஆனால், மறு நாளே திடீரென்று மனம் மாறி, புலிகளைக் காய்த்தெடுத்து அறிக்கைவிட்டார். மத்திய உளவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் ஜெயலலிதாவைச் சந்தித்து மனமாற்றம் செய்துவிட்டதாக நெடுமாறன் சொன்னார். அதன் பிறகு ஜெயலலிதாவிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. திடீரென்று உண்ணாவிரதம் உட்காரக் காரணம், தனியார் நிறுவனம் ஒன்று எடுத்துக் கொடுத்த கருத்துக்கணிப்புதானாம். 'இலங்கை விவகாரத்தால் காங்கிரஸ் கட்சி மீது தமிழ் மக்கள் மத்தியில் அதிகக் கோபம் இருக்கிறது' என்பதாகச் சொல்கிறது அந்த அறிக்கை. எனவே, இதுவரை தான் வைத்திருந்த சில பிடிவாதங்களைத் தளர்த்திவிட்டு, ஈழ விஷயத்தைக் கையில் எடுத்தார். 'தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று வர, இந்த ஒரு விஷயம் போதும்' என்று அவர் முடிவுக்கு வந்துவிட்டார். அதையும் தவிர, ஈழ விவகாரத்தில் ஆர்வம் காட்டும் சிறிய, பெரிய கட்சிகளை அடுத்தடுத்து ஒரு கூட்டணிக் குடையின்கீழ் கொண்டுவருவதன்மூலம், ஆளுங்கட்சியான காங்கிரஸைக் காய்ச்சியெடுக்கும் வேலையை மிகச் சுலபமாக... அதே சமயம் மிகத் தீவிரமாக நடத்தி முடிக்க முடியும் என்றும் ஜெயலலிதா கணக்குப் போட்டிருக்கிறார்!

உண்ணாவிரத மேடையில் இந்திய கம்யூனிஸ்ட் தா.பாண்டியன், 'இது தர்மப் போராட்டம்' என்று கர்ஜித்தார். வைகோவுக்குச் சொல்லவே வேண்டாம். தேக்கிவைத்திருந்த உணர்ச்சி மொத்தத்தையும் மெரினா காற்றோடு பாய்ச்சிய வைகோ, 'உங்களுக்கு நான் நன்றி சொல்வது அரசியலுக்காக அல்ல. எங்களுக்காகப் பேச நாதியே இல்லையா என்று அழுத ஈழத் தமிழனுக்காகத்தான்' என்று உருகினார். 'இனி எனக்கு ஈழத்தைப் பற்றிப் பேச கூட்டணிக்குள் தடை என்பதே இல்லை' என்ற மகிழ்ச்சிப் பேரலை அவர் பேச்சில் தெறித்தது.

இலங்கைத் தமிழருக்கு ஆதரவு என்ற எல்லையைத் தாண்டி, தனது அரசியல் நிலையை ஜெயலலிதா தெளிவுபடுத்தியது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. 'சுயநிர்ணய உரிமை வேண்டி அவர்கள் நடத்தும் போராட்டத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்' என்ற ஜெயலலிதா, 'இலங்கை அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு கேட்டு அவர்கள் நடத்தும் போராட்டத்தை ஆதரிக்கிறோம்' என்று சொல்லியிருப்பது திடீர் திருப்பம்.

'உண்ணாவிரதம் முடியறதுக்குள்ள வரப் போறாரு ராமதாஸூ! அவர்தான் அம்மாவுக்குக் கொடுக்கப் போறாரு ஜூஸூ' என்று படபடப்போடு பேசிக்கொண்டு இருந்த ரத்தத்தின் ரத்தங்களுக்கு அன்று ராமதாஸ் வராததில் சின்ன வருத்தம்தான். இருந்தாலும், 'கலைடாஸ்கோப்' வண்ணங்களுடன் கூட்டணிக்குள் புதிய மாற்றங்கள் வருமெனக் காத்திருக்கிறார்கள் அவர்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2009 12:35 am

தனி நாடு போய்ஷ் அனுப்பும் புது ராக்கெட் P7ஜெயலலிதாவுக்கு பிப்ரவரி 24, பிறந்த நாள். இலங்கைத் தமிழர்களுக்காகப் பிறந்த நாள் கொண்டாடப் போவதில்லை என்று அறிவித்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் மார்ச் 10 உண்ணாவிரதம் என்று அறிவித்தார். ஆனால், போலீஸ் அனுமதி தரவில்லை. ஒன்பதாம் தேதி கிடைக்குமா?' என்று ஜெயலலிதா கேட்டபோது, சசிகலாவுக்கு ஆச்சர்யமாம்! காரணம், ஒன்பதாம் தேதிதான் ஜெயலலிதாவுக்கு நட்சத்திரப்படி பிறந்த நாள்.

அன்றைய தினம் வெயில் இல்லாமல், சூரியக் கதிர்களே உண்ணாவிரதப் பந்தல் பக்கம் வராமல் இருந்தது ஜெயலலிதாவை மகிழ்வித்த இன்னொரு சென்டிமென்ட்!

நன்றி:விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக