புதிய பதிவுகள்
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 20:03

» வா.ஃக்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 0:37

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:59

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 0:38

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 0:34

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்களின் மருத்துவம் Poll_c10மலர்களின் மருத்துவம் Poll_m10மலர்களின் மருத்துவம் Poll_c10 
50 Posts - 67%
heezulia
மலர்களின் மருத்துவம் Poll_c10மலர்களின் மருத்துவம் Poll_m10மலர்களின் மருத்துவம் Poll_c10 
21 Posts - 28%
வேல்முருகன் காசி
மலர்களின் மருத்துவம் Poll_c10மலர்களின் மருத்துவம் Poll_m10மலர்களின் மருத்துவம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மலர்களின் மருத்துவம் Poll_c10மலர்களின் மருத்துவம் Poll_m10மலர்களின் மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
viyasan
மலர்களின் மருத்துவம் Poll_c10மலர்களின் மருத்துவம் Poll_m10மலர்களின் மருத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்களின் மருத்துவம் Poll_c10மலர்களின் மருத்துவம் Poll_m10மலர்களின் மருத்துவம் Poll_c10 
226 Posts - 42%
heezulia
மலர்களின் மருத்துவம் Poll_c10மலர்களின் மருத்துவம் Poll_m10மலர்களின் மருத்துவம் Poll_c10 
216 Posts - 40%
mohamed nizamudeen
மலர்களின் மருத்துவம் Poll_c10மலர்களின் மருத்துவம் Poll_m10மலர்களின் மருத்துவம் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலர்களின் மருத்துவம் Poll_c10மலர்களின் மருத்துவம் Poll_m10மலர்களின் மருத்துவம் Poll_c10 
21 Posts - 4%
prajai
மலர்களின் மருத்துவம் Poll_c10மலர்களின் மருத்துவம் Poll_m10மலர்களின் மருத்துவம் Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
மலர்களின் மருத்துவம் Poll_c10மலர்களின் மருத்துவம் Poll_m10மலர்களின் மருத்துவம் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
மலர்களின் மருத்துவம் Poll_c10மலர்களின் மருத்துவம் Poll_m10மலர்களின் மருத்துவம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மலர்களின் மருத்துவம் Poll_c10மலர்களின் மருத்துவம் Poll_m10மலர்களின் மருத்துவம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மலர்களின் மருத்துவம் Poll_c10மலர்களின் மருத்துவம் Poll_m10மலர்களின் மருத்துவம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலர்களின் மருத்துவம் Poll_c10மலர்களின் மருத்துவம் Poll_m10மலர்களின் மருத்துவம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்களின் மருத்துவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 24 Mar 2009 - 2:51

முருங்கைப்பூ: பித்தம் நீக்கும். வாந்தி குணமாகும். கண்கள் குளிர்ச்சி அடையும்.
காம உணர்வு அதிகமாக்கும்.

செந்தாழம்பூ: தலைவலி தீரும். கபம், ஜலதோசம், வாத நோய் ஆகியவை அகலும். உடலுக்கு அழகு அளிக்கும்.

செவ்வகந்திப்பூ: உடற்சுடு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற நோய்களை குணமாக்கும்.

அகத்திப்பூ: பீடி,சிகரெட், சுருட்டு, உக்கா போன்றவற்றை பிடிப்பதால் ஏற்படுகின்ற விச சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும் சூட்டையும் நீக்கும்.

வாகைப்பூ: கசப்பு சுவையுடைய இப்பூவினால் உண்டாகும் சுட்டையும் நீக்கும்.

இலுப்பைப்பூ:நல்ல சுவையுடைய இப்பூவினால் பாம்பு விஷம், வாத நோய் குணமாகும்.புளியம்பூ : மலையை சார்ந்த காட்டில் முளைக்கும் இப்பூவினால் பித்த நோய், சுவையின்மை வாந்தி ஆகியவை தீரும்.

மாதுளம்பூ. அனல் பித்தம், ஏப்பம், வாந்தி, இரத்த மூலம் ஆகிய நோய் நீங்கும்.இரத்தம் மிகுதியாகும்.உடலுக்கு ஊட்டம் அளிக்கும்.

வேப்பம்பூ: நாட்பட்ட பூவினால் ஏப்பம்,சுவையின்மை, மலப்புழுக்கள்,நாக்கு நோய்கள் ஜன்னி ஆகிய நோய்கள் தீரும்.பனம்பூ: பல் நோய், சிறுகட்டு, வாத குன்மம்,நாட்பட்ட சுரம் ஆகியவை தீரும்.

முள்முருக்கம்பூ:
சூதக கட்டு [மாத விலக்கு தடை ] நீங்கும்.

வாழைப்பூ.
சீதபேதி, இரத்தமூலம், பால்வினை நோய், வெள்ளைப்பாடு, இருமல், உடற்சூடு, கைகால் எரிச்சல் ஆகியவை குணமாகும்.விந்து விருத்தியாகும்.

தென்னம்பூ:
பால்வினை நோய்,வெள்ளை ஒழுக்கு, உடலில் உள் கொதிப்பு,இரத்த போக்கு, விஷக்கடி நோய்கள் நீங்கும் குருக்கத்திப்பு. கசப்பும்,இனிப்பும் சுவையுள்ள இப்பூவினால்,தலைநோய்,தாகம்,கபம்,புண், பித்தம்,பல்வகை விஷக்கடி ஆகியவை குணமாக்கும்.அழகுக்காவும், ஆராதனைக்காவும் மட்டுமே பூக்கள் என்று பலர் நினைக்கிறார்கள். பச்சிலைப் போல பூக்களும் நோய் நீக்கும் மருந்துகளாக ஆயுர்வேதத்திலும் யுனானி வைத்தியதிலும் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 24 Mar 2009 - 2:53

பொதுவாக நம் பெண்கள் கூந்தலில் நிறைய மலர்களை சூடிக்கொள்வதைக் காணலாம். இது பெண்களுக்கு அழகை தந்தாலும், அதிலும் ஒரு மகத்துவம் அடங்கியுள்ளது. இன்று விஞ்ஞானம் கண்டதை,அன்று மெய்யானம் நடைமுறைப்படுத்தியது.

இன்று பெண்கள் தலைக் குளித்தால் கூந்தலை மின்காந்த சுட்டிலில் உலர வைக்கிறார்கள். இந்த மின்காந்தம் கூந்தலை உதிரிவைப்பதுடன், மூளையையும் நாளடையில் பதிப்புர செய்கிறது.[மூளையின் அணுக்களை மெல்ல,மெல்லச் சாகடிக்கிறது]

மலருக்கு இயற்கையான ஒரு தன்மையுண்டு. பஞ்சினைப் போல் ஈரத்தை உறிஞ்சும் தன்மையுண்டு. கூந்தலில் நிறைய மலர்களை சூடும்போது, கூந்தலிளுள்ள ஈரத்தினை ஈர்த்துவிடுகிறது.அதோடு கூந்தலுக்கு அழகையும் தருகிறது.

மணப்பெண்ணுக்கும், ஆடவரை மயக்க நினைக்க பெண்ணுக்கும் மல்லிகை ஒரு வரப்பிரசாதம். மல்லிகை மணம் பட்டாலே மன்மதனும் மயங்கி விடுவானே! நமது சமயத்தின் பண்பாட்டின்அன்றாட வாழ்க்கையில்,ஆடைஅணிகளில், வாழ்க்கைமுறைகளில் நாம் இயற்க்கையோடு இயந்துத்தான் வாழ்கிறோம்,

மல்லிகை பூ:
இல்லறதில் ஆர்வமுண்டாக்கும். கபம், கண் மயக்கம், உடற்சூடு, குறையும். உடலுக்கு சூட்டை அளிக்கும்.அதிகப் பால்சுரப்பால் அவதியுரும் பெண்கள் இப்பூவை மார்பில் மூன்று நாட்கள் கட்டி வந்தால் பால்சுரப்பு குறையும். பன்னீர் பூ: வாந்தி, நாக்கில் சுவையின்மை, விந்துவிரையம், தண்ணீர் தாகம், உடற்சூடு ஆகியவை தீரும்.

மந்தார்ப்பூ: உடல் கொதிப்பு நீங்கும். கண்கள் குளிச்சியடையும்.உடலும் குளிச்சியடையும்.

மகிழம்பூ: இதனை முகர வாந்தி நிற்கும்.உடலிலுள்ள அனல் நீங்கும். புணர்ச்சியின் மீது ஆசையுண்டாகும்.

புன்னைப்பூ: கரப்பான்,சொறி,சிறங்கு, பால்வினைநோய் ஆகியவை நீங்கும்.
ஆனால், பித்த மயக்கம் ஏற்படும்.

பாதிரிப்பூ: பித்த சுரம் நீங்கும்.வெள்ளை போக்கு நிற்கும்.

பச்சைக் குங்குமப்பூ: மூக்கடைப்பு ஜலதோஷம், காது நோய், கப-பித்த நோய்கள் நீங்கும்

சண்பகப்பூ: வாத பித்த நோய், எலும்பு காய்ச்சல், பால்வினை நோய், விந்துவிரையம் ஆகியவை தீரும். வாசனை மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.இந்தப் பூக்களை நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி, நீங்கும்

கொன்றைப்பூ: சர்க்கரை நோய், குடல்வலி, மலப்புழுக்கள் யாவும் ஒழியும். காட்டாத்திப்பூ: சீதபேதி, இரத்த பேதி,பால்வினை நோய் குணமாகும். செடியின் மலர் வகை.தும்பைப்பூ; தாகம்,கண் நோய்கள், ஜன்னி பாத சுரம் யாவும் தீரும்.

கருஞ்செம்பைப்பூ: கபநோய்,மூக்கடைப்பு, தலைவலி,வாத நோய் போன்றவைகள் குணமாகும்.

செம்பருத்தி பூ: வெட்டைச் சூடு நீங்கத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுத்தம் செய்யப்பட்ட பூவைச் சாப்பிட்டு வரலாம். உடலின்
உஷ்ணத்தைத் தக்கும். இதயத்தைபலப்படுத்தும்.

களாப்பூ: கண்களைத் தாக்கும் கரும்படலம், வெண்படலம்,ரத்தப் படலம்,சதைபடலம் போன்ற கண் நோய்களை அகற்றும்.

அலாப்பூ: பித்தம்,உடற்சூடு,சொறிசிரங்கு, புண் இரத்தம், தலையில் நமைச்சல் ஆகியவை நீங்கும்.

அகத்திப்பூ: எலும்புகளையும் பற்களையும் வளரச் செய்யும், சுண்ணாம்புச் சத்து அகத்திப்பூவில் அதிகம் இருக்கிறது.fணரண சக்திகும் மலச்சிக்கலை நீக்கவும் உதவும்.இம்மலரை தாரளமாகச் சமைத்துச் சாப்பிடலாம்.

அல்லிப் பூ: நீரிழிவை நீக்கும்.புண்களை ஆற்றும்.வெப்பச் சுட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீரும். இதை சர்பத் செய்து சாப்பிடலாம்.

இலுப்பைப் பூ: 'ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை' என்று சொல்லப்படுவது இனிப்புத் தன்மையாலேயே! இலுப்பைப் பூவைச் சர்க்கரையுடன் சேர்த்து அரைத்துக் காய்ச்சிய பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிகள் குறையும். உடல் களைப்புத் தீரும் இருமல் குறையும்.விரை வீக்கத்திற்கும் இந்த மலரை வதக்கி ஒத்திடம் கொடுக்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 24 Mar 2009 - 2:56


கண்டங்கத்திரிப் பூ:
மூல நோய்க்கு இந்தப் பூ கைகண்ட மருந்து.வாதுமை நெய்யில்கண்டங் கத்திரிப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி மூலம் உள்ள இடத்தில் தடவி வர, மூல நோய் குணமாகும்.

குங்குமப் பூ: பலவிதமான நோய்களைப் போக்குவதில் குங்குமப் பூ தன்னிகரற்று திகழ்கிறது.தலைவலி கண் நோய் காதுநோய் சுரம் ஆகிய நோய்களை இந்தப் பூ குணப்படுத்தும்.கர்ப்பிணி பெண்கள் ரோஜா இதழ்களுடன் சாப்பிடலாம்.பசும் பாலிலும் காய்ச்சி பருகலாம்.குடல் புண்களுக்கு இது உதவும்.சிகப்பான குழந்தை பிறக்கும் என்பது மட்டும் உண்மையில்லை.

சம்பங்கிப் பூ: காய்ச்சிய பசும்பாலில் இந்தப் பூவைப் போட்டு சாப்பிட்டு வந்தால் உடல் திடகாத்திரம் பெறும்.

சூரிய காந்திப் பூ: இந்தப் பூவிலுள்ள விதைகளியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பலம் அளிப்பதுடன் நோய்களுக்கு நன்மையளிக்கும்.

தாழம் பூ. இதில் தைலம் எடுக்கலாம். தலைவலி, வாதவலிக்கு இத்தையலாம் வெகுவாக பயன் அளிக்கும்.

வெள்ளை தாமரைப் பூ.
ஈரலில் ஏற்படும் சூடு, ஒவ்வாத மருந்தின் துன்பம், உடலில் உண்டாகிற எரிச்சல் யாவும் தீரும்.

தாமரை பூ. இதயத்திற்க்கு பலமளிக்கும்.உடல் வெப்பத்தை நீக்கித் தாது எரிச்சலை தவிர்த்து இரத்த நாளத்தையும் சீர்செய்கிறது.

நொச்சிப் பூ.
இதனை அரைத்துத் தடவி வந்தால் சிரங்குகள் குணமாகும்.

முருங்கைப் பூ. காய்ச்சியப் பாலில் இப் பூவைப் போட்டு தினம் சாப்பிட்டு வந்தால் தாதுப் பலம் ஏற்படும்.

வாழைப் பூ. இதில் சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகி வந்தால் பெண்களை வருத்தும் மாதவலி நீங்கும்.

வேப்பம் பூ. இது சிறந்த கிருமி நாசின் வயிற்றுப் பூச்சிக்களை ஒழிக்கும். அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்தும்.
வயிறு சுத்தமாகவும்,

பித்தம் போக்கவும் தொண்டைப் புண் ஆறவும் காது இரணம் நீங்கவும் இப் பூ கைக்கண்ட மருந்து.

வெங்காயப் பூ. இதைச் சமைத்துச் சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்.

தூதுளம் பூ. உடல் மிக்க பலம் பெறும். வித்து பெருகும். உடல் அழகு பெறும்.

avatar
Guest
Guest

PostGuest Wed 1 Jul 2009 - 22:56

மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat 12 Dec 2009 - 15:18

WOW SUPER SIVA ANNA... மலர்களின் மருத்துவம் 677196 மலர்களின் மருத்துவம் 677196 மலர்களின் மருத்துவம் 677196 மலர்களின் மருத்துவம் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக