புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
65 Posts - 64%
heezulia
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
1 Post - 1%
viyasan
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
257 Posts - 44%
heezulia
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
15 Posts - 3%
prajai
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_m10கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 17, 2017 5:41 pm

நெல்லை பாரதி
நன்றி- வண்ணத்திரை 8-9-2014
—————
-
கொடுமுடியில் குடிசை வீட்டில் பிறந்து, வறுமையில்
வளர்ந்த கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் என்கிற
கே.பி.சுந்தராம்பாள், பின்னாளில் அதே ஊரில் சொந்தத்
திரையரங்கம் கட்டும் அளவுக்கு உயர்ந்தார்.
-
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்! W0PnAiX7RRienb95LUyY+2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 17, 2017 5:44 pm

கணீரென்ற குரலே அதற்கு காரணமாக இருந்தது.
வறுமையை சமாளிக்கமுடியாத அம்மா பாலாம்பாள்,
மகள் சுந்தராம்பாளை அழைத்துக்கொண்டு பிழைப்புத்தேடி
கரூருக்குச் சென்றார். ஆர்.எஸ்.கிருஷ்ணசாமி அய்யர் என்ற
கரூர் டி.எஸ்.பி அடைக்கலம் கொடுத்தார்.

சிறுமி சுந்தராம்பாளின் பாட்டை ஒரு நாள் கேட்டவர்,
பாராட்டி ஐம்பது ரூபாய் அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அவரது சிபாரிசால் வேலு நாயரின் நாடகக் குழுவில்
சுந்தராம்பாளுக்கு இடம் கிடைத்தது. 

‘நல்லதங்காள்’ நாடகத்தில் ஏழாவது குழந்தையாக நடித்த
முதல் மேடையிலேயே ரசிகர்களின் வரவேற்பு கிடைத்தது.
அடுத்தடுத்த மேடைகளில் ஆதரவு பெருகியது.

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நாடகம் நடந்தபோது
இவருடன் இணைந்த கிட்டப்பா, வாழ்க்கையிலும் இணைந்தார்.
அது முறைப்படியான திருமணமாக இல்லாவிட்டாலும்,
இருவரும் மகிழ்ச்சியான வாழ்வைக் கண்டனர்.

‘ஸ்ரீவள்ளி’ நாடகத்தில் கே.பி.சுந்தராம் பாள் வேலன், வேடன்,
விருத்தன் வேடங்களில் தோன்றுவார்.
கிட்டப்பா வள்ளியாக நடிப்பார். அடுத்தமுறை அதே நாடகத்தில்
வேலன், வேடன், விருத்தனாக கிட்டப்பா நடிக்க, சுந்தராம்பாள்
வள்ளியாக வருவார்.

ஒருவரை மிஞ்சும் வகையில் மற்றவர் பாடும் பாடல்கள் நாடக
ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. நாடக உலகின்
ராஜா-ராணியாக திகழ்ந்தது அந்தத் தம்பதி. ஆறாண்டுகள்
முடிவதற்குள் நோயின் கொடுமையால் கிட்டப்பாவின் ஆயுள்
முடிந்தது. அப்போது அவருக்கு 28 வயது,
சுந்தராம்பாளுக்கு 27.

கிட்டப்பாவின் மறைவுக்குப்பின் நாடகங்களில் பிற
ஆண்களுடன் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார்
சுந்தராம்பாள். முருகன் பாடல்களையும் தேசபக்தி
கீதங்களையும் பாடிவந்தார்.

காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் வேண்டுகோளை
ஏற்று, 1935ல் ‘நந்தனார்’ படத்தில் நந்தனாராக ஆண்வேடம்
தரித்து நடித்தார்.

சம்பளமாக ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
‘பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது…’,
‘வழி மறைத்திருக்கிறதே…’ ஆகிய பாடல்களில் சுந்தராம்பாளின்
குரல் ரசிகர்களைக் கவர்ந்தது.

அடுத்து, ‘மணிமேகலை’ படத்தில் மாதவியின் மகள்
மணிமேகலையாக வேடமேற்று நடித்து, ‘பாவி ஏன் பிறந்தேன்…’,
‘மாசின்றி குலமாதர் மனங்குளிர வாழவேண்டின்…’
பாடல்களில் பரிமளித்தார் சுந்தராம்பாள்.

1940ல் வெளிவந்த இந்தப்படத்தில் அவர் பாடிய ‘சிறைச்சாலை
இதென்ன செய்யும்?’ பாடல், விடுதலைப் பிரச்சார வேலையைச்
செய்து பாராட்டுப்பெற்றது.

1953ல் சுந்தராம்பாளுக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பு
‘அவ்வையார்’ படம். எம்.டி. பார்த்தசாரதி, மாயவரம் வேணு,
எம்.எஸ்.அனந்தராமன் ஆகியோர் இசையமைக்க, பாபநாசம்
சிவனும் கொத்தமங்கலம் சுப்புவும் பாடல்கள் எழுதினார்கள்.

அந்தப்படத்தில் சுந்தராம்பாளுக்கு 20 பாடல்கள்.
‘அய்யனே அன்பர்க்கு மெய்யனே…’
, ‘பொறுமை என்னும் நகையணிந்து…’,
‘வெண்ணிலாவே வெண்ணிலாவே…’
, ‘வேலனே செந்தமிழ் வித்தகா…’ என கானமழை
பொழிந்தபடி நடித்திருந்தார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 17, 2017 5:46 pm



கலைஞர் மு.கருணாநிதியின் ‘பூம்புகார்’ படத்தில்
அவர் எழுதிய ‘வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்…’
பாடல் சுந்தராம்பாள் குரலில் மிகப்பெரிய வரவேற்பைப்
பெற்றது.

ஆர்.சுதர்சனம் இசையில், மாயவநாதன் எழுதிய
‘தப்பித்து வந்தானம்மா…’ பாடலும் கே.பி.எஸ் குரலில்
பிரபலமானது.

சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய ‘ஞானப்பழத்தைப் பிழிந்து…’ ,
கண்ணதாசனின் ‘பழம் நீ அப்பா…’ பாடல்கள் கே.வி.மகாதேவன்
இசையில்,  ‘திருவிளையாடல்’ படத்தில் கே.பி.எஸ் குரலில்
பண்டிதரையும் பாமரரையும் பரவசப்படுத்தின.

‘மகாகவி காளிதாஸ்’ படத்தில் மூதாட்டியாக நடித்துக் கொண்டே
பாடிய ‘சென்று வா மகனே சென்று வா…’, ‘காலத்தில் அழியாத…’
பாடல்கள் எந்தக்காலத்திலும் அழியாதவை.

‘கந்தன் கருணை’ படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் அவர்
பாடிய ‘பாடல் என்றும் புதியது…’ இன்றும்கூட புதியது. ‘துணைவன்’
படத்துக்காக சிறந்த பின்னணிப்பாடகிக்கான தேசிய விருதுபெற்ற
சுந்தராம்பாளுக்கு பத்மஸ்ரீயும் கிடைத்தது.

தமிழ்நாடு மேலவை உறுப்பினராக பதவி வகித்த பெருமையும்
அவருக்கு உண்டு. முருகன் பாடல்களால் புகழ்பெற்ற சுந்தராம்பாள்,
பழனி முருகன் கோவிலுக்கு தனது சொத்துக்களை ஒப்படைக்குமாறு
உயில் எழுதி வைத்தாராம்
-
------------------------------------
 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 18, 2017 7:40 am

மறக்கமுடியாத குரல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 19, 2017 1:29 pm

புல்லரிக்கிறது ஐயாசாமி ராம் அவர்களே!
உங்களுக்குக் கோடி நன்றிகள் !
கே.பி.எஸ். குரலுக்குத் தமிழர்கள் மயங்கினர்; இன்றும் மயங்குகின்றனர் !
எம். கே.டி.க்குப் பிறகு குரலால் தமிழகத்தை வளைத்தவர் கே.பி.எஸ்.தான் ! ஆகா ! என்ன குரல்! என்ன ஓசை! அப்படி ஓர் ஓசை தமிழில் இருந்துள்ளது என்பதை என்போன்ற ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியப்படுத்தியதே கே.பி.எஸ்.தான்!
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 19, 2017 5:41 pm

இந்திய அளவில் நடிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய்
சம்பளத்தை முதன்முதலில் பெற்ற நடிகை;

இந்தியாவிலேயே முதன்முதலாக சட்டமன்ற மேலவைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை கே.பி.சுந்தராம்பாள்தான்;

காந்தியடிகளே நேரில் வந்து தேசச் சேவைக்குப் பாடுபட
வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஒரே நடிகை கே.பி.எஸ்தான்;

தமிழ்நாட்டில் அதிக அளவு இசைத்தட்டு விற்றதும்
கே.பி.எஸ். பாடிய பாடல்களுக்குத்தான்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 19, 2017 5:43 pm

இவர் பாடிய சில திரைப்படப் பாடல்களின் பட்டியல்:
-
எண் பாடல் பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
-
1 பழம் நீயப்பா... கண்ணதாசன் கே. வி. மகாதேவன் திருவிளையாடல்-
-
2 அறியது அறியது... / என்றும் பாடல் புதியது.. கண்ணதாசன் கே. வி. மகாதேவன் கந்தன் கருணை (திரைப்படம்)

3 துன்பமெல்லாம்... மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்

4 அன்று கொல்லும் / நீதியே நீயென்னும்… மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்

5 வாழ்க்கை என்னும் / ஒருவனுக்கு ஒருத்தி… மு. கருணாநிதி ஆர். சுதர்சனம் பூம்புகார்

6 தப்பித்து வந்தானம்மா… மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்

7 கேட்டவரம்… கண்ணதாசன் குன்னக்குடி வைத்தியநாதன் காரைக்கால் அம்மையார்

8 ஓடுங்கால் ஓடி… கண்ணதாசன் குன்னக்குடி வைத்தியநாதன் காரைக்கால் அம்மையார்

9 ஏழுமலை இருக்க… உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் குன்னக்குடி வைத்தியநாதன் திருமலை தெய்வம்

10 ஞானமும் கல்வியும்… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்

11 பழநி மலை மீதிலே… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்

12 கொண்டாடும் திருச்செந்தூர்… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்

13 சென்று வா மகனே... கண்ணதாசன் கே. வி. மகாதேவன் மகாகவி காளிதாஸ்

14 காலத்தால் அழியாத… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் மகாகவி காளிதாஸ்
-
---------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 19, 2017 5:45 pm



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 19, 2017 5:48 pm


படம்: திருமலை தென்குமரி
குரல்: கே.பி.சுந்தராம்பாள்
வரி: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்-
-
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை!
(ஏழுமலை இருக்க)

பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு!
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு!
(ஏழுமலை இருக்க)

கால்வண்ணம்...அகலிகைக்கு வாழ்வு தந்தது!
கைவண்ணம்...திரெளபதையின் மானம் காத்தது!
மால்வண்ணம்...திருமகளின் மனம் கவர்ந்தது!
மணிவண்ணன்...கருணை நம்மை மகிழ வைத்தது!
(ஏழுமலை இருக்க)


ஒரு பிடி அவல் கொடுத்தே, குசேலன் உறவு கொண்டான்!
ஓடத்தில் ஏற்றி வைத்தே, குகன் உடன் பிறப்பானான்!
தான் சுவைத்த பழங்களையே, தந்தனள் தாய் சபரி!
தருவதற்கு ஒன்றுமில்லை, தலைவனே எமை ஆதரி!
(ஏழுமலை இருக்க)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 20, 2017 7:37 am

குரல் , மறக்கமுடியாத குரல்
பக்தி பரவசத்தை உண்டாக்கும் குரல்.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக