ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி

3 posters

Go down

53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி  Empty 53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி

Post by T.N.Balasubramanian Sun Jul 30, 2017 8:40 pm

53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி

53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி  YQOwqfRERuerP1rDDjSc+30-1501391391-dhanushkodi124


ராமேஸ்வரம்: பெரும்புயலால் உருக்குலைந்து போன கைவிடப்பட்ட நகரமான தனுஷ்கோடிக்கு புதிய சாலை
அமைக்கப்பட்டு அரசு பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய
வைத்துள்ளது. கடந்த 1964-ஆம் ஆண்டு வீசிய புயலால் முழுமையாக போக்குவரத்துக்கு கூட வழியின்றி
அழிந்த தனுஷ்கோடிக்கு புதிய சாலை அமைக்கப்பட்டு அதை பிரதமர் மோடி நாட்டுக்கு அண்மையில்
அர்ப்பணித்தார். ராமேஸ்வரத்திருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி. மிகப் பெரிய தொழில்
நகரமாகவும், வியாபார ஸ்தலமாகவும் இருந்த தனுஷ்கோடி, கடந்த 1964-ஆம் ஆண்டு பெரும் புயலில் சிக்கி
சிதைந்து போனது. கடல் கொந்தளித்து தனுஷ்கோடி நகரமே முழுமையாக அழிந்து போனது.

சிதைந்து போனது
அதுவரை அங்கிருந்த ரயில் நிலையம், தேவாலயம், தபால் அலுவலகம், குடியிருப்புகள் என அனைத்துமே
முற்றிலும் சிதைந்து போய் விட்டது. இலங்கையோடு இருந்த வர்த்தக தொடர்பு கொண்டிருந்த தனுஷ்கோடி
இந்த புயலுக்கு பிறகு மக்கள் வாழ்வதற்கே அஞ்சும் பகுதியாக மாறிவிட்டது.
சுற்றுலா பயணிகள்
என்னதான் அச்சம் இருந்தாலும் வரலாற்று சிறப்பு மிக்க பகுதி என்பதால் இந்த தனுஷ்கோடியை பார்க்க
சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் ராமேஸ்வரத்திலிருந்து முகுந்தராயர் சத்திரம் வரை
மட்டுமே சுற்றுலா பயணிகள் வாகனத்தில் சென்று வந்தனர். மோசமான சாலையாக இருந்ததால் தனுஷ்கோடி
சென்று திரும்புவதில் சிரமம் இருந்தது.
புனரமைப்பு
இதனால் சுற்றுலா பயணிகள் ஒன்பதரை கி.மீ. தூரம் நடந்து சென்றோ அல்லது குறைந்த அளவு கடல் நீரில்
செல்லும் வாகனங்களிலோ சென்று வந்தனர். 53 ஆண்டுகளுக்கு பிறகு, தனுஷ்கோடியை புனரமைக்கும்
பணிகளை மத்திய அரசு தொடங்கியது.
நாட்டுக்கு அர்ப்பணிப்பு
அதன்படி முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடியின் கடைக்கோடி பகுதியான
அரிச்சல்முனை கடற்கரை வரை ஒன்பதரை கி.மீ. தூரத்திற்கு புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணி
ரூ.71 கோடி செலவில் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கியது. கடந்த 27-ஆம் தேதி அப்துல்கலாம்
மணிமண்டபத்தை திறந்து வைக்க ராமேஸ்வரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, தனுஷ்கோடி
சாலையையும் போக்குவரத்துக்காக வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்தார்
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
இதையடுத்து புதிய சாலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த பக்தர்களும்,
சுற்றுலா பயணிகளும் கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அரிச்சல்முனை கடற்கரை வரை வந்து
சென்றனர். ராமேஸ்வரம் கோயிலில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை பஸ்கள் இயக்கப்படுகின்றன.
45 நிமிடத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்த பேருந்துகளில் பயணம்
செய்து தனுஷ்கோடியை பார்த்துவிட்டு திரும்புகின்றனர்

நன்றி தட்ஸ்தமிழ்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி  Empty Re: 53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி

Post by M.Jagadeesan Sun Jul 30, 2017 8:59 pm

மூன்று மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் , தனுஷ்கோடி சென்றிருந்தேன் . தனுஷ்கோடியில் சொற்ப அளவில் மக்கள் வாழ்கிறார்கள் . மின்வசதி கிடையாது . Solar Energy -ஐ பயன்படுத்தி மின்விளக்கு , டிவி ஆகியவற்றை உபயோகப்படுத்துகிறார்கள் . இன்றும் 1964 புயலின் கோர தாண்டவத்தை பார்க்கமுடிகிறது .வளைந்துபோன இருப்புப் பாதைகள் , இடிந்து சிதிலமான தேவாலயம் , பள்ளிக்கூடம் , தபால் நிலையம் ஆகிய எச்சங்கள் புயலின் உக்கிரத்தை நினைவு படுத்துகின்றன. நாங்கள் சென்றபோது சாலை அமைக்கும் பணி முடிந்திருந்தது . ஆனால் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை .
இப்போது சாலை பயன்பாட்டுக்கு வந்துவிட்டபடியால் , இனி தனுஷ்கோடி வேகமாக பழைய நிலைக்குத் திரும்பிவிடும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி  Empty Re: 53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி

Post by T.N.Balasubramanian Sun Jul 30, 2017 10:29 pm

இனி தனுஷ்கோடி வேகமாக பழைய நிலைக்குத் திரும்பிவிடும்
அப்பிடி என்றால் இனி குப்பை கூளம் பாலிதீன் பைகள் pet பாட்டில்கள் நிறைந்து
ஒரு தனி இந்திய களை(கலை)யுடன் காட்சி அளிக்கும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி  Empty Re: 53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி

Post by M.Jagadeesan Mon Jul 31, 2017 8:38 am

" எரிகிற கொள்ளியை இழுத்துவிட்டால் , கொதிப்பது தானாகவே அடங்கிவிடும் " என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார் . அதுபோல

பாலிதீன் பைகள் , PET பாட்டில்கள் தயாரிப்பதற்குத் தடை போட்டுவிட்டால் , குப்பை கூளங்கள் எப்படி சேரும் ?

எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?

இதில் பொதுமக்களின் தவறு எங்கே இருக்கிறது ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி  Empty Re: 53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி

Post by T.N.Balasubramanian Mon Jul 31, 2017 6:33 pm

தடை செய்வது நல்லதுதான் ;
இருப்பினும் ஒரு சமூகப்பார்வை /நல்லெண்ணத்துடன் சுற்று சூழ்நிலையை
கெடுக்காமல் இருப்பது ஒவ்வொரு தனிமனிதனும் தலையாய கடமை அல்லவா ?
அப்பிடியே தடை செய்தாலும் , சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு அந்த இலையை போட்டு
செல்பவர்கள், கை துடைத்து காகிதங்களை பறக்கவிடும் கயவர்கள்
கண்ணாடி சீசாவில் குவாட்டர் குடித்து எறிந்து செல்லும் குடிமகன்கள்
ஆயிரம் சட்டம் வந்தாலும் திருந்தா ஜனங்கள்.
இவர்களை மனதில் கொண்டு எழுதப்பட்டது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி  Empty Re: 53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி

Post by M.Jagadeesan Tue Aug 01, 2017 7:53 pm

திருப்பதியில் இருக்கும் தூய்மையை இராமேஸ்வரத்தில் காணமுடியவில்லை .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி  Empty Re: 53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி

Post by balakarthik Wed Aug 02, 2017 5:17 pm

M.Jagadeesan wrote:திருப்பதியில் இருக்கும் தூய்மையை இராமேஸ்வரத்தில் காணமுடியவில்லை .

திருப்பதிக்கு வர வருமானத்தை வச்சு நாட்டையே சுத்தப்படுத்தலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் 53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி  Empty Re: 53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி

Post by M.Jagadeesan Thu Aug 03, 2017 6:20 am

ஆனால் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்குவதில் , திருப்பதி தேவஸ்தானத்திற்கு நஷ்டம் வந்துவிட்டதாம் ! என்ன முதலீடு செய்தார்கள் நஷ்டம் வருவதற்கு ? தினமும் மக்கள் கோடிக்கணக்கில் கொட்டுகிறார்கள் . அதில் கொஞ்சம் கிள்ளி இலவச லட்டுக்குக் கொடுத்தால் என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி  Empty Re: 53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய சாலை... அரசு பேருந்து.. மக்கள் மகிழ்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு!
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» 2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு விடுமுறை தினங்கள்: பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி
»  மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் - தமிழக அரசு
» மரணமடைந்து 153 ஆண்டுகளுக்கு பிறகு ஈம சடங்கு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum