ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழசிராஜா - திரைவிமர்சனம்

2 posters

Go down

பழசிராஜா - திரைவிமர்சனம் Empty பழசிராஜா - திரைவிமர்சனம்

Post by VIJAY Thu Dec 03, 2009 12:49 pm

நடிகர்கள் – மம்முட்டி, சரத்குமார், பத்மப்பிரியா, கனிகா, சுமன், மனோஜ் கே.ஜெயன்.
இசை – இளையராஜா
இயக்கம் – ஹரிஹரன்
தயாரிப்பு – கோகுலம் கோபாலன்

கேரளாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய முதல் மலபார் மன்னன் பழசிராஜா. அவரைப் பற்றிய வரலாற்றுப் படம்தான் இது.


கேரளாவுக்கு மிளகு, ஏலக்காய் வியாபாரம் செய்ய வரும் ஆங்கிலேயர்கள்,
மெல்ல மெல்ல அங்குள்ள குறுநில மன்னர்களை தங்களது பிரித்தாளும் சூழ்ச்சி
மூலம் பகைமூட்டி, தங்களது, நவீன ஆயுதம் தாங்கிய படை, கூலிப்படை இவற்றைக்
கொண்டு நாடு பிடிக்கத் தொடங்குகிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு அடிபணிய
மறுத்து எதிர்த்து நிற்கிறார் பழசிராஜா.


இதனால் கோபமுறும் ஆங்கிலேயர்கள் சில புல்லுருவிகளின் துணையுடன்
பழசிராஜா இல்லாத வேளையில் அவரது அரண்மனையை கொள்ளையடிக்கிறார்கள். அரண்மனை
ஆங்கிலேயன் வசமாகிறது.


பழசிராஜா தனது விசுவாசமிக்க தளபதி எடச்சன் குங்கனுடன் தலைமறைவாகிறார்.
மலைவாழ் மக்களை திரட்டி ஆங்கிலேயருடன் யுத்தம் செய்கின்றார். வெள்ளையர்
படை பின்வாங்கும் நிலை. ஒரு கட்டத்தில் பழசிராஜாவுடன் சமரச ஒப்பந்தம்
போட்டு போரை நிறுத்துகின்றனர். பிறகு திடீரென ஒப்பந்தத்தை மீறுகின்றனர்.
இதைக்கண்டு ஆவேசமாகும் பழசிராஜா மீண்டும் போரைத் துவக்குகிறார்.


பதவி ஆசை கொண்ட சில மண்ணின் மைந்தர்களின் உதவியுடன் பழசிராஜாவை
எதிர்க்கிறது ஆங்கிலப்படை. பழசியின் தளபதிகள் ஒவ்வொருவராக மடிகிறார்கள்.
இறுதி சண்டைக்கு ஆயத்தமாகிறார் பழசிராஜா. ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தால்
உயிர் பிழைக்கலாம் என்கிறார்கள் நலம் விரும்பிகள். பழசிராஜா சரணடைந்தாரா?
அல்லது ஆங்கிலேயர்களை வென்றாரா என்பது மீதிக் கதை.


பழசிராஜாவாக வரும் மம்முட்டி ஒவ்வொரு காட்சியிலும் அந்த
கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கைதியாக பிடிப்பட்ட ஆங்கில கலெக்டரை
மனிதாபிமானத்துடன் நடத்துவதும், “ஆயுதங்களை நேசித்த அளவுக்கு, உன்னை
நேசிக்க மறந்துவிட்டேன்” என்று மனைவி கனிகாவிடம் விடைபெறும்போதும் உருக
வைக்கிறார்.


பழசிராஜாவின் தளபதியாக எடச்சன் குங்கன் கதாபாத்திரத்தில் வரும்
சரத்குமார், விசுவாசமிக்க வீரனாக மின்னுவதோடு, பழசிராஜாவுக்கு செஞ்சோற்று
கடன் தீர்க்கும் கர்ணனாக கலங்க வைக்கிறார். துரோகி சுமனை பழி தீர்க்கும்
இடத்திலும் சபாஷ் போட வைக்கிறார்.


கனிகா, பழசிராஜாவின் மனைவியாக வந்து அவர் பிரிவில் அழுதும், உடன்
இருக்கும்போது துடித்தும் உருக வைக்கிறார். மலைவாழ் மக்கள் தலைவனாக வரும்
மனோஜ் கே.ஜெயன் மனதில் நிற்கிறார்.


பெண் போராளி பத்மப்ரியாவின் மெனக்கெடல் ரொம்பவே அசத்தல். வில் அம்பு,
வேல்கம்பு, துப்பாக்கி என்று சகலத்திலும் முனைப்பு காட்டியிருக்கிறார்.
மரத்தின் உச்சியிலிருந்து சரிந்து கொண்டே வந்து சண்டையிடும் அவரது
பேரார்வம் கூர்மையாக ரசிக்கப்பட வேண்டிய ஒன்று.


விடுதலைக்காக, போராடுகிறவர்களை தூக்கிலிடுவதைக் கண்டித்து ஆங்கில
கலெக்டரின் மனைவி அவரை பிரிவதும், கடைசியில் பழசிராஜாவை புரிந்து கொள்ளும்
கலெக்டர் அவர் வீரச்சாவை சந்திக்க வாய்ப்பளிப்பதும், அவருக்கு ஆங்கிலேய
முறைப்படி இறுதி மரியாதை செய்ய வைப்பதும் இயக்குனர் மின்னும் இடங்கள்.


வரலாற்றுப் பின்னணியில் எடுக்கப்படும் படங்களுக்கு சுவையான சம்பவங்கள்
மற்றும் சரித்திரபூர்வமான நம்பகத் தன்மை இரண்டுமே முக்கியம். இந்த
இரண்டுமே படத்தில் கொஞ்சம் கம்மிதான் என்பதையும் சொல்லியாக வேண்டும்.


மலையாளத்தில் வசனம் எழுதியிருக்கிறார் எம்.டி.வாசுதேவன் நாயர். தமிழில்
மொழி பெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். “பிறந்ததிலிருந்தே ஒரு
நிழல் கூடவே வந்திட்டு இருக்கு. அது என்னைக்காவது திரும்பி எதிர்லே
விஸ்வரூபம் எடுத்து நிற்கும். அதுதான் மரணம்…” இப்படி படம் நெடுகிலும்
ஜீவனுள்ள வசனங்கள்.


படத்தின் முக்கிய பலம் இளையராஜாவின் இசை. ஆரம்பக் காட்சிகள் வரலாற்று
நாடகம் போல துண்டுத் துண்டாகத் தெரிய, அதை பெரும்பாடுபட்டு கோர்வையாக்கித்
தருகிறார் தனது பின்னணி இசை மூலம். பாடல்களில் மலையாள வாசம். “ஆதிமுதல்
காலம் பூத்ததிங்கே” என்ற பாடல் சுகமோ சுகம்.


ஒலிக்கலவை ரசூல் பூக்குட்டி. வாள் காற்றை கிழிப்பதையும், மழைத்துளி
முற்றத்தில் விழுவதையும், அவ்வளவு ஏன்… உட்காருகிற சத்தத்தைக் கூட
துல்லியமாக பதிவு செய்திருக்கிறார்.


ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டியும், ஆர்ட் டைரக்டர் டி.முத்துராஜும் படத்தை ஹாலிவுட் தரத்திற்கு தந்திருக்கிறார்கள்.


புகழ்பெற்ற வரலாற்று படங்களின் வரிசையில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இந்த பழசிராஜாவும் ஒரு பொக்கிஷம்தான் என்றால் மிகையல்ல!


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பழசிராஜா - திரைவிமர்சனம் Empty Re: பழசிராஜா - திரைவிமர்சனம்

Post by செரின் Thu Dec 03, 2009 12:55 pm

ஆமாம் விஜய் நானும் படம் பார்தேன் அநேக நிகழ்வுகள் நமது
தேசிய தலைவரின் நிகழவுகளையும் ஒட்டி இருந்தன..அருமையான படம் பாட்டக்கள் அனைத்தும் சூப்பர்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum