ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

108 அடி விஸ்வரூபம்

Go down

108 அடி விஸ்வரூபம் Empty 108 அடி விஸ்வரூபம்

Post by ayyasamy ram Thu Jul 06, 2017 8:01 pm

திருவண்ணாமலை வந்தவாசிக்கு அருகில் உள்ள கொரக்கோட்டை
கிராமத்தில் இருக்கும் குன்றிற்குத் தெரியாது தான், விஸ்வரூப
பெருமாள் ஆகப்பாகிறோம் என்று!



ஏழு தலை கொண்ட பாம்புக்கு நடுவே பதினொரு முகங்களுடனும்,
22 கரங்களுடனும் பக்தர்களை அருள்பாலிக்க விஸ்வரூப பெருமாள்
எழுந்தருள இருக்கிறார்.



ஸ்தல புராணம் போல சிலை பராணமும் நம்மை வியப்பில்
ஆழ்த்தின.



கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூருவில் இருக்கிறது ரிஜிபுரா
நகரம். இப்பகுதி மக்களால் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு
ஏக்கர் பரப்பளவில் கோதண்டராம சுவாமி கோயில் கட்டப்பட்டது.



அப்பொழுதே இக்கோயிலில் 108 அடி விஸ்வரூப பெருமாள்
சிலையை அமைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால்
அதற்கு அப்பொழுது செயல் வடிவம் கொடுக்கக்கூடிய அளவிற்கு
நிதி ஆதாரமோ, கடவுள் பிராப்தமோ இல்லை.



காலம் கனிந்து 2009ம் ஆண்டு அறக்கட்டளையினர் சிலை அமைக்க
முடிவு செய்தனர். இதற்காக தரமான பாறையை நாடு முழுவதும்
செயற்கைக்கோள் மூலம் தேடிய அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு
கொரக்கோட்டையிலுள்ள மிகப் பெரிய பாறையாக இருந்த
குன்றைத்தேர்வு செய்தனர்.



பாறையை ஓர் ஓரமாய் உடைத்து சிலைக்கு உகந்ததா என ஆய்வு
செய்து அதில் ஜீவன் இருக்கிறதா என்று பூரண திருப்தி அடைந்தனர்.
அதன்பிறகு இப்பாறையை கையகப் படுத்தி வெட்டி எடுக்க மத்திய,
மாநில அரசுகளுக்கு விண்ணப்பித்தனர்.



2010ம் ஆண்டு துவங்கிய அனுமதி கேட்புக்கு 2014ல் தான் அனுமதி
கிடைத்தது.



அதைத் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக நாற்பத்துக்கும்
மேற்பட்ட தொழிலாளர்கள் ஸ்தபதிகளின் தலைமையின் கீழ் இரவு
பகலாக பணியாற்றி அறுபத்தி நான்கு அடி உயரத்தில் இருபத்தி
ஆறு அடி அகலத்தில் ஒரு பாறையும், இருபத்தி நான்கு அடி உயரம்
முப்பத்தி மூன்று அடி அகலத்தில் இன்னொரு பாறையும் என்று
ஒரே பாறையை இரண்டாக பிரித்தனர்

-------------
.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

108 அடி விஸ்வரூபம் Empty Re: 108 அடி விஸ்வரூபம்

Post by ayyasamy ram Thu Jul 06, 2017 8:03 pm

அறுபத்தி நான்கு அடியில் பெருமாளின் சிரம் முதல் பாதம் வரையும்.
இருபத்தி நான்கு அடி உயரமுள்ள இன்னொரு பாறையில் ஏழு தலை
நாகமும் இருபது அடியில் சிலையை நிறுத்தி அடிபீடமும் என
மொத்தம் 108 அடிகளில் மூன்று பிரிவுகளாகத் தயாராகிறது.



இருந்தாலும் அத்தனையும் ஒரே பாறையில் ஒரு அடுக்கின் கீழ்,
தனித்தனியாகப் பிரித்து வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட உள்ளது.
இதில் மேல் பாகம் 330 டன் எடையும் பாம்பு வடிவம் செதுக்கும் பாறை
230 டன் எடையும் கொண்டது.



இதில் பெரிய பாறையில் பெருமாளின் அன்புமுகமும்,
அருள் தரும் கரமும் மட்டும் செதுக்கப்பட்டு மீதி உருவம்
பெங்களூருவிற்குக் கொண்டுபோய் செதுக்கி முழுமையடையும்
என்கிறார்கள்.



இவ்வளவு எடைகொண்ட பாறைகளை எப்படி கொண்டு
போவது? எதன் மூலம் தூக்கிவைப்பது? என்று எல்லோரும்
ஆச்சர்யத்துடன் காத்திரு்க அந்த ஆச்சர்யத்திற்கு விடை
இப்பொழுது வந்தவாசி கொரக்கோட்டையில் நிகழ்ந்து
கொண்டிருக்கிறது.



ஜெர்மன் நாட்டு ஊக்சில் ஹைட்ராலிக் சிஸ்டம் மூலம் கொஞ்சம்
கொஞ்சமாக பாறையை உயர்த்த இரண்டு பக்கமும் அடியிலும்
வலுவான மரக்கட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இப்பொழுது
லாரியின் டிரக் அப்படியே பாறைக்குக் கீழே டேபிளில் டிராயர்
மாதிரி உள்ளே நுழையும். நுழைந்ததும் கனரக டிரக்கிலுள்ள
ஹைட்ரலிக் சிஸ்டம் மூலம் அட்ஜஸ்ட் செய்து பாறையை சரியாக
தன் மீது நிலை நிறுத்திக் கொள்கிறது.



இந்த டிரக்கிற்கு 170 டயர்கள் என்பது ஒரு கூட்ஸ் ட்ரெய்ன் அளவிற்கு
ஆச்சர்யம்!



இந்த ஆச்சர்யம் வரும் 18ம் தேதி ஞாயிற்றுக் கிழமை
திருவண்ணாமலை மாவட்ட மக்கள் ஒன்று திரண்டு விசேஷ
பூஜைகளுடனும், பிரார்த்தனைகளுடனும் வணங்கி வழியனுப்பி
வைக்கப்பட உள்ளது.



தௌ்ளார், வந்தவாசி, செய்யார், காஞ்சிபுரம் பைபாஸ், ஆற்காடு,
வேலூர் வழியாக பெங்களூரு செல்கிறது. ஒரு நாளைக்கு அதிபட்சம்
பதினைந்து கி.மீ. மட்டுமே செல்லுமாம்.



அப்படிச் சென்றால் குறைந்தது இருபது நாட்கள் ஆகும் என்கிறார்கள்.
அல்லது இரவில் மட்டுமே டிரக்கை கொண்டுபோகவும் ஏற்பாடு
செய்யப்பட்டு வருகிறது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

108 அடி விஸ்வரூபம் Empty Re: 108 அடி விஸ்வரூபம்

Post by ayyasamy ram Thu Jul 06, 2017 8:04 pm

இரவில் நான்கிலிருந்த ஐந்து கி.மீ. வரையே செல்ல முடியும் என்பதால்
பெங்களூரு சென்றடைய ஒண்ணரையிலிருந்து இரண்டு மாதம்
என்றும் சொல்கிறார்கள். மேலும் அதிக எடை என்பதாலும், ஏறுவது
சிரமம் என்பதாலும் கூடுமானவரை பாலங்களைத் தவிர்த்து, சாலை
மார்க்கமாகவே செல்லத் திட்டமிட்டப்பட்டுள்ளது. 

தவிர்க்க முடியாமல்
செல்லும் பாலங்களில் கனத்த இரும்புத் துண்டுகளால் முட்டு
கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சில இடங்களில் பிரத்யேக அரசு அனுமதியுடன் புதிதாகச் சாலை
போடப்பட்டுள்ளது. சில வளைவுப்பாதைகளில் வீடுகள் இடைஞ்சல்
செல்வதால் அதை இடித்துவிட்டு டிரக் போன பின்பு கட்டித்தரவும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!


போகிற வழியெங்கும் பக்தர்களின் வரவேற்பு அதிகமாக இருக்கும்
என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டிரக்கில் போக இருக்கிறார்
. இவர் நிஜமாலுமே மலையப்பசுவாமிதான்!

————————————-

– அன்புவேலாயுதம்
கல்கி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

108 அடி விஸ்வரூபம் Empty Re: 108 அடி விஸ்வரூபம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum