ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."

2 posters

Go down

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..." Empty "வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."

Post by SARATHI NEGAMAM Thu Jun 22, 2017 10:34 pm

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."

ஒருமுறை அர்சுணனும் கிருஷ்ணனும் வீதியில் உலா வந்தார்கள்...

வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார்...

அர்சுணன் மனமிறங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க வயோதிகர், 'ஆகா! இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு உபயோகப்படுமே...' என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார்.

இதை தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் இரவில் வீட்டிற்குள் புகுந்து களவாடி சென்று விட்டான்.

சுமார் 10 தினங்கள் கழிந்து மீண்டும் அவ்வழியே வந்த அர்சுணன் வயோதிகரின் நிலையை கேள்விப்பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தினக் கல்லை கொடுத்து...
"இதையாவது பத்திரமாக வைத்திருந்து, வாழ்க்கையை சுகமாக களியுங்கள்..." என்றான்.

இந்தமுறை மிகக் கவனத்துடன் அதை வீட்டிற்கு கொண்டு சென்ற வயோதிகர், தன் மனைவி பிள்ளைகளிடம் கூட சொல்லாமல் பரணில் இருந்த ஒரு பானையில் போட்டு வைத்து, அவ்வப்போது வீட்டில் யாருமில்லா சமயம் மட்டும் எடுத்துப் பார்த்துக் கொண்டும்...
கவனமாக பாதுகாத்து வந்தார்.

இதையறியாத அவன் மனைவி, ஒருமுறை பரணிலிருந்த அந்த பானையே எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள்.

அப்போது பானையை கழுவும் போது அந்த விலையுயர்ந்த கல் ஆற்றில் தவறி விழுந்து விட்டது.

அவள் நீரெடுத்து கொண்டு வீட்டில் நுழையும் சமயம் வெளியே சென்ற வயோதிகர் அந்த குடத்தை பார்த்து அதிர்ச்சியாகி, 'எங்கே அதிலிருந்த கல்?' என்று மனைவியை கேட்டான்.

ஏதுமறியாத மனைவி நடந்ததை கூற, உடனே ஆற்றிற்கு சென்ற அவன் அன்றிரவு வரை தேடியும் பலனின்றி வீட்டிற்கு சோகத்துடன் திரும்பினான்.

சிலதினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்சுனனும் அவனைப் பார்க்கும் போது, அவன் நடந்ததைக் கூற...
அர்சுனன், கண்ணனிடம் 'இவன் அதிர்ஷ்டமே இல்லாதவன்...' என்று கூறனார்.

அதை ஆமோதித்த கண்ணனும், 'இந்த முறை நீ இவனுக்கு 2 வராகன்களை மட்டுமே கொடு...' என்றார்.

ஆச்சிரியப்பட்ட அர்சுனன், 2 காசுகள் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, "இதென்ன விந்தை!..
வெறும் 2 காசுகள் மட்டும் அவனுக்கு என்ன சந்தோசத்தை கொடுத்து விட போகிறது?..." எனக்
கேட்டான்.

கண்ணன், "எனக்கும் தெரியவில்லை... ஏதோ தோன்றியது... அதான் சொன்னேன்...
என்னதான் நடக்கிறது பார்க்கலாம் வா, நாம் அவன் பின்னாலேயே செல்லலாம்..." எனக்கூறி இருவரும் பின் தொடர்ந்தனர்.

வயோதிகர் வீட்டடிற்குச் செல்லும் வழியில் ஒரு மீனவன், 'உயிருடன் தான் பிடித்து வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கி கொள்கிறாயா..? என கேட்டான்.

உடனே தனக்குள் யோசித்த வயோதிகர், 'இந்த 2 காசு எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியை கூட போக்காது...' என எண்ணி...

'இந்த மீன்களை விலை கொடுத்து வாங்கி ஆற்றிலே திரும்ப விடலாம்...' என்ற முடிவுடன் வாங்கினார்.

பின் ஒரு மீனை ஆற்றில் விட்டு விட்டு அடுத்ததை விடும்முன் அது சுவாசிக்க முடியாமல் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை பார்த்து மீனின் வாயில் விரலை விட்டு சிக்கியிருந்ததை எடுத்தார்.

அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றார்....
'ஆம்... அவர் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல் தான் அது…!
உடனே சந்தோசத்தின் மிகுதியால்... "கடவுளே! என்னிடமே சிக்கி விட்டது..." என்று கூச்சலிட்டான்.

அதே நேரம்...
முன்பு இவர் வீட்டில் திருடிய கள்வன் யதார்த்தமாக அவ்வழியே, வர, அவன் திடுக்கிட்டு, தன்னைத்தான் கூறுகிறான் என்றெண்ணித் திரும்ப ஓட...

கண்ணனும் அர்ச்சுணனும் அவனைப் பிடித்து விட்டனர்.

கள்வன் அனைத்தையும் ஒப்புக்கொண்டு இவனிடம் களவாடியது மட்டுமல்லாது மற்ற காசுகள் மற்றும் அணிகலன்கள் அனைத்தையும் கொடுத்து விட்டான்.

அதை அனைத்தையும் வயோதிகருக்கு கொடுத்து அனுப்பிய அர்சுணன், கண்ணனிடம், "இது எப்படி சாத்தியம்...?" எனக் கேட்க...

கண்ணனும் சிரித்துக்கொண்டே…!

"இதே வயோதிகர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என எண்ணினார்...

அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார்...

ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை...

ஆனால் இப்போதோ தன்னிடமிருப்பது மிகக்குறைவானதாக இருந்தும் தனக்கு உதவாவிட்டாலும்... இன்னொரு உயிராவது வாழட்டுமே... என தன்னலமில்லாது நினைத்ததால் தான்….

அவனை விட்டு சென்ற செல்வம் அனைத்தும் அவனுக்கே கிடைத்தது. இதில் எனது செயல் ஏதுமில்லை..." எனக் கூறினார்.

இதைப் போலத்தான் ஒவ்வொருவரும் பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்கள் உரிய நேரத்தில் பயனளிக்கும்.

'கூட்டு வாழ்வே' இப்பிரபஞ்ச தத்துவம்...

ஆகவே, நாம் வாழ வேண்டுமானால்...
பிற உயிர்களை வாழ வைத்தே ஆக வேண்டும்....


அன்புடன்
சாரதி சுப்பிரமணியம்
SARATHI NEGAMAM
SARATHI NEGAMAM
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 15/09/2015

Back to top Go down

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..." Empty Re: "வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."

Post by T.N.Balasubramanian Fri Jun 23, 2017 1:50 am

நன்றாக உள்ளது .
இதை திண்ணைப்பேச்சில் பதிவிடுவதற்கு பதில்
ஆன்மீகத்தில் பதிவிடலாம்.
மாற்றி விடுகிறேன்.

இந்த பதிவு வேறொரு இணையத்தில் இருந்து எடுத்து இருந்தால்
அவர்களுக்கு நன்றி கூறுதல் , ஈகரை விதிமுறைகளில் ஒன்று.
அனுசரிக்கவும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஊழல் செய்வதில் போட்டி வைத்தால் பாஜக அரசுக்கு தான் முதலிடம் - அமித்ஷா
» இன்னும் 4,26,890 வருடங்கள் முடிந்த பிறகு தான் கலியுகத்தின் ஆயுள் முடியும்
» நம்மளால மட்டும் தான் இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியும்.
» கேட்கும் காதுகளால் தான் புதிய வழிகளை கண்டறிய முடியும்..!
» ஈழத்தில் தமிழினம் அழியாமல் இருக்கவேண்டுமானால், பிரபாகரனால் தான் முடியும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum