புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
3 Posts - 6%
heezulia
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 20, 2017 6:18 am

 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! DS1KjFrRiCRQi92xQL2A+tamilan_3176521f

இந்திய இதழியல் வரலாற்றிலும், தமிழக அரசியல்
வரலாற்றிலும் பண்டிதர் அயோத்தி தாசரின் ‘தமிழன்’
இதழுக்குத் தனித்த இடமுண்டு.

இம்மண்ணுக்குப் பூர்வீக பவுத்தத்தையும், இம்மக்களுக்கு
‘தமிழன்’ எனும் அடையாளத்தையும், சாதிபேதமற்ற
திராவிட அரசியல் கோட்பாட்டைக் கொடுத்ததில் ‘தமிழன்’
இதழுக்கு முக்கியப் பங்குண்டு.

சென்னை ராயப்பேட்டையில் 19.6.1907 அன்று
‘ஒரு பைசாத் தமிழன்’ எனும் வார இதழைத் தொடங்கினார்
அயோத்தி தாசர். டேப்லாய்டு அளவில் 4 பக்கங்களில் அச்சான
இவ்விதழ், அன்றைக்குக் காலணாவுக்கு விற்கப்பட்டது.

‘ஒடுக்கப்பட்டோரை ஒரு பைசாவுக்குப் பெறாதவர் என
இளக்காரமாகப் பேசுவோர், ஒரு பைசாத் தமிழனை முழுமையாக
அறிந்தால், ஒரு கோடி பொன் என்று பேசுவார்’ எனத் தன்
இதழுக்குப் பெயர்க் காரணம் கொடுத்தார் அயோத்தி தாசர்.

ஓராண்டுக்குப் பின் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க,
இதழின் பெயரில் இருந்த ‘ஒரு பைசா’ நீக்கப்பட்டு, ‘தமிழன்’
ஆனது. இதழ் அச்சடிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், கோலார்
தங்கவயல் வாசகர்கள் அயோத்தி தாசருக்குப் புதியதாக அச்சு
இயந்திரம் வாங்கிக்கொடுத்தனர்.

இதையடுத்து, சொந்தமாக ‘கவுதம சித்தார்த்தா’ அச்சகத்தை
நிறுவி, ‘தமிழ’னை இறுதிவரை புதன்கிழமை தவறாமல்
வெளியிட்டார்.

பவுத்தத்தின் குறியீடான தாமரையை முகப்பாகக் கொண்ட
‘தமிழன்’ இதழில் நவீன அரசியல், ஆய்வுக் கட்டுரை, பகுத்தறிவு,
சாதி ஒழிப்பு, பிராமணிய ஆதிக்க எதிர்ப்பு, வகுப்புவாரிப் பிரதி
நிதித்துவம், முற்போக்கு, பவுத்தம் போன்றவை குறித்த தீவிர
கருத்துகள் இடம்பெற்றன.

இலக்கியம், அறிவியல், மருத்துவம், விவசாயம், வானியல் அறிக்கை,
வாசகர் கேள்வி - பதில் உள்ளிட்டவையும் மூன்று பத்திகளில்
நெருக்கமான எழுத்தில், நேர்த்தியான வடிவமைப்புடன் பிரசுரமாகின.

சமகால அரசியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிய அயோத்தி தாசர்,
‘புத்தரது ஆதி வேதம், இந்திர தேச சரித்திரம், திருவள்ளுவர் சரித்திரம்’
உள்ளிட்ட தொடர்களையும் மரபான ஆய்வு முறையோடு
‘தமிழ’னில் எழுதினார்.

இதில் ஏ.பி.பெரியசாமிப் புலவர், தங்கவயல் ஜி.அப்பாதுரையார்
போன்ற தலித் பெரியார்களும், பேரா.லட்சுமி நரசு, எம்.சிங்காரவேலு
என பல தலித் அல்லாத அறிவுஜீவிகளும் தொடர்ந்து எழுதினர்.
இந்திய அளவில் ஒடுக்கப்பட்டோரிடம் இருந்து எழுந்த, முதல்
காத்திரமான உரிமைக் குரல் தமிழனுடையது.

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு கடந்தும் ‘தமிழ’னுக்கு வாசகர்கள்
பெருகினர். ‘தமிழன்’ மூலமாகவே அவர் அனைத்து பவுத்த
சங்கங்களையும் ஒருங்கிணைத்து பவுத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்.
ஒருவேளை ‘தமிழன்’ ஆங்கிலத்தில் முழங்கியிருந்தால்,
தேசிய அளவில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்!

5.5.1914 அன்று அயோத்தி தாசர் மரணிக்கும் தறுவாயில் தன் மகன்
பட்டாபிராமனை அழைத்து, ‘தமிழன்’ இதழைத் தொடர்ந்து
நடத்துமாறு பணித்தார். பட்டாபிராமனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த
‘தமிழன்’ மாதமிரு முறையாக மாறி, இடையில் நின்றது.

பின்னர், கோலார் தங்கவயலுக்கு இடம்பெயர்ந்த ‘தமிழன்’ இதழ்
ஜி.அப்பாத்துரையார், இ.என்.அய்யாக்கண்ணு புலவர், பி.எம்.ராஜரத்தினம்
ஆகியோரை ஆசிரியர் களாகக் கொண்டு சிறுசிறு இடை வேளைக்கு
நடுவே வெளிவந்தது. 1933-ல் ‘தமிழன்’ முற்றிலுமாக நின்றுபோனது.

நூற்றாண்டை நெருங்கும் தறுவாயில் மீண்டும் கண்டெடுக்கப்பட்ட
‘தமிழன்’ தற்போது தொகுப்புகளாகப் புத்துயிர் பெற்றுள்ளது.
எந்தெந்த நோக்கங்களுக்காக அயோத்தி தாசர் ‘தமிழன்’ இதழைத்
தொடங்கினாரோ, அந்தந்த நோக்கங்களை அடைய இன்றும் வழி
காட்டுகிறது!

(ஜூன்.19-ல் ‘தமிழன்’ இதழ் தொடங்கப்பட்டு 110 ஆண்டுகள் ஆ
கின்றன.)
-
-------------------------

- இரா.வினோத், தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக