ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)

2 posters

Go down

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Empty எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)

Post by ayyasamy ram Sun Jun 18, 2017 7:48 am

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) XCwc0J6xToKCs4ld1IAp+E_1497433245
-
எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும், அதைத் தாங்கும்
மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்
என்பது தான், கூர்ம அவதார தத்துவம்.

திருமாலின் தசாவதாரங்களில் இரண்டாவது அவதாரம் இது.
ஆனி மாதம் தேய்பிறை துவாதசியன்று, கூர்ம ஜெயந்தி விழா
கொண்டாடப்படுகிறது.

கூர்ம அவதார காலமான, கிருதயுகத்தில், தர்மம் தழைத்தோங்கி
இருந்தாலும், அசுர குணங்களும் நிறைந்திருந்தன. நற்குணமும்,
பக்தியும் கொண்ட தேவர்களை, துன்புறுத்தினர், அசுரர்கள்.

இதிலிருந்து தப்பிக்க, சாகாவரம் வேண்டி, திருமாலையும்,
சிவனையும் பிரார்த்தித்தனர், தேவர்கள்.

‘அமிர்தம் எனும் மருந்தை அருந்தினால், இறப்பின்றி வாழலாம்…’
என்று அவர்கள் சொல்லவே, அதைப் பெறுவதற்காக, வாசுகி
என்ற பாம்பை கயிறாகவும், மந்தரம் என்ற மலையை மத்தாகவும்
கொண்டு, பாற்கடலை கடைந்தனர், தேவர்கள்.

இதைக் கேள்விப்பட்ட அசுரர்கள், தாங்களும் சாகாவரம் பெற,
தேவர்களுடன் இணைந்து, கடலை கடைய முன்வந்தனர்.

பாம்பின் தலை பகுதியை அசுரர்களும், வால் பகுதியை
தேவர்களும் பிடித்துக் கொள்ள, பாற்கடலை கடைந்தனர். அப்போது,
வலி தாங்காமல், விஷத்தைக் கக்கியது வாசுகி பாம்பு;

அதன் வீரியம் தாங்காமல் சோர்வடைந்தனர், அசுரர்கள்.
‘மந்தரமலை சாய்ந்து விட்டால், இதுவரை பட்டபாடெல்லாம் வீணாகி
விடும். விஷம் அமிர்தத்தில் கலந்து பாழாகி விடும்…’ என்று தேவர்கள்
கலங்கிய போது, திருமால், கூர்மமாக (ஆமை) உருமாறி,
கடலுக்கடியில் சென்று, மந்தரமலையை தன் முதுகில் தாங்க,
சிவபெருமானோ, விஷத்தை விழுங்கி, அனைவரையும் காத்தார்.

அமிர்தகுடம் வெளிப்பட்டதும், மோகினி வடிவம் எடுத்த திருமால்,
அசுரர்களை மயக்கி, அமிர்தத்தை, தேவர்களுக்கு வழங்கி விட்டார்.

சிரமமான சூழலில், எந்த எதிர்பார்ப்பும் இன்றி, தேவர்களுக்கு
உதவியதால் தான், அமிர்தம் கிடைத்தது. நல்லவர்கள் மட்டுமே
பூமியில் வாழ்வதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவில் அருகிலும், தூத்துக்குடி மாவட்டம்,
வல்லநாடு அருகிலுள்ள அகரம் கிராமத்திலும், தசாவதாரக்
கோவில்கள் உள்ளன. இங்கும், மதுரை அழகர்கோவில் தசாவதார
சன்னிதியிலும், கூர்ம அவதாரத்தை தரிசிக்கலாம்.

ஆமை, அடக்கம் மிக்கது; தன் உறுப்புகள் அனைத்தையும் ஓட்டுக்குள்
அடக்கி, பணிவை வெளிப்படுத்தும். ஆமை போல அடங்கி வாழ
கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் தான், ஆமைப்பலகை
மீது அமர்ந்து, பூஜை செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

நாமும் எதையும் தாங்கும் இதயம் பெறவும், ஆமை போல் அடக்கமாக
வாழவும், கூர்ம ஜெயந்தி நன்னாளில், திருமாலை வேண்டுவோம்!

—————————-

தி.செல்லப்பா
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Empty Re: எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)

Post by SARATHI NEGAMAM Thu Jun 22, 2017 11:57 pm

அருமை !!


அன்புடன்
சாரதி சுப்பிரமணியம்
SARATHI NEGAMAM
SARATHI NEGAMAM
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 15/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum