ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனநிலை கொதிநிலையாகும்போது...

Go down

மனநிலை கொதிநிலையாகும்போது... Empty மனநிலை கொதிநிலையாகும்போது...

Post by krishnaamma Thu Jun 01, 2017 12:07 pm

'வீணா, என் கோபத்தை கிளறாதே; அப்புறம், என்ன நடக்கும்ன்னு எனக்கே தெரியாது...'
'பேசாம போயிடு... அப்புறம், நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்...' என்று, கொதிநிலைக்கு வந்து விட்ட மனநிலைக்காரர்கள், இவ்வாறு சுய வாக்குமூலம் கொடுப்பர்.

ஆம்... மனநிலையானது, கொதிநிலைக்கு உயர்ந்து விட்டால், ஒரு மனிதன், எதிராளிக்கு மட்டுமல்ல, தனக்குமே கெடுதல்களை தேடிக் கொள்கிறான்.

இது, அவனுக்கும் புரிகிறது; அதனால் தான், 'நான் மிருகமாயிடுவேன்...' என்கிறான்.
ஆனால், எந்த ஒரு மனிதனும், கொதிநிலைக்கு உடனே போவது இல்லை.
சட்டென்று, உச்சபட்ச கோபத்திற்கு போகிறவர்கள் உண்டு என்றாலும், இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள், மிக அபூர்வமாகவே நிகழ்கின்றன.

பூங்காவில், 'சீசா' ஆடும் தன் பிள்ளையை, சற்று தூரத்திலிருந்து பார்க்கிறார், ஒரு தந்தை. அங்கு வந்த முரட்டுச் சிறுவன் ஒருவன், குழந்தையை கீழே தள்ளி, அவன் ஏறி அமர்ந்து கொள்கிறான்.

இதை, இரு வேறு நேரங்களில், ஒருவர் எப்படி கையாள்கிறார் என்று பார்ப்போமா...
சந்தர்ப்பம் 1: தள்ளிவிட்ட பையனை பிடித்து கீழே தள்ளி, 'குழந்தை விளையாடிக்கிட்டிருக்குல்ல... ஏண்டா கீழே தள்ளினே...' என்று அவன் முதுகில் ஒரு போடு போடுகிறார்.

சந்தர்ப்பம் 2: அடிக்காமல், கீழே தள்ளாமல், 'தம்பி யாருப்பா நீ... எங்க உங்க அம்மா, அப்பா... சின்னப் புள்ளைய, கீழே தள்ளலாமா... கூப்பிடு அவங்கள...' என்கிறார்.
அதே அப்பா, ஏன் இரு வேறு பாணிகளில் நடந்து கொள்கிறார் தெரியுமா?

சந்தர்ப்பம் ஒன்றில், இவர், பிள்ளையை பூங்காவிற்கு அழைத்துப் போகும்படி, மனைவியால் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார். 'வேலை எல்லாம் அப்படியே கிடக்குது... உம் புள்ளைய (?)
பூங்காவுக்கு கூட்டிக்கிட்டுப் போறதா எனக்கு முக்கியம்...' என்று எரிச்சலடைந்து கூப்பிட்டு வந்திருப்பார்.இரண்டாவது சந்தர்ப்பம் அப்படி அல்ல. 'வா பார்க்குக்கு போகலாம்...' என்று, இவரே விரும்பி அழைத்து வந்திருப்பார்.

ஆக, ஏற்கனவே நடந்த நிகழ்வுகளின் காரணமாக ஏற்பட்ட சலிப்பு, எரிச்சல் மற்றும் விரக்தி மனநிலையே இவர், விரைவில் கொதிநிலைக்கே போய்விட காரணம்.

நாம், நம் மனநிலை குறித்து, 'இப்போது நம் மனம் சம நிலையில், இயல்பாக, மகிழ்வாக இருக்கிறதா...' என்பதை கணித்து, இல்லையென்றால், இயல்பு நிலைக்கு திரும்பி விட வேண்டும்.

மாறாக சலிப்பு, எரிச்சல் மற்றும் விரக்தி மனநிலையில் இருந்தால், அடுத்து நடக்கப் போகும் சம்பவம், மிக மோசமான சூழ்நிலைக்குள் நம்மை தள்ளிவிடும்.அது மட்டுமல்ல, அடுத்த சம்பவத்தை கையாள தெரியாமல் சொதப்பி, நம்மையும், எதிராளியையும் ஏகப்பட்ட பாதிப்பிற்கு உள்ளாக்கி விடும்.

மாறாக, சந்தோஷமாக, உற்சாகமாக, இயல்பு நிலையில் இருக்கும் போது, எந்த ஒரு சந்தர்ப்பமும், நம் மனநிலையை, கொதிநிலைக்கு கொண்டு செல்லாது.இப்படிப்பட்ட சூழலில், நம்மை எரிச்சலூட்டுவோரை பார்த்து, 'உன் தரம் என்னன்னு நீ காண்பிச்சுட்டே...

உன்னளவுக்கு நான் கீழே இறங்கி வர மாட்டேன்'னு பேசி விடுவோம். 'நீ ஒரு மட்டமான மனுஷன்'னு எவ்வளவு அழகாக சுட்டிக்காட்டி (திட்டி) விட்டோம் பார்த்தீர்களா...

நீரைச் சுட வைத்தால், உடனே கொதிநிலைக்கு போவதில்லை. முதலில், பாத்திரத்தோடு ஒட்டிக் கொள்ளும், சில காற்றுக் குமிழ்களை உருவாக்கும், பின், மெல்ல மேல் பகுதியில் ஆவி பரவுகிறது; அதன்பின்னரே, 'தளபுள' என்கிறது.

இந்நிலைக்கு, நம் மனநிலை தயாராகும்போது, விழித்துக் கொண்டால், நமக்கு மட்டுமல்ல, பிறருக்கும் பாதிப்பு இல்லை. மாறாக, சினிமா கதாபாத்திரப் பாணியில், தொண்டை நரம்பு புடைக்க கத்தி, கையில் கத்தி எடுத்து புறப்படும் தவறை, ஒருபோதும் செய்ய மாட்டோம்.

மனநிலை, கொதி நிலையை அடையாமல் பார்த்துக் கொள்வது; அப்படி ஒருவேளை ஆகிவிட்டால், சூழ்நிலையை மாற்றிக் கொள்வது அல்லது இடத்தை விட்டு அகல்வது, பிடித்த இசையைக் கேட்பது என்று கொதி நிலையை குறைத்து, கவனத்தை திசை திருப்புவது நமக்கு நல்லது.

கொதிநிலை நம்மை சுட்டு, புண்கள் வருமுன் விழித்துக் கொண்டால், பின்னால் ஒருபோதும் நடந்தவற்றை எண்ணி வருந்த வேண்டியிருக்காது!

லேனா தமிழ்வாணன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum