புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல் பொறுக்காதவன்! Poll_c10சொல் பொறுக்காதவன்! Poll_m10சொல் பொறுக்காதவன்! Poll_c10 
81 Posts - 67%
heezulia
சொல் பொறுக்காதவன்! Poll_c10சொல் பொறுக்காதவன்! Poll_m10சொல் பொறுக்காதவன்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சொல் பொறுக்காதவன்! Poll_c10சொல் பொறுக்காதவன்! Poll_m10சொல் பொறுக்காதவன்! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
சொல் பொறுக்காதவன்! Poll_c10சொல் பொறுக்காதவன்! Poll_m10சொல் பொறுக்காதவன்! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
சொல் பொறுக்காதவன்! Poll_c10சொல் பொறுக்காதவன்! Poll_m10சொல் பொறுக்காதவன்! Poll_c10 
1 Post - 1%
viyasan
சொல் பொறுக்காதவன்! Poll_c10சொல் பொறுக்காதவன்! Poll_m10சொல் பொறுக்காதவன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல் பொறுக்காதவன்! Poll_c10சொல் பொறுக்காதவன்! Poll_m10சொல் பொறுக்காதவன்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
சொல் பொறுக்காதவன்! Poll_c10சொல் பொறுக்காதவன்! Poll_m10சொல் பொறுக்காதவன்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சொல் பொறுக்காதவன்! Poll_c10சொல் பொறுக்காதவன்! Poll_m10சொல் பொறுக்காதவன்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொல் பொறுக்காதவன்! Poll_c10சொல் பொறுக்காதவன்! Poll_m10சொல் பொறுக்காதவன்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சொல் பொறுக்காதவன்! Poll_c10சொல் பொறுக்காதவன்! Poll_m10சொல் பொறுக்காதவன்! Poll_c10 
18 Posts - 3%
prajai
சொல் பொறுக்காதவன்! Poll_c10சொல் பொறுக்காதவன்! Poll_m10சொல் பொறுக்காதவன்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சொல் பொறுக்காதவன்! Poll_c10சொல் பொறுக்காதவன்! Poll_m10சொல் பொறுக்காதவன்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சொல் பொறுக்காதவன்! Poll_c10சொல் பொறுக்காதவன்! Poll_m10சொல் பொறுக்காதவன்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சொல் பொறுக்காதவன்! Poll_c10சொல் பொறுக்காதவன்! Poll_m10சொல் பொறுக்காதவன்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சொல் பொறுக்காதவன்! Poll_c10சொல் பொறுக்காதவன்! Poll_m10சொல் பொறுக்காதவன்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல் பொறுக்காதவன்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:18 am

துரையின், 'மூடு' சரியில்லை என்பதை, அவனது இருண்ட முகம் சொன்னது. என்ன என்று கேட்பதற்குள், ''நான், உங்களோடு எவ்வளவு நாளா பழகிட்டிருக்கேன்?'' என்று கேட்டான்.
''ரெண்டு வருஷமிருக்கும்; ஏன் கேட்கறே?''என்றேன்.

''ரெண்டு வருஷத்துல, என்கிட்ட ஏதாவது குறை பாத்திருக்கீங்களா சார்... காசு, பணம் விஷயத்துல, நான் தப்பு செய்திருக்கேனா... உங்க குடும்பத்துல ஒருத்தனா சுதந்திரமா என்னை வீட்டுக்குள் உலாவ விட்டிருக்கீங்க; அதை பயன்படுத்தி, ஏதாவது திருடியிருக்கேனா அல்லது வீட்டில் ஏதாவது பொருள் காணாம போயிருக்கா... சொல்லுங்க?

''சமயத்துல, பீரோ சாவியை கூட, என்கிட்ட கொடுத்து, பணம் எடுக்க, வைக்க சொல்றீங்க. அப்பக் கூட, 'பண விஷயத்துல ஏன் என்னை இழுக்குறீங்க; ஏதாவது, 'மிஸ்டேக்' ஆயிடப் போகுது'ன்னு சொல்வேன்.

அதுக்கு நீங்க, 'ஒரு ஆளை பாத்தவுடனே, அவன் எப்படி பட்டவன்னு சொல்லிடலாம். ரெண்டு வருஷம் பழகியிருக்கோம் தெரியாமல் போகுமா... உன்னை நம்பி, கோடி ரூபாய் கூட கொடுக்கலாம். ஆனா, என்னிடம் அவ்வளவு பணம் இல்ல'ன்னு சொல்வீங்க; உண்டா, இல்லயா?''

'ஆமாம்' என்பது போல் தலையசைத்தேன்.

''எதை வேணும்ன்னாலும் பொறுத்துக்குவேன்; ஆனா, என்னை சந்தேகப்பட்டாலோ, நம்ப மறுத்தாலோ, என்னால தாங்க முடியாது,'' என்றான்.

'தெரிந்தோ, தெரியாமலோ துரையை பற்றி, அப்படியொரு வார்த்தைய, யாரிடமாவது சொல்லியிருக்கோமா...' என்று நினைத்துப் பார்த்தேன். இல்லவே இல்லை. 'ஒருவேளை, என் மனைவி ஏதும் சொல்லியிருப்பாளோ... அது, காற்று வாக்காக இவன் காதுக்கு எட்டி, இப்போது வருத்தத்தை கொட்ட வந்திருக்கானோ...' என்ற ஐயம் எழுந்தது; ஆனால், கனவிலும் என் மனைவி அப்படி சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

எதிர்வீட்டில் தான் குடியிருக்கிறான், துரை; 30 வயது; பார்வைக்கு முரடனாக தெரிந்தாலும், மனசு பஞ்சு; நல்ல விதமாக பேசினால், 'பச்சக்'கென்று ஒட்டிக் கொள்வான்; கள்ளம் கபடமில்லாமல் பழகுவான். திருமணமாகி, ஒரு குழந்தையும் உள்ளது. குடி வந்த புதிதில், கேட்காமலேயே வந்து உதவி செய்தான்.

இதயத்தில் நுழைந்தவனை, வீட்டுக்குள்ளும் நுழைய விட்டிருந்தோம். துரை தொடர்ந்து பேசினான்...

''ரெண்டு வருஷம் பழகிய நீங்க, என் மீது இத்தனை நம்பிக்கை வைச்சுருக்கும் போது, பல வருஷம் பழகினவங்க, என்னை நம்பணுமா, இல்லயா...'' என்று நிறுத்தியவன், சிறிது தன்னை ஆசுவாசப்படுத்தி, ''சின்ன வயசுல, நான், வீட்டை விட்டு வந்துட்டேன்னு சொல்லியிருக்கேன்; ஆனா, ஏன் ஓடி வந்தேன்னு சொன்னதில்ல.

இப்ப சொல்றேன் சார்... நாங்க, மூணு ஆம்பள பசங்க; நான் தான் இளையவன். அந்த வயசிலேயே, எனக்கு திருட்டு, பொய் சொல்றது, மத்தவங்கள பத்தி வம்பு பேசறது எதுவும் பிடிக்காது. எந்த விஷயமானாலும், நேரடியா பேசணும்; நல்லதா பேசணும். யாராவது பொய் சொன்னா, அவங்க கிட்ட சேரவே மாட்டேன். அதுபோல, என் மீது யாராவது பழி சொன்னாலும் தாங்கமாட்டேன். 'ரோஷக்கார பையன்'னு எங்க அப்பாகிட்ட சொல்வாங்க.

''அப்பாவுக்கும், என்மீது தான் நம்பிக்கை. ஏன்னா, அண்ணனுங்க ரெண்டு பேருமே, பொய் சொல்வாங்க; வீட்டில் காசு திருடுவாங்க. அதனால, கடைக்கு போகணும்ன்னா, என்கிட்ட தான் காசு கொடுத்து அனுப்புவார், அப்பா. அவர் சொன்ன பொருட்களை வாங்கிட்டு, மிச்ச காசை கொண்டாந்து கொடுத்துடுவேன். 'சில்லரை காசுக்கு, நீ எதனா தின்பண்டம் வாங்கிக்கறது தானே'ன்னு அப்பா சொல்வாரு; 'எனக்கு வேணும்ன்னா, உங்ககிட்ட கேட்டு வாங்கிக்கறேன்; நீங்க சொல்லிட்டீங்கன்னு, மிச்சக் காசுல, மிட்டாய் வாங்கி, தின்ன ஆரம்பிச்சா, அதுவே பழக்கமாகி, நீங்க சொல்லாத போதும், வாங்கித் தின்ன ஆசை வரும்.

அப்பாகிட்ட சொல்லிக்கலாம்ன்னு, காசு செலவழிக்க, தைரியம் வந்துடும்; அதுவே, உங்க பாக்கெட்லயும் கை வைக்க தோணும். அப்புறம், அண்ணன்களை போல, நானும் மாறிடுவேன்'னு சொல்வேன்.

''நான் அப்படி சொல்றது, அப்பாவுக்கு பிடிக்கும். 'கனவுல கூட திருட மாட்டடா; நல்லா வருவே'ன்னு பாராட்டுவார். அப்படிப்பட்ட அப்பா, 'மாடக்குழியில சில்லரைக் காசுகள் போட்டு வச்சிருந்தேனே; நாலு ரூபா குறையுதே... துரை, நீ எடுத்தியா'ன்னு கேட்டுட்டாரு. அந்த ஒரு சொல்லுக்கே, ஓடி வந்தவன் நான்,'' என்றான்.

''இப்ப என்ன ஆச்சுன்னு, இதையெல்லாம் சொல்லிட்டு இருக்க... நீ, வேலைக்கு கிளம்ப வேணாமா... நேரமாகுதே,'' என்று நினைவூட்டினேன்; நானும் புறப்பட வேண்டும் என்பதால்!

தொடரும்.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 11:20 am

'நீங்க புறப்படுங்க சார்; அப்புறம் வர்றேன்,'' என்று எழுந்து, கூப்பிடக் கூப்பிட நிற்காமல் போனான்.
எனக்கு சங்கடமாக போய்விட்டது. அவன் மனைவியை கூப்பிட்டேன்; அவள், கைக்குழந்தையுடன் வந்து நின்றாள்.''என்னாச்சும்மா துரைக்கு... ஏன் ஒரு மாதிரியா இருக்கான்?''

''அவரு, வேலைய விட்டுட்டாரு சார்... வேலை பாத்த கடையில, பணம் காணாம போச்சாம்; அங்க வேலை பாக்கற மத்தவங்கள விசாரிச்சது போல, இவரையும் விசாரிச்சாங்களாம்... அவ்வளவு தான். 'என்னை எப்படி சந்தேகப்படலாம்; சந்தேகப்பட்ட இடத்தில, நான் எப்படி தொடர்ந்து வேலை பாக்க முடியும்'ன்னு, தூக்கிப் போட்டுட்டு வந்துட்டாரு,'' என்றாள், வருத்தத்துடன்!

சட்டென்று கடை முதலாளி மீது கோபம் வந்தது. அவரைப் பற்றியும் ஏற்கனவே சொல்லியிருந்தான், துரை.

'ஊரை விட்டு வந்து, இங்கே வேலை தேடி, கடை கடையாக ஏறி இறங்கினேன்; யாரும் சேத்துக்கல. இந்த முதலாளி தான், கருணை காட்டினாரு... ஆரம்பத்துல, கூட்டி, பெருக்கும் வேலை தான்; போகப் போக, எல்லாம் கத்து கொடுத்தாரு; பேப்பர் ரகம், விலை எல்லாம் சொல்லிக் கொடுத்து, என்னை, சிப்பந்தி ஆக்கினாரு; சம்பளம் சுமார் தான். அதைவிட, இரண்டு மடங்கு அதிகமா தர்றோம்ன்னு, பல கடைகள்ல கூப்பிட்டாங்க; எனக்கு, ஆரம்பத்துல கை கொடுத்த முதலாளிய விட்டு போக மனசில்ல; மனுஷனுக்கு பணம், காசை விட, நன்றியும், விசுவாசமும் முக்கியம் இல்லயா...' என்பான்.

அத்தனை நேர்மையான பையனை, பத்து பேர் முன், திருடனை போல நடத்தினால், எப்படி பொறுப்பான்...
வேலைகளை எல்லாம் விட்டு விட்டு, துரை வேலை செய்த கடைக்கு போய், முதலாளியிடம் என்னை அறிமுகப்படுத்தி, ''நீங்கள் செய்தது சரியா?'' என்று கேட்டேன்; உடனே, ''தப்பு தான்,'' என, ஒப்புக் கொண்டார்.

''ஒரு வார்த்தையில சொல்லிட்டீங்க... அங்க, அவன் எப்படி துடிச்சிட்டிருக்கான்னு உங்களுக்கு புரியாது,'' என்றேன்.

''ஒரு திருட்டு நடந்து போச்சு... கடையில, பத்து பேர் இருந்தால், அத்தனை பேரையும் விசாரிக்கிறது தான் முறை; அந்த வகையில, அவனையும், ஒரு வார்த்தை கேட்க வேண்டியதா போயிடுச்சு. அவனை மட்டும் விசாரிச்சிருந்தா, அவன் கோபப்படலாம்; அவன் மீது தப்பு இல்லாத பட்சத்தில், 'நான் எடுக்கல'ன்னு, ஒரு வார்த்தை சொல்லிட்டு, வேலைய பாக்கிறத விட்டுட்டு, 'அதெப்படி, என்னை சந்தேகிக்கலாம்'ன்னு சிலுப்பிகிட்டு போறது, சரியில்ல.

''வியாபார இடத்தில், கொஞ்சம் நெளிவு, சுளிவு தெரிஞ்சுக்க வேணாமா... முதலாளி, காரணமே இல்லாம, ஒரு தொழிலாளிய திட்டுறான்னா, தொழிலாளி புரிஞ்சுக்கணும்... அங்கே வந்திருக்கிற யாரோ ஒருத்தர் மீது உள்ள அதிருப்திய, அண்ணாச்சி, நம்மகிட்ட காட்டுறாருன்னு!

''தன்னை தான் திட்டுறார்ன்னு எடுத்துகிட்டு, நடைய கட்டினான்னா, அது, அவன் முட்டாள்தனம்; துரை, அதை தான் செய்துட்டு போயிருக்கான். 'இத்தனை வருஷம் வேலை பாத்த என்னை, நீங்க புரிஞ்சுகிட்டது இவ்வளவு தானா'ன்னு கேட்டுட்டு போனான். நான் கேட்கிறேன்... இத்தனை வருஷத்துல, அவன், என்னை புரிஞ்சுகிட்டதும் இவ்வளவு தானா...'' என்றார்.

அவர் தரப்பு நியாயத்தை கேட்டதில், துரை மீது ஆதங்கம் எழுந்தது.''தனி ஆளா இருந்தாலும் பரவாயில்ல; இந்த வேலைய பாத்து, ஒருத்தர் அவனுக்கு பொண்ணு கொடுத்து, குடும்பஸ்தனாக்கியிருக்கார். வேறு எங்கு போனாலும், இங்கு கிடைக்கிற அளவுக்கு, சம்பளம் கிடைக்காது; கஷ்டப்படுவான்.

''யோக்கியமாய் இருக்கிறவன், ஆயிரம் குற்றச்சாட்டு வந்தாலும், உறுதியா இருக்கணும். என்னை எப்படி சந்தேகப்படலாம்ன்னு, சட்டைய பிடிச்சு கேட்கலாம்; தப்பில்ல. கோவிச்சுக்கிட்டு போறது, ஒரு வகை கோழைத்தனம். துரை, அந்த விஷயத்துல, இன்னும் சின்ன புள்ள மாதிரியே இருக்கான். நீங்க எடுத்துச் சொல்லுங்க... முதலாளி வருத்தப்பட்டாரு... இனிமே அப்படி நடந்துக்க மாட்டாரு; உன்னை வேலைக்கு வரச் சொன்னாருன்னு...'' என்று, அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ''வந்துட்டேன் முதலாளி,'' என்று, கடைக்குள் நுழைந்தான் துரை.

''யோசிச்சு பாத்தேன் சார்... நான் தனி ஆளுன்னா பரவாயில்ல; வள்ளியும், குழந்தையும் இருக்காங்க. ஒரு மாசம் சம்பளம் வரலன்னாலும், நெருக்கடியா போகும். இத்தனை வருஷ சர்வீசை காட்டி, இன்னொரு கடையில சேரலாம்; அங்கேயும், ஏதாவது பிரச்னை வந்து, முதலாளி ஒரு சொல் சொல்லலாம். யார்கிட்டயோ கேட்டுக்குறதுக்கு, நம்மை, நல்லா தெரிஞ்சவர்கிட்ட, ஒரு சொல் கேட்டுகிட்டால், தப்பில்லன்னு தோணிச்சு; வந்துட்டேன்,'' என்று, சிரித்தான்.

'யோசித்து முடிவெடுத்திருக்கிறான்; இனி, அவனுக்கு எல்லாம் சுமுகமாக அமையும்...' என்று தோன்ற, என் அலுவலகம் நோக்கி, மகிழ்ச்சியுடன் சென்றேன்.

படுதலம் சுகுமாரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக