ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி

3 posters

Go down

சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி Empty சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி

Post by ayyasamy ram Wed May 31, 2017 9:33 am


சென்னை:
சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ்
ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில்
தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தால் உஸ்மான் சாலை, பனங்கல்பார்க் பகுதிகளில்
புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இன்று அதிகாலையில்
சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி
கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதால்,
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை
அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 4 மணி நேரம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும்,
அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

ஏனெனில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால்
தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று தீயை அணைக்க மிகவும்
சிரமமாக உள்ளது.

அதாவது சென்னை சில்க்ஸ் கடையின் அடித்தளத்தில் மின்கசிவு
காரணமாக விபத்து ஏற்பட்டது. தீயை அணைப்பதற்கு 7க்கும்
மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வந்துள்ளன. மேலும் தண்ணீர்
வாகனமும், ஸ்கை லிஃப்டும் இந்த பகுதிக்கு வந்துள்ளது. மொத்தம்
72 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு
வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் புகை முதலில் வெளியேற்றும் நடவடிக்கையில்
முதல் கட்டமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதாவது புகையை வெளியேற்றுவதற்காக புகை உறுஞ்சும்
வண்டிகளும், ரசாயன தண்ணீர் முறைகளை பயன்படுத்தி புகையை
அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடையில்
தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் உள்ளே இருக்கக்கூடிய பொருட்கள்
வெடித்து வெளியே தீப்பொறிகள் வருகிறது.

இந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்ல காவல்துறையினர்
தடுத்துள்ளனர், வாகனங்கள் அனைத்தும் மேம்பாலம் வழியாக
மட்டுமே செல்கின்றது.
-
-----------------------------
தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி Empty Re: சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி

Post by T.N.Balasubramanian Thu Jun 01, 2017 1:30 am

90 % கடைகள் --துணிக்கடையோ /பல்பொருள் அங்காடிகளோ
உஸ்மான் ரோடு/ரங்கநாதன் தெருவிலோ ,பாதுகாப்பு வழிமுறைகளை
பின்பற்றுவதில்லை. அமுல் படுத்தவேண்டிய அதிகாரிகளின் மெத்தனம்
லஞ்சம் வாங்கும் குணம் நாடு உருப்படாமல் போக காரணமாக உள்ளது.
கடை முதலாளிகளையும்/ அரசு அதிகாரிகளையும் விஜாரனை  இன்றி
ஜெயிலில் போட்டால்தான் உருப்படும்.ரங்கநாதன் தெரு போனாலே உடலெல்லாம்
நாறுகிறது. தீ விபத்து ஏற்பட்டால் ,தீ அணைப்பு வாகனம் கூட போகமுடியாது.
அப்பிடியே ஆட்கள் மரணித்தாலும், பணத்தை குடுத்து குடும்பத்தாரையும்,
அதிகாரிகளையும் வளைத்து போட்டுவிடுகிறார்கள். அதிகாரிகளின் குடும்பம்
அங்கே போய் ,அவர்களுக்கு சங்கு ஊதினால்தான் இவர்கள் திருந்துவார்கள்.
சென்னை  சில்க்ஸ் உயிர் சேதம் உண்டா இல்லையா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி Empty Re: சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி

Post by T.N.Balasubramanian Thu Jun 01, 2017 2:07 am

தர்போதைய பிரேக்கிங் நியூஸ்...மாலைமலர். மணி இரவு 2 மணி

"தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 7-வது மாடியில் மீண்டும் கொழுந்துவிட்டு எறியும் தீ"

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி Empty Re: சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி

Post by T.N.Balasubramanian Thu Jun 01, 2017 2:32 am

தீ தடுப்புக்கு அடுக்கு மாடிகளில்இருக்க வேண்டிய வசதிகள் என்ன

தி.நகரில் உள்ள, சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, அடுக்குமாடி கட்டடங்களில் இருக்க வேண்டிய, பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கேள்வி எழுந்துள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் விதிமுறைகளின்படி கட்டடங்களில் கடைபிடிக்க வேண்டிய தீ தடுப்பு வசதிகள்:

* தீ விபத்து ஏற்பட்டால், மீட்புக்கு தீயணைப்புத் துறையின் லேடர் வாகனம் வந்து செல்லும் அளவுக்கு, பக்கவாட்டில் காலி இடம் இருக்க வேண்டும்

* அவசர காலங்களில், கட்டடத்தில் உள்ளோர் உடனே வெளியேற, வெளிப்புறமாக தனி படிக்கட்டுகள் அமைக்கப்பட வேண்டும்

* கட்டடத்தின் மேல் தளத்தில், தீ விபத்தின் போது பயன்படுத்த, பிரத்யேகமான தண்ணீர் தொட்டி அமைத்து, போதிய அளவு நீர் இருப்பு வைக்க வேண்டும்

* ஒவ்வொரு தளத்திலும், தீ விபத்தின் போது தண்ணீரை பீய்ச்சி அடிப்பதற்கான, 'ஹோஸ்' குழாய் வசதி இருக்க வேண்டும்

* அறைகள், நடைபாதைகளில் தீ விபத்து ஏற்பட் டால், அதை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைப்பதற் கான, 'ஸ்பிரிங்க்சர்'கள் அமைப்பது அவசியம்

* அடுக்குமாடி கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் உடனே எச்சரிக்கும், புகை கண்டுபிடிப்பான் கருவி அறைகள், நடைபாதைகளில் அமைக்க வேண்டும்

* கட்டடத்தின் உயரம், 45 மீட்டருக்கு மேல் சென் றால், அவசர கால மீட்பு பணிகளுக்கு கட்டடத்தின் மேல் பகுதியில், 'ஹெலிபேட்' அமைக்கலாம்.

சி.எம்.டி.ஏ.,வின் முழுமை திட்ட அடிப்படையிலான வளர்ச்சி விதிகளில், இந்த பாதுகாப்பு அம்சங்கள் வலியுறுத்தப்பட்டு உள்ளன.



கடையை நடத்த அனுமதித்த CMDA / தீயணைப்பு அதிகாரிகள் பதில் சொல்லவேண்டும்.
கடை முதலாளி என்ன சொல்லுகிறார் . தீயணைப்பு படையை குறை கூறும் இவர்,கடைக்கு
என்ன பாதுகாப்புகள் செய்தார்  ஏற்கனவே விதிமுறை மீறி தளங்கள் இங்கு அமைக்கப்பட்டன.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி Empty Re: சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி

Post by T.N.Balasubramanian Thu Jun 01, 2017 3:34 am

சென்னை : லேட்டஸ்ட் சினிமா பிரபலங்களை வைத்து லட்சக்கணக்கில் விளம்பரத்திற்காக செலவு செய்யும் தி சென்னை சில்க்ஸ் தீ விபத்து தடுக்கும் பாதுகாப்பு அம்சத்தில் கோட்டை விட்டதே விபத்திற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.மனசுக்கு புடிச்ச ஷாப்பிங்னா அது சென்னை சில்க்ஸ் தான் என்று லேட்டஸ்ட் சினிமா நடிகை கீர்த்தி சுரேஷை வைத்து லட்சக்கணக்கில் விளம்பரம் செய்திருந்தது. கீர்த்தி சுரேஷ் மட்டுமல்ல ஸ்ரீவித்யா, காஜல் அகர்வால் என்று பணத்தை கொட்டிக் கொடுத்து விளம்பரம் செய்வதை மற்ற ஜவுளிக்கடைகளுக்கு போட்டியாக தி சென்னை சில்க்ஸ்ம் போட்டி போட்டு செய்யும்.ஆனால் வாடிக்கையாளர்களை ஈர்க்க இத்தனை பணச்செலவில் விளம்பரம் செய்த நிறுவனம், தனது கட்டிடத்திற்கான அடிப்படை பாதுகாப்பு அம்சங்களில் கோட்டை விட்டுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. மின்கசிவு காரணமாக காலை 4.30 மணியளவில் சென்னை தி.நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

தரம் குறைந்த கற்கள் ஒரு தளத்திற்குள் இன்னொரு தளம் லிப்ட், எஸ்கலேட்டர் வசதிகள் கொண்ட தி சென்னை சில்க்ஸ் கட்டிடம் கனம் குறைவான அதாவது ஹாலோ பிரிக்ஸ் என்று சொல்லப்படும் கற்களைவிட வெயிட் குறைவான மெலிதான கல்லில் கட்டப்பட்டுள்ளதாம். மேலும் ஒவ்வொரு தளத்திலும் செய்யப்பட்டுள்ள ஃபால்ஸ் சீலிங்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களால் செய்யப்பட்டுள்ளதால் தீ ஜூவாலை கொழுந்து விட்டு எரிகிறதாம்.
விதிமுறைன்னா என்ன? தி.நகரில் உள்ள கடைகளின் விதிமீறல்கள் ஒவ்வொரு தீ விபத்தின் போது ஓங்கி ஒலிப்பது ஒன்றும் புதிதல்ல. அதே போன்று இந்த சென்னை சில்க்ஸ் கட்டிடமும் இரண்டு கட்டிடங்களுக்கு மத்தியில் விடப்படும் இடைவெளி குறித்த விதிகளை பின்பற்றவேயில்லையாம். மேலும் விபத்தின் போது தீயணைப்பு வீரர்கள் சென்று வர முன், பின்புற வாசல்களில் செய்யும் வசதிகளும் இல்லாததோடு விதிமுறைகள் என்றால் என்ன என்று கேட்கும் வகையில் அந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாம்.
தண்ணீர் இல்லை இதெல்லாம் கூட பரவாயில்லங்க, ஆனால் ஒரு கட்டிடம் தீ பிடிச்சா உடனே அணைந்து போகிற மாதிரி தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் சிறு சிறு பைப்புகள் ஒவ்வொரு தளத்திலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் பொருத்தப்பட்டிருக்கும். அதெல்லாம் கடையில் உள்ளதாம் ஆனால் அந்த பைப்புல தண்ணி தான் இல்லையாம், இதுவும் தீ விபத்து மேலும் உக்கிரமடையக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

அலட்சியம் இந்தக் கடைக்காரங்க செஞ்சதை பார்த்தா தில் படத்துல விவேக் சொன்ன காமெடி தான் நினைவுக்கு வருது. செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை ஜாலி ஷாப்பிங்னு சொல்றதால தான உங்க கடைக்கு வர்றோம். ஆனா நீங்களே இப்படி சொதப்பினா எப்படிங்க. தீ விபத்து அதிகாலையில நடந்ததால வாடிக்கையாளர்கள் தப்பிச்சாங்க, இல்லாட்டி எத்தனை உயிர் பலிபோயிருக்குமோ. இனிமேலாவது வணிக நிறுவனங்கள் தீ தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையில் அலட்சியம் இல்லாமல் இருக்குமா என்று தான் தெரியவில்லை


நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி Empty Re: சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி

Post by ayyasamy ram Thu Jun 01, 2017 3:53 am

சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி Vl2cKVRRCOyUGMSTXdag+26
-
இந்நிலையில் கட்டடம் 23 மணி நேரம் எரிந்த நிலையில்
இன்று (ஜுன் 1) அதிகாலை சுமார் 3.20 மணிக்கு
கட்டடத்தின் வலது புறத்தின் ஒரு பகுதியில் 7 ம் தளம் முதல் 2ம்
தளம் வரை திடீர் என இடிந்து விழுந்தது.

இடிந்து விழுந்த கட்டடம் பெரும் பகுதி ஸ்ரீ குமரன் ஜுவல்லர்ஸ்
இருந்த பகுதி என கூறப்படுகிறது.

அப்பகுதியில் இருந்தவர்களை ஏற்கனவே போலீசார்
அப்புறப்படுத்தியிருந்ததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கட்டடம் முழுவதும் தீ பரவலாக எரிந்து வருகிறது.

கட்டத்தின் மேற்கூரையும், மொத்த கட்டடமும் விரைவில்
இடிந்து விழும் சூழ்நிலையும் நிலவுகிறது.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி Empty Re: சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி

Post by T.N.Balasubramanian Thu Jun 01, 2017 4:03 am

இடிந்து விழுந்தது ஒரு பகுதி.

சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி HhZDDLqTHGy3ylhZWYdw+Tamil_News_large_1781499_318_219


நன்றிதினமலர்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி Empty Re: சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி

Post by ayyasamy ram Thu Jun 01, 2017 4:13 am

சென்னை: மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டால்
108 ஆம்புலன்ஸ் உதவியை நாடலாம் என அமைச்சர்
ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
-
108 ஆம்புலன் ஸ் வாகனத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன்
சுவாச உதவி பெறலாம் இவ்வாறு அவர் கூறினார்.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி Empty Re: சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி

Post by M.Jagadeesan Thu Jun 01, 2017 9:07 am

எரிந்துபோன துணிகளை ஒன்றும் செய்யமுடியாது . எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று உருகிய தங்கம் & வெள்ளி நகைகளை ஆட்டைபோட சிலர் அலைந்துகொண்டு இருப்பார்கள் . எனவே அவற்றைப் பாதுகாப்பது காவல்துறையின் தலையாய பணியாக இருக்கவேண்டும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி Empty Re: சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தியாகராய நகரில் இன்று வைகோ பேசுகிறார்
» மும்பையில் நொறுக்குதீனி கடையில் பயங்கர தீ விபத்து 12 தொழிலாளர்கள் உடல் கருகி பலி
» சென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி
» அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம்
» சென்னையில் சாலை ஓரம் நின்றிருந்த காரை காயலான் கடையில் விற்ற போலீஸார்: உரிமையாளர் அதிர்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum