ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்

4 posters

Go down

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல் Empty சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்

Post by ayyasamy ram Fri May 19, 2017 4:02 am

சென்னை :
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் இருந்து ரூ.45 கோடி ம
திப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல்
செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் சினிமா பைனான்சியர் உள்ளிட்டோர் சிக்குவதால்
இந்த வழக்கு வருமானவரித்துறை மாற்றப்படுவதாக போலீசார்
தெரிவித்தனர். சென்னை கோடம்பாக்கம் ஜக்கிரியா காலனி
2வது தெருவை சேர்ந்தவர் தண்டபாணி(50).

இவர், ரியல் எஸ்டேட் மற்றும் பல்ேவறு தொழில் செய்து
வருகிறார். இவரது சகோதரர்கள் காவல்துறை மற்றும் சினிமா
துறையில் உள்ளவர்களுக்கு சீருடை தைத்து தரும்
‘‘எம்.வி.ராமலிங்கம் அன்கோ’’ என்ற பெயரில் நிறுவனத்தை
நடத்தி வருகின்றனர்.

மேலும் இவர்களது குடும்பத்துக்கு சொந்தமாக இதே தெருவில்
10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தண்டபாணி இவரது உறவினர்களுடன் பழைய
ரூபாய் நோட்டுகளான ரூ.500, ரூ.1000த்தை கமிஷன்
அடிப்படையில் மாற்றித் தருவதாக கோடம்பாக்கம் போலீசாருக்கு
ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு
தலைமையில் போலீசார் தண்டபாணியை தீவிரமாக கண்காணித்து
வந்த நிலையில், இவர்கள் வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை
ஒரு கார் வந்ததாகவும், சிலர் வந்து சென்றதாகவும் போலீசாருக்கு
ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், கோடம்பாக்கம் போலீசார் நேற்று அதிகாலை
அதிரடியாக ஜக்கிரியா காலனிக்கு சென்று தண்டபாணி வீட்டை
சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், அவரது வீட்டில் 10 பெட்டியில் பழைய
ரூ.500, 1000 நோட்டுகள் கட்டுக்கட்டாக இருப்பது கண்டு
பிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.45 கோடி. தொடர்ந்து போலீசார்
இந்த பழைய ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் பறிமுதல்
செய்து, தனி வாகனம் மூலம் கோடப்பாக்கம் காவல்நிலையத்திற்கு
கொண்டு சென்றனர்.

தண்டபாணியை கோடம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து
சென்று தீவிரமாக விசாரித்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இவர் ரியல் எஸ்டேட்
தொழிலதிபர் மட்டுமின்றி, கமிஷன் அடிப்படையில் பழைய
ரூபாய் நோட்டுகளை மாற்றி தரும் புரோக்கராகவும் செயல்பட்டது
தெரியவந்தது.

மேலும், பழைய ரூபாய் மாற்றி தருவதாற்காக 50 சதவீதம் வரை
கமிஷன் பெற்று வந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி
உள்ளது. இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசார் வருமான வரித்துறை
அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து இந்த வழக்கை வருமானவரித்துறை விசாரிக்கும்
என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் தண்டபாணி அளித்த வாக்குமூலத்தில் தேனாம்பேட்டையில்
உள்ள சினிமா பைனான்சியர் மற்றும் நகைக்கடை அதிபர் ஒருவர்
இந்த பணத்தை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

அதன்படி அந்த ரகசியமாக பைனான்சியர் மற்றும் நகைக்கடை
அதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என
பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு
அறிவித்தார். அதனை தொடர்ந்து டிசம்பர் 31ம் தேதி வரை இந்த
நோட்டுகளை மாற்றிக் கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இதன்பிறகு பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பது கண்டு
பிடிக்கப்பட்டால், சட்டப்படி குற்றம் என்றும், அவர்கள் கடுமையாக
தண்டிக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் ஒரே வீட்டில், ரூ.45 கோடி மதிப்புள்ள
500, 1000 நோட்டுகள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டிருப்பது
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி தண்டபாணி இதுவரை யாருக்கெல்லாம் பழைய
ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்தார், இதில் யாரெல்லாம்
சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், வேறு எங்கேனும் பழைய ரூபாய்
நோட்டுகளை பதுக்கி வைத்துள்ளாரா, யாரிடம் இந்த நோட்டுகளை
மாற்றுகிறார்,

அவர்களுக்கு கமிஷன் எவ்வளவு செல்கிறது என்பது உள்பட
பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதில் ஏராளமான முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள்
சிக்குவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. பறிமுதல்
செய்யப்பட்ட ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை
6 பெரிய இரும்பு பெட்டிகளில் அடைத்து போலீசார் நேற்று மாலை
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி அந்த பணத்தை ரிசர்வ் வங்கியிடம்
ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பணத்தை எண்ணிய 10 போலீசார்

ரியல் எஸ்டேட் அதிபர் தண்டபாணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட
பணத்தை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர்
தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் நேற்று காலை 9 மணி
முதல் மாலை 4.30 மணி வரை பணம் எண்ணும் இயந்திரம்
உதவியுடன் எண்ணினர்.

அப்போது மொத்தம் 44 கோடியே 79 லட்சம் ரூபாய் பணம் இருந்தது.
அதில் 85 சதவீதம் பணம் ரூ.500ம் 15 சதவீதம் பணம்
ரூ.1000ம் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
-
-------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல் Empty Re: சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்

Post by T.N.Balasubramanian Sun May 21, 2017 8:34 am

இந்த கணக்கை எல்லாம் பார்த்தால் , ரிசர்வ் வங்கி அச்சடித்த
நோட்டுகளுக்கு மேலேயே 500 ம் 1000 ம் சேர்ந்திருக்கும் போல இருக்கே.
இன்னும் எவ்வளவு அகப்படப் போகிறதோ?

ஆண்டவருக்குத்தான் வெளிச்சம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல் Empty Re: சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்

Post by M.Jagadeesan Sun May 21, 2017 9:05 am

செல்லாது எனத் தெரிந்தும் , அந்தப் பணத்தையெல்லாம் ஏன் பதுக்கி வைக்கவேண்டும் ? கொளுத்தி இருக்கலாமே ! போலீசில் மாட்டாமலாவது தப்பித்திருக்கலாம் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல் Empty Re: சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்

Post by T.N.Balasubramanian Sun May 21, 2017 6:41 pm

இது விஷயமாக தினமலரில் வந்துள்ள சமீபத்திய பதிவு.

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல் D4XFoVQBT5aVoLcXcSTi+Tamil_News_large_1774488_318_219

தமிழகத்தில், கோடிக்கணக்கில், பழைய செல்லாத ரூபாய் நோட்டுகள் சிக்குவது தொடர் கதையாகி விட்டது. ஆனால், அவற்றை மாற்றித் தர உத்தரவாதம் தந்தவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

நாடு முழுவதும், 2016 அக்டோபர், 8ல், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டன. அதே ஆண்டு, டிசம்பருடன் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் காலக்கெடு முடிந்தாலும், அதை கமிஷனுக்கு மாற்றித் தருவதாக, பல கும்பல்கள் மோசடியை அரங்கேற்றி வருகின்றன.

மார்ச், 25ல், சென்னை, மணப்பாக்கம் பகுதியில், 3.42 கோடி ரூபாய், பழைய நோட்டுகளை வைத்திருந்த ஒரு கும்பலை, போலீசார் மடக்கிப் பிடித்தனர். அந்த பணம், டில்லியில் வசிக்கும் தமிழக டாக்டர் ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.பின், மார்ச், 30ல், சென்னை, ஷெனாய் நகர் அருகே சிலரை பிடித்த போலீசார், 1.02 கோடி ரூபாய், செல்லாத நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல, ஏப்ரல், 17ல், காரைக்குடியில், 51.56 லட்சம் ரூபாயும், ஏப்., 21ல், சென்னை, கொடுங்கையூர் பகுதியில், 1 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை, கோடம்பாக்கத்தில், தண்டபாணி என்பவரிடம் இருந்து, 45 கோடி ரூபாய், செல்லாத நோட்டுகளை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில், பைனான்சியர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும், மேற்கண்ட சம்பவங்களில் உண்மையான குற்றவாளி யார் என்பதை, போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. செல்லாத ரூபாய் நோட்டுகளை எங்கோ, யாரோ மாற்றி தர தயாராக இருப்பது தெரிய வருகிறது. ஆனால், இடைத்தரகர்கள் தான் பிடிபடுகின்றனர். அவர்களை தாண்டி விசாரிப்பதற்கு, உரிய முயற்சியை, போலீசார் எடுக்கவில்லை.


இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை, மணப்பாக்கத்தில் பிடிபட்ட தொகைக்கு, டில்லி டாக்டர் வருமான வரி செலுத்த சம்மதித்தார். ஆனால், இதர வழக்குகளை, போலீசார் தான் கையாண்டனர். பிடிபட்ட நபர்களிடம், தீவிர விசாரணை மேற்கொண்டால், உண்மை வெளிவரலாம்.

யாரோ ஒருவர் உத்தரவாதம் அளிப்பதாலேயே, பழைய நோட்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதை, கிரிமினல் வழக்காக பதிவு செய்து, பிடிபட்டவர்களிடம் விசாரிக்க வேண்டும். இதன் பின்னணியில், பெரிய மோசடி இருக்கலாம்.சென்னையில் பிடிபட்ட, செல்லாத ரூபாய் நோட்டுகள் தொடர்பாக, ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியிருந்தோம்.

செல்லாத ரூபாய் நோட்டுகள் பற்றி, அவர்களால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும்; ஆனால், தயக்கம் காட்டுகின்றனர். இதுவரை, எங்கள் கடிதத்திற்கு, பதில் அனுப்பவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

-- நமது சிறப்பு நிருபர் -

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல் Empty Re: சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்

Post by M.Jagadeesan Sun May 21, 2017 7:38 pm

T.N.Balasubramanian wrote:இது விஷயமாக தினமலரில் வந்துள்ள சமீபத்திய பதிவு.

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல் D4XFoVQBT5aVoLcXcSTi+Tamil_News_large_1774488_318_219



யாரோ ஒருவர் உத்தரவாதம் அளிப்பதாலேயே, பழைய நோட்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதை, கிரிமினல் வழக்காக பதிவு செய்து, பிடிபட்டவர்களிடம் விசாரிக்க வேண்டும். இதன் பின்னணியில், பெரிய மோசடி இருக்கலாம்.சென்னையில் பிடிபட்ட, செல்லாத ரூபாய் நோட்டுகள் தொடர்பாக, ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியிருந்தோம்.

செல்லாத ரூபாய் நோட்டுகள் பற்றி, அவர்களால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும்; ஆனால், தயக்கம் காட்டுகின்றனர். இதுவரை, எங்கள் கடிதத்திற்கு, பதில் அனுப்பவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

-- நமது சிறப்பு நிருபர் -

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1242543

ரிசர்வ் வங்கியின் சிஸ்டம் கெட்டுவிட்டது என்றே நினைக்கிறேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல் Empty Re: சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்

Post by T.N.Balasubramanian Sun May 21, 2017 9:45 pm

புன்னகை புன்னகை
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல் Empty Re: சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்

Post by சிவனாசான் Mon May 22, 2017 8:24 pm

மைய அரசு கடுமையான சட்டம் போட்டுள்ளபோதும் எவ்வளவு
தைரியம் பாருங்களேன். வழக்கு போட்டா நீதி மன்றம் உள்ளதே
பார்த்து கொள்ளலாம் என்ற தைரியம். அந்த அளவிற்கு நீதியின்
மேல் முழு நம்பிக்கை அந்த எஸ்டேட் டுக்கு >>>>>சட்டம் வெறும்
சட்டமே>>>>>>தான்.>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல் Empty Re: சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 1000 கோடி நில மோசடி வழக்கில் கைது ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் பெங்களூர் சிறையில் அடைப்பு
» சென்னையில் ரூ.2 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
» திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர் கோவையில் ஓட ஓட விரட்டிப் படுகொலை
» சென்னையில் நிலம் வாங்கி புலம்பும் சிங்கப்பூர் தமிழர்கள்: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது புகார்
» சென்னை விமான நிலையத்தில் இரண்டரை கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum