புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_m10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10 
59 Posts - 55%
heezulia
அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_m10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_m10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_m10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_m10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_m10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_m10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_m10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_m10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_m10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_m10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10 
54 Posts - 55%
heezulia
அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_m10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_m10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_m10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_m10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_m10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_m10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_m10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_m10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_m10அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தநாள் ஞாபகம் - பள்ளிப்பருவத்தில்...!


   
   
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sat May 13, 2017 1:27 am

அந்தநாள் ஞாபகம் - பள்ளிப்பருவத்தில்...! - பா.வெ.

பள்ளி செல்கையில்
பத்திரமாய் சென்று வர
திருநீறு பூசிவிடும்
திகட்டாத அன்பில்
நெற்றியோடு நெஞ்சமும்
நிறையும்!

விடுமுறை நாட்களை
வெயிலோடு கழிக்க
விளையாட்டுகள் சேர்ந்து
வீடு தேடி வரும்!

கபடி, கண்ணாமூச்சி, கிட்டிப்புள்,
பம்பரம்,பகடை, பல்லாங்குழி,
பச்சைக்குதிரை, பாண்டி,பரமபதம்,
நண்டூருது நரியூருது, நாடுபிடித்தல்,
கொலகொலயா முந்திரிக்கா, கோலி,
சில்லுக்கோடு,சூட்டுக்காய்,பேபே,
டயர்வண்டி, நுங்குவண்டி... -
களைப்பறியா தேகத்தில்
கடல் சொட்டும்!

வெயில்கால மண்வாசம்
விளையாடித் தீர்த்த
உடலெங்கும் வீசும்!

நிறம் ஏறி போன ஆடையெல்லாம்
நிறம் மாறி நித்தம்
வீடு வரும்!

உணவைத் தின்ற
உன்னத விளையாட்டுகள்
உடல் வலுக்க
உதவிக்கரம் நீட்டும்!

மழைக்கால கப்பலில் பயணிக்க...
மழைத்துளியில் மொட்டுவிடும்
அரைவட்ட குமிழிகளோடு
அணிவகுப்பாய் செல்ல...

பனி துளிர்த்த மலரில் தேன் உரியும்
பட்டாம்பூச்சியிடம் கடன் கேட்க...
பஞ்சு மர காய்கள் பிளந்து
பிஞ்சிலேயே சாப்பிட...

முதிய வேடமிட்டு
முண்டாசு கட்ட...
மூஞ்செலியின் முணுமுணுப்பை
முடுக்குகளில் தினம் கேட்க...
முந்திரிப் பழ மூக்கையும் சாப்பிட...

தென்னை ஓலையில்
திரியில்லா ராக்கெட் விட...
தெப்பத் திருவிழாவிற்கு
தினமும் சென்று வர...
தெருவிளக்கு வெளிச்சத்தில்
தினம் தினம் விளையாட...

சாய்வு நாற்காலியில்
சரிந்து அமர...
சுவர் மீது சிறுநேர ஓவியமிட...
சுவர் கடிகார பெட்டியில்
சுற்றும் முள்ளோடு நகர...

கல்லெறிந்து கிடைத்த மாங்காயில்
காக்கா கடியை ஆடை ருசிக்க...
காக்கா முட்டையை
குயிலிடமிருந்து காப்பாற்ற...

மணல் தின்ற சங்கினுள் சென்று
மணல் முழுதும் மீட்டு வர...
மாங்காய் தோப்பில்
மதிய வேளைகளில்
மரக்கட்டில் படுக்கையில்
தாத்தாவுடன் தினமும் தூங்க...

கன்றுக்குட்டியின் கன்னத்தோடு
கன்னம் வைத்து விளையாட...
காக்கை கவ்வும் அழகு ரசிக்க
காலையில் தின்ற உணவு வீச...

கோழிக்குஞ்சுகளை பஞ்சாரத்துளை வழி
கொஞ்சலாய் ரசித்திட...
கோலி சோடா
கழுத்தில் சிக்கிய குண்டை
காப்பாற்றி விளையாட....

குளத்தில் கல் வீச...
குருவிக்கூச்சலில் குரல் சேர்க்க...
கொக்கோடு சேர்ந்து நிற்க...
கொசுவிற்கு மூட்டம் போட...

தட்டான் தூக்கும்
மண் துணுக்கில் வீடு கட்ட...
தவளையோடு தாவிக்குதிக்க..
தண்ணீரில் ஊறித் திளைக்க...
தண்ணீர் சுண்டிய குளத்தில்
தரை நீந்தும் பருந்தின் மீது ஏற...

தொட்டாச்சிணுங்கி வெட்கத்தை
தொட்டுப்பார்த்து அறிய...
தொடுவான எல்லையை
துரத்திப் பிடிக்க...
தொட்டி நீரில் சாதகம் செய்திட...

திருவிழா இராட்டினத்தில்
தினம் தினம் அமர...
திருவிழா கால மோர் குடிக்க...
தீபாவளி வெடிகள்
தீராமல் தினம் இருக்க...

தலையாட்டும் ஓணானின்
தலைக்கனம் குறைக்க...
தலையில் தேய்த்த காகிதத்தில்
தவறின்றி நகல் உருவம் பதிக்க...
தென்னை மீது தழுவி ஏற...

மிதிவண்டி விளக்கொளியில்
பூட்டிய வீட்டை இரவில் திறக்க...
மின்மினி வெளிச்சத்தில்
மிரட்டும் இருளில் நடை போட...
மீன் குழம்பை மறுநாள் சாப்பிட...

வாயால் ஊதிய
வண்ண முட்டைகளை
உடையாமல் கையில் ஏந்திட...
ஊஞ்சல் கம்பிகளுக்கிடையில்
உட்காராமல் ஓயாது ஆடிட...
ஊரோடு சேர்ந்து தேர் இழுக்க...
உப்பு மூட்டையில் ஊர் சுற்ற...

பொறுமையாய் வாரிய தலையில்
பேன் தேடி நசுக்க...
பொன்வண்டின் நிறம் கேட்க...
பெட்ருமாஸ் வெளிச்சத்தில் படிக்க...

பின்னக்கொட்டை உடைத்து
மை எடுத்து பூசிட...
பாசி படர்ந்த படிகளில்
பார்த்து பார்த்து
பாதம் வைக்க...

அம்மா முந்தானையில்
அடிக்கடி ஒளிய...
அப்பாவிடம் கேட்காமல்
அவர் சட்டையில் காசு தேட....
அணில் கடித்த கொய்யாவை
அப்படியே சாப்பிட...

கிணற்றை எட்டிப்பார்க்க...
கிள்ளு வடகம் காய்வதற்குள்
கிள்ளி கிள்ளி தின்ன...
கிளிமூக்கு மாங்காய் பறிக்க...

நீருருண்டை நித்தம் தின்ன...
நீருக்கடியில் சத்தமிட...
நீல வானில் சட்டை நனைக்க...
நிலாவில் பாட்டியிடம் வடை கேட்க...

ஐஸ்காரர் வண்டியில் ஏறி
தலையை விட்டு தேடி எடுத்த ஐஸ்
கரைவதற்குள் கடிக்காமல் ருசிக்க...
ஐயனார் மீசை கண்டு அச்சம் கொள்ளாதிருக்க...
அயிர மீனை ஆற்றில் தேட...

ஒலிச்சித்திரம் ஓயாமல் கேட்க...
ஒலி நுழையாத வெற்றிடத்தில்
ஒரு நாள் வாழ்ந்து பார்க்க...

விறகு அடுப்பில் மட்பாண்டம்
விதவிதமாய் சமைப்பதை ருசிக்க...
விடைத்தாளில் “வெரி குட்” வாங்க...என
ஆசைக்கு அளவில்லை
அந்நாளில்!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 13, 2017 1:49 am

இம்மாதிரி அருமையான அந்த நாளை நினைப்பூட்டி
ஏங்க வைத்த உமக்கு ஒரு தண்டனை தரத்தான்வேண்டும்.
பிடியுங்கள் அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  IyXcfemUSOuix1cH9EBl+images

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 13, 2017 6:22 am

அப்பா ! மிகப்பெரிய பட்டியல் ! வாழ்த்துக்கள் பா . வே .

" அந்த நாளும் வந்திடாதோ ? " என்று ஒவ்வொருவரும் ஏங்கித் தவிக்கும் வகையில்தான் இன்றைய சமூகச் சூழல் உள்ளது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sat May 13, 2017 9:02 am

பூக்களின் தண்டனை வரிகளை வாசமுறச் செய்கிறது.மிக்க நன்றி ஐயா!



எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sat May 13, 2017 9:09 am

உண்மைதான் ஐயா. ம(றை)றந்துபோன வாழ்வியலை வரிகளில் மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.கவிதை "இளைப்பாறல்" என்ற தலைப்பில் மிக நீண்டது.வரிச்சுமை சலிப்பை இறக்கி வைத்துவிடுமோ என்ற யோசனையில் இவ்வாறு சிறுசிறு தலைப்புகளில் பதிவிடுகிறேன்.மிக்க நன்றி ஐயா!



எண்ணம் போல் வாழ்வு
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 13, 2017 3:01 pm

சிறுவயது நினைவுகள் எப்போதுமே இனிமை தான். அடிக்கடி இதெல்லாம் கனவாய் இருந்து சிறுபிள்ளையாய் தூக்கத்திலிருந்து எழுந்திறமாட்டோமா எனத் தோணும்.

அருமை அருமை அந்தநாள் ஞாபகம்  -  பள்ளிப்பருவத்தில்...!  3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sat May 13, 2017 3:12 pm

மிக்க நன்றி!



எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sat May 13, 2017 3:15 pm

அந்தநாள் ஞாபகம் - காதல்! - பா.வெ.


பருவம் சுரந்த காதலை
பருகத் துடிக்கும் இதயங்களை
பயம் மெல்ல பிடித்து இழுக்கும்!

மனதில் பூத்த காதலை
மறுகணம் பறிக்க வழியின்றி
மனதை பிசையும்
தயக்கம்!

தயக்கம் மீறிய மயக்கத்தில்
துளிர்விட்ட காதலை
தூதுவிட துணிவு
துளிர்ப்பதில்லை!

காதலை சொல்ல
கண்கள் நிமிர
கணநேரமும் கனியாத
காலம் அது!

கண்களில் வழிந்த காதலை
காலத்திற்கும் பதுக்க வழியில்லை;
பதுக்கினாலும் பார்க்க
ஆளில்லை!

கன்னியரிடம் காதல் சொல்லும்
கண்ணியக் கடிதங்களை
கண்கள் வாசிக்கும் முன்பே
காணாமல் போகும் காளையரின்
வெள்ளந்தி மனம்
வெகுவாக ஈர்க்கும்!

திருவிழாவைத் தேடுவோர் மத்தியில்
திருவிழாவில் தேடும் கண்கள் நான்கில்
திகட்டாத இன்பம் திளைக்கும்!

கடைவிழிப் பார்வையில்
கனிந்த காதல் கரைசேர்வது
காலத்தின் கையில்!

மனதில் புதையாத காதல்
மண்ணில் புதைந்தும்
மனங்களைச் சேர்க்கும்!






Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக