ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை!

2 posters

Go down

அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை! Empty அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை!

Post by ayyasamy ram Tue May 09, 2017 7:13 pm

அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை! ODqeHGcRi6hDrDZOqMig+shutterstock_631554317_15098
-
நிலவு கண்டு
அல்லி மலரும்
ஓஹோ... அதனால்தான்
அவள் கூந்தலில்
வைத்தபோது மட்டும்
வாடுகிறதோ?


- கவிதைகளிலும் போற்றப்பட்டிருப்பதுபோல சங்க
இலக்கியங்களிலும் அல்லி மலர் பற்றிப் பல குறிப்புகள்
உள்ளன.

மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தில், `பூ அல்லி கொய்யாமோ'
என்று சிவபெருமானின் பெருமைகளைப் பாடியுள்ளார். சென்னை
திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு கிணற்றில் மலர்ந்த அல்லி
மலரில் பேயாழ்வார் தோன்றினார் என்பது வரலாறு.

இத்தகைய பழம்பெருமைகள் வாய்ந்த இந்த மலரானது குளம்,
பொய்கை (நீர் நிலை), நீர்ச்சுனை, மெதுவாக ஓடும் ஆறுகளில்
வளரக்கூடிய ஒரு கொடியாகும்.
-
----------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை! Empty Re: அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை!

Post by ayyasamy ram Tue May 09, 2017 7:15 pm

அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை! POpC8V1SSEWROjwdmk6Q+shutterstock_631874552_15537
-
தாமரை மலர் போன்று காணப்படும் இது.
ஆனால், தாமரை காலையில் மலர்ந்து இரவில் அதன்
இதழ்கள் மூடிக்கொள்வதுபோல அல்லியின் இதழ்கள்
இரவில் மலர்ந்து காலையில் இதழ் மூடிக்கொள்ளும்.

எகிப்தில் உள்ள நைல் நதியில் உள்ள வெள்ளை நிற
அல்லி காலையில் மலர்ந்து இரவில் தன் இதழ் மூடும்.
நீரில் மிதக்கக்கூடிய அகன்ற நீள்வட்ட இலைகளும்
மெல்லிய குழலையும் கொண்ட அல்லி வெள்ளை மற்றும்
சிவப்பு நிறம் கொண்டது. அல்லியின் இலை, பூ, விதை,
கிழங்கு மருத்துவக்குணம் நிறைந்தவை.

அல்லியில் அதன் பூக்களுக்குத்தான் மருத்துவக்குணம்
அதிகம். பூவின் சாற்றுடன் சிறிதளவு செந்தூரம் நாட்டு
மருந்துக்கடைகளில் கிடைக்கும்) சேர்த்து 20 நாள்கள்
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தொடர்பான
பிரச்னைகள் தீரும்.

வெள்ளை அல்லிப்பூவையும் ஆவாரம்பூவையும் சம அளவு
எடுத்து நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் காய்ச்ச வேண்டும்.
நன்றாகக் கொதித்துக் கூழ் போல ஆனதும் அடுப்பிலிருந்து
கீழே இறக்கி ஆற வைத்து காலை, மாலை பாலுடன்
சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நீர்ச்சுருக்கு, சொட்டு மூத்திரம்
மற்றும் சிறுநீர் தொடர்பான நோய்கள் குணமாகும். மேலும்
உடல் சூடு தணிவதோடு ரத்தக்கொதிப்பு சமநிலைக்கு வரும்.

வெள்ளைப்படுதல், வெட்டை நோய் மற்றும் சூட்டினால்
வரக்கூடிய கண் நோய்களும் குணமாகும். கண் சிவத்தல்,
கண் எரிச்சல், நீர் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு வெறும்
அல்லி இதழ்களைக் கண்களின்மீது வைத்துக் கட்டி வந்தாலே
குணம் கிடைக்கும்.
-
------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை! Empty Re: அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை!

Post by ayyasamy ram Tue May 09, 2017 7:18 pm

அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை! 1HYBdijGRZGyWLzgoVfP+shutterstock_626550344_15434
-
சர்க்கரை நோயாளிகள், இதன் இதழ்களை மட்டும்
நீர் விட்டுக் காய்ச்சி 40 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு
வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இதழ்களை நிழலில் காய வைத்துப் பொடியாக்கி பால்,
தேனில் கலந்து சாப்பிட்டு வர அடிக்கடி ஏற்படும்
கருச்சிதைவைத் தடுக்க முடியும். விதையைத் தூளாக்கிப்
பாலுடன் சேர்த்துக் குடித்து வர ஆண்களுக்குத் தேகப்
பலம் கிடைப்பதோடு கல்லீரல், மண்ணீரல் பலம்பெறும்.

விதையுடன் ஆவாரம் விதை சேர்த்துப் பொடியாக்கி
1 முதல் 2 கிராம் அளவு எடுத்துப் பாலில் கலந்து
சாப்பிட்டு வர ஆண்மை பலம் கிடைப்பதோடு சர்க்கரை
நோய் கட்டுக்குள் வரும்.
-
-----------------------------
-
அவுரி இலைச்சாறு, மருதாணி இலைச்சாறு தலா
100 மில்லி அளவு எடுத்து 100 கிராம் அல்லிக்கிழங்குடன்
35 கிராம் தான்றிக்காய் சேர்த்து அரைத்து 500 மில்லி
தேங்காய் எண்ணெயில் கலந்துக் காய்ச்சி தைலப்பதம்
வந்ததும் இறக்கி வைத்துக்கொள்ளவும்.

இதைத் தலைக்குத் தேய்த்து வந்தால் இளநரை
மறைவதோடு, தலைமுடி செழித்து வளரும். பித்தக்
கோளாறுகளும் சரியாகும். இதயப் பலவீனம், இதயப்
படபடப்பு, ரத்தசோகை உள்ளவர்கள் சிவப்பு அல்லி
இதழ்களுடன் செம்பருத்திப் பூ இதழ்களைச் சேர்த்துக்
காய்ச்சி கசாயமாக்கி குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.

இதைக் காலை, மாலை டீக்குப் பதிலாகக் குடித்து வரலாம்.
இதை சர்பத் செய்தும் அருந்தலாம்.
-
இலையை நீர் விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால்
புண்கள் விரைவில் ஆறும். அல்லி மலரில் காணப்படும்
மகரந்தப்பொடியை காய வைத்து நீர் விட்டுக் காய்ச்சி குடித்து
வந்தால் உடல் எரிச்சல், ரத்த மூலம், மாதவிடாயின்போது
வரக்கூடிய பிரச்னைகள் சரியாகும்.
-
-----------------------------
எம்.மரிய பெல்சின்
நன்றி- விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை! Empty Re: அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை!

Post by Dr.S.Soundarapandian Tue May 09, 2017 8:41 pm

அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை! 1571444738 :நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை! Empty Re: அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum