ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன்

5 posters

Go down

ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன் Empty ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன்

Post by sugumaran Fri May 05, 2017 8:26 am

ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன்



ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன் GhCGWdicTgOCiYu4V4jf+panjaangamஇந்த தொடர் ஜோதிடம் மூட நம்பிக்கையா அல்லது அறிவியலா என்று ஆராயப்போவதில்லை ஆனால் இது ஜோதிடத்தில் இருக்கும் சில மூட நம்பிக்கைகளையும் ஏன் ஜோதிடம் பல நேரங்களில் பொய்க்கிறது எனதைப் பற்றியும் , பொய்க்கிறது எனத் தெரிந்தும் எப்படி இத்தனை காலம் அது நீடித்துவருகிறது என்பதையும் .உலகின் பெருவாரியானவர்களின் நம்பிக்கையை பெற்ற இந்த கலை ஏன் அத்தனைத்தூரம் மக்களுக்கு பயன் இல்லாமல் இருக்கிறது என்பவைகளைப் பற்றி ஓரளவிற்கு தெளிவாக உரக்க சிந்திக்க இருக்கிறோம்
முதல் உண்மை
ஜோதிஷம் எனும் ஜோதிடம் நாம் நினைப்பது போல் மனிதனின் எதிர்க்காலத்தை தெரிந்து கொள்வதற்காக ஏற்ப்படுத்தப்பட்டதல்ல .
ஜோதிஷம் என்றால் ஒளியைத்தேடி என்றுதான் பொருள் .இந்த பொருளுடைய சொல்லுக்கும் மனிதனின் எதிர்க்காலத்திர்க்கும் எங்கே தொடர்பு இருக்கிறது .
மனித இனத்தின் உயர் நூல்கள் உயர் சாஸ்திரங்கள் அத்தனைக்கும் குறிக்கோள் ஒன்றுதான் . அது மனிதனை ஒரு நிலை உயர்த்துவது .அவனின் பரிணாமத்தின் அடுத்தப் படிக்கு அழைத்து செல்வது பின் இறுதியிலே பிரும்மத்தை அறிந்து அதனுடன் இணைவது இவைகளே ஒரு உயர் நூலினின் லட்ஷனங்கள் இவைகளுக்கு உதவாத எந்த நூல் படிப்பதும் பொழுது போக்குவது ஒன்றே .
நாம் வந்த வேலையை பலர் மறந்துவிடுகின்றனர் வந்த வேலைப் பார்க்கவே நேரம் பற்றாது .
இதில் வெட்டிப் பொழுது போக்குவதுவேறு தேவையா
ஜோதிஷம் என்பது வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது .வேதத்தின் பயன் எதுவோ அதுவேதான் ஜோதிட சாஸ்திரத்தின் பொருளும் ஆகும் .அறிவைத்தேடும் பயணத்தில் ஜோதிடமும் ஒரு கருவியாகும்
இதில் மனிதனின் ஆன்மீக பயணத்திற்கு வானசாஸ்திரத்தை எங்கனம் பயன் படுத்துவது என்பதன் விளக்கமும் அறிவும் தான் உள்ளது .இது குறித்து ரிஷிகளும் சித்தர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையை ஊன்றி கவனித்து
இயற்கையின் மாறுதல்கள் பூமியை எவ்வாறு பாதிக்கிறது என கண்டுணர்ந்து
அவைகளில் கண்ட உண்மைகளை ஒரு சாஸ்திரம் ஆக்கினார்கள் .
வானியல் : வெளியில் தோன்றும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை இனம் கண்டு வகைப் படுத்துவது. அவற்றின் இயக்கம் மற்றும் சுழற்சி பற்றி அறிவது, தட்பவெப்ப நிலை மாற்றங்களில் வான் பொருட்களின் தாக்கம், கிரகணங்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவற்றைப் புரிந்து கொள்ளுதல் முதலியவை. ஒருபகுதி .இகலை புரிந்துகொள்ள கணிதம் மேம்பட்டது .இது ஒரு அங்கம் இதில் திரி கோணம் பல உயர் கணிதங்களும் வளர்ந்தன இத்தகைய கணித அறிவின் மூலமே கோள்களின் இயக்கத்தியும் அசைவுகளையும் பண்டைய அறிஞர்கள் கண்டறிந்தனர் .
ஜோதிடத்தின் முக்கிய அடுத்த அங்கம் கால அளவிடுதல் முறை
காலக் கணக்கு முறைகள் தாங்கள் காணும் இயற்கை நிகழ்வுகளின் அடிப்படையிலேயே உண்டாயின. பன்னிரண்டு ராசிகள், சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை சுழற்சியைக் கொண்டு நாட்களை அளவிடுதல் போன்றவை. பிறப்பு, இறப்பு நாட்கள், பருவங்கள், பண்டிகைகள் இவை அனைத்தும் இந்தக் கால அளவு முறையிலேயே குறித்து வைக்கப் பட்டன.
இத்தகைய பாரம்பரிய அறிவு பஞ்சாங்கம் என்ற பொதுப் பெயரிலே தொகுக்கப்பட்டது
இவ்வாறு பிருமத்தைத் தேடும் பயணத்திற்காக முறைபடுத்தப்பட்ட வானியல் அறிவும் கணித அறிவும் பல நூற்றாண்டுகளாக கவனித்து பதிவு செய்யப்பட பிரபஞ்ச நிகழ்வுகளும் அது குறித்த ஆராயய்ச்சியின் ஒட்டு மொத்த பெயரே ஜோதிடம் என்பதாயிற்று .
தற்போது கூடபத்தில் விண்ணியல் ஆராய்ச்சியின் போது அந்தகைய ஆராய்ச்சின் போக்கிலே வேறுபல கண்டுபிடிப்புகளும் ஏற்ப்படும் அவைகள் பல ஆயுதங்கள் நாம் செய்வதற்கும் இன்னும் சொல்லப்போனால் மனிதனின் செயற்கை கால் செய்வதற்கு கூட தொழில் நுட்பம் விண்வெளி ஆராயய்சி செய்யும் போது கிடைத்ததாக அப்துல் கலாம் கூறியிருக்கிறார்
இவ்வாறே ஜோதிடம் எனும் வானியல் அறிவும், கணித அறிவும், பல நூற்றாண்டுகளாகத்
திரட்டப் பட்ட பிரபஞ்ச நிகழ்வுகள் இவைகளை உள்ளடக்கிய ஒரு பெரும் அறியியல் திரட்டில்
விளைந்த ஒரு சிறிய பொருள்தான் நாம் இப்போது கூறும் எதிர்காலத்தை பற்றி மட்டும்
கூறுவதாக நினைக்கும் ஜோதிடம் ஒருகாலத்தில் ஒவ்வரு பிராமணரும் ஜோதிடம் அறிந்திருக்க
வேண்டிய கட்டாயம் இருந்தது .காலப்போக்கில் இது எதிர்காலத்தை கூறும் ஒரு கலையாக இதையே தொழிலாகக் கொண்ட சிலரால் மாற்றியமைக்கப்பட்டது
எனவே ஜோதிஷம் அல்லது ஜோதிடம் என்பது வேதத்தில் ஆறு அங்கத்தில் ஒன்று .சித்தர்களால் அர்த்தத்துடன் பேணி வளர்க்கப்பட்ட கலை .ஆனால் எதிர்க்காலம் அறிந்து கொள்ள மட்டும் அல்ல .இதின் பல உபயோகத்தில் எதிர்க்காலம் அறிவதும் ஒன்று .ஆனால் தற்போது இந்த சாஸ்திரம் இந்த எதிர்க்காலம் அறிவதிலேயே தேங்கிப் போய் நின்றுவிட்டது .காரணம் அனைவருக்கும் தெரிந்ததே .
இனி அதன் தொடர்ச்ச்யை விரிவாக காண்போம்
குறிப்பு
இது ஒரு குறுந்தொடர்தான்
ஜோதிடம் கூறும் போது எவைகளால் பலன்கள்
மாறிவிடுகின்றன என்பதைப்பற்றி சிந்திப்போம் .
குறிப்பு எனக்கு ஜோதிடம் நன்றாகவே தெரியும் .பல ஆண்டுகள் உழைத்து கற்றுக்கொண்டு இப்போது அதில் இருந்து ஒதுங்கிவிட்டேன்
எனவே இதை எந்த மண்டபத்தில் வாங்கியது என்ற கேள்வி வராது என நினைக்கிறேன் .!
இன்றைய குறிப்பு
இந்தக்கட்டுரை சுமார் ஏழு வருடங்களுக்கு முன் நான் எழுதியது .
எதையோ தேடும் போதுஇப்போது கிடைத்தது .
நண்பர்களுடன் பகிர்கிறேன்
எழுதியதால் வந்த" பாவம்" படித்தால் தானே போகும்
அண்ணாமலை சுகுமாரன்
5/5/17
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன் Empty Re: ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன்

Post by badri2003 Fri May 05, 2017 9:50 am

நன்றி நண்பரே.
badri2003
badri2003
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Back to top Go down

ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன் Empty Re: ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன்

Post by T.N.Balasubramanian Sat May 06, 2017 5:14 am

தொடருங்கள் சுகுமாரன் அவர்களே.
ஜோதிடம் ...நம்புபவர்கள் ஆர்வமாக படிப்பர்.
நம்பாதவர் ,பரிசோதிக்க படிப்பார்கள்.
ஆக மொத்தம் யாவரும் படிப்பர்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன் Empty Re: ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன்

Post by ayyasamy ram Sat May 06, 2017 12:28 pm

ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன் 103459460 ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன் 3838410834
-
தொடருங்கள்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன் Empty Re: ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன்

Post by ராஜா Sat May 06, 2017 1:08 pm

தொடருங்கள் சுகுமாரன் சார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன் Empty Re: ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum