ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி!

3 posters

Go down

அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Empty அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி!

Post by B.VENKATESAN Wed May 03, 2017 1:06 am

அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! - பா.வெ.

ஓட்டுக்கட்டிடம் தாங்கிய
ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்று
ஊர்புறத்தில் கல்வியை
ஊட்டி வளர்க்கும்!

ஆரம்ப கல்வியை
ஆரம்பிக்கும் குழந்தைகள்
ஆரஞ்சு மிட்டாய்களை
அனைவருக்கும் வழங்கி
மகிழும்!

கல்லு சிலேட்டும் தகர சிலேட்டும்
நாலு கோடு போட்ட நோட்டும்
ஆரம்ப வகுப்புகளை
ஆரம்பிக்கும்!

முக்காலித் தாங்கியில் கரும்பலகையும்
முழங்கால் மடிக்காத மர நாற்காலியும்
முக்காலமும் வாழும்
வகுப்பறை சின்னங்கள்!

மண்வாசம் நீங்காத மழலைகள் மீது
மரத்தடி நிழல் வகுப்பும்
மண் தரை இருக்கையும்
மாறாத நேசம் நீட்டும்!

தலைக்கு எண்ணெய்
தாராளமாய் தடவி
வாகு எடுத்து வழித்து சீவி
விபூதி பொட்டு நெற்றியில் இட்டு
பவுடர் பூக்க பாதி துடைத்து
பையில் புத்தகம் ஏந்தி
பள்ளி செல்லும் குழந்தைகள்
பார்க்கவே கொள்ளை அழகு!

பொதிசுமையற்ற போதுமான
புத்தகங்கள் திணிப்பின்றி
புகுந்திருக்கும் - ஜோல்னா பைகளில்!

புத்தக சித்திரங்களை உயிர்ப்பித்து
புது வாழ்வு வாழ்ந்த
புதிர் வாழ்க்கை அது!

அந்நாளில் அறவே குறையாத
ஆசிரியர் மீதான மரியாதை
அழகாய் தெரியும் –
அக்குள் தாண்டி கைகட்டும்
அழகிய கைகள் இரண்டில்!

ஆசிரியரோடு பாடம் சொல்ல
அனைத்து குழந்தைகளும்
அழகாய் ராகமிடும்!

வால்தனம் நீட்டிய
வழக்கமான புகார்களை
வகுப்பறைக்குள் சரிசெய்வது
வாத்தியார் கடமை!

கால் அனாவும் அரை அனாவும்
கனமாய் தெரிந்த
காலம் அது!

கால்சட்டை ஓட்டை தொலைத்த
காசை கண்டெடுப்பது
கணநேர சொர்க்கம் அன்று...!

பத்து பைசா சேமிப்பில்
பத்தாயிரம் கனவுகளை
பதுக்கிய பருவம் அது!

தந்தையிடம் வாங்கிய பின்பு
தாத்தா மடியில் கிட்டும் காசு
தட்டையான தகர பெட்டியில்
தஞ்சம் புகும்!

குச்சி வாங்கி எழுதவும்
குச்சி மிட்டாய் தின்னவும்
தகர பெட்டி பற்களால்
திறக்கப்படும்!

பள்ளிகூட வாசலில்
பரப்பிய கோணியில்
கணிவாய் கடை நடத்துவாள் -
காது கனமாய் தொங்கும்
கிழவி ஒருத்தி!

கால் அனா லாபத்தை கூட
கடனாக விற்கும்
கனிந்த மனம் கிழவிக்கு!

மண் தரை வகுப்புகள் நெய்த
மண்ணாடைகளை களைய
மதிய இடைவேளை மணியோசை
மறுப்பு சொல்லும்!

தண்டவாள இரும்பு போல்
தடித்திருக்கும் பள்ளி மணி!
மணி அடிக்க ஓடுவதும்
மணி அடித்தால் ஓடுவதும்
மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள்!

பெற்றோர் கெளரவம்
பெற்ற மதிப்பெண்ணில் இல்லை;
பிஞ்சு மனதிற்கு இறுக்கமில்லை ;
இயல்பான தேர்ச்சியில்
இடைஞ்சல் ஏதுமில்லை!

B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Empty Re: அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி!

Post by krishnaamma Wed May 03, 2017 1:22 am

மிக அழகாக எழுதுகிறீர்கள் வெங்கடேசன் .........நதி இன் அமைதியான ஓட்டம் போல தங்கு தடை இன்றி வந்து விழுகின்றன வார்த்தைகள்......ஆரஞ்சு மிட்டாயும் தகர சிலேட்டும் நாலு வரி நோட்டும் நேரே அந்தக் காலத்துக்கு என்னை கொண்டு போய்விட்டது...........அருமை அருமை அருமை.............வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ......நிறைய எழுதுங்கள்...சிலருக்குத்தான் இப்படி வரம் கிடைக்கும்...எனக்கு ரசிக்க மட்டுமே தெரியும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Empty Re: அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி!

Post by B.VENKATESAN Wed May 03, 2017 8:10 am

மிக்க நன்றி அம்மா! தங்கள் மிகையான பாராட்டுகள் என்னுள் இன்னும் வரிகளை விதைக்கின்றன.எல்லாம் இறை சித்தம்.நான் வெறும் கருவி மட்டுமே..."நன்றி" என்ற வார்த்தையின் நீளம் மூன்று எழுத்துக்களில் முடங்கினாலும் ஈகரை நட்புகள் மீதான நான் கொண்ட நன்றி நாளும் நீளும்.அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகள் பல...


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Empty Re: அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி!

Post by krishnaamma Wed May 03, 2017 11:36 am

B.VENKATESAN wrote:மிக்க நன்றி அம்மா! தங்கள் மிகையான பாராட்டுகள் என்னுள் இன்னும் வரிகளை விதைக்கின்றன.எல்லாம் இறை சித்தம்.நான் வெறும் கருவி மட்டுமே..."நன்றி" என்ற வார்த்தையின் நீளம் மூன்று எழுத்துக்களில் முடங்கினாலும் ஈகரை நட்புகள் மீதான நான் கொண்ட நன்றி நாளும் நீளும்.அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகள் பல...
மேற்கோள் செய்த பதிவு: 1240922

மிகையான பாராட்டுகள் இல்லை வெங்கடேசன், நிஜமாகவே நன்றாக இருக்கு உங்கள் கவிதைகள் புன்னகை.......ஆமாம் நீங்கள் சொல்வது போல இது இறைவன் கொடுத்த வரம் தான் , அதைத்தான் நான் குறிப்பிட்டேன் 'இதுபோல் எல்லோருக்கும் வருவது இல்லை' என்று புன்னகை ....GOD BLESS YOU ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Empty Re: அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி!

Post by B.VENKATESAN Wed May 03, 2017 12:33 pm

மிக்க நன்றி அம்மா!


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Empty Re: அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி!

Post by M.Jagadeesan Thu May 04, 2017 10:11 am

ஒரு கவிக்குரிய லட்சணங்கள் தங்கள் கவிதையில் தெரிகின்றன . வார்த்தைகளும் அழகு ! சொல்கின்ற செய்திகளும் அழகு ! சொல்லும் விதமும் அழகு !

மரபுக்கவிதைகளில் தங்கள் கவனத்தை செலுத்தவும் ; குறிப்பாக வெண்பா , விருத்தப்பா ஆகிய இலக்கணங்களைப் பயின்று , கவிதைகள் செய்யப் பழகவும் . இதே தளத்தில் ரமணி என்பவர் மரபுக் கவிதைகள் எழுதி வருகிறார் . அவருடைய கவிதைகளை வாசிக்கவும் . மேலும் காளமேகம் , புகழேந்திப் புலவர் ஆகியோரின் கவிதைகள் வெண்பா கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும் . தினமும் திருக்குறள் படித்து வந்தாலே , நல்ல கவிஞராக உருவாகலாம் என்பது என் கருத்து .

மரபுக் கவிதைகளின் அழகிலே தோய்ந்த உள்ளம் , புதுக்கவிதை , ஹைக்கூ போன்ற கவிதைகளை விரும்பாது . அதற்காக புதுக்கவிதைகளை நான் வெறுப்பவனல்ல. மரபுக் கவிதைகளை படிப்பவர்கள் , எழுதுபவர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள் . அந்த எண்ணிக்கையை நும்போலும் கவிஞர்கள் முயன்றால் அதிகப்படுத்தலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Empty Re: அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி!

Post by B.VENKATESAN Thu May 04, 2017 10:44 am

மிக்க நன்றி ஐயா! நிச்சயமாக முயல்கிறேன்.ஓரளவு எழுத வரும்.ஆனால் பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை.உரைநடை அடுக்குகளை கவிதை என ஏற்கும் காலகட்டம் இது. எனினும் மரபு வழுவா மனம் கொண்ட தங்களுக்காக எனது பழைய கவிதை ஒன்று...

தோன்று நிலை தொட வொன்னா
தொன்மை தொட்டதென் தேன்தமிழே!!!

பாட்டனும வன்முப் பாட்டனும் பயின்று
பகிர்ந்த தென் பைந்தமிழே!!!

நாவிற் கினியநற் சுவைபொ திந்ததோர்
"ழ"கரம் சூடியதென் நற்றமிழே!!!

இலக்கணம் வழுவா இலக்கிய மெடுத்து
இயம்பிய தென் இயற்றமிழே!!!

முச்சங்கமும் முன்னிலை நல்கி யதோர்
மூத்த மொழியென் முத்தமிழே!!!


தீராச் சுவையிற் திகட்டா தொரு
பாயின்பம் பகர்வதென் தீந்தமிழே!!!

சென்ற விடமெல்லாஞ் சிறப்பு சேர்
செம்மொ ழியென் செந்தமிழே!!!

தென்னன் புகழ் தன்னைதிக்கு தோறும்
தெளித்த தென் தெளிதமிழே!!!

காலத்தா லழியாக் கடவுள் நிலை
கண்ட தென் கன்னித்தமிழே!!!

நாகரிகம் மெல்லநா வடைத்திடினும் நாளும்
நாவில் நவில்வது நறுந்தமிழே!!!



எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி! Empty Re: அந்தநாள் ஞாபகம் – ஊராட்சி ஒன்றிய பள்ளி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum