புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_lcapதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_voting_barதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_rcap 
65 Posts - 64%
heezulia
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_lcapதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_voting_barதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_lcapதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_voting_barதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_lcapதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_voting_barதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_lcapதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_voting_barதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_lcapதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_voting_barதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_lcapதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_voting_barதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_lcapதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_voting_barதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_lcapதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_voting_barதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_lcapதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_voting_barதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_lcapதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_voting_barதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_rcap 
15 Posts - 3%
prajai
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_lcapதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_voting_barதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_lcapதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_voting_barதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_lcapதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_voting_barதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_lcapதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_voting_barதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_lcapதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_voting_barதமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 29, 2017 6:23 pm


தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  DpaYNkd0S72gwsAOY1EI+bharathidasan01_15355
-
``நாங்கள் தமிழில் கவிதைகள் எழுத வேண்டும்.
எங்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?’ என பாவேந்தர்
பாரதிதாசனிடம் புதிதாகக் கவிதை எழுத வந்த இளைஞர்கள்
கேட்டபோது, பாரதிதாசன் சட்டென சொன்ன பதில்...
`ஆழ்வார் பாசுரங்களைப் படியுங்கள்’' என்பதுதான்.

``நீங்கள் பகுத்தறிவுப் பாவலர். அப்படியிருக்க, பாசுரங்களைப்
படிக்கச் சொல்கிறீர்களே?’’ என்று கேட்க,

``பாசுரங்களைப் படிக்காமல், உங்களால் எப்படி தமிழ்க்
கவிதைகள் எழுதிவிட முடியும்?’’ என்று பதில் சொல்லி
இருக்கிறார். இதுதான் பாரதிதாசன். பிடித்தால் உடும்பு பிடி...
அடித்தால் அதிரடி. அவரின் 126-வது பிறந்த நாள் இன்று.

‘`திராவிடக் கலை, இலக்கியத்தின் மையப்புள்ளியே
பாவேந்தர் பாரதிதாசன்தான். பொதுவாக, தமிழில்
கவிதைகளுக்கும் பாடல்களுக்கும்தான் உரை எழுதுவார்கள்.

ஆனால், தந்தை பெரியாரின் உரைகளுக்கெல்லாம் கவிதை
எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன்.

1950-களில்தான் அரசாங்கம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைப்
பற்றி பேசியது; பிரசாரம் செய்தது. ஆனால், பெரியார்
1930-களிலேயே குடும்பக் கட்டுப்பாடு திட்டம் பற்றிப் பேசினார்.

`பிள்ளை பெறுவது என்பது, பெண்களின் கடமை அல்ல;
அவர்களது உரிமை. அவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால்
அவர்களை பிள்ளை பெற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தக்
கூடாது’ என்றார் பெரியார்.

இதை, `காதலுக்கு வழிவிட்டு கருப்பாதை சாத்த
கதவு ஒன்று கண்டறிவோம்
இதில் என்ன குற்றம்...’ என 1937-ம் ஆண்டு கவிதை
பாடினார் பாவேந்தர்.
-
----------------------------------------
கதிர்பாரதி
-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 29, 2017 6:26 pm


`இரணியன் அல்லது இணையற்ற வீரன்’


”1934-ம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய,
`இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்கிற அவரின்
முதல் நாடகம், சென்னை விக்டோரியா மஹாலில்
நடைப்பெற்றது. நடித்தவர்கள் திராவிடக் கலைஞர்கள்
நாடக மன்றத்தினர். தலைமை, தந்தை பெரியார்.

இந்த நாடகத்தை, 1948-ம் ஆண்டு அன்றைய அரசாங்கம்
தடைசெய்தது. தடையை மீறி நாடகம் நடந்தது. அதனால்
நாடகத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும் சிறையில்
அடைக்கப்பட்டனர். மூன்று மாதம் மூன்று வாரம்
சிறைவாசத்துக்குப் பிறகு, 1948-ம் ஆண்டு டிசம்பர் மாதம்
விடுதலையாகி வெளியே வந்தபோது, அவர்களை முதலில்
செய்யாற்றில் வரவேற்றவர் தந்தை பெரியார்.

அங்கிருந்து ஊர்வலமாக வந்த நாடகக் கலைஞர்களை
காஞ்சிபுரத்தில் வரவேற்றவர் அறிஞர் அண்ணா.

இந்த நிகழ்வில் என்ன ஒரு முரண் என்றால், சுதந்திரம்
வாங்கும் வரை ஆங்கிலேயர்கள் அனுமதித்த நாடகத்தை,
சுதந்திரம் வாங்கிய ஒரே வருடத்தில் நமது ஆள்கள்
தடைசெய்ததுதான்’’ என்கிறார் பேராசிரியர்
சுப வீரபாண்டியன்.
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 29, 2017 6:30 pm


ஸ்ரீராமானுஜர் படத்துக்குப் பாடல் எழுதிய பாரதிதாசன்…

``திராவிட இயக்கத்திலிருந்து தமிழ்த் திரைப்படத் துறையின்
முதல் நுழைவுகூட பாவேந்தர் பாரதிதாசன்தான். இவருக்குப்
பிறகுதான் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி
ஆகியோரின் திரையுலகப் பிரவேசம் நடந்தது.

1937-ம் ஆண்டு வெளிவந்த `பாலாமணி அல்லது பக்கா திருடன்’
படத்தின் அத்துணை பாடல்களையும் எழுதினார் பாரதிதாசன்.
இதற்கு அடுத்ததாக எழுத்தாளர் வ.ரா-வின் கதையில் உருவான
`ஸ்ரீராமனுஜர்’ படத்துக்கு அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.

அப்போது பாரதிதாசனிடம் `நீங்களோ பகுத்தறிவுக் கவிஞர்.
ஆனால், ஆன்மிகப் படமான ஸ்ரீராமானுஜர் படத்துக்குப் பாடல்கள்
எழுதுகிறீர்களே?' என்று கேட்டபோது,

‘உனக்கு ஒண்ணு தெரியுமா? சினிமாவுல நுழையுறது அவ்வளவு
சுலபம் இல்லை. என்னை நிலைநிறுத்திக்கிட்ட பிறகு பாரு,
நான் நினைக்கிற படம் எடுக்கிறேன்’ என்றார்.

அதுபோலவே 1950-ம் ஆண்டு `பொன்முடி’ படத்தை எடுத்தார்.
முழுக்க முழுக்கப் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கொண்ட படம்
அது. அவரின் `எதிர்பாராத முத்தம்’ என்ற குறுங்காப்பியத்தின்
தழுவல்தான் `பொன்முடி’ திரைப்படம்.

`எதிர்பாராத முத்தம்’ என்பது புதுவையில் நிலவிவரும்
பிரெஞ்சுக் கலாசாரம். ஒருவரை ஒருவர் பார்த்ததும் முத்தமிட்டு
முகமன் கூறி வணங்குவார். இதை மையமாக வைத்துதான்
`எதிர்பாராத முத்தம்’ குறுங்காப்பியத்தை எழுதியிருப்பார்
பாரதிதாசன்.

`பாவேந்தரின் `பொன்முடி’ படத்துக்கு முன்பே
அண்ணாவின் `வேலைக்காரி’, `நல்லத்தம்பி’ படங்கள்
உருவாகின’ என்பார்கள். ஆனால், வெளிவந்ததில் முதலாவது
`பொன்முடி’தான். அந்த வகையில் தமிழ்த் திரைத் துறையின்
முதலாவது திராவிட நுழைவு பாரதிதாசன்தான்.

இன்றைக்கும் தமிழர்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட பல
கவிதை வரிகளை எழுதியவர் பாவேந்தர்தான்.
`எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே
முழங்கு,’
`கொலைவாளினை எடடா மிகக்கொடியோர் செயல் அறவே’,
`தமிழுக்கும் அமுதென்று பேர்’... என்பன போன்ற வரிகள்
இன்றைய இளைய தமிழ்த் தலைமுறையை எழுச்சியோடு
வைத்திருக்கின்றன.

1942-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா `திராவிட நாடு' பத்திரிகையைத்
தொடங்கியபோது,
`தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்ற கவிதை வரிகளைத்தான்,
அதன் முகப்பு வரியாகப் போட்டார்’’ என்கிறார் பேராசியர்
சுப வீரபாண்டியன்.

இவை எல்லாம் பாரதிதாசனின் முதல் புத்தகமான
`பாவேந்தர் பாரதிதாசன் கவிதை’ நூலில் உள்ள வரிகள்தான்.
1937-ல் வெளிவந்த இந்த வெளியிட்டவர் குத்தூசி குருசாமியின்
மனைவி குஞ்சிதம் குருசாமி. பெண்ணடிமைத்தனம் வேரோடிக்
கிடந்த அந்தக் காலகட்டத்தில் ஒரு பெண்ணை தன் முதல்
புத்தகத்தை வெளியிடவைத்துப் பெருமைப்படுத்தியவர் பாவேந்தர்.
-
மாற்றுச் சிந்தனை கொண்டோரையும் தன் தமிழால் மயக்கிய
கவிக்குயில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்மொழியின் கம்பீர
அடையாளங்களில் முக்கியமானவர்!
-
---------------------------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக