ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier

2 posters

Go down

‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier Empty ‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier

Post by ராஜா Thu Apr 27, 2017 2:35 pm

நேற்று ஒரு வாட்ஸ் அப் இசைக் குழுமத்தில் நண்பர் எடி, ஒரு செய்தியைப் பகிர்ந்தார். படித்ததும் ஒரு நிமிடம் பக்கென்றது.

“The legendary trumpet player, Frank Dubier who played a stellar role in MSV and Ilaiyaraaja Sir's compositions is no more. Please remember him in your prayers”

அதற்குக் கொஞ்சநேரம் முன்புதான் காரில் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலைக் கேட்டுக்கொண்டே வந்தேன். அதில் பல்லவி முடிந்ததும், முதல் இடையிசையில் ஆரம்பிக்கிற ட்ரம்பெட்... Frank Dubierன் கைவண்ணம்.. இல்லையில்லை.. மூச்சு!

Frank Dubier

‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier Frank_13191


உடனே அவரைப் பற்றித் தேடிப் போகத்துவங்கி அந்தப் புகழ்பெற்ற காற்றிசைக்கலைஞனைப்பற்றி தெரிந்துகொண்டேன். எத்தனையெத்தனை அற்புதமான இசையை அள்ளி வழங்கியிருக்கிறார் மனிதர்!

பார்த்த ஞாபகம் இல்லையோ...
அவளுக்கென்ன? அழகிய முகம்...
அனுபவம் புதுமை...
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை..
பளிங்கினால் ஒரு மாளிகை..

என்று பரபரவென மனதுக்குள் நுழைந்த MSV பாடல்களாகட்டும்..

பேரைச் சொல்லவா..
நினைவோ ஒரு பறவை..
இளமை இதோ.. இதோ
மன்றம் வந்த தென்றலுக்கு
சங்கீத மேகம்..
ஆசை நூறு வகை
சொர்க்கம் மதுவிலே

என்று இளையராஜா தந்த, இதயம் கவர்ந்த பாடல்களாகட்டும்...எத்தனை பாடல்களை அதன் Interlude எனப்படும் இடையிசைக்காகவே ரசித்திருப்போம் ?

அதுவும்.. மன்றம் வந்த தென்றலுக்கு பாடலின் இடையிசையில் ஒலிக்கும் ட்ரம்பெட்டை ரசிக்காமல் அந்தப்பாடலைக் கடக்கவே இயலாது. அதுபோலவேதான் 'சங்கீத மேகம்' பாடலும்!

இதுபோன்ற அத்தனை பாடல்களிலும் முகம் தெரியாத எத்தனையோ இசைக்கலைஞர்கள் தங்கள் முழு இரசனையையும், திறமையையும் காட்டித்தான் நம்மைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள். நமக்கு வெளியில் தெரிவதெல்லாம், பாடகரின் குரலும், பின்னணி இசையின் அழகும் மட்டுமே! ஆனால், அதில் எத்தனை வாத்தியங்கள்! அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் எத்தனை திறமைசாலிகள்! அவர்களின் சுவாசத்தில் இசை எவ்வளவு கலந்திருந்தால், நம்மை கட்டிப்போடும் இசையை, தனது வாத்தியங்களை வருடி, முத்தமிட்டு, மீட்டி நமக்குள் புகுந்திருப்பார்கள்?

அவ்வாறு, இசையமைப்பாளர் கொடுத்த குறிப்புகளை வைத்துக்கொண்டு, இம்மி பிசகாமல் வாசிக்கும் கலைஞர்கள்தான் ரசிகனுக்கும், இசையமைப்பாளருக்குமான பாலமாக இருக்கிறார்கள்.

அப்படிப் பாலமாகச் செயல்பட்டு, மேற்சொன்ன பாடல்களில் தன் முத்திரையைப் பதித்த ட்ரம்பெட் ஜாம்பவான்தான் Frank Dubier. ஜாஸ் இசையை 50களில் சென்னையில் பரவ விட்டவர்.

Trumpetசென்னையின் ஆங்கிலோ இந்தியக் குடும்பம். அவரது தாய் ஒரு பியானோ மற்றும் வயலின் கலைஞர். சிறுவன் ஃப்ராங்க் 7 வது வயதில் ட்ரம்ஸ் கற்றுக்கொள்கிறான். பிறகு வயலினில் தேர்ச்சி பெறுகிறான். நாள் செல்லச்செல்ல, அவனது ஆர்வம் காற்றுக்கருவிகளுக்குள் செல்கிறது. முதலில் ட்ரம்பெட்! பிறகு க்ளாரிநெட், சாக்ஸஃபோன், புல்லாங்குழல் என்று வாசிக்கப் பழகி, முழுநேர காற்றுக்கருவிக் கலைஞனாக உலகுக்குத் தெரிய வருகிறான். மெட்ராஸ் கவர்னர் பேண்டில் வாசிக்கத் துவங்குகிறான். பிறகு ஜிம்கானா க்ளப்பில் வாசிக்கிறான்.

அப்போதெல்லாம் திரையிசையில், ஜாஸ் இசைக்க இவர்கள் குழுவைத்தான் நாடுவார்கள். அப்படி நாடப்பட்டு, MS விஸ்வநாதன் இசையில் பல பாடல்களுக்கு கிளாரினெட், ட்ரம்பெட், சாக்ஸஃபோன் வாசித்திருக்கிறார். அப்படி வாசித்த பாடல்கள்தான் மேலே பார்த்தவை!

பிறகு, இளையராஜாவும், இவரும் ஒரே இடத்தில் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள். பின்னாளில், இளையராஜா இசையமைப்பாளரான பிறகு.. அவரை அழைத்து, தனது பல பாடல்களுக்கு வாசிக்கும்படிச் சொல்லியிருக்கிறார். நாம் இன்று ரசித்துக் கேட்கும் பலப்பல பாடல்களின் இடையிசையில் இதயம் தொடுபவர் Frank தான்..!

திரை இசை இசைத்தாலும், அவரது ஜீவனாக இருந்த ஜாஸை கடைசிவரை விடவில்லை அவர்! உலக நாடுகளின் ஜாஸ் குழுமங்களில் ‘ஃப்ராங்க் துபேர்’ மிகப் பிரபலம். பல உலக நாடுகளில் தனிக் கச்சேரிகள் செய்திருக்கிறார். தனது பெயரிலேயே ஒரு ஜாஸ் குழுவும் நடத்தியிருக்கிறார். பலப்பல மேடைகளில் கச்சேரிகளை அலங்கரித்து, நமது காதுகளையும், தன் காற்றிசையால் அலங்கரித்த ஃப்ராங்க் துபேர் இன்று இல்லை. கடையடைப்பு, சமரசப்பேச்சு, டெல்லி போலீஸ் என்று நீங்கள் பரபரப்பாக நிகழ்ச்சிகளை வாட்ஸப்பில் பரப்பிக்கொண்டிருந்தபோது, அமைதியாக தனது கடைசிக்காற்றைச் சுவாசித்துக் காற்றில் கரைந்து சென்றிருக்கிறார். ஃப்ராங் துபேர் என்ற அந்த மாபெரும் காற்றிசைக் கலைஞன்.

சென்று வாருங்கள் Frank.. உங்கள் இசையோடு நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம்.!

‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier Frank_2_13030

இப்போது… அவருக்காகவே, இன்னுமொருமுறை மேலே பட்டியலிட்ட பாடல்களைக் கேட்பீர்கள்தானே ?

கேளுங்கள்.. Frank பார்த்துக்கொண்டிருக்கிறார்!

-vikatan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier Empty Re: ‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier

Post by krishnaamma Thu Apr 27, 2017 6:00 pm

கண்டிப்பாக இதில் உள்ள பாடல்களை மறுபடியும் கேட்கவேண்டும் போல் இருக்கிறது...அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் ! ......... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum