ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா?

Go down

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா? Empty டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா?

Post by ayyasamy ram Wed Apr 26, 2017 4:31 am

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா? UUWTfetLSzuzv7JzkmvU+DSC_6447_18206
-
கடந்த 41 நாட்களாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர்
பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்
சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள்
பலர் போராடிவந்தனர்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளை
நேரில் சந்தித்து, 'உங்களது கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்'
என கூறியுள்ளார்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தற்காலிகமாக
போராட்டத்தை கைவிட்டு இன்று காலை (25-04-2017) தமிழகம்
வந்தடைந்தனர்.
-
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய
அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை வரவேற்க
இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் திரண்டிருந்தனர்.
-
---------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா? Empty Re: டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா?

Post by ayyasamy ram Wed Apr 26, 2017 4:32 am

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா? 5UwIQ5dQMqgHz5h9KSX6+vivasaayikal2_18138
-

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு
"விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நாங்கள்
போராட்டம் நடத்தி வந்தோம்.

'எப்படியாவது மோடி எங்களின் குறைகளை கேட்கமாட்டாரா?'
என்ற எண்ணத்தில் இருந்தோம். ஆனால், அவர் எங்களை சந்திக்க
வரவில்லை. அதனால் எலிக்கறி உண்ணுதல், மொட்டை அடித்தல்,
நிர்வாண போராட்டம் செய்தோம்.
இறுதிவரை அவர் எங்களை சந்திப்பதை தவிர்த்தே வந்தார்.
-
இந்த போராட்டத்தை எப்படியாவது கலைக்க வேண்டும் எங்களை
ஊருக்கு அனுப்ப வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருந்தனர்.
அதனால் எங்களுக்கு எந்த அளவுக்கு கஷ்டம் கொடுக்க முடியுமோ?
அந்த அளவுக்கு கொடுத்தனர்.

நாங்கள் இருந்த பகுதியில் ஒரு நபர் கொலை செய்யப்பட்டு சாலையில்
கிடந்தார். அந்த கொலை வழக்கை எப்படியாவது எங்கள் மேல்
சுமத்துவதற்கான நாடகமும் நடந்தது. அரசியல்வாதிகள் மற்றும்
காவலர்களின் மிரட்டல்களும் அதிகமாக இருந்தது.

ஆனால், நாங்கள் யாரும் பயப்படவில்லை. தமிழக விவசாயிகளுக்கு
நல்லது நடக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் நாங்கள் போராடி
வந்தோம். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தமிழக முதல்வர் பழனிசாமி
எங்களை வந்து சந்தித்தார்.

அப்போது அவர் 'உங்களை மோடியுடன் பேசுவதற்கு நான் அழைத்துச்
செல்கிறேன்' என்றார். ஆனாலும் முடியவில்லை.
கடைசியாக 'தமிழக அரசால், உங்களுக்கு என்னென்ன சலுகைகள் தர
முடியுமோ அந்த அனைத்து சலுகைகளையும் நான் செய்து தருகிறேன்.
தயவு செய்து போராட்டத்தை கைவிடுங்கள்' என்றார்.

அதனால் இந்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டிருக்கிறோம்.
ஆனால், விவசாயிகளுக்கு மாநில அரசும், மத்திய அரசும் எந்த ஒரு
நல்ல முடிவையும் எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில்
ஈடுபடுவோம். அந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடக்கும்."
என்றார்.
-
----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா? Empty Re: டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா?

Post by ayyasamy ram Wed Apr 26, 2017 4:34 am

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா? KvJ8BYRLRWCaLsNpUbcv+DSC_6489_18378
-

போராட்டத்தில் ஈடுபட்ட பிரகாஷ் என்ற இளைஞர்
"விவசாயிகளுக்கு ஆதரவு குரல் கொடுக்கவே நான்
டெல்லிக்குச் சென்றேன். அங்கு நம் விவசாயிகளின்
போராட்டம் தீவிரமடையவே நானும் போராட்டத்தில்
கலந்துகொண்டேன்.

நமது விவசாயிகளுக்கு விரைவில் நன்மை நடக்க வேண்டும்.
இல்லையென்றால், மீண்டும் இளைஞர்களை ஒன்று திரட்டி
டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் செய்வோம்.

ஜல்லிக்கட்டுக்காக ஒன்று கூடிய நம் இளைஞர்கள் கண்டிப்பாக
விவசாயிகளுக்காகவும் ஒன்று கூடுவார்கள். மத்திய, மாநில
அரசுகள் தமிழக விவசாயிகளுக்கு நல்ல முடிவு எடுக்கவில்லை
என்றால், விரைவில் டெல்லியே அதிரும்படியான மிகப்பெரிய
போராட்டம் நடக்கும்.

நம்ம விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு பிரச்னையின்னா முதல்ல
இளைஞர்கள்தான் முன் வர வேண்டும்." என்றார்.
-
---------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா? Empty Re: டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா?

Post by ayyasamy ram Wed Apr 26, 2017 4:36 am

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா? PI2JOituQPSOetM606ps+DSC_6533_18502
-


87 வயதான சம்மந்தம் தாத்தா

"தமிழக விவசாயிகள் மட்டுமல்ல... அனைத்து மாநில
விவசாயிகளையும் மத்திய அரசு ஏமாற்றி வருகிறது.
இதை டெல்லியில் போராடியபோது தான் தெரிந்து
கொண்டேன்.

மற்ற மாநில விவசாயிகளும் எங்களுடன் போராடுவதற்குத்
தயாராக இருந்தனர். எங்களுக்கு முழு ஆதரவையும் அவர்கள்
கொடுத்து வந்தனர். தமிழ் மக்கள் மட்டுமல்ல...

தினம் தினம் பல மாநில விவசாயிகளும் எங்களை சந்தித்து
ஆதரவு தருவதாகச் சொன்னார்கள். சில நாட்களுக்கு முன்
பஞ்சாப்பிலிருந்து ஒரு விவசாய குழு ஒன்று வந்தது.
உங்களின் போராட்டம் வரவேற்கத்தக்கது. உங்கள்
மனதைரியத்தை பாராட்டுகிறோம். இந்த நேரம் எங்களுக்கு
அறுவடை காலம் என்பதால் எங்களால் உங்களுடன் சேர்ந்து
போராட முடியவில்லை.

இன்னும் சில தினங்களில் அறுவடை முடிந்துவிடும். அதன்
பின் எங்கள் விவசாயிகளும் உங்களுடன் இணைந்து
போராடுவார்கள். அதை சொல்வதற்கே இங்கு வந்தோம்'' என்றார்கள்.

அதேபோல பல விவசாயிகள் எங்களுக்கு முழு ஆதரவையும்
கொடுத்தார்கள். மத்திய அரசு எங்களுக்கு நல்ல முடிவை
எடுக்காவிட்டால் விரைவில் மிகப்பெரிய போராட்டம் டெல்லியில்
வெடிக்கும். அப்போது தமிழக விவசாயிகளுடன் பல மாநில
விவசாயிகளும் கலந்துகொள்வார்கள்.

விவசாயிகள் நலன் காக்க இந்திய அரசு உடனே நல்ல முடிவை
எடுக்க வேண்டும். இனி அடுத்தடுத்த போராட்டங்கள் நடை
பெறும்போது நான் முதல் ஆளாக வருவேன்.
எனக்கு வயது ஒரு தடையே இல்லை." என்கிறார் 87 வயதான
சம்மந்தம் என்ற தாத்தா.
-
---------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா? Empty Re: டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா?

Post by ayyasamy ram Wed Apr 26, 2017 4:39 am

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா? 391q4PHCSLugSSc42E3I+001_18452
-
அமரஜோதி என்ற பெண் நம்மிடம் பேசியபோது
"பல நாட்கள் போராட்டம் நடத்தினோம். ஆனால், மோடி
எங்களை வந்து சந்திக்கவே இல்லை. பலவிதமான
போராட்டங்கள் செய்தோம்.

எங்களை கலைக்க நினைத்தார்களே தவிர யாருமே பேச
முன்வரவில்லை. அந்த ஊர் மக்கள் எங்களுக்கு அனைத்து
விதமான உதவிகளையும் செய்து வந்தார்கள்.

விவசாயிகளுக்கு ஏதாவது நல்லது செஞ்சா புண்ணியமா
போகும்" ஒருவித கனத்த இதயத்தோடு தெரிவித்தார்.
-
உணவுண்ணும் விவசாயிகள்
-
டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா? X6AqBV2PQyWLt6ZCvBgv+004_18276
-
இடுப்பில் ஒரு கோவணமும், தோளில் ஒரு துண்டையும்
மட்டுமே உடுத்தி வந்த அனைத்து விவசாயிகளுக்கும்,
'எப்படியாவது தமிழக விவசாயிகளுக்கு நல்லது நடந்துவிடாதா?'
என்ற ஏக்கம் மட்டுமே மிச்சமிருந்தது.
-
------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா? Empty Re: டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பேரக்குழந்தைகள் முன்னிலையில் 81 வயது தாத்தா திருமணம்: 61 வயது பாட்டியை மணந்தார்
» பதின் வயது கொண்ட பெண் பிள்ளையின் பெற்றோர்களா நீங்க ? - கொஞ்சம் பொறுமையா படிங்க இதை
» 85 வயது மன்மத தாத்தா!
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?
» நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum