ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் !

2 posters

Go down

மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் ! Empty மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் !

Post by krishnaamma Tue Apr 25, 2017 11:38 pm

மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் !

சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான்.

”ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?” என்று கேட்டான்.

அதற்கு சாக்ரடீஸ், ”மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும்.

கோழியைப் போல இருக்க
வேண்டும்.

உப்பைப் போல இருக்க வேண்டும்.

உன்னைப்போல இருக்க வேண்டும்” என்றார்.

மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

”கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்” என்றான்.

”கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும்.

மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும்.

அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்” என்றார்.

”கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான் மாணவன்.

”கோழி என்ன செய்யும்?
குப்பையைக் கிளறும்.

ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும்.

அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார் சாக்ரடீஸ்.

”அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே…”

”ஆமாம்.

உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும்.

ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது.

அதன் சுவையை மட்டுமே உணர முடியும்.

அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்” என்றார்.

”எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே… அதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான்.

”மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.

அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்” என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.

நன்றி whatsup!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் ! Empty Re: மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் !

Post by M.Jagadeesan Wed Apr 26, 2017 10:58 am

ஒரு மாணவன் எப்படி இருக்கவேண்டும் என்பதை சாக்ரடீஸைவிட  , நம்முடைய நன்னூல் ஆசிரியர் பவநந்தியார் மிகவும் அழகாகச் சொல்லுகிறார் .

அன்ன மாவே   -    தலை மாணவனுக்கு இலக்கணம் .

அன்னம் , ஆ  என்று இதைப் பிரிக்கவேண்டும் .

அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரித்து அருந்தும் இயல்பு உடையது. அது போல சிறந்த மாணவர்கள் தேவை இல்லாததை விட்டு விட்டு தேவையானதை படிப்பார்கள்.

பசு, புல் கண்ட இடத்தில் வயறு முட்ட வேகமாக நிரப்பிக் கொண்டு,பின் ஆற அமர அசை போடும். அது போல சிறந்த மாணவர்கள் நல்ல ஆசிரியனையோ , புத்தகத்தையோ கண்டால் வேகமாக முடிந்த வரை அறிவை பெற்றுக் கொண்டு பின் தனிமையில் அதைப் பற்றி ஆராய்ந்து,சிந்தித்து தெளிவு பெறுவான்.

இது இரண்டும் முதல் தரமான மாணவனின் இலக்கணம்.

மண்ணோடு கிளியே - இடை மாணவனுக்கு இலக்கணம்.

மண் என்றால் நிலம் .

ஒரு உழவன் எவ்வளவு பாடு படுகிறானோ அந்த அளவுக்கு நிலம் பலன் தரும். அது போல இடை மாணவன், ஒரு ஆசிரியர் எவ்வளவு கஷ்டப் பட்டு சொல்லித் தருகிறாரோ அந்த அளவு அவனும் படிப்பான்.அதுக்கு மேல படிக்க மாட்டான். பாட நூலில் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு தான் படிப்பான். மேற்கொண்டு படிப்பது எல்லாம் கிடையாது.

கிளி சொன்னதை திருப்பிச் சொல்லும். அது போல இடை மாணவன் ஆசிரியர் சொன்னதை அப்படியே வாங்கி , மனப்பாடம் பண்ணி மீண்டும் ஒப்பிப்பான். அவ்வளவுதான்.

இந்த இரண்டும் இடை மாணவனுக்கு இலக்கணம்.


இல்லிக் குடமா டெருமை நெய்யரி - கடை மாணவர்

இதை இல்லிக்குடம் , ஆடு , எருமை , நெய்யரி என்று பிரிக்கவேண்டும் .

இல்லிக் குடம் என்றால் உடைந்த குடம். அதில் எவ்வளவு நீர் விட்டாலும் நிறையாது. நீர் வெளியேறிக் .கொண்டே இருக்கும். கடை மாணவனுக்கு எவ்வளவு சொல்லித் தந்தாலும் மண்டையில் ஒன்றும் நிற்காது.மறந்து போவான்.

ஆடு - ஒரு செடியிலும் முழுவதும் தின்னாது. ஒவ்வொரு செடியிலும் கொஞ்சம் கொஞ்சமாக தின்னும். எல்லா செடியிலும் வாய் வைக்கும். ஒன்றையும் முழுமையாக உண்ணாது.அது போல கடை மாணவன் ஒன்றையும் ஒழுங்காகப் படிக்க மாட்டான். இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்.... இந்த ஆசிரியனிடம் கொஞ்சம் அந்த ஆசிரியனிடம் கொஞ்சம் என்று உருப்படியாக ஒன்றும் படிக்க மாட்டான்.

எருமை - குளத்தில் நீர் தெளிவாக இருந்தாலும் அது குளத்தில் இறங்கி, அதை கலக்கி சேறும் நீருமாக சேர்ந்து குடிக்கும். அன்னம் நீரை விலக்கி பாலை மட்டும் குடிக்கும். எருமையோ தெளிந்த நீரோடு சேற்றையும் சேர்த்து குடிக்கும்.

நெய்யரி என்பது வடி கட்ட உபயோகப் படுத்தும் துணி. வடிகட்டும் துணி நல்லதை எல்லாம் விட்டு விட்டு கசடை தன்னுள் தக்க வைத்துக் கொள்ளும். அது போல, கடை மாணவன், நல்லதை எல்லாம் விட்டு விட்டு, தேவை இல்லாததை பிடித்து வைத்துக் கொள்வான்.


அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.

எவ்வளவு அருமையான பாடல் !


இது தவிர தலை மாணவனுக்குக் கற்பூரத்தையும் ,
இடைப்பட்ட மாணவனுக்குக் கரித்துண்டையும் ,
கடைநிலை மாணவனுக்கு வாழைத் தண்டையும்

எடுத்துக்காட்டாகக் கூறுவார்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் ! Empty Re: மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் !

Post by krishnaamma Wed Apr 26, 2017 10:25 pm

மிக்க நன்றி ஐயா, விரிவான விளக்கமான பதிவு ! .............இப்போது தான் மூர்த்தி இன் பதிவுக்கு பதில் போட்டேன், நிறைய பேசுவதில்லை , கற்பது இல்லை என்று ....உடனே ஒரு அருமையான பதிவை பார்த்துவிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் ! Empty Re: மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum