ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
 மரத்துப்போதல் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்! Poll_c10 மரத்துப்போதல் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்! Poll_m10 மரத்துப்போதல் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரத்துப்போதல் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்!

Go down

 மரத்துப்போதல் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்! Empty மரத்துப்போதல் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்!

Post by ayyasamy ram Tue Apr 18, 2017 9:33 am

‘‘நீண்ட நேரம் கால்களை மடக்கியவாறு உட்காரும் போதும்
கால்களை தொங்கவிட்ட நிலையில் அதிக நேரம் பயணம்
மேற்கொள்ளும் போதும் கை, கால்கள் மரத்துப் போவதை
உணர்வோம்.

தொடர்ந்து ஒரே நிலையில் கை, கால்களை வைத்திருந்தால்
மட்டுமல்ல... வேறு பல காரணங்களாலும் மரத்துப்போதல்
பிரச்னை வரலாம்’’ என்கிறார் நரம்பியல் மருத்துவர்
அருள் செல்வம்.
-
 மரத்துப்போதல் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்! E5kf30AfS4WPRBVJPfJw+unnamed(2)
-

‘‘ரத்த ஓட்டம் தடைபடும் காரணத்தால் கை, கால்கள்
மரத்துப் போகும். குறிப்பாக, ஆன்டிபயாடிக் மற்றும்
கேன்சர் மாத்திரைகளாலும் கை, கால்கள் மரத்துப் போகும்.

உடலில் எந்த இடங்கள் அடிக்கடி மரத்துப் போகின்றன
என்பதை வைத்து, அதன் தாக்கத்தை தெரிந்து கொள்ளலாம்.

உடலின் ஏதாவது ஒரு பக்கம் மட்டும் மரத்துப் போனால்,
மூளை மற்றும் முதுகுத் தண்டுவடம் போன்றவற்றில்
ஏதாவது பிரச்னை இருக்கலாம். இரு பக்கமும் உடல்
மரத்துப்போவதற்கு நீரிழிவு ஒரு முக்கியமான காரணம்.
பல வருடங்களாக மரத்துப் போதல் பிரச்னை இருந்தால்,
அதற்கு மரபணுக் கோளாறு காரணமாக இருக்கலாம்.

கை, கால்கள் போன்ற உடல் உறுப்புகள் அடிக்கடி
மரத்துப்போய் அவதிப்படுகிறவர்கள் ஒரே இடத்தில்,
ஒரே மாதிரியான நிலையில் பல மணிநேரம் வேலை
செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

உடல் உறுப்புகள் மரத்துப்போவதென்பது நோய் கிடையாது.
ஆனால், நீரிழிவு, தைராய்டு, வைட்டமின் குறைபாடு
போன்ற பலவித நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம்.

ஒருவருக்கு கை, கால்கள் மரத்துப் போவதற்கான
காரணங்களை அறிந்து, அதற்கு ஏற்றவாறு நரம்பியல்
மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.

தைராய்டு ஹார்மோன் குறைபாட்டால் மரத்துப்போதல்
ஏற்படலாம். அதிக கொழுப்பு, மதுப்பழக்கம், வைட்டமின் பி12
குறைபாடு காரணமாகவும் மரத்துப்போதல் உண்டாகலாம்.

ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, சரியான சிகிச்சைகள்
அளித்தால் முழுமையாக குணப்படுத்தி விடலாம்.
வைட்டமின் பி12 குறைபாட்டால் நரம்பு மண்டலம்
முழுவதுமாக பாதிப்பு அடைந்து காணப்பட்டால், உடல்
உறுப்புகள் மரத்துப்போவதை குணப்படுத்த முடியாது...
கட்டுப்படுத்த முடியும்.
-
---------------------


Last edited by ayyasamy ram on Tue Apr 18, 2017 9:50 am; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மரத்துப்போதல் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்! Empty Re: மரத்துப்போதல் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்!

Post by ayyasamy ram Tue Apr 18, 2017 9:33 am

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கை, கால்கள்
மரத்துப்போகும். கொதிக்கும் சுடுதண்ணீரை இவர்கள்
மீது ஊற்றினாலும் கூட தெரியாது.

இவர்களுடைய சருமத்தை முதலில் பரிசோதனை செய்து,
அதற்கு ஏற்றவாறு சிகிச்சை கொடுக்க வேண்டும்.
இதற்கு காலவரையறை கிடையாது.

நீரிழிவுக்காரர்களும் கை, கால்கள் மரத்துப்போகாமல் இருக்க,
ஆயுள் காலம் முழுவதும் தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு
வர வேண்டும். இவர்களுக்கு காலில் ஏதேனும் தொற்று
ஏற்பட்டால், அதன் பாதிப்பு எலும்பு வரை பரவும்.

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கை மற்றும் கால்கள் மரத்துப்போ
னால் கல்லீரலில் பாதிப்பு உண்டாகும்.
கை, கால்கள் மரத்துப்போவதை குணப்படுத்துவதற்கு தனியே உ
டற்பயிற்சிகள் எதுவும் கிடையாது.

மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், கம்ப்யூட்டரில் நீண்ட
நேரம் வேலை செய்பவர்கள், மணிக்கட்டுக்கு அதிக வேலை
கொடுக்கும் விதமாக, பாத்திரங்களை சுத்தம் செய்பவர்கள்,
டர்னர், ஃபிட்டர் போன்ற தொழில் செய்பவர்களுக்கும் அதிக
எடை கொண்டவர்களுக்கும் கை, கால்கள் மரத்துப்போகும்
வாய்ப்புகள் அதிகம்.

பச்சிளம் குழந்தை, சிறுவர், சிறுமியருக்கும் மரபணு காரணமாக
இந்த நரம்புக் கோளாறு வரலாம். இதில் 15 விதமான கோளாறுகள்
இருக்கின்றன. இந்த நரம்புக் கோளாறுகளுக்கு சிகிச்சை கிடையாது.
காலில் இருந்து நரம்பை எடுத்து பையாப்சி செய்து அதனை உறுதி
செய்ய வேண்டும். இவர்களுக்கு உணர்ச்சி தெரியாது.
புண் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. செப்டிக் பிரச்னையும் வரலாம்.

எதிர்பாராத நேரத்தில் திடீரென உடலின் ஒரு பக்கம் மரத்துப்போ
வது பக்கவாதத்தின் அறிகுறி. அவர்கள் உடனடியாக நரம்பியல்
மருத்துவரை அணுக வேண்டும். கை, கால் மரத்துப்போகும்
பிரச்னை உடையவர்கள் காய்கறிகள், பழங்கள் நிறைய சாப்பிட
வேண்டும்.

வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் மீன், கறி போன்ற
அசைவ உணவு வகைகளை நிறைய சாப்பிட வேண்டும்.
மருத்துவரை ஆலோசித்து வைட்டமின் பி12 மாத்திரைகள்
சாப்பிட வேண்டும்...’’ என்கிறார் டாக்டர் அருள் செல்வம்.

மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், கம்ப்யூட்டரில் நீண்ட
நேரம் வேலை செய்பவர்கள், மணிக்கட்டுக்கு அதிக வேலை
கொடுக்கும் விதமான வேலை செய்பவர்களுக்கும் அதிக எடை
கொண்டவர்களுக்கும் கை, கால்கள் மரத்துப்போகும் வாய்ப்புகள்
அதிகம்.

-பாலு விஜயன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்    
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கண்களை சுற்றி மஞ்சள் வளையமா? இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்
» காலில் வலி, எரிச்சலா: ரத்தக்கொதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்
» இருமலின்போது இரத்தம் வருகிறதா? அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!
» சாபிட்ட பிறகு வாந்தி வருவது சில தீவிர நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.
» புற்று நோயின் தீவிரத்தை தவிர்க்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum