ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்., 23 - உலக புத்தக தினம்!

3 posters

Go down

ஏப்., 23 - உலக புத்தக தினம்! Empty ஏப்., 23 - உலக புத்தக தினம்!

Post by krishnaamma Mon Apr 17, 2017 5:12 pm

புத்தகம் வாசிப்பே சுவாசமாகட்டும்!

ஏப்., 23 - உலக புத்தக தினம்! 7xQPWXJOQJGqUuGrai5l+E_1491901718

காகிதம், இரண்டு இடங்களில் புகழடைகிறது; ஒன்று, பணமாகும் போது, மற்றொன்று புத்தகமாகும் போது என்பர். கையில் பிரம்பின்றி, கற்றுக் கொடுக்கும் ஒரே ஆசிரியர், புத்தகம் மட்டுமே!

உலக புகழ்பெற்ற நாடக ஆசிரியர், ஷேக்ஸ்பியர் பிறந்ததும், இறந்ததும், ஏப்., 23ம் தேதி. மேலும், ஸ்பெயின் நாட்டு இலக்கியவாதியான, செர்வான்டிஸ் இறந்ததும், இந்நாளில் தான்!
யுனெஸ்கோவின், 28வது மாநாடு, 1995-ல் பாரிசில் நடைபெற்ற போது, அறிவை விரிவு செய்யும் விதமாகவும், பல்வேறு நாட்டின் கலாசாரத்தை அறிய உதவும் கருவியாகவும் புத்தகம் இருப்பதால், அதை கொண்டாடும் பொருட்டு, பிரபல எழுத்தாளர்களின் நினைவாக, ஏப்., 23ஐ தேர்வு செய்து, உலக புத்தக தினமாக அறிவித்தது. இதை, பல நாடுகள் ஏற்று, கொண்டாடி வருகின்றன.

முதல் உலக புத்தக தினத்தன்று, லண்டனில், பள்ளிக்குழந்தைகளுக்கு ஒரு பவுண்ட் மதிப்புள்ள அடையாள வில்லை வழங்கப்பட்டு, அவர்கள், எங்கு வேண்டுமானாலும் அவர்களுக்கு பிடித்த புத்தகத்தை வாங்கலாம் என்று ஏற்பாடு செய்தனர். இது, மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

'சிறையில், வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம்; புத்தக வாசிப்பை மட்டும் அனுமதியுங்கள்...' என்றார் நெல்சன் மண்டேலா. 'அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு...' என்றார் பாரதிதாசன். நைனிடால் சிறையில் அடைபட்டிருந்த காலத்தில், தன், 13வயது மகள் இந்திராவுக்கு, நேரு எழுதிய கடிதங்கள் உலகப்புகழ் பெற்றவை.

ஒரு சமுதாயத்தின், ஒட்டு மொத்த வாழ்க்கையை உயர்த்தும் நெம்புகோல்கள், புத்தகங்கள் தான்! 'புத்தகம் திருடுவது வெண்ணெய் திருடுவது போல இனிப்பானது...' என்றார், வலம்புரிஜான்.

'கல்வி அனைவருக்குமானது; புத்தகம் பொதுவானது...' என, துண்டு பிரசுரம் கொடுத்ததற்காக, கைது செய்து, சிறையிலடைக்கப்பட்டார், பிரபல ஆங்கில கவிஞர் ஜான் மில்டன்.
கண் பார்வையற்றவரான மில்டன், 'இழந்த சொர்க்கம் மற்றும் மீண்ட சொர்க்கம்' என்ற, இரு காவியங்களை படைத்தார்.

'ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் என்ன செய்வீர்கள்...' என்றதற்கு, 'நான் நூலகம் கட்டுவேன்...' என்றார் காந்திஜி. மேலும், 'பெண்கள் முன்னேற்றமடைய வேண்டுமெனில், அவர்கள் கைகளில் உள்ள கரண்டியை பிடுங்கி விட்டு, புத்தகத்தை கொடுங்கள்...' என்றார் ஈ.வெ.ரா.,

தமிழகத்தில் உ.வே.சா., மேற்கொண்ட புத்தக தேடல் தான், தமிழர்களின் கலாசாரத்தின் தொன்மையை உலகிற்கு பறைசாட்டியது. புத்தகம் தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், எளிமையாய் எழுதிய திருக்குறள், இன்றைய மனிதர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் இருக்கிறது.

மூட நம்பிக்கையை எதிர்த்தும், முற்போக்கை முன்னிறுத்தியும் எழுதப் பட்ட புத்தகங்கள்,   சமூக மறு மலர்ச்சிக்கு வித்தட்டன. இதற்கு சான்று,

அ. மாதவய்யாவின் புத்தகம்!

புத்தகம் என்பது சிந்தனையின் வெளிப்பாடு. அது, படிப்பவரை மேலும் சிந்திக்க தூண்டி, அறியாமையை விலக்குகிறது. இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. சமூக கொடுமைகள் மற்றும் அநியாத்திற்கு எதிராக கோபம் கொள்ளச் செய்கிறது.

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், புத்தகம் படிப்பதென்பது குறைந்து வருகிறது. படிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்கள், ஒவ்வொரு வீட்டிலும் அதிகம். படிக்காத அப்புத்தகத்தில் தான், நம் அறிவின் ஆன்மா ஒளிந்து கொண்டிருக்கிறது.
நல்ல புத்தகங்களுக்கு சிறகுகள் உண்டு; நாமும் அதனுாடே பறப்போம்!

ப. மணிகண்டபிரபு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏப்., 23 - உலக புத்தக தினம்! Empty Re: ஏப்., 23 - உலக புத்தக தினம்!

Post by M.Jagadeesan Mon Apr 17, 2017 8:41 pm

என்னைக் கைவிடாத நண்பர்கள் புத்தகங்கள்தான் என்கிறார் ROBERT SOUTHEY என்ற ஆங்கிலக் கவிஞர் .

My never failing friends are they
with whom I converse day by day .

என்பது அவருடைய வாக்கு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஏப்., 23 - உலக புத்தக தினம்! Empty Re: ஏப்., 23 - உலக புத்தக தினம்!

Post by ayyasamy ram Mon Apr 17, 2017 8:51 pm

ஏப்., 23 - உலக புத்தக தினம்! 103459460 ஏப்., 23 - உலக புத்தக தினம்! 3838410834
-

சட்டமேதை அம்பேத்கர் ஒருமுறை வெளிநாடு சென்றிருந்த
போது, ‘‘எங்கு தங்க விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டதற்கு,
‘‘எந்த இடம் நூலகத்திற்கு அருகில் இருக்கிறது?’’ என கேட்டு
இருக்கிறார்.

நவ இந்தியாவின் சிற்பி ஜவகர்லால் நேருவிடம்,
‘‘உங்களை ஒரு தனி தீவுக்கு நாடு கடத்தினால் என்ன
செய்வீர்கள்?’’ என்று கேட்டதற்கு
‘‘புத்தகங்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பேன்’’
என்று பதில் அளித்தார்.

குழந்தைகளுக்கு பிறந்தநாளின் போதும், விழாக்களின் போதும்
எண்ணற்ற பரிசுகளை வாங்கி தருகிறோம்.
‘‘குழந்தைகளுக்கு நீங்கள் வாங்கி தர வேண்டிய மிகச்சிறந்த
பரிசு புத்தகங்களே’’ என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏப்., 23 - உலக புத்தக தினம்! Empty Re: ஏப்., 23 - உலக புத்தக தினம்!

Post by krishnaamma Tue Apr 18, 2017 12:34 am

நன்றி ஐயா , நன்றி ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏப்., 23 - உலக புத்தக தினம்! Empty Re: ஏப்., 23 - உலக புத்தக தினம்!

Post by M.Jagadeesan Tue Apr 18, 2017 11:24 am

இன்டர்நெட் மற்றும் சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு , புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது . புறாக்கூண்டு வீடுகளில் வசிக்கும் இந்தக் காலத்தில் , புத்தகங்கள் வைப்பதற்கு இடமில்லை ; அவற்றைப் பராமரிப்பதும் கடினமான வேலை .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஏப்., 23 - உலக புத்தக தினம்! Empty Re: ஏப்., 23 - உலக புத்தக தினம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum